என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதல்
- நேற்று நடந்த குவாலிபையர் 2 ஆட்டத்தில் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தியது.
- இதன்மூலம் பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக இறுதிக்கு முன்னேறியது.
அகமதாபாத்:
ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
நேற்று நடந்த குவாலிபையர் 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி
2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், அகமதாபாத்தில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
இதன்மூலம் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது. இரு அணிகளும் வெற்றிபெற போராடும் என்பதால் இறுதிப்போட்டி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம்.






