என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது
- 166 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது.
இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், களமிறங்கிய கேப்டன் ஹாரி புரூக் நங்கூரமிட்டு அதிரடியாக விளையாடினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்த நிலையிலும் ஹாரி புரூக் ஸ்கோர்கார்டை உயர்த்தினார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க ஜேமி ஓவர்டன் 46 ரன்கள் அடித்து அவுட்டானார்.
166 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்த நிலையில், கேப்டன் ஹாரி புரூக் மட்டும் அதிரடியாக விளையாடி 82 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளைய அவர் 101 பந்துகளில் 135 ரன்கள் அடித்து அவுட்டானார். இதனால் 35.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
9 விக்கெட்டுகள் விழுந்த நிலையிலும் அதிரடியாக விளையாடி ஹாரி புரூக் அடித்த சதம் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த சதங்களில் ஒன்றாக வரலாற்றில் முத்திரை படைத்தது.
- என்ன சாதனை படைத்தாலும் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம்.
- எனக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவில் விளையாடுவது பிடிக்கும் என்றார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரவெற்றி பெற்றது.
இந்நிலையில், போட்டி முடிந்தபின் இந்திய அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா பேசியதாவது:
எனக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவில் விளையாடுவது பிடிக்கும்.
இங்கு 2008-ம் ஆண்டு நான் முதல் முறையாக வந்து விளையாடிய இனிமையான நினைவுகள் உள்ளன.
நானும் விராட் கோலியும் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து விளையாடுவோமா என்பது எங்களுக்கு தெரியாது.
என்ன சாதனைகள் படைத்தாலும், பாராட்டுகளைப் பெற்றாலும் எங்கள் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம்.
இந்த தொடருக்காக பெர்த் வந்தபோது கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டு புதிதாக தொடங்கினோம்.
ஆஸ்திரேலியாவில் கடினமான ஆடுகளத்தையும், தரமான பந்து வீச்சையும் எதிர்பார்க்கலாம். இங்கு விளையாடுவது ஒருபோதும் எளிதானது கிடையாது.
நாங்கள் தொடரை வெல்லவில்லை. ஆனால் நேர்மறையான விஷயங்கள் அதிகம் கிடைத்துள்ளன. இது ஒரு இளம் அணி. எனவே அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும்.
நான் இந்திய அணிக்குள் வந்தபோது சீனியர் வீரர்கள் அதிகம் உதவினார்கள். தற்போது அந்தப் பணியை நாங்கள் செய்கிறோம்.
இளம் வீரர்களை வழிநடத்த வேண்டும். ஆட்ட திட்டங்களை உருவாக்க வேண்டும். அடிப்படையான விஷயங்களைச் செய்ய வேண்டும். நான் இங்கு விளையாடும் ஒவ்வொரு முறையும் அதனை தான் செய்கிறேன் என தெரிவித்தார்.
- இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
- ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
சிட்னி:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான3வது ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தபோது, ஹர்சித் ராணா வீசிய பந்தில், மிட்செல் ஓவனை கேட்ச் செய்தும், பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் நாதன் எலிசை கேட்ச் செய்தும் ரோகித் சர்மா அவுட் ஆக்கினார்.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 100 கேட்ச் பிடித்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
இந்தப் பட்டியலில் விராட் கோலி 163 கேட்ச்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 8ஆவது இடத்தில், பேட்ஸ்மேன் 20 முதல் 25 ரன்கள் அடிக்க முடியும் என்றால், அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.
- அது ஹர்சித் ராணாவால் செய்ய முடியும் என நினைக்கிறேன்.
ஹர்சித் ராணாவை இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக்க அணி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போதைய இந்திய அணியில் மூன்று வடிவிலான அணியில் விளையாடும் வீரர்கள் ஒருவர் அவர். சுப்மன் கில்லுக்குப்பின் அவர்தான் இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையில், சிட்னி போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் சாய்த்தார்.
இந்த நிலையில் 20 முதல் 25 ரன்கள் அணிக்கு பங்களிக்க முடியும் என்றால், ஹர்சித் ராணாவுக்கு No.8 சிறந்த இடமாக இருக்கும் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ஹர்சித் ராணா குறித்து சுப்மன் கில் கூறியதாவது:-
8ஆவது இடத்தில், பேட்ஸ்மேன் 20 முதல் 25 ரன்கள் அடிக்க முடியும் என்றால், அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். அது ஹர்சித் ராணாவால் செய்ய முடியும் என நினைக்கிறேன். அதன்பிறகு அது முக்கியமான இடமாக அமையும்.
