என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டிஎன்பிஎல் 2025: நெல்லை ராயல்ஸ் கிங்ஸ்க்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திருச்சி கிராண்ட் சோலாஸ்
    X

    டிஎன்பிஎல் 2025: நெல்லை ராயல்ஸ் கிங்ஸ்க்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திருச்சி கிராண்ட் சோலாஸ்

    • வாசீம் அகமது 32 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஜாஃபர் ஜமால் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 3ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி திருச்சி கிராண்ட் சோலாஸ் அணியின் சுஜய் சிவசங்கரன், ஜெயராமன் சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுஜய் சிவசங்கரன் 12 ரன்னிலும், ஜெயராமன் சுரேஷ் குமார் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    3ஆவது விக்கெட்டுக்கு வாசீம் அகமது உடன் ஜாஃபர் ஜமால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. வாசீம் அகமது 32 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சய் யாதவ் 8 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

    5ஆவது விக்கெட்டுக்கு ஜமால் உடன் ராஜ்குமார் ஜோடி சேர்ந்தார். ஜாஃபர் ஜமால் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது திருச்சி அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆர். ராஜ்குமார் அதிரடியாக 16 பந்தில் 30 ரன்கள் விளாச திருச்சி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.

    திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி:-

    ஜெயராமன் சுரேஷ் குமார், வாசீம் அகமது, சுஜய் சிவசங்கரன், U முகிலேஷ, சஞ்சய் யாதவ், ஜாஃபர் ஜமால், ஜெகதீசன் கவுசிக், ஆர். ராஜ்குமார், பி. சரவண குமார், அதிசயராஜ் டேவிட்சன், செல்வ குமாரன்.

    நெல்லை ராயல் கிங்ஸ் அணி:-

    அருண் கார்த்திக், அஜிதேஷ் குருசாமி, என்.எஸ். ஹரிஷ், ரிதிக் ஈஸ்வரன், சோனு யாதவ், பி.எஸ். நிர்மல் குமார், முகமது அட்னாம் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யூதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், எம். உதய் குமார்.

    Next Story
    ×