search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 21 பந்தில் 42 ரன்கள் குவித்த வெங்கடேஷ் ஐயர் சாவ்லா பந்தில் அவுட் ஆனார்.
    • மும்பை தரப்பில் சாவ்லா 2 விக்கெட்டும் துஷாரா, பும்ரா, காம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கொல்கத்தா:

    17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 60-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஓவர்கள் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். முதல் ஓவரில் சால்ட் 6 ரன்னிலும் 2-வது ஓவரில் சுனில் நரைன் டக் அவுட்டிலும் வெளியேறினர். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 21 பந்தில் 42 ரன்கள் குவித்த வெங்கடேஷ் ஐயர் சாவ்லா பந்தில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் ரானா 33 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து ரஸல் 24 ரன்களிலும் ரிங்கு சிங் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் கொல்கத்தா அணி 16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் பும்ரா, சாவ்லா 2 விக்கெட்டும் துஷாரா, கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஆர்சிபி அணிக்கு எதிரான நாளைய போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்த போட்டி இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மிகவும் மிக்கியமான போட்டி என்பதால் வெற்றிகாக இரு அணிகளும் கடுமையாக போராடுவார்கள்.

    இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு நாளை நடைபெறும் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நாளைய போட்டியில் யார் அணியை வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் நாளைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை நட்சத்திர ஆல் ரவுண்டர் அக்சர் படேல் வழிநடத்துவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    • இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.
    • மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.

    கொல்கத்தா:

    17-வது ஐ.பி.எல். தொடர் கடைசி கட்டத்தை எட்டியது. இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 60-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மழை பெய்ததால் டாஸ் வீசுவதில் தாமதமாக ஏற்பட்டது. இதனையடுத்து 9 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதில் முதல் 5 ஓவர்கள் மட்டும் பவர் பிளே ஆகும். ஒரு பவுலர் அதிகபட்சம் 4 ஓவர்கள் பந்து வீசலாம். 3 பவுலர்கள் அதிகபட்சம் 3 ஓவர்கள் வீசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் அந்த அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

    2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் அந்த அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

    அதே சமயம் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    • சிஎஸ்கே அணி நாளை ராஜஸ்தான் அணியை எதிர் கொள்கிறது.
    • இந்த போட்டி சென்னை சேப்பாகத்தில் நடைபெறுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒய்வு பெற்ற டோனி தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரையில் 17 சீசன்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

    கடந்த சீசனுடன் டோனி ஓய்வு பெறப் போவதாக கூறப்பட்ட நிலையில், இன்னொரு சீசனும் விளையாடுவேன் என்று இந்த சீசனில் விளையாடி வருகிறார். இந்த சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதை தெரிந்து கொள்வதை விட, டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்ற கேள்வி தான் ஒவ்வொரு ரசிகரிடமும் எழுந்துள்ளது.

    எந்த ஊரில் விளையாடினாலும் சிஎஸ்கே ரசிகர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். இவை அனைத்தும் டோனிக்காக என்பது மிகையாகாது. சிஎஸ்கே தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. டோனி பேட்டிங் செய்தால் மட்டும் போதும் என்ற வகையில் ரசிகர்கள் மைதானத்தில் ஆர்ப்பரிக்கின்றனர்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. ஆனால் கடைசியில் டோனி அடித்த சிக்சரால் அந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றதா அல்லது டெல்லி அணி வென்றதா என்ற கேள்வி எழுப்பும் வகையில் சிஎஸ்கே ரசிகர்கள் டோனியை கொண்டாடி தீர்த்தனர்.

    இதுமட்டுமல்லாமல் டோனியின் புகைப்படம், வீடியோ என எது கிடைத்தாலும் அது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி விடுகிறது. நேற்றைய போட்டியில் கூட ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து டோனியின் காலில் விழுந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படி டோனி நின்றாலும் நடந்தாலும் அதனை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாகி வருகின்றனர்.

    அந்த வகையில் சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் டோனி குறித்து நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளது. அந்த வாசகம் டோனிக்கு 100 சதவீதம் பொறுத்தமாக இருக்கிறது என ரசிகர்களை அதனை கொண்டாடி வருகின்றனர்.

    அதில் வயது முதிர்ந்த போதிலும்..

    வலிகள் மிகுந்த போதிலும்..

    வலிமை குறைந்த போதிலும்..

    வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!

    என பதிவிட்டிருந்தது.

    இதற்கு முன்பாக சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல என்ற படத்தில் நீ சிங்கம் தான் என்ற பாடல் பத்து தல சிம்புவை விட தல டோனிக்கே உரியதாக ஆகிவிட்டது என்பது போல் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    நாளை நடைபெறும் 61-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் சென்னையில் நடைபெறுகிறது. இதையடுத்து சிஎஸ்கே தனது கடைசி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த 68-வது லீக் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 2 போட்டியிலும் தோல்வி அடைந்தால் சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும். டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் இதுதான் என நான் நினைக்கிறேன்.
    • என்னுடைய கனவை போல் மற்றவர்களின் கனவுகளும் நனவாகட்டும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளீதரன் (800), வார்னே (708) ஆகியோருக்கு அடுத்தப்படியாக இவர் உள்ளார்.

    இந்நிலையில் ஓய்வு முடிவு குறித்து ஆண்டர்சன் உருக்கமாக பேசியதாவது:-

    இந்த கோடைக்காலத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் டெஸ்ட் போட்டியே எனது கடைசி போட்டி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறேன். ஆனால் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் இதுதான் என நான் நினைக்கிறேன். என்னுடைய கனவை போல் மற்றவர்களின் கனவுகளும் நனவாகட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2003-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இவர் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் 100 சிக்சர் விளாசிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை துபே முறியடித்துள்ளார்.
    • ஹர்திக் பாண்ட்யா 1046 பந்துகளில் 100 சிக்சர் விளாசியுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய சென்னை அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சிவம் துபே 13 பந்தில் 21 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரி 1 சிக்சர் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் 100 சிக்சர் விளாசிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை துபே முறியடித்துள்ளார்.

    ஹர்திக் பாண்ட்யா 1046 பந்துகளில் 100 சிக்சர் விளாசியுள்ளார். துபே 992 பந்துகளில் 100 சிக்சர்கள் விளாசி அசத்தியுள்ளார். ஒட்டு மொத்தமாக ரஸல் மற்றும் கெய்ல் ஆகியோருக்கு அடுத்தப்படியாக துபே உள்ளார்.

    குறைந்த பந்தில் 100 சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் விவரம்:-

    சிவம் துபே -992

    ஹர்திக் பாண்ட்யா - 1046

    ரிஷப் பண்ட் - 1224

    யூசப் பதான் -1313

    யுவராஜ் சிங் - 1332

    ஒட்டுமொத்தமாக குறைந்த பந்தில் 100 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் விவரம்:-

    ரஸல் - 657 பந்துகள்

    கெய்ல் - 943 பந்துகள்

    சிவம் துபே - 992 பந்துகள்

    ஹர்திக் பாண்ட்யா - 1046 பந்துகள்

    பொல்லார்ட் - 1094

    • டெல்லி அணி அடுத்த போட்டியில் நாளை ஆர்சிபி அணியுடன் மோதவுள்ளது.
    • இந்த முக்கியமான போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்கிறது.

    இந்நிலையில் டெல்லி அணி அடுத்த போட்டியில் நாளை ஆர்சிபி அணியுடன் மோதவுள்ளது. இந்த முக்கியமான போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 2 முறை மெதுவாக பந்து வீசியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த இந்நிலையில் 3-வது முறையாக இந்த போட்டியிலும் மெதுவாக பந்து வீசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டியில் விளையாட தடை மற்றும் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

    • லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
    • ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டு மானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும். அதே நேரத்தில் ரன் ரேட்டையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

    சி.எஸ்.கே. அணி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 6 ஆட்டத்தில் 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட் , குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது.

    வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி (மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 4 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட் , குஜராத் 35 ரன்) தோற்றது.



    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை நாளை (12-ந் தேதி) சந்திக்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் நடைபெறும் 7-வது லீக் ஆட்டமாகும். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அவர்கள் மற்றொரு கோலாகலத்துக்கு தயாராகிவிட்டனர்.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. வெற்றி பெற்றால் தான் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் மிகவும் வலுவாக இருக்கிறது. இதனால் அந்த அணியை வீழ்த்துவது சென்னை அணிக்கு சவாலானதே. சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் ஆதரவுடன் ஆடுவது மட்டுமே சி.எஸ்.கே.வுக்கு கூடுதல் பலமாகும்.

    குஜராத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணி மிகவும் மோசமாக விளையாடியது. பதிரனா, முஸ்டாபிசுர் ரகுமான் இல்லாதது பந்து வீச்சில் பலவீனத்தை காட்டியது.


    வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப் படுத்தினால் மட்டுமே ராஜஸ்தானை வீழ்த்த முடியும்.

    டோனி கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் சி.எஸ்.கே. ரசிகர்கள் அவரது பேட்டிங்கை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

    சஞ்சு சாம்சன் தலைமை யிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி சி.எஸ்.கே.வை வீழ்த்தி 9-வது வெற்றியுடன் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன், பட்லர் ரியான் பராக், யசுவேந்திர சாஹல், அஸ்வின் போல்ட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 29-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 28 போட்டியில் சென்னை 15-ல், ராஜஸ்தான் 13-ல் வெற்ற பெற்றுள்ளன.

    • சுப்மன் கில்லுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • மற்ற வீரர்களுக்கு 6 லட்சம் அல்லது போட்டிக்கான சம்பளம், இதில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. குஜராத் அணி இந்த சீசனில் இரண்டாவது முறையாக இதுபோன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை.

    இதனால் கேப்டனான சுப்மன் கில்லுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக என்பதால் சுப்மான் கில்லை தவிர்த்து அணியில் விளையாடி இம்பேக்ட் பிளேயர் உள்பட 11 வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    2-வது முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்றால், கேப்டனை தவிர்த்து மற்ற வீரர்களுக்கு 6 லட்சம் அல்லது இந்த போட்டிக்கான சம்பளத்தில் 24 சதவீதம், இதில் எது குறைவானதோ அது அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்பின் முதலில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் சதத்தால் 231 ரன்கள் குவித்தது.

    பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே அணியால் 196 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டேரில் மிட்செல் 63 ரன்களும், மொயீன் அலி 56 ரன்களும் அடித்தனர்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 12 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

    இந்த போட்டியின் தொடக்கத்தில் சுப்மன் கில் பீல்டிங் செய்தார். அதன்பின் போட்டி முடியும் வரை டெவாட்டியா பொறுப்பு கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உரையாடல்களை டிரஸ்ஸிங் ரூம் அல்லது ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் செய்திருந்தால் கூட பரவாயில்லை.
    • களத்தில் கோடிக்கணக்கானோர் முன்னிலையில் அவர் தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கடந்த 8-ந்தேதி நடைபெற்ற 57-வது ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதையடுத்து, ஐதராபாத் அணியுடனான தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டனான கே.எல்.ராகுலிடம் கடிந்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோவை பார்த்த பலரும், டிரெஸிங் அறையில் நடக்க வேண்டிய விவாதங்கள் பொதுவெளியில் நடக்கிறது. சஞ்சீவ் கோயங்கா செய்தது சரியான செயல் அல்ல என்றும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதே போல் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு தற்போது காயத்தால் ஓய்வில் உள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    வீரர்களுக்கு மