என் மலர்
விளையாட்டு
- இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.
- ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கியது அவருடைய முடிவு.
இந்திய கிரிக்கெட் அணியின் 2023 -24 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.
இருவரும் உள்ளூர் தொடர்களில் விளையாடுமாறு பிசிசிஐ மற்றும் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறினார். ஆனால் இருவரும் அதைக் கேட்காமல் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. அதனால் இந்த இருவரையும் சம்பள ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ நீக்கியது.
இந்நிலையில் இவர்கள் இருவரையும் நான் நீக்கவில்லை என்றும் அஜித் அகார்கர் தான் நீக்கினார் என்றும் பிசிசிஐ செயலாளர் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நீங்கள் அரசியலமைப்பை சரி பார்க்கலாம். அந்த முடிவு அஜித் அகர்கரிடம் உள்ளது. இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கியது அவருடைய முடிவு. செயல்படுத்தியது மட்டுமே என்னுடைய வேலை. புதிதாக இணைக்கப்பட்ட சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் தவிர்க்க முடியாதவர்கள்.
அதே போல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு என்னை பிசிசிஐ கருதினால் நான் விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஸ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாட தயாராக இருப்பதாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
இந்தியாவுக்காக விளையாட அதற்கு தகுந்த உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும். இந்திய அணியில் இடம் பிடிக்காத இஷான் கிஷன் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் மும்பை வீரராக விளையாடலாம்.
ஆனால் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு நீங்கள் அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு திறமையை நிரூபிக்க வேண்டும். அதை சரியாக செய்பவர்களையே சரியான வீரர்களாக கருதுவோம். மும்பை போட்டி முடிந்ததும் இஷான் கிஷனிடம் மற்ற வீரர்களை போலவே நான் நட்பாக பேசினேன். வேறு எதுவுமில்லை.
என்று ஜெய்ஷா கூறினார்.
- ஐபிஎல் தொடரில் இம்பேக் பிளேயர் விதி சோதனை முயற்சியாக கொண்டுவரப்பட்டதுதான்.
- இம்பேக் பிளேயர் விதி நிரந்தரமான விதி கிடையாது.
ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை விறுவிறுப்பாக எடுத்து செல்லும் விதமாக ஒவ்வோரு சீசனிலும் புதிய விதிமுறையை அமல்படுத்துவதுண்டு. அந்த வகையில் நடப்பு ஐபிஎல் சீசனில் புதிய விதிமுறையாக இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விதிக்கு இதுவரை எதிர்ப்பு ஏதும் வரவில்லை. ஆனால் ரோகித் சர்மா மட்டும் இந்த விதி தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இம்பேக் பிளேயர் விதிமுறை தொடருமா என்பது குறித்து பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா கூறியதாவது:-
ஐபிஎல் தொடரில் இம்பேக் பிளேயர் விதி சோதனை முயற்சியாக கொண்டுவரப்பட்டதுதான். நிரந்தரமான விதி கிடையாது. இந்த விதியால் ஒவ்வொரு போட்டியிலும் 2 புதிய இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
இம்பேக்ட் விதி குறித்து இதுவரை எந்த அணியும் எங்களிடம் கருத்து தெரிவிக்கவில்லை. அணிகள், ஒளிபரப்பு உரிமம் பெற்றவர்கள் என அனைவரிடமும் கலந்தாலோசித்த பின்னரே, இந்த விதி தொடர வேண்டுமா, கூடாதா என முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி மோசமான தோல்வியை தழுவியது.
- அந்த போட்டி முடிந்த பிறகு கேஎல் ராகுலை லக்னோ அணியின் உரிமையாளர் கடுமையாக சாடினார்.
ஐபிஎல் தொடரின் 57-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 இக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது. 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. கடைசி இரண்டு போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வந்தன.
இந்நிலையில் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை என்றும் கடைசி 2 போட்டிகளில் கேஎல் ராகுல் தான் கேப்டனாக செயல்படுவார் என்று லக்னோ அணியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லக்னோ அணி அடுத்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக வருகிற 14-ந் தேதி மோதுகிறது. அதற்கு அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்கிறது. அந்த போட்டி வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது.
- கடந்த வருடம் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ராகுல் டிராவிட் விரும்பினால் விண்ணப்பிக்கலாம்- ஜெய் ஷா
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ராகுல் டிராவிட். இந்தியாவில் கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரோடு அவருடைய தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது.
ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, இங்கிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை தோல்வியடையாமல் முன்னேறியது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த வருடம் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என பிசிசிஐ தெரிவித்தது.
