என் மலர்
விளையாட்டு
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- 2வது சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கடந்த வாரம் நடைபெற்ற ரோட்டர்டாம் டென்னிஸ் தொடரிலும் மெத்வதேவ் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எங்களுக்கு அணி நிர்வாகம் ஹோட்டலை ஏற்பாடு செய்து தரவில்லை.
- படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகளை வீரர்களே சுத்தம் செய்தார்கள்.
பாகிஸ்தானின் ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடினர். சிட்னியில், அவர்கள் தங்குவதற்கு பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு ஹோட்டல் கட்டணங்களை செலுத்தாததால் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் வீரர்கள் சரியான தங்குமிடம் இல்லாமல் தவித்தனர்.
உள்ளூர் வசதியில் தங்குமிடத்தைக் கண்டுபிடித்தது. ஆனால் போட்டி நாட்களில்கூட, அவர்களே தங்களது பாத்திரங்களைக் கழுவ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். மேலும் தங்களது துணிகளை துவைக்க வேண்டிய சூழ்நிலைக்கும் ஆளாகினர்.
இதன் காரணமாக, நான்கு போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் தங்களது நாடும் அணியும் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதி, ஹாக்கி அணியின் கேப்டனான அம்மாத் ஷகீல் பட், அப்படியெல்லாம் நடக்கவில்லை என உண்மையை மறைத்து பொய்யாகப் வீடியோ வெளியிட்டார். ஆனால், அந்த வீடியோவுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களின் பரிதாப நிலை வீடியோவாக வெளியாகி வைரலானது.
இதற்கிடையே தோல்வியுற்ற பாகிஸ்தான் அணி, தாயகம் திரும்பியது. ஆனால் அதை வரவேற்க எந்த அதிகாரிகளும் விமான நிலையம் செல்லவில்லை.
இதனால் கடுப்பான அவர் லாகூர் விமான நிலையத்தில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எங்களுக்கு அணி நிர்வாகம் ஹோட்டலை ஏற்பாடு செய்து தரவில்லை. அதனால் அனாதையாக 10-12 மணி நேரம் சுற்றித் திரிந்தோம். சரியான நேரத்தில் உணவும் வழங்கப்படவில்லை. வீரர்களே உணவைத் தயார் செய்துகொண்டனர். இரண்டு முதல் மூன்று மணி நேரம் பாத்திரங்களைக் கழுவினார்கள். படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகளை அவர்களே சுத்தம் செய்தார்கள். எங்களுக்கு சரியான ஓய்வு நேரம் இல்லை. வீரர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் பாகிஸ்தானுக்காக நாங்கள் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும்? இது, விளையாட்டு வாரியத்தின் தவறா அல்லது பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எங்கள் அணி நிர்வாகம் எங்களிடம் பலமுறை பொய் சொல்லியுள்ளது.
முன்னதாக, எனது நாட்டை அவதூறு செய்யக்கூடாது என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். அதற்காக இங்கு (ஆஸி.) எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், அணிக்கு எந்த அநீதியும் நடக்கவில்லை என்றும் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டேன். ஆனால் அது உண்மையல்ல. ஆனால் எங்கள் அணி குறித்து ஆஸ்திரேலியாவில் வெளிவந்த செய்திகள், வீடியோக்கள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் உண்மையே என கூறினார்.
- ஷிவம் துபே 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 3-வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இஷான் கிஷன் 18 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து திலக் மற்றும் சூர்யகுமார் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். திலக் 27 பந்தில் 31 ரன்னிலும் சூர்யகுமார் 28 பந்தில் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதனை தொடர்ந்து ஷிவம் துபே - பாண்ட்யா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். துபே முதலில் தடுமாறினாலும் பின்னர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 21 பந்தில் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியாக வந்த ரிங்கு சிங் தனது பங்குக்கு ஒரு சிக்சரை பறக்கவிட்டார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- நமீபியா உடனான போட்டி பாகிஸ்தானுக்கு வாழ்வா-சாவா ஆட்டமாக இருந்தது.
- இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான்- நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போட்டியில் அதிரடியாக விளையாட முயன்ற சல்மான் அலி ஆகா, 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் திரும்பியதும், அவரது ஷாட் தேர்வைக் குறித்து பயிற்சியாளர் மைக் ஹெசன் ஏதோ கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த சல்மான் அலி ஆகா, பயிற்சியாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்தின் உச்சத்தில் அவர் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை தரையில் தூக்கி எறிந்தார். இந்த காட்சிகள் நேரலையில் கேமராக்களில் பதிவாகின.
ஏற்கனவே இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்த நிலையில், இந்த நமீபியா போட்டி அவர்களுக்கு வாழ்வா-சாவா ஆட்டமாக இருந்தது. இந்த அதீத அழுத்தமே இத்தகைய மோதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது.
இந்த சம்பவத்தின் போது முன்னாள் கேப்டன் பாபர் அசாம் அருகே அமைதியாக அமர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
- 36-வது லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.
- இந்த போட்டியில் முதல் ஓவரின் 3-வது பந்தில் அபிஷேக் சர்மா 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 36-வது லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.
