என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- எந்த உணவை நீங்கள் வேண்டாம் என்று சொல்லமாட்டர்கள் என எம்.எஸ்.தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
- இப்போது வரை பட்டன் சிக்கன் தன எனக்கு பிடித்தமான உணவு என்று எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவர் தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இதேபோல சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அப்போது எம்.எஸ்.தோனியிடம் எந்த உணவை நீங்கள் வேண்டாம் என்று சொல்லமாட்டீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "இப்போது வரை பட்டன் சிக்கன் தன எனக்கு பிடித்தமான உணவு. 2004 இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானேன். 2005ல், இந்தியா உட்பட எல்லா இடங்களிலும் விளையாட ஆரம்பித்தேன். அப்போது ஓட்டலில் , மதியம் மற்றும் இரவு உணவிற்கு, பட்டர் சிக்கன் , நாண் மற்றும் ஒரு மில்க் ஷேக் ஆர்டர் செய்வேன். இரண்டாவது நாள் மீண்டும் அதே உணவை ஆர்டர் செய்வேன்" என்று தெரிவித்தார்.
உடனே கேள்வி எழுப்பியர் பட்டர் பன்னீர் கூட இதேபோல் தான் இருக்கும் என்று கூற இந்த இரண்டும் ஒன்றல்ல என்று சிரித்தபடியே எம்.எஸ்.தோனி பதில் அளித்தார்.
- துபாயில் நாளை இந்தியா பாகிஸ்தான்- அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அதனால் இந்தியா உடனான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி, "பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்திய அணியிடம் அதிக மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். ஒரு மேட்ச்-வின்னர் என்பவர் ஆட்டத்தில் அணியை வெற்றி பெற வைப்பவர். தற்போது, பாகிஸ்தானில் அப்படிப்பட்ட வீரர்கள் இல்லை" என்று தெரிவித்தார்.
- பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
- முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசமும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து , ஆப்கானிஸ்தானும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தான்- அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் கடைசியாக 2023-ம் ஆண்டு அக்டோபரில் மோதின. அகமதாபாத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதில் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
வங்காளதேசத்துக்கு எதிராக சுப்மன் கில் சதம் அடித்து முத்திரை பதித்தார். இதேபோல முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஹர்ஷித் ராணா, அக்ஷர் படேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். விராட் கோலி திறமை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. ராகுல் வங்காளதேசத்துக்கு எதிராக சிறப்பாக ஆடினார். இதனால் ரிஷப் பண்ட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றால் குல்தீப் யாதவ் கழற்றி விடப்படுவார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும். ஏனென்றால் பாகிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது.
அந்த அணியில் கேப்டன் ரிஸ்வான், பாபர் ஆசம், சல்மான் அகா, குஷ்தில் ஷா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடிக்க கடுமையாக போராடும்.
இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அது மாதிரியே சாம்பியன்ஸ் டிராபி போட்டியையும் ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல் தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது ஷமி, ரிஷப்பண்ட், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ் தீப் சிங், வருண் சக்கர வர்த்தி
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் ஆசம், சவுத் ஷகீல், பகர் ஜாமன், சல்மான் அகா, தையூப் தாகீர், குஷ்தில் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது, இமாம், உல்-ஹக், உஸ்மான் கான், பஹீம் அஸ்ரப் முகமது ஹஸ்னைன்.
- 2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை ஆஸ்திரேலியா வென்றது.
- 2009ம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா வெற்றி பெறவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லாகூரில் நடக்கும் இப்போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகினர். இது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
சமீபத்தில் இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலியா இழந்திருந்தது. இதனால் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபியில் முழு திறமையை வெளிப்படுத்த போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா வெற்றி பெறவில்லை. 2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை ஆஸ்திரேலியா வென்றது. அதன் பிறகு 2 சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
ஆகையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் டிராபியில் தனது முதல் வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்யுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் எல்லீஸ் பெரி அதிரடியாக ஆடி 43 பந்தில் 2 சிக்சர், 11 பவுண்டரி உள்பட 81 ரன் எடுத்து அவுட்டானார்.
ரிச்சா கோஷ் 28 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 26 ரன்னும் எடுத்தனர்.
மும்பை சார்பில் அமன்ஜோத் கவுர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். நாட் சீவர் பிரண்ட் 21 பந்தில் 42 ரன்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் அமன்ஜோத் கவுர் போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், மும்பை அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெற்ற 2வது வெற்றி ஆகும். அமன்ஜோத் கவுர் 34 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 315 ரன்கள் குவித்தது.
- சிறப்பாக ஆடிய ரியான் ரிக்கல்டன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கராச்சி:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் இன்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் பவுமா 58 ரன்னும், வேன் டெர் டூசென் 52 ரன்னும், எய்டன் மார்க்ரம் 52 ரன்னும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது நபி 2 விக்கெட்டும், ஃபரூக்கி, ஹஷ்மதுல்லா ஒமர்சாய், நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
ரஹ்மத் ஷா கடைசி வரை போராடினார். அரை சதம் கடந்த அவர் 90 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் 43.3 ஓவரில் 208 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், நிகிடி, முல்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
- பெங்களூரு தரப்பில் எலிஸ் பெர்ரி 81 ரன்கள் எடுத்தார்.
3-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதற்கட்ட போட்டிகள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் பெங்களூருவில் இன்று தொடங்கியது.
இன்றைய போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டு ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து பெங்களூருவின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனி வயட் ஹாட்ஜ் களமிறங்கினர். இதில் டேனி வயட் ஹாட்ஜ் 9 ரன்னிலும், மந்தனா 26 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து எலிஸ் பெர்ரி ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தது.
இதில் ராக்வி பிஸ்ட் (1), கனிகா அகுஜா (3), ரிச்சா கோஷ் (28), ஜார்ஜியா வரேஹம் (6) ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதிரடியாக ஆடிய எலிஸ் பெர்ரிஅரைசதம் அடித்து அசத்தினார். இவர் 81 ரன்களில் அவுட் ஆனார்.
இன்னிங்ஸ் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 81 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆட உள்ளது.
- ஐ.பி.எல். 2025 தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது.
- இந்த முறை மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகின்றன.
18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் மொத்தம் பத்து அணிகள் கோப்பைக்காக விளையாடுகின்றன. இந்த முறை அணிகளிடையே 74 போட்டிகள் இந்தியா முழுக்க 13 நகரங்களில் நடைபெற இருக்கிறது.
ஐ.பி.எல். தொடர் தொடங்க இன்னும் சில காலமே எஞ்சியுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் அதற்கு தயாராகும் பணிகளில் மும்முரமாக ஈடுபட துவங்கியுள்ளன. அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணி 2025 ஐ.பி.எல். தொடருக்கான ஜெர்சியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நீலம் மற்றும் தங்க நிறங்களை கொண்டிருக்கும் புதிய ஜெர்சி அணிந்தபடி வீரர்கள் காட்சியளிக்கும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் வீரர்கள் புதிய ஜெர்சியில் இருப்பதோடு, மும்பை அணியின் கொடி மற்றும் கிட் உள்ளிட்டவையும் காண்பிக்கப்பட்டுள்ளது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த வகையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கியவர்களில் டோனி டி சொர்சி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான ரியான் ரிக்கில்டன் மற்றும் கேப்டன் பவுமா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். கேப்டன் பவுமா 58 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வேன் டெர் டூசென் 52 ரன்களை எடுத்தார்.
மறுப்பக்கம் ரிக்கில்டன் 103 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் சிறப்பாக ஆடிய ஏய்டன் மார்க்ரம் 52 ரன்களை எடுத்தார். இன்னிங்ஸ் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளையும் ஃபசல்ஹக் ஃபரூக்கி, அசமதுல்லா ஓமர்சாய் மற்றும் நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலியா இழந்திருந்தது.
- இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்தது.
லாகூர்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லாகூரில் நடக்கும் இப்போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், லபுசேன், மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜம்பா, நாதன் எல்லீஸ், ஆரோன் ஹார்டி, சீன் அபோட் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகினர். இது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
சமீபத்தில் இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலியா இழந்திருந்தது. இதனால் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியில் முழு திறமையை வெளிப்படுத்த போராடும்.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோரூட், பென் டக்கெட், பிலிப் சால்ட், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், மார்க் வுட், ஆதில் ரஷித், ஆர்ச்சர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்தது. அதிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெறும் வேட்கையில் உள்ளது.
இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்க முயற்சிக்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயமடைந்த பேட்டர் ஸ்மித் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி:
பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட்.
- மும்பையை 80 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வீழ்த்தியது.
- ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் விதர்பா- கேரளா அணிகள் வருகிற 26-ந் தேதி மோதுகின்றனர்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி கடந்த 17-ந் தேதி தொடங்கியது. ஒரு அரையிறுதிப் போட்டியில் மும்பை- விதர்பா அணிகளும் கேரளா- குஜராத் அணிகளும் மோதினர்.
மும்பை விதர்பா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 270 ரன்கள் குவித்தது.
இதனால் விதர்பா 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. யாஷ் ரத்தோட்டின் சதத்தின் மூலம் (151) விதர்பா அணி 292 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணிக்கு 408 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து சர்துல் தாகூர் - ஷம்ஸ் முலானி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் அரை சதம் கடந்தார். 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி எதிர்பாரதவிதமாக ரன் அவுட் ஆனது. ஷம்ஸ் 46 ரன்களில் வெளியேறினார். அதனை தொடர்ந்து ஷர்துல் 66 ரன்கள் என்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் மோஹித் அவஸ்தி- ராய்ஸ்டன் டயஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். ஆனாலும் அவஸ்தி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் விதர்பா- கேரளா அணிகள் வருகிற 26-ந் தேதி மோதுகின்றனர்.
- போட்டி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்சில் யார் அதிக ரன்கள் எடுத்தார்களோ அந்த அணி வெற்றி பெறும்.
- குஜராத் அணி 455 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி கடந்த 17-ந் தேதி தொடங்கியது. ஒரு அரையிறுதிப் போட்டியில் மும்பை- விதர்பா அணிகளும் கேரளா- குஜராத் அணிகளும் மோதினர்.
இதில் குஜராத்- கேரளா அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்பாக சென்றது. முதலில் பேட்டிங் செய்த கேரளா அணி முதல் இன்னிங்சில் 457 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்க வீரர்களான பஞ்சால்- ஆர்யா தேசாய் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் குவித்தது.
ஆர்யா தேசாய் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சால் 148 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பரபரப்பான கட்டத்தில் 446 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை குஜராத் அணி இழந்தது. இன்னும் 12 ரன்கள் எடுத்தால் முதல் இன்னிங்சில் கேரளா அணியை விட குஜராத் அணி முன்னிலை பெற்றுவிடும். அப்படி எடுத்து விட்டால் குஜராத் அணி வெற்றி பெற்று விடும். ரஞ்சி டிராபி போட்டி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்சில் யார் அதிக ரன்கள் குவித்துள்ளார்களோ அந்த அணி வெற்றி பெறும்.
அந்த வகையில் கடைசி ஜோடி விளையாடியது. கடைசியாக 3 ரன்கள் தேவை என்ற நிலையில் நாக்வஸ்வல்லா அதிரடியாக விளையாடுவார். அந்த பந்து சில்லி பாய்ண்டில் இருந்த கேரள வீரரின் ஹெல்மெட்டில் பட்டு சிலிப் திசையில் நின்று கொண்டிருந்த சச்சின் பேபி கையில் சிக்கியது.
கேரள வீரர்கள் அவுட் என தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தினர். ஆனால் பேட்டர்கள் இருவரும் அவுட்டா இல்லையா என்பது போல களத்தில் நின்றனர். நடுவர்கள் இருவரும் ஆலோசித்து அவுட் என தெரிவித்தனர்.
2 முன்னிலையை பெற்றதால் கேரள அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது உறுதி ஆகிவிட்டது. இன்று கடைசி நாள் என்பது குஜராத் அணி 2-வது இன்னிங்சில் விளையாட வாய்ப்பு இல்லை. கேரளா அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கேரளா அணி ரஞ்சி டிராபி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.






