என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக விளையாடிய சேலம் வீரர் ராஜகோபால் 60 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அத்திக் உர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராம் அரவிந்த் 37 ரன்கள் அடித்தார்.

    சேலம் அணி தரப்பில் முஹமது 2 விக்கெட்டுகளும் அஜித் ராம், ஹரீஸ் குமார், ரஹில் சஞ்சய் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் அணி 18.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராஜகோபால் 60 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    மதுரை தரப்பில் முருகன் அஷ்வின், குர்ஜப்னீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • அத்திக் உர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்
    • சேலம் அணி தரப்பில் முஹமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அத்திக் உர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராம் அரவிந்த் 37 ரன்கள் அடித்தார்.

    சேலம் அணி தரப்பில் முஹமது 2 விக்கெட்டுகளும் அஜித் ராம், ஹரீஸ் குமார், ரஹில் சஞ்சய் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 171 ரன்கள் என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கவுள்ளது.

    • ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர்.
    • இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது.

    இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி (SP) எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.

    இந்நிலையில், இன்று லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

    ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர். இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

    25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாதி எம்.பி. ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போட்டியின் 4-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
    • முதல் போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கோவை:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. போட்டியின் 4-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    • ஒரு பாகிஸ்தான் செய்தி தொகுப்பாளர் அப்ரிடி இறந்துவிட்டதாக அறிவிப்பதைக் காணலாம்.
    • சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ சரிபார்க்கப்பட்டது.

    பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இறந்துவிட்டதாகக் கூறும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

    அந்த வீடியோவில், ஒரு பாகிஸ்தான் செய்தி தொகுப்பாளர் அப்ரிடி இறந்துவிட்டதாக அறிவிப்பதைக் காணலாம். இருப்பினும், அது குறித்து உண்மைச் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அது உண்மையல்ல என்று தெரியவந்தது.

    வீடியோவில் உள்ள படங்கள் மற்றும் பிற கூறுகள் AI ஆல் உருவாக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டது.

    ஷாஹித் அப்ரிடி உண்மையில் ஆரோக்கியமாக இருப்பதாகவும்,சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ உண்மைக்குப் புறம்பானது என்றும் உண்மைச் சரிபார்ப்புக் குழு தெளிவுபடுத்தியது. 

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.
    • ஐ.சி.சி. மே மாத சிறந்த வீராங்கனை விருதை தென் ஆப்பிரிக்காவின் சோலி டைரான் வென்றார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

    அதன்படி, மே மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர்ப்பட்டியலை ஐ.சி.சி. அறிவித்தது.

    அதில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் பிரண்டன் மெம்முல்லன் (ஸ்காட்லாந்து), மிலிண்ட் குமார் (அமெரிக்கா) மற்றும் முகமது வாசீம் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை யு.ஏ.இ. அணியின் கேப்டன் முகமது வாசீம் வென்றுள்ளார்.

    இதேபோல், மே மாத சிறந்த வீராங்கனை விருதை தென் ஆப்பிரிக்காவின் சோலி டைரான் வென்றுள்ளார்.

    • நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருச்சி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்தது.

    கோவை:

    டிஎன்பிஎல் 2025 சீசனின் 3-வது லீக் போட்டி கோவையில் நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது.

    வாசீம் அகமது 32 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாபர் ஜமால் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஆர். ராஜ்குமார் அதிரடியாக ஆடி 16 பந்தில் 30 ரன்கள் விளாசினார்.

    நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 21 பந்தில் 41 ரன் குவித்தார். சந்தோஷ் குமார் 45 ரன்னில் அவுட்டானார். ஹரீஷ் 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், நெல்லை ராயல் கிங்ஸ் 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    • வாசீம் அகமது 32 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஜாஃபர் ஜமால் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 3ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி திருச்சி கிராண்ட் சோலாஸ் அணியின் சுஜய் சிவசங்கரன், ஜெயராமன் சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுஜய் சிவசங்கரன் 12 ரன்னிலும், ஜெயராமன் சுரேஷ் குமார் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    3ஆவது விக்கெட்டுக்கு வாசீம் அகமது உடன் ஜாஃபர் ஜமால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. வாசீம் அகமது 32 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சய் யாதவ் 8 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

    5ஆவது விக்கெட்டுக்கு ஜமால் உடன் ராஜ்குமார் ஜோடி சேர்ந்தார். ஜாஃபர் ஜமால் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது திருச்சி அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆர். ராஜ்குமார் அதிரடியாக 16 பந்தில் 30 ரன்கள் விளாச திருச்சி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.

    திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி:-

    ஜெயராமன் சுரேஷ் குமார், வாசீம் அகமது, சுஜய் சிவசங்கரன், U முகிலேஷ, சஞ்சய் யாதவ், ஜாஃபர் ஜமால், ஜெகதீசன் கவுசிக், ஆர். ராஜ்குமார், பி. சரவண குமார், அதிசயராஜ் டேவிட்சன், செல்வ குமாரன்.

    நெல்லை ராயல் கிங்ஸ் அணி:-

    அருண் கார்த்திக், அஜிதேஷ் குருசாமி, என்.எஸ். ஹரிஷ், ரிதிக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி.எஸ். நிர்மல் குமார், முகமது அட்னாம் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யூதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், எம். உதய் குமார்.