தொடக்க ஓவரை நெதர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் தத் வீசினார். அந்த ஓவரில் 3-வது பந்தில் அபிஷேக் சர்மா கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறி உள்ளார். அமெரிக்காவுடன் முதல் பந்திலும் பாகிஸ்தானுடன் 4-வது பந்திலும் ஆட்டமிழந்தார். நமீபியாவுடன் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பத்திரனா காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
- கெண்டைக்கால் தசைப்பிடிப்பில் இருந்து மீண்டு வர பல வாரங்கள் ஆகலாம்.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
கெண்டைக்கால் தசைப்பிடிப்பில் இருந்து மீண்டு வர பல வாரங்கள் ஆகலாம் என்பதால், ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பாரா? என சந்தேகமும் எழுந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் பத்திரனாவுக்கு பதிலாக தில்ஷன் மதுஷங்கா இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார்.
- 36-வது லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.
- இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 36-வது லீக் போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குல்தீப் யாதவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கும் அக்சர் படேலுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளனர்.
- நமீபியா அணி 17.3 ஓவரில் 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
- பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பர்ஹான் சதம் (100) அடித்து அசத்தினார்.
அதனை தொடர்ந்து விளையாடிய நமீபியா அணி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் லோரன் ஸ்டீன்காம்ப் 23, அலெக்சாண்டர் வோல்ஷெங்க் 20 ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் நமீபியா அணி 17.3 ஓவரில் 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இஷான் கிஷன் 17 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
- டி20 பந்து வீச்சு தரவரிசையில் ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ் 10 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏ குரூப்-ல் இடம் பெற்ற இந்திய அணி, 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 2 போட்டியில் அரை சதம் அடித்து அசத்தினார்.
இந்த நிலையில் ஐசிசி ஆடவருக்கான டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இஷான் கிஷன் 17 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் ரிக்கல்டன் 22 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை வீரர் பதும் நிசங்கா 3 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். திலக் வர்மா 1 இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
டி20 பந்து வீச்சு தரவரிசையை பொறுத்தவரை ஜிம்பாப்வே அணி வீரர் பிராட் எவன்ஸ் 10 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் பும்ரா 6 இடங்கள் முன்னேறி 15-வது இடத்திற்கும் அக்சர் படேல் 4 இடங்கள் முன்னேறி 14-வது இடத்திற்கு முன்னேறி உள்ளனர். இதை தவிர பெரிய அளவில் மாற்றம் இல்லை.
ஆல் ரவுண்டர்களில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் ஷிவம் துபே 3 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
- நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பர்ஹான் சதம் விளாசினார்.
- டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதம் அடித்த 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை பர்ஹான் படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பர்ஹான் 100 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை பர்ஹான் படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக வங்கதேசத்துக்கு எதிராக அகமது ஷெஹ்சாத் சதம் விளாசி இருந்தார்.
மேலும் டி20 உலகக் கோப்பையில் சதம் விளாசிய ஆசிய வீரர்களில் இவர் 6-வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக வங்கதேச அணியை சேர்ந்த தமீம் இக்பால், பாகிஸ்தானை சேர்ந்த அகமது ஷெஹ்சாத், இலங்கையை சேர்ந்த ஜெயவர்தனே, இந்தியாவை சேர்ந்த சுரேஷ் ரெய்னா, இலங்கையை சேர்ந்த பதும் நிசங்கா ஆகியோர் சாதனை பட்டியலில் உள்ளனர்.
- பாகிஸ்தானில் இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
- இம்ரான் கான் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது வலது கண்ணில் 85 சதவீதம் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரெக் சேப்பல் உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த 14 புகழ்பெற்ற கேப்டன்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
1992 உலகக் கோப்பை வென்ற பாகிஸ்தானின் கேப்டன் இம்ரான் கானுக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடிதம் எழுதியுள்ளது பேசுபொருளானது.
இந்நிலையில், இம்ரான் கானை பாதுகாப்பது பாகிஸ்தான் அரசின் கடமை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய கங்குலி, "முதலில் ஒரு கிரிக்கெட் கேப்டனாகவும், அதன்பின் ஒரு பிரதமராகவும் பாகிஸ்தான் நாட்டை உலக வரைபடத்தில் முக்கிய இடத்திற்குக் கொண்டு சென்றவர் இம்ரான் கான் அப்படிப்பட்ட ஒருவரைப் பாதுகாப்பது அந்த நாட்டின் கடமை. அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும். பாகிஸ்தான் அரசு அதைச் செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.
- 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது
- பாகிஸ்தான் தரப்பில் பர்ஹான் 100 ரன்கள் எடுத்தார்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக பர்ஹான் மற்றும் சைம் அயூப் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த கேப்டன் சல்மான் ஆகா - பர்ஹானுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய ரன்களை குவித்தனர்.
23 பந்தில் 38 ரன்கள் விளாசிய நிலையில் சல்மான் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கவாஜா நஃபே 5 ரன்னில் வெளியேறினார். ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய பர்ஹான் சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது.