இந்த நிலையில் ஜூன் மாதத்திற்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவில் ராகுல் நீடிப்பாரா? என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில் "ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை மட்டுமோ. தன்னிச்சையாக அவரது பதவிக்காலம் நீடிக்கப்படமாட்டாது. அவர் விரும்பினால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் தொடர்பான விளம்பரம் வெளியிடப்படும். புதிய பயிற்சியாளர் இந்தியாவைச் சேர்ந்தவரா? வெளிநாட்டைச் சேர்ந்தவரா? என்பது தீர்மானிக்க முடியாது. அதுகுறித்து சிஏசி முடிவு செய்யும். பிசிசிஐ உலகளாவிய அமைப்பாகும்" என் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், தனது மற்றும் தனது சப்போர்ட் ஸ்டாஃப் ஆகியோரின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பாக ஒப்பந்தத்தில் ராகுல் டிராவிட் கையெழுத்திட்டார். ஆனால் அவர்களது பதவிக்காலம் ஜூன் மாதம் வரைதான் என பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- டோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது.
- அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி, கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிம் ஒப்படைத்து, அவரை வழிநடத்தி வருவதுடன் பேட்டிங்கில் இறுதிக் கட்டத்தில் களம் இறங்கி விளையாடி வருகிறார்.
கடைசி ஓவர் அல்லது அதற்கு முந்தைய ஓவரில் களம் இறங்குகிறார். அவர் களம் இறங்கினால் சிக்ஸ் நிச்சயம் என்ற அளவிற்கு சந்திக்கும் பந்துகளை பவுண்டரி லைனுக்கு வெளியே பறக்க விடுகிறார். இதனால் அவர் முன்னதாக ஏன் களம் இறக்கப்படுவதில்லை? என்ற விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. அவர் முன்னதாக களம் இறங்கினால் உடனே அவுட்டாகிவிடுவார் என்ற எதிர் விமர்சனமும் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் எம்.எஸ். டோனி ஏன் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய வருகிறார் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பிளமிங்க் கூறியதாவது:-
டோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது. அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம். அதனால்தான், போட்டியில் 2-4 ஓவர்கள் பேட்டிங் மற்றும் முழுவதுமாக கீப்பிங் செய்து புதிய கேப்டனுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார். அதைத் தொடர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
டோனிக்கு மாற்றாக வேறொரு கீப்பர் அணியில் உள்ளார். ஆனால் அவர் டோனி ஆகிவிட முடியாது. 9-வது இடத்தில் டோனி களமிறங்குகிறார் என்பதாலேயே அவரால் போட்டியில் தாக்கம் ஏற்படுத்த முடியாது என நினைத்து விடாதீர்கள்.
இவ்வாறு பிளமிங் தெரிவித்துள்ளார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கால் இறுதிக்கு முன்னேறி இருந்தார்.
- கால் இறுதியில் மணிகா பத்ரா, 5-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஹினா ஹயாட் டாவுடன் மோதினார்.
சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் போட்டி ஜெட்டா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கால் இறுதிக்கு முன்னேறி இருந்தார்.
இதன் மூலம் எலைட் உலக டேபிள் டென்னிஸ் தொடரில் கால் இறுதியை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
கால் இறுதியில் மணிகா பத்ரா, 5-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஹினா ஹயாட் டாவுடன் மோதினார்.இதில் மணிகா பத்ரா 11-7 6-11 4-11 11-13 2-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
- குஜராத் அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
- சென்னை அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
அகமதாபாத்:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கிறது.
குஜராத் அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்று கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. குஜராத் அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும். எனவே இந்த ஆட்டம் அந்த அணிக்கு வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோல்வி அடைந்தால் அந்த அணியின் அடுத்த சுற்று கனவு கலைந்து போகும். அந்த அணி தனது கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக (டெல்லி, பெங்களூருவுக்கு எதிராக 2 முறை) தோல்வியை சந்தித்துள்ளது.
குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (2 அரைசதம் உள்பட 424 ரன்) நல்ல பார்மில் இருக்கிறார். கேப்டன் சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, விருத்திமான் சஹா ஆகியோர் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் மொகித் ஷர்மா, நூர் அகமது, ரஷித் கான், கடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் அள்ளிய ஜோஷ் லிட்டில் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
சென்னை அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள தனது 3 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்தால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடலாம். 2-ல் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியது வரும். சென்னை அணி தனது முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்த கையோடு களம் இறங்குகிறது.
சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 541 ரன்கள்) அபாரமாக செயல்பட்டு வருகிறார். அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே (350 ரன்) கடந்த 2 ஆட்டங்களில் சோபிக்காதது பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது. மேலும் ரஹானே, டேரில் மிட்செல் கணிசமான பங்களிக்க வேண்டியது முக்கியமானதாகும். சர்வதேச போட்டிக்காக முஸ்தாபிஜூர் ரகுமானும், காயம் காரணமாக பதிரானாவும் விலகி இருப்பது பந்து வீச்சை பலவீனப்படுத்தி இருக்கிறது. மேலும் தசைப்பிடிப்பால் தீபக் சாஹர் ஆட முடியாததும் பின்னடைவாகும். இருப்பினும் கடந்த ஆட்டத்தில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, சிமர்ஜீத் சிங், மிட்செல் சான்ட்னெர், ஷர்துல் தாக்குர் கச்சிதமாக பந்து வீசி கலக்கினர்.
குஜராத்துக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் கால் பதிக்கும் சென்னை அணியின் சவாலை, அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் குஜராத்தால் சமாளிக்க முடியும். அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த சென்னை அணியும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க குஜராத் அணியும் வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை 3 முறையும், குஜராத் 3 தடவையும் வென்று சமநிலை வகிக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
குஜராத்: விருத்திமான் சஹா, சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஷாருக் கான், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், மொகித் ஷர்மா, நூர் அகமது, ஜோஷ் லிட்டில் அல்லது அஸ்மத்துலா ஒமர்ஜாய், சாய் கிஷோர் அல்லது சந்தீப் வாரியர்.
சென்னை: ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னெர், ஷர்துல் தாக்குர், டோனி, துஷர் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் அல்லது ரிச்சர்ட் கிளீசன்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசிய ரிலீ ரோசோவ் 61 ரன்கள் குவித்து அவுட் ஆகினார்.
- ஆர்சிபி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி விராட் கோலி, பட்டிதாரின் அதிரடி அரை சதத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்- ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 6 ரன்னிலும் ஜானி பேர்ஸ்டோவ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரிலீ ரோசோவ் - ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசிய ரிலீ ரோசோவ் 61 ரன்கள் குவித்து அவுட் ஆகினார். அடுத்த சிறிது நேரத்தில் ஷஷாங்க் சிங் 37 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் ஜிதேஷ் சர்மா 5, லிவிங்ஸ்டன் 0, சாம் கரன் 22, அசுதோஷ் சர்மா 8, ஹர்சல் படேல் 0 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் பஞ்சாப் அணி 17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் பிளே ஆப் சுற்றில் இருந்து 2 -வது அணியாக பஞ்சாப் அணி வெளியேறியது.
- வங்காளதேச அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
- வங்காளதேச அணிக்கு எதிரான டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.
வங்காள தேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் முதல் 4 போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது டி20 போட்டியானது சில்ஹெட்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்ன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதன் மூலம் வங்காளதேச அணியை முழுவதுமாக கைப்பற்றியது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் ஷஃபாலி வர்மா களமிறங்கியதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதில் 100-வது சர்வதேச போட்டியில் விளையாடிய வீராங்கனை எனும் வெஸ்ட் இண்டீஸின் ஷெமைன் காம்பெல்லின் சாதனையை ஷஃபாலி வர்மா முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஷெமைன் காம்பெல் 21 வயது 18 நாள்களில் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடியதே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது ஷஃபாலி வர்மா 20 வயது 102 நாள்களில் 100-வது சர்வதேச போட்டியில் பங்கேற்று புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
- கேஎல் ராகுல் நேற்றைய போட்டிக்கு பிறகு அணியினருடன் பயணிக்காமல், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
- கடைசி 2 போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 இக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக்க் சர்மா போட்டியின் முதல் ஓவரில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். இதனால் சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய போட்டிக்கு பிறகு கேஎல் ராகுலை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவும், மேலும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர் ஏலத்திற்கு முன்னதாக அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கேஎல் ராகுல் நேற்றைய போட்டிக்கு பிறகு அணியினருடன் பயணிக்காமல், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அவர் ஒருசில தினங்களில் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை கேஎல் ராகுல் கேப்டன் பதவியிலிருந்து விலகும் நிலையில் நிக்கோலஸ் பூரன் அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெங்களூரு அணி தரப்பில் விராட் கோலி 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுபிளிசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 12 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து விராட் கோலியுடன் பட்டிதார் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பட்டிதார் 21 பந்தில் அரை சதம் கடந்தார். அரை சதம் அடித்த கையோடு 55 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 பந்தில் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து இறுதியில் க்ரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
- டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில், இன்று (மே 9) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் பாப் டு பிளெசிஸ் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கினர். பாப் டு பிளெசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.
இன்றைய போட்டியில் அரைசதம் விளாசிய விராட் கோலி, 47 பந்துகளை எதிர்கொண்டு 92 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி ஆறாவது அரைசதம் விளாசியுள்ளார். நடப்பு தொடரில் அதிக ரன்களை விளாசிய விராட் கோலி ஆரஞ்சு தொப்பி தக்க வைத்துள்ளார்.






