என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்றார் யு.ஏ.இ. அணி கேப்டன்
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.
- ஐ.சி.சி. மே மாத சிறந்த வீராங்கனை விருதை தென் ஆப்பிரிக்காவின் சோலி டைரான் வென்றார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.
அதன்படி, மே மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர்ப்பட்டியலை ஐ.சி.சி. அறிவித்தது.
அதில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் பிரண்டன் மெம்முல்லன் (ஸ்காட்லாந்து), மிலிண்ட் குமார் (அமெரிக்கா) மற்றும் முகமது வாசீம் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை யு.ஏ.இ. அணியின் கேப்டன் முகமது வாசீம் வென்றுள்ளார்.
இதேபோல், மே மாத சிறந்த வீராங்கனை விருதை தென் ஆப்பிரிக்காவின் சோலி டைரான் வென்றுள்ளார்.
Next Story