அதிக உயரம் கொண்ட சில வேகப்பந்து வீச்சாளர்களால் மட்டுமே 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்து வீச முடியும். தென்ஆப்பிரிக்கா போன்ற ஆடுகளத்தில், இது போன்ற பந்து வீச்சாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
ஏனென்றால், மிடில் ஓவர்களில் பந்து அதிக அளவில் ஸ்விங் (Move) ஆகாது என்பதை நாம் பார்த்திருப்போம். ஆகவே, நல்ல உயரம் மற்றும் வேகம் கொண்டிருந்தால், உங்களால் விக்கெட்டுக்கான வாய்ப்பை உருவாக்க முடியும். அதான் சிட்னியில் நடந்தது என நினைக்கிறேன்.
இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
- இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு.
- ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தூருக்கு வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை கஃபேவுக்கு செல்ல வெளியே வந்தபோது, இரு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.
இதில் ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் மிகவும் வருத்ததை ஏற்படுத்தியது. இந்தியா தனது விருந்தினர்களிடம் காட்டும் அக்கறை, அரவணைப்புக்கு பெயர் பெற்றது.
இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை |விரைவாக கைது செய்த மத்திய பிரதேச போலீசாரை பாராட்டுகிறோம். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்போம்" என்றார்.
- 24 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது தென்ஆப்பிரிக்கா.
- ஆஸ்திரேலியா 199 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டியது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க பேட்டராக களம் இறங்கிய கேப்டன் வால்வார்த் 31 ரன்னில் வெளியேறினார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் அலனா கிங் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்ஆப்பிரிக்கா பேட்டர்கள் திணறினர்.
அவர் ஏழு ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்க்க, தென்ஆப்பிரிக்கா 24 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 97 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா கேப்டனை தவிர்த்து விக்கெட் கீப்பர் ஜாஃப்டா 29 ரன்களும், நடின் டி கிளெர்க் 14 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் 98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அந்த அணி 16.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து, 199 பந்துகள் மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஏழு போட்டிகளில் 6-ல் வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து மூலம் 13 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் காலிறுதியில் வருகிற 30ஆம் தேதி மோத வாய்ப்புள்ளது.
- விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது.
- விமல் குமார் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரஞ்சி டிராபி 2025-26 தொடரின் 2ஆவது போட்டி இன்று தொடங்கியது. தமிழ்நாடு- நாகாலாந்து இடையிலான போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தமிழ்நாடு அணியின் ஆதிஷ், விமல் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆதிஷ் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால் களம் இறங்கினார்.
விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 150 ரன்களை கடந்து சென்றனர். இதனால் இரட்டை சதம் விளாசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. விமல் குமார் 224 பந்தில் 18 பவுண்டரிகளுடன் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது. அடுத்து அந்த்ரே சித்தார்த் களம் இறங்கினார். தமிழ்நாடு அணி 90 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்திருந்தபோது முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.
பிரதோஷ் ரஞ்சன் பால் 156 ரன்களுடனும், அந்த்ரே சித்தார்த் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் போட்டியில் ஜார்கண்ட் அணிக்கெதிராக தமிழ்நாடு இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
- அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார்
- விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ரோகித் 121 ரன்களும் விராட் கோலி 74 ரன்களும் அடித்தனர்.
இந்த ஒருநாள் தொடர் தான் ரோகித் - கோலியின் கடைசி தொடராக இருக்கும் என்று அவர்கள் மீது விமர்சனம் எழுந்த நிலையில், கடைசி போட்டியில் அந்த விமர்சனங்களை இருவரும் அடித்து துக்குநூறாக உடைத்துவிட்டனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகரும் கே.எல்.ராகுலின் மாமனாருமான் சுனில் ஷெட்டி, விராட் கோழி - ரோகித் சர்மாவை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், சாதனைகள், போராட்டங்கள், பெருமை, கண்ணீர், தியாகம் என அனைத்தையும் நாம் எவ்வளவு விரைவாக மறந்துவிடுகிறோம் என்பது வேடிக்கையாக இருக்கிறது.
இரண்டே போட்டிகள் , திடீரென்று எல்லோரும் விமர்சகர்களாகி விடுகிறார்கள்.
அவர்கள் கூச்சலை கேட்டார்கள். சந்தேகங்களைப் படித்தார்கள். ஆனாலும் அவர்கள் அமைதியாக இருந்தார்கள்... ஆனால் அவர்களது பேட்டை பேச வைத்தார்கள்.
ஏனென்றால் ரோஹித் & விராட் போன்ற ஜாம்பவான்கள் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் தெண்டுல்கர் 70 இன்னிங்சில் 9 சதம் அடித்துள்ளார்.
- ரோகித் சர்மா 49 இன்னிங்சில் 9 சதம் அடித்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 121 (125 பந்துகள்), 74 (81 பந்துகள்) ரன்கள் அடிக்க, இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஜோடி 2அவது விக்கெட்டுக்கு 170 பந்தில் 168 ரன்கள் குவித்தது.
இதன்மூலம் பல்வேறு சாதனைகள் படைத்தன. குறிப்பாக சதம் விளாசிய ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்தார். அவற்றில் முக்கியமானது, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் சாதனையை சமன் செய்து, அவரை முந்தியது.
சச்சின் தெண்டுல்கர் 71 போட்டியில் 70 இன்னிங்சில் பேட்டிங் செய்து 9 சதங்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா 49 போட்டிகளில், 49 இன்னிங்சில் 9 சதம் அடித்துள்ளார். இன்னிங்ஸ் அடிப்படையில் சச்சின் தெண்டுல்கரை முந்தியுள்ளார். விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 53 போட்டிகளில், 53 இன்னிங்சில் விளையாடி 8 சதங்கள் அடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் டெஸ்மாண்ட் கெய்ன்ஸ் 64 இன்னிங்சில் 6 சதம் அடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளிஸ்சிஸ் 21 இன்னிங்சில் 5 சதம் அடித்துள்ளார்.
அத்துடன் ஆஸ்திரேலியா மண்ணில் இது அவருடைய 6ஆவது சதம் ஆகும். இதன்மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக சதம் விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக விராட் கோலி இலங்கைக்கு எதிராக 10 சதங்கள் விளாசி சர்வதேச அளவில் அனைத்து அணிகளுக்கும் எதிராக முதல் இடத்தில் உள்ளனார்.
- ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி 170 பந்தில் 168 ரன்கள் குவித்தது.
- 12ஆவது முறை இந்த ஜோடி 150 ரன்களை தாண்டியுள்ளது.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா சதம் விளாச, விராட் கோலி அரைசதம் அடிக்க இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
சுப்மன் கில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 168 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது. இதன்மூலம் 5 வருடத்திற்குப் பிறகு இந்த ஜோடி 100 ரன்களை தாண்டியது.

அத்துடன் 150 ரன்களுக்கு மேல் சேர்த்ததன் மூலம் சச்சின் தெண்டுல்கர்- சவுரவ் கங்குலி ஜோடியின் சாதனையை சமன் செய்துள்ளது.
சச்சின் தெண்டுல்கர்- கங்குலி ஜோடி ஒருநாள் கிரிக்கெட்டில் 12 முறை 150 ரன்களை தாண்டி அடித்துள்ளது. தற்போது சிட்னி போட்டியின் மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி இந்த சாதனையை சமன் செய்துள்ளது. தில்சன்- சங்ககரா ஜோடி 7 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.
- அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார்.
- விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவில் ஹெட் 29 ரன்னிலும் மிட்செல் மார்ஷ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேத்யூ ஷார்ட் 30 ரன்னிலும் நிதானமாக விளையாடிய ரென்சா அரைசதம் அடித்து 56 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய தரப்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ரோகித் 121 ரன்களும் விராட் கோலி 74 ரன்களும் அடித்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது குறிப்பிடதக்கது.
- 63 பந்தில் அரைசதம் அடித்து, 105 பந்தில் சதம் அடித்தார்.
- இது அவரின் 33ஆவது ஒருநாள் சர்வதேச சதமாகும்.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
சுப்மன் கில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
அவர் 63 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இது அவருடைய 60ஆவது அரைசதம் ஆகும். மறுமுனையில் டக்அவுட்டை தாண்டிய விராட் கோலி, 56 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடி 100 ரன்களை கடந்தது. இதன்மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக 100 பார்ட்னர்ஷிப்பை கடந்தது.
தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மா 105 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் விளாசினார். 2ஆவது போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, இந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இது அவரின் 33ஆவது ஒருநாள் சதமாகும்.






