என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Grand Cholas"

    • முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய திருச்சி அணி 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    திண்டுக்கல்:

    9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற கடைசி மற்றும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.

    விமல் குமார் 55 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஷிவம் சிங் 37, ஹனி சைனி 21 ரன்கள் எடுத்தனர்.

    திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன், சரவணகுமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் திருச்சி கிராண்ட் சோழாஸ் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    5வது விக்கெட்டுக்கு கவுசிக், சஞ்சய் யாதவ் ஜோடி 98 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு துணை நின்றது. கவுசிக் 42 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய சஞ்சய் யாதவ் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், திருச்சி அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வென்றதுடன் 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    • திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • விமல் குமார் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    9வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    நடப்பு டி.என்.பி.எல். தொடரில் கடந்த ஆட்டத்தின் வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.

    இதில், அதிகபட்சமாக விமல் குமார் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். தொடர்ந்து, ஷிவம் சிங் 37, ஹனி சைனி 21 ரன்கள், மான் பாஃப்னா 14 ரன்கள் எடுத்தனர்.

    இதன்மூலம், 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் திருச்சி கிராண்ட் சோழாஸ் களமிறங்கியுள்ளது.

    • 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் மோதுகின்றன.
    • டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    9வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    நடப்பு டி.என்.பி.எல். தொடரில் கடந்த ஆட்டத்தின் வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி, முதலில் ஆடிய சேலம் அணி 179 ரன்களை குவித்தது.

    கோவை:

    டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன. கோவையில் இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தடைபட்டது.

    அதன்படி, சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் 10 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராஜேந்திரன் விவேக் 2 ரன்னிலும், கவின் 3 ரன்னிலும் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஹரி நிஷாந்த் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அடுத்து இறங்கிய சன்னி சந்து அதிரடியில் மிரட்டினார். ஹரி நிஷாந்த் 58 பந்தில் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சன்னி சந்து 27 பந்தில் 45 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    4வது விக்கெட்டுக்கு ஹரி நிஷாந்த், சன்னி சாந்து ஜோடி 93 ரன்கள் சேர்த்தது.

    இறுதியில், சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்தது.

    திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • சேலம் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளது.
    • திருச்சி அணி இதுவரை வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.

    கோவை:

    டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

    சேலம் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளது. திருச்சி அணி வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.

    இந்நிலையில், டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்குகிறது.

    • நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருச்சி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்தது.

    கோவை:

    டிஎன்பிஎல் 2025 சீசனின் 3-வது லீக் போட்டி கோவையில் நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது.

    வாசீம் அகமது 32 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாபர் ஜமால் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஆர். ராஜ்குமார் அதிரடியாக ஆடி 16 பந்தில் 30 ரன்கள் விளாசினார்.

    நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 21 பந்தில் 41 ரன் குவித்தார். சந்தோஷ் குமார் 45 ரன்னில் அவுட்டானார். ஹரீஷ் 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், நெல்லை ராயல் கிங்ஸ் 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    • இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின.
    • திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

    இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன் படி முதலில் களமிறங்கிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சேலம் அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    அடுத்ததாக களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள் திருச்சி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே சேலம் அணி எடுத்தது.

    இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி பெற்றது. சேலம் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது அட்னான் கான் 40 ரன்களும் விவேக் 33 ரன்களும் எடுத்தனர். திருச்சி அணி தரப்பில் சரவண குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • முதலில் ஆடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் 124 ரன்கள் எடுத்தது.
    • கோவை அணி கேப்டன் ஷாருக் கான் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    கோவை:

    கோவையில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் இறங்கிய திருச்சி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவை அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திருச்சி அணி தத்தளித்தது.

    சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால் ஜோடி நிதானமாக ஆடியது. 7வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சய் யாதவ் 34 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. ஜாபர் ஜமால் அதிரடியாக ஆடி 41 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கோவை அணி சார்பில் கேப்டன் ஷாருக் கான் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    நெல்லை:

    விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகின்றன.

    இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள மிக முக்கியமான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    • ஜெகதீசன் 51 ரன்னிலும் சந்தோஷ் குமார் 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • திருச்சி தரப்பில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன் - சந்தோஷ் குமார் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தனர். 51 ரன்கள் எடுத்த போது ஜெகதீசனும் 56 ரன்களில் சந்தோஷ் குமாரும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் அப்ராஜித் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து வந்த டேரில் ஃபெராரியோ தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார். இதனால் 15 பந்தில் 30 எடுத்து அவுட் ஆனார். இதில் 3 சிக்சர்களும் 1 பவுண்டரியும் அடங்கும்.

    இதனையடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால்- அபிஷேக் தன்வர் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 29 ரன்னிலும் அபிஷேக் தன்வர் 26 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். திருச்சி தரப்பில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஃபெராரியோ 15 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
    • சேப்பாக் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன் - சந்தோஷ் குமார் முறையே 51 மற்றும் 56 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் அப்ராஜித் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேரில் ஃபெராரியோ 15 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து ரஞ்சன் பால் - அபிஷேக் தன்வர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து 199 ரன்களை துரத்திய திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இதன் காரணமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருச்சி சார்பில் ஜாபர் ஜமால் 52 ரன்களையும், வசீம் அகமது 48 ரன்களையும், ராஜ்குமார் 39 ரன்களையும் எடுத்தனர். சேப்பாக் சார்பில் அஸ்வின் க்ரிஸ்ட் 2 விக்கெட்டுகளையும், கனேஷன் பெரியசாமி மற்றும் அபிஷேக் தன்வார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ×