என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து 103 ரன்களை எடுத்தது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்கா வீரர்கள் துல்லியமாகப் பந்துவீசினர். இதனால் நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு இணைந்த சைப்ரண்ட், வான் பீக் ஜோடி 50 ரன்களுக்கும் மேல் எடுத்தது. அந்த அணியில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஒட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சன், அன்ரிச் நார்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவ்லினியுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-1 என எளிதில் கைப்பற்றிசாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.
    • 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

    டி20 உலகக் கோப்பையில் தல்லாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. வங்காளதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். என்றாலும் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே சேர்த்தது.

    பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச வீரர்கள் களம் இறங்கினர். இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    தொடக்க வீரர்கள் தன்ஜித் ஹசன் 3 ரன்னிலும், சவுமியா சர்கார் டக்அவுட்டிலும் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு லிட்டோஸ் தாஸ் உடன் தவ்ஹித் ஹிரிடோய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹிரிடோய் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

    அப்போது வங்காளதேசம் 14.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 113 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

    ஆனால் மெஹ்முதுல்லா ஒருபக்கம் நிலைத்து நின்று 16 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியது பயனில்லாமல் போனது.

    நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஐசிசி டி20 உலகக் கோப்பை மோதலின் போது, இலங்கை அணியின் கேப்டனும், லெக் ஸ்பின்னருமான ஹசரங்கா புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார்.

    சர்வதேச டி20 போட்டிகளில் 108 விக்கெட்டுகளை வீழ்த்தி, மலிங்காவின் 107 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். இந்த விக்கெட்டுகள் மூலம் அவர் ஒரு மைல்கல்லை எட்டினார்.

    டி20 ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ஹசரங்கா பெற்றுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார்.

    160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 15.2 ஓவரில் 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

    நியூசிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. எங்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். பேட் மற்றும் பந்தில் எங்களின் சிறப்பான செயல் திறன் இது. இப்படிப்பட்ட ஒரு அணியை வழிநடத்த நான் பெருமைப்படுகிறேன்.

    எங்கள் பந்துவீச்சாளர்கள் திறமையைப் பயன்படுத்தி பந்து வீசும் பொழுது எங்களுக்கு எதிராக 160 ரன்களை சேசிங் செய்வது கடினம். நாங்கள் திறமையை சரியாகப் பயன்படுத்தினால் எங்களை வீழ்த்துவது கடினம். வெற்றியோ, தோல்வியோ நாம் செய்ய வேண்டிய விஷயங்களைச் சரியாக செய்யவேண்டும். முடிவைப் பற்றி எப்பொழுதும் கவலைப்படுவது கிடையாது.

    பந்துவீச்சில் எங்களுக்கு பரூக்கி மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். இரு போட்டிகளிலும் அவர் பந்து வீசிய விதம் ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சில் பணிபுரிந்தால் அவர் இதைவிட இன்னும் திறமையாக வரமுடியும் என தெரிவித்தார்.

    • நார்வே செஸ் தொடரில் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • இந்தத் தொடரில் தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தை பிடித்தார்.

    நார்வே:

    நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நகமுரா 2-வது இடத்தையும், தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் கார்ல்சன் பாபியானோவை வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு இந்திய மதிப்பில் ரூ. 54 லட்சமும், நகமுராவுக்கு ரூ.27 லட்சமும், பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இதேபோல், மகளிர் பிரிவில் சீனாவின் ஜுவெஞுன் முதலிடம் பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் வைஷாலி 4வது இடமும், கோனேரு ஹம்பி 5-வது இடமும் பிடித்தனர்.

    நார்வே செஸ் தொடரில் 3-வது பிடித்ததற்கு பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    • ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
    • இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.

    9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.

    உலகக்கோப்பை தொடர்களில் நெதர்லாந்திடம் தொடர்ந்து 2 முறை தோல்வியை சந்தித்துள்ள தென்னாப்பிரிக்கா அணி இன்றாவது வெற்றி வாகை சூடுமா என இப்போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையிலும் கடந்தாண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பையிலும் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • டி20 உலகக் கோப்பையில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன.
    • இம்முறை இந்தியாவை வீழ்த்துவதற்கு பாகிஸ்தானுக்கு வாய்ப்புள்ளது என்கிறார் கம்ரான் அக்மல்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பரான கம்ரான் அக்மல் தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவின் பேட்டிங் வரிசை சரியாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. விராட் கோலி 3-வது இடத்தில் களமிறங்கினால் அழுத்தத்தை உள்வாங்கி வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார். அதுவே இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கி, விராட் கோலி 3-வது இடத்தில் வரவேண்டும். விராட் கோலியை இந்தியா தொடக்கமாக களமிறக்கினால் அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் சிக்கக்கூடும். பொதுவாக விராட் கோலி ஒருபக்கம் நங்கூரமாக நின்று போட்டியை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர்.

