என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 39 சதங்கள் விளாசியுள்ளார்.
- ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை.
இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.
சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருவதுடன், பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறார்.
அவர் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் இதுநாள் வரையிலும் சதமடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் அடித்துள்ளார். ஆனால் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட்டின் அதிகபட்ச ஸ்கோர் 89 ரன்களாகும்.
இந்நிலையில் இந்த முறை ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதுதவிர, பந்துவீச்சில் அவர் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- 11 வயதாக இருக்கும்போது 23 வயதிற்கு உட்பட்டோருக்கான வேகப்பந்து வீச்சு முகாமுக்கு சென்றேன்.
- 7ஆவது அல்லது 8ஆவது இடத்தில் களம் இறங்கி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தேன்.
இந்திய டெஸ்ட் அணி கேப்டன், ஒருநாள் மற்றும் டி20 அணி துணைக் கேப்டனாக சுப்மன் கில் இருந்து வருகிறார். 2019ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான நிலையில், 6 வருடத்திற்குள் மூன்று விடிவிலான கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவிக்கு உயர்ந்துள்ளார்.
சுப்மன் கில், தன்னுடைய சிறுவயது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நினைவு கூர்ந்துள்ளார். தன்னுடைய 11 வயதில், கிரிக்கெட்டுதான் தன்னுடைய தொழிலாக இருக்கப்போகிறது என உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது:-
நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு 11 வயது இருக்கும்போது, கிரிக்கெட்டுதான் தன்னுடைய தொழிலாக இருக்கப் போகிறது என உணர்ந்தேன். 23 வயதுக்கு உட்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கான முகாம் நடைபெற்றது. அப்போது எனக்கு 11 வயதுதான். அங்கிருந்த மற்ற வீரர்களில் பெரும்பாலானோர் என்னைக் காட்டிலும் இரண்டு மடங்கு வயது அதிகம் கொண்டவர்களாக இருந்தனர். அதேவேளையில் பேட்ஸ்மேன்கள் சற்று குறைவாக இருந்தனர்.
நான் என்னுடைய சிறந்த நண்பர் மற்றும் நெருங்கிய நண்பருமான குஷ்ப்ரீத் உடன் பயிற்சி மேற்கொண்டேன். குர்ஷ்பீரித் வேகப்பந்து வீச்சாளர். அவர் பயிற்சியாளரிடம் சென்று, நம்மிடம் பேட்ஸ்மேன்கள் குறைவு. அதனால் என்னை களம் இறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பயிற்சியாளர் என்னையும், எனது நண்பரையும் களம் இறக்கினார்.
நான் 7 அல்லது 8ஆவது வரிசையில் பேட்டிங் செய்ய இறங்கினேன். அணியின் முன்கள வீரர்கள் நான்கு அல்லது ஐந்து ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன்பின் நான் பேட்டிங் செய்ய களம் இறங்கினேன். 90 ரன்கள் அடித்து நாட்அவுட்டாக இருந்தேன். அந்த தருணம், அந்த இன்னிங்ஸ், பயிற்சி போட்டியாக இருந்தாலும் கூட எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த தருணம்தான் இனிமேல் கிரிக்கெட்டுதான் தொழில் என்பதை உணர வைத்தது.
இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
- முதலில் விளையாடிய தெற்கு மண்டலம் 149 ரன்னில் சுருண்டது.
- ரஜத் படிதார் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
துலீப் கிரிக்கெட் இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. தெற்கு மண்டலம்- மத்திய மண்டலம் அணிகள் மோதும் இந்த போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற மத்திய மண்டலம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய தெற்கு மண்டலம், 149 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் தன்மே அகர்வால் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். மத்திய மண்டலம் சார்பில் சரண்ஸ் ஜெயின் 5 விக்கெட்டும், குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் மத்திய மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. டேனிஷ் மாலேவார் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷுபம் சர்மா 6 ரன்னிலும், அக்ஷேய் வட்கார் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் ரஜத் படிதார் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 115 பந்தில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 12 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். யாஷ் ரதோட் 76 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
72 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்து மத்திய மண்டலம் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.
- ஆபரேசன் சிந்தூருக்குப் பிறகு கிரிக்கெட், வணிகம் நடைபெறக் கூடாது எனச் சொல்கிறார்கள்.
- இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும்வரை, கிரிக்கெட் மற்றும் வணிகமும் நடைபெறக் கூடாது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (நாளைமறுதினம்) துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நடைபெற்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பர தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடத்தப்பட வேண்டுமா? என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான ஹர்பஜன் சிங் கூறியதாவது:-
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி எப்போதும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் போட்டியாக இருக்கும். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, எல்லோரும் கிரிக்கெட் மற்றும் வர்த்தகம் இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறக்கூடாது எனச் சொல்கிறார்கள். நாம் லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடினோம். அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் புறக்கணித்தோம்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனை மற்றும் புரிதல் முறை உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும்வரை, கிரிக்கெட் மற்றும் வணிகமும் நடைபெறக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதுதான் என் கருத்து. அரசாங்கம் போட்டி நடக்கலாம் என்று சொன்னால், அது நடக்க வேண்டும். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
- முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.
