என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்கள் அடித்த 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
    • மும்பை அணியின் இந்த மகத்தான சாதனைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 200+ ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்தது.

    ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்கள் அடித்த 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். அண்மையில் முடிந்த எலிமினேட்டர் போட்டியில் கூட முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 200+ ரன்கள் அடித்து வெற்றி பெற்றிருந்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த மகத்தான சாதனைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    மேலும், ஐபிஎல் பிளேஆப் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கும் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் நாக் அவுட் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு:

    204 - PBKS vs MI, அகமதாபாத், 2025*

    200 - KKR vs PBKS, பெங்களூரு, 2014

    191 - KKR vs CSK, சென்னை, 2012

    189 - GT vs RR, கொல்கத்தா, 2022

    179 - CSK vs SRH, மும்பை, 2018

    • நேற்று நடந்த குவாலிபையர் 2 ஆட்டத்தில் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தியது.
    • இதன்மூலம் பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக இறுதிக்கு முன்னேறியது.

    அகமதாபாத்:

    ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.

    நேற்று நடந்த குவாலிபையர் 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி

    2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், அகமதாபாத்தில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

    இதன்மூலம் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது. இரு அணிகளும் வெற்றிபெற போராடும் என்பதால் இறுதிப்போட்டி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம்.

    • முதலில் ஆடிய மும்பை அணி 203 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய பஞ்சாப் 207 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.

    மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 44 ரன்னும், திலக் வர்மா 26 பந்தில் 44 ரன்னும் குவித்தனர். கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. பிரப் சிம்ரன் சிங் 8 ரன்னும், பிரியான்ஷு ஆர்யா 20 ரன்னும் எடுத்தனர்.

    3வது விக்கெட்டுக்கு ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி இணைந்தது. இங்லிஸ் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து இறங்கிய நேஹல் வதேரா ஷ்ரேயசுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஷ்ரேயஸ் அய்யர் பொறுப்புடன் ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 41 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அந்த அணியின் கீசி கார்டி சதமத்து அசத்தினார்.

    கார்டிப்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கார்டிப்பில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 47.4 ஓவரில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கீசி கார்டி சிறப்பாக அடி சதமடித்து 103 ரன்கள் எடுத்தார். ஷாய் ஹோப் 78 ரன்கள் எடுத்தார். பிராண்டன் கிங் 59 ரன்னில் அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் அதில் ரஷீத் 4 விக்கெட்டும், சாகிப் மகமுது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடினார். 6வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோ ரூட்-வில் ஜாக்ஸ் ஜோடி 143 ரன்கள் சேர்த்த நிலையில் வில் ஜாக்ஸ் 49 ரன்னில் அவுட்டானார்.

    தனியாகப் போராடிய ஜோ ரூட் சதமடித்து, 166 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து 48.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    • டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 203 ரன்களைக் குவித்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.

    மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக ஆடினர்.

    பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 44 ரன்னும், திலக் வர்மா 26 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.

    ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

    • ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக முன்பு தெரிவித்திருந்தார்.
    • அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

    இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் விரைவில் குடும்பஸ்தனாக மாற உள்ளார்.

    அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி (SP) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.

    இருவருக்கும் ஜூன் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விழாவிற்கான இடமாக லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    பிரியாவின் தந்தையும் எம்.எல்.ஏ.வுமான துபானி சரோஜ், ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக முன்பு தெரிவித்திருந்தார்.

    அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும், இரு குடும்பங்களின் பெரியவர்களும் தங்கள் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இந்த சூழலில், அவர்களின் நிச்சயதார்த்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

    மறுபுறம், ரிங்கு சிங் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக நற்பெயரைப் பெற்றுள்ளார். அவர் தற்போது இந்திய டி20 அணியில் உள்ளார். 

    • எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
    • இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்

    குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சு தேர்வு செய்தது.

    இதனால், முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்க இருந்தது.

    டாஸ் போடப்பட்ட சில நிமிடங்களில் மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
    • இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.

    ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர்1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.

    அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப்பா, மும்பையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சு தேர்வு செய்தது.

    இதனால், முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் குவாலிபையர் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 31 வயதான பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்து வீச்சாளராக உள்ளார்.
    • என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை பொறுத்தவரை, நான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல.

    ஜஸ்பிரித் பும்ரா தற்போது உலகின் மிகசிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். 31 வயதான பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்து வீச்சாளராக உள்ளார்.

    இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க்குக்கு அளித்த பேட்டியில் பும்ரா மனம் திறந்து பேசியுள்ளார்.

    அந்த நேர்காணலில் பேசிய பும்ரா, "நான் தீவிரமாக 2 விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன். ஒன்று எனது குடும்பம், மற்றொன்று கிரிக்கெட். ஆனால் எனக்கு, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை விட என்னுடைய குடும்பம் முக்கியமானது. ஏனென்றால் குடும்பம் தான் நிலையானது என்பது உங்களுக்குத் தெரியும்,

    என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை பொறுத்தவரை, நான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல. நான் அவர்களில் ஒருவன், ஒரு மனிதன்" என்று தெரிவித்தார்.

    • ஐ,பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது.
    • குவாலிபையர்1 ஆட்டத்தில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது.

    அகமதாபாத்:

    ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர்1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.

    அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப்பா, மும்பையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 26-ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். அதே நேரத்தில் பஞ்சாப் அணி குவாலிபையர் 1 போட்டியில் பெங்களூரு அணியிடம் 101 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.

    மும்பை இந்தியன்ஸ் வலுவாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது பஞ்சாப்புக்கு சவாலானதே. 2-வது முறையாக பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதற்கு முன் 2014-ல் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

    பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் (517 ரன்), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் (516 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (431 ரன்), அர்ஷ்தீப் சிங் (18 விக்கெட்), ஜோஷ் இங்கிலீஷ், வதேரா, ஷசாங்க் சிங் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப்புக்கு பதிலடி கொடுத்து 7-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வேட்கையில் இருக்கிறது.

    அந்த அணியின் பந்து வீச்சில் பும்ரா துருப்புச்சீட்டாக இருக்கிறார். அவர் இதுவரை 18 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சூர்யகுமார் யாதவ் (673 ரன்), ரோகித் சர்மா (410 ரன்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, பேர்ஸ்டோவ், நமன் தீர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், டிரென்ட் போல்ட் (21 விக்கெட்), சாண்ட்னர் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் குவாலிபையர் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம்.

    • இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 557 ரன்கள் எடுத்தது.
    • கருண் நாயர் இரட்டை சதமடித்து 204 ரன்னில் அவுட் ஆகினார்.

    கான்டேபெரி:

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்குகிறது.

    இதற்கிடையே, இங்கிலாந்து தொடருக்கு முன் இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி இந்திய ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, களமிறங்கிய இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 8 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து இணைந்த கருண் நாயர்,சர்பராஸ் கான் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் 92 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் சதமடித்து அசத்தினார்.

    இந்நிலையில், கருண் நாயர் மற்றும் துருவ் ஜூரல் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துருவ் ஜூரல் 94 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கருண் நாயர் இரட்டை சதம் விளாசி 204 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பில் ஜோஷ் ஹல், ஜமான் அக்தர் தலா 3 விக்கெட்டும், எடி ஜேக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டாம் ஹைன்ஸ் சதமடித்து 103 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மேக்ஸ் ஹோல்டன் அரை சதம் கடந்து 64 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 106 ரன்கள் சேர்த்துள்ளது. எமிலோ கே 46 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 2 விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்துள்ளது.

    • இடது கை ஆட்டக்காரரான அவரிடம் எல்லாவிதமான ஷாட்டுகளும் இருக்கின்றன.
    • கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளதால் அவருக்கு அந்த அனுபவம் கை கொடுக்கும்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய எலிமினேட்டர் சுற்றில் மும்பை- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் குஜராத் முதலில் தடுமாறிய போது தமிழக வீரர்களான சாய் சுதர்சன் - வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றிக்காக போராடினார். இருந்து குஜராத் அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    இருந்தாலும் நடப்பு தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 54 ரன்கள் சராசரியுடன் 759 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஆறு அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில்

    சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இடது கை ஆட்டக்காரரான அவரிடம் எல்லா விதமான ஷாட்டுகளும் இருக்கின்றன. மேலும் டெக்னிக்கலாகவும் அவர் மிகவும் வலுவாக இருக்கிறார். எனவே தான் சொல்கிறேன் நிச்சயம் சவாலான இங்கிலாந்து மைதானங்களில் கூட அவரிடம் உள்ள ஸ்கில்களை வைத்து அவரால் நிச்சயம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

    ஏற்கனவே இங்கிலாந்தில் அவர் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளதால் அவருக்கு அந்த அனுபவம் கை கொடுக்கும். சாய் சுதர்சன் போன்ற திறமையான வீரர் நிச்சயம் இங்கிலாந்து தொடரில் அசத்துவார்.

    என ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

    ×