    எனவே, விராட் கோலியை தொடக்கத்தில் களமிறக்கி இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளது என நினைக்கிறேன். இந்தியா தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். பும்ரா, சிராஜ் ஆகியோர் நன்றாக பந்து வீசுகின்றனர். ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டுகளை எடுத்தார். ஒரே மைதானத்தில் அவர்களுக்கு 3 போட்டிகள் நடைபெறுவது கண்டிப்பாக சாதகமாக இருக்கும். இதுபோன்ற போட்டிகளுக்கு ஐ.சி.சி. தரமான மைதானத்தை அமைக்கவேண்டும். இல்லை என்றால் ரசிகர்கள் சென்றுவிடுவார்கள் என தெரிவித்தார்.

    • ஜோகோவிச் 10.30 மணிக்கு போட்டியை தொடங்கியதால் அதிகாலை 3 மணிக்கு முடிவடைந்தது.
    • 8 மணிக்கு தொடங்காதது அமைப்பாளர்களின் தவறு என முன்னாள் வீரர் ஜான் மெக்என்ரோ குற்றச்சாட்டு.

    உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக திகழ்ந்து வருபவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். நடால் உள்ளிட்ட முன்னிட்ட வீரர்கள் தொடக்கத்திலேயே வெளியேறியதால் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 4-வது சுற்றில் ஜோகோவிச் அர்ஜென்டினாவின் செருண்டோலோவை எதிர்கொண்டார். தரநிலையில் முதல் இடத்தில் இருந்த ஜோகோவிச்சுக்கு 23-ம் நிலை வீரரான செருண்டோலோ கடும் சவாலாக திகழ்ந்தார். இதனால் ஜோகோவிச் ஐந்து செட்கள் வரை விளையாட வேண்டியிருந்தது.

    4-வது செட்டில் விளையாடும்போது கால் மூட்டில் ஜோகோவிச்சிற்கு காயம் ஏற்பட்டது. அந்த காயத்துடன் விளையாடி வெற்றி பெற்றார். இதனால் காலிறுதியில் அவரால் விளையாட முடியாமல் போய்விட்டது. இதனால் போட்டியில் இருந்து வெளியேறியதுடன் நம்பர் ஒன் இடத்தையும் இழந்தார்.

    காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். இதனால் விம்பிள்டனில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஜோகோவிச்சை போட்டியை 10.30 மணிக்கு தொடங்கியதுதான் காயத்திற்கு முக்கிய காரணம் என முன்னாள் ஜாம்பவான் ஜான் மெக்என்ரோ போட்டி அமைப்பாளர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஜான் மெக்என்ரோ கூறுகையில் "3-வதுசுற்றில் டிமிட்ரோவ்- பெர்க்ஸ் இடையிலான போட்டி மழையால் ஒத்திவைக்கப்பட்டது இந்த போட்டி பாரீஸ் உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு ஜோகோவிச் விளையாடும் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இந்த நேரத்தில் ஜோகோவிச் போட்டியை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் போட்டியை தொடங்க முடியவில்லை.

    10.30 மணிக்குதான் போட்டி தொடங்கியது. ஐந்த செட் வரை நீடித்ததால் அதிகாலை 3 மணிக்குதான் போட்டி முடிவடைந்தது. இந்த போட்டியால் ஜோகோவிச் எத்தனை போட்டியை இழக்க போகிறார் என்பதை தெரியாமல் அமைப்பாளர்கள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டனர். காலநிலை (Weather) மிகவும் மோசமான இருந்தது. அது கஷ்டனமா நிலையை உருவாக்கியது." என்றார்.

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    நியூயார்க்:

    9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.

    இந்திய அணி 2-வது போட்டியில் பாகிஸ்தானை நாளை (9-ந்தேதி) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    அமெரிக்காவிடம் அதிர்ச்சிகரமாக வீழ்ந்து நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.

    அயர்லாந்துக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக நம்பிக்கையுடன் ஆடுவார்கள். பேட்டிங்கில் ரோகித் சர்மா, ரிஷப் பண்டும், பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

    அயர்லாந்துக்கு எதிராக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அவர் முழு உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார். அவரது இடத்தில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    விராட் கோலி தொடக்க ஆட்டத்தில் சிறப்பாக ஆடாவிட்டாலும் அதே தொடக்க வரிசையில் விளையாடுவார்.

    பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது எதிர்பாராத ஒன்றாகும்.

    இந்தியாவிடமும் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மோசமாக அமைந்தது. மேலும் சூப்பர் ஓவரில் முகமது அமீர் பந்து வீச்சும் மிகவும் மோசமாக இருந்தது.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும்.

    வெற்றிக்காக இரு அணிகளும் கடைசி வரை முயற்சிக்கும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • வங்காளதேச வீரர்கள் முஷ்டாபிஜூர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    • வீரர் நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியும் வெற்றி பெற முடியாமல் இலங்கை ஏமாற்றம்.

    டி20 உலகக் கோப்பையில் தல்லாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. வங்காளதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். என்றாலும் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே சேர்த்தது. குசால் மெண்டிஸ் (10), கமிந்து மெண்டிஸ் (4), ஹசரங்கா (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்காளதேச அணி சார்பில் முஷ்டாபிஜூர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச வீரர்கள் களம் இறங்கினர். இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    தொடக்க வீரர்கள் தன்ஜித் ஹசன் 3 ரன்னிலும், சவுமியா சர்கார் டக்அவுட்டிலும் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு லிட்டோஸ் தாஸ் உடன் தவ்ஹித் ஹிரிடோய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹிரிடோய் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

    அப்போது வங்காளதேசம் 14.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 113 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

    ஆனால் மெஹ்முதுல்லா ஒருபக்கம் நிலைத்து நின்று 16 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியது பயனில்லாமல் போனது.

    இலங்கை அணி ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்தது. இந்த நிலையில் தற்போது வங்காளதேசத்திடம் தோல்வியடைந்தால் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தவறவிடும் நிலையில் உள்ளது.

    • தொடக்க வீரர் குர்பாஸ் 80 ரன்கள் விளாசினார்.
    • பரூக்கி, ரஷித் கான் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள் பிரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ரஹமதுல்லா குர்பாஸ்- இப்ராஹிம் ஜத்ரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக குர்பாஸ் சிக்சர் மழை பொழிந்தார். அவர் 56 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 80 ரன்கள் விளாசினார். இப்ராஹிம் ஜத்ரன் 41 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுகு்கு 14.3 ஓவரில் 103  ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தது.

    அதன்பின் வந்த ஓமர்ஜாயை (13 பந்தில் 22 ரன்) தவிர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

    பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. ஃபின் ஆலன் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். அதன்பின் நியூசிலாந்து விக்கெட்டுகள் சீட்டு கட்டுபோல் சரிந்தது.

    கான்வே 8 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 9 ரன்னிலும், டேரில் மிட்செல் 5 ரன்னிலும், பிளிப்ஸ் 18 ரனனிலும் ஆட்டமிழந்தனர்.

    பரூக்கி, ரஷித் கான் தொடர்ந்து விக்கெட்டுகளை சாய்க்க 15.2 ஓவரில் 75 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து. இதனால் ஆப்கானிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பரூக்கி, ரஷித் கான் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

    • குர்பாஸ்- இப்ராஹிம் ஜோடி உகாண்டா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 100 ரன்கள் குவித்தது.
    • இதற்கு முன்னதாக விராட் கோலி- ரோகித் சர்மா அடுத்தடுத்த போட்டிகளில் 100 ரன்கள் அடித்திருந்தது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் உகாண்டாவை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சேர்ந்து 100 ரன்கள் குவித்தது.

    இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 80 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 44 ரன்களும் விளாசினர்.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து இந்த ஜோடிகள் 100 ரன்கள் குவித்தது. இதற்கு முன்னதாக விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி இந்த சாதனையை படைத்துள்ளது. இதன்மூலம் குர்பாஸ்- இப்ராஹிம் ஜோடி விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடியின் சாதனையை சமன் செய்துள்ளது.

    பாபர் அசாம்- முகமது ரிஸ்வான் ஜோடி 3 முறை 100 ரன்களை கடந்துள்ளது.

    கில்கிறிஸ்ட்- ஹெய்டன் ஜோடி 2 முறையும், அலேக்ஸ் ஹேல்ஸ்-மோர்கன் ஜோடி இரண்டு முறையும், ஜெயவர்தனே- சங்கக்காரா, டேவிட் வார்னர்-வாட்சன் ஜோடிகள் இரண்டு முறையும் 100 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×