எங்கள் அணியில் முகமது நவாஸ் இடம் பிடித்துள்ளார். தற்போதைய நிலையில் டி20 -யில் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ்தான். அவர் அணிக்கு திரும்பியதில் இருந்து கடந்த 6 மாதங்களில் சிறந்த தரவரிசையை பெற்றுள்ளார் என பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
முகமது நவாஸ் தற்போது ஐசிசி தரவரிசையில் 30ஆவது இடத்தில் உள்ளார். நாளைமறுதினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு முகமது நவாஸ் முக்கிய துருப்பு சீட்டாக இருக்கார்.
31 வயதான முகமது நவாஸ் 71 டி20 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அணியில் அறிமுகம் ஆனார். யுஏஇ-யில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்த தொடரில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார். 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீ்ழ்த்தினார்.
- முதல் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது.
- பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன் இன்று மோதுகிறது.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது. பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன் இன்று மோதுகிறது.
இதையடுத்து, நாளை மறுதினம் துபாயில் அரங்கேறும் முக்கியமான லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இவ்விரு அணிகள் முதல் முறையாக சந்திக்க இருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய வீரர்கள் ஆட்டத்தின் மீது மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இந்தியாவிடம் சிறந்த அணி உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மற்ற விஷயங்களால் கவனச்சிதறல் ஏற்படாமல், தங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும். களம் இறங்கி வெற்றி பெறுங்கள். அரசாங்கம் தங்களது வேலையை பார்த்துக் கொள்ளும். வீரர்கள் தங்களது வேலையை சரியாக செய்ய வேண்டும். அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா நன்றாக ஆடியது. கோப்பையையும் நமது அணி வெல்லும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
- முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வங்கதேசம் 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. நிசாகத் கான் 42 ரன்னும், ஜீஷன் அலி 30 ரன்னும், யாசிம் முர்தசா 28 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹொசைன், தன்ஷிம் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பர்வேஸ் ஹொசைன் 19 ரன்னும், தன்சித் ஹசன் 14 ரன்னும் எடுத்தனர்.
3-வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹிருதோய் ஜோடி இணைந்தது. இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
அதிரடியாக ஆடிய லிட்டன் தாஸ் அரை சதம் கடந்து 59 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், வங்கதேசம் 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தவ்ஹித் ஹிருதோய் 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ரோஜர் பின்னி கடந்த இரு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவருக்கு சமீபத்தில் 70 வயது நிறைவடைந்தது.
பி.சி.சி.ஐ. விதிகளின்படி 70 வயது கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால் ரோஜர் பின்னி தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்கிடையே, பி.சி.சி.ஐ. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேன்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பி.சி.சி.ஐ தலைவர் பதவிக்கு சச்சின் தெண்டுல்கர் பரிசீலிக்கப்படுவதாகவோ அல்லது பரிந்துரைக்கப்படுவதாகவோ சில தகவல்கள், வதந்திகள் பரவி வருவதாக எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். ஆதாரமற்ற ஊகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
- ஹாங்காங் கேப்டன் நிசாகத் கான் 42 ரன்கள் அடித்தார்.
- தொடக்க வீரர் ஜீஷன் அலி 30 ரன்கள் சேர்த்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் வங்கதேசம்- ஹாங்காங் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஹாங்காங் அணி வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாடினர்.
தொடக்க வீரர் அன்ஷி ராத் 4 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் ஜீஷன் அலி 34 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிசாகத் கான், கேப்டன் யாசிம் முர்தாசா நிலைத்து நின்று விளையாடினர். இதனால் ஹாங்காங் 14.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
நிசாகத் கான் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யாசிம் முர்தசா 28 ரன்னில் வெளியேறினார். இறுதியாக ஹாங்காங் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.
- இரு அணிகளும் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளன.
- ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி அபுதாபியில் நடக்கிறது. இதில் வங்கதேசம்- ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்கதேச அணி கேப்டன் லிட்டோன் தாஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளும் பி பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்திருந்தது.
- 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது.
- பாகிஸ்தான் போட்டிகள் மட்டும் கொழும்பில் நடத்தப்படுகிறது.
8 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான 13ஆவது உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது. 33 நாட்களாக நடைபெறும் இந்த மெகா தொடரில், 31 போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.
இந்த நிலையில் போட்டிக்கான நடுவர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இடம் பிடித்துள்ள 14 கள நடுவர்கள், நான்கு போட்டி நடுவர்கள் (match referee) என அனைவரும் பெண்கள் ஆவார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக முழுவதும் பெண்கள் கொண்ட நடுவர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது.
கள நடுவர்கள் பட்டியலில் கிளைர் போலாசாக், ஜேக்லின் வில்லியம்ஸ், சுயே ரெட்பெர்ன் உள்ளிட்ட சிறந்த பெண் கள நடுவர்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே இரண்டு உலக கோப்பை தொடரில் நடுவர்களாக பணியாற்றியுள்ளனர். லாரன் அகன்பாக் என்பவர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக பணியாற்றியவர்.
மகளிர் கிரிக்கெட்டின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், விளையாட்டின் அனைத்துத் துறைகளிலும் இன்னும் பல வெற்றிக் கதைகளுக்கு வழி வகுக்கும் என்று ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வருகிற 30ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் கொழும்பில் நடைபெற இருக்கிறது.
இதற்கு முன்னதாக பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி, இரண்டு ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் பெண்கள் மட்டுமே நடுவராக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
- 2-வது டி20 போட்டி நாளை நடக்கிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி கார்டிப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
மழை காரணமாக இந்த போட்டி 9 ஓவர்கள் ஆட்டமாக தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நாளை நடக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக விலகி உள்ளார்.