    • சுப்மன் கில்லை இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக நியமித்தது சரியான நகர்வு என நினைக்கிறேன்.
    • ஐபிஎல் தொடர் முழுவதும் குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் எவ்வாறு வழி நடத்தினார் என்பதை பார்க்க வேண்டும்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கேப்டனாக அறிமுகமாகும் முதல் தொடரே அவருக்கு சவாலானதாக அமைந்துள்ளது. இங்கிலாந்து சீதோஷ்ண நிலையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி எவ்வாறு விளையாடும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே வெளிநாட்டு மண்ணில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடியது கிடையாது என்ற விமர்சனமும் எழும்பியது.

    இந்த நிலையில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான நபர் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில் "சுப்மன் கில்லை இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக நியமித்தது சரியான நகர்வு என நினைக்கிறேன். ஐபிஎல் தொடர் முழுவதும் குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் எவ்வாறு வழி நடத்தினார் என்பதை பார்க்க வேண்டும். அவருடைய தலைமைத்துவம் சிறப்பானதாக உள்ளது. பேட்டராகவும், கேப்டனாகவும் இருந்தால் தலைமைத்துவம் நன்றாக இருக்கும் என்பது என்னை பொறுத்தவரையில் முக்கியமான விசயம். நீங்கள் ரன்கள் சேர்க்க வேண்டும். சுப்மன் கில் அதை செய்து கொண்டிருக்கிறார். இது சரியான நேரம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • முதல் 8 போட்டிகளும் கோவையில் நடைபெறுகின்றன.
    • முடிவடைந்த 2 போட்டிகளிலும் சேஸிங் அணி வெற்றி பெற்றுள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 3ஆவது போட்டி கோவையில் இன்று நடைபெறுகிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நெல்லை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி:-

    ஜெயராமன் சுரேஷ் குமார், வாசீம் அகமது, சுஜய் சிவசங்கரன், U முகிலேஷ, சஞ்சய் யாதவ், ஜாஃபர் ஜமால், ஜெகதீசன் கவுசிக், ஆர். ராஜ்குமார், பி. சரவண குமார், அதிசயராஜ் டேவிட்சன், செல்வ குமாரன்

    நெல்லை ராயல் கிங்ஸ் அணி:-

    அருண் கார்த்திக், அஜிதேஷ் குருசாமி, என்.எஸ். ஹரிஷ், ரிதிக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி.எஸ். நிர்மல் குமார், முகமது அட்னாம் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யூதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், எம். உதய் குமார்

    • ஆர்சிபி அணிக்காக ஹேசில்வுட் விளையாடினார்.
    • பஞ்சாப் அணியில் இங்கிலிஷ் இடம் பிடித்திருந்தார்.

    ஐபிஎல் 2025 சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. மே மாதம் 25ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இதனால் போர் ஏற்படும் சூழல் உருவானது.

    இதன்காரணமாக ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. 10ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 17ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.

    இதனால் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் தேசிய அணிக்கு விளையாட செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (ஜூன் 11ஆம் தேதி தொடக்கம்) விளையாடுவதற்கு தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டதால் இரு அணி வீரர்களும் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    மார்கிராம், ரபாடா, ஸ்டார்க் உள்ளிட்ட வீரர்கள் பிளேஆஃப் சுற்றில் விளையாடவில்லை. அதேவேளையில் பிளேஆஃப் சுற்றுக்குக்கு முன்னேறிய ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்த ஹேசில்வுட் மற்றும் பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்த இங்கிலிஷ் ஆகியோர் இறுதிப் போட்டி வரை விளையாடினர்.

    இறுதிப் போட்டி ஜூன் 3ஆம் தேதி முடிவடைந்த நிலையில் ஜோஷ் இங்கிலிஷ் புறப்பட்டார். ஹெசில்வுட் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் புறப்பட்ட்டார். இந்த நிலையில் இருவரும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இணைந்துள்ளனர்.

    • முகமது ரிஸ்வான் ஒயிட்பால் அணி கேப்டனாக இருந்து வருகிறார்.
    • ஷான் மசூத் டெஸ்ட் அணி கேப்டனாக உள்ளார்.

    பாகிஸ்தான் ஒயிட்பால் கிரிக்கெட் அணி கேப்டனாக ரிஸ்வான் இருந்து வருகிறார். பாகிஸ்தான் ஜிம்பாப்வே சென்று டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் சல்மான் ஆகா கேப்டன்ஷிப் செய்யும் விதம் புதிய பயிற்சியாளர் மைக் ஹசன் மற்றும் தேர்வுக்குழு அதிகாரிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.

    இதனால் சல்மான் ஆகா டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 3 வடிவிலான கிரிக்கெட் அணி கேப்டனாக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

    முகமது ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான அணி நியூசிலாந்து சென்று ஒருநாள் தொடரை 3-0 எனத் தோற்றிருந்தது. அவரது கேப்டன்ஷிப் விமர்சனத்திற்கு உள்ளானது. அத்துடன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்க சுற்றோடு வெளியேறியது.

    ஷான் மசூத் டெஸ்ட் அணி கேப்டனாக உள்ளார். இவரது தலைமையில் பாகிஸ்தான் 12 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச அணிக்கெதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை 0-2 என இழந்திருந்தது. இதனால் இருவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவ்வளவாக ஈர்ப்பு இல்லை.

    இந்த நிலையில்தான் சல்மான் ஆகாவின் கேப்டன்ஷிப், அவரின் தெளிவு, தந்திரோபாய திறமை ஆகியவை தேர்வாளர்களை ஈர்த்துள்ளது.

    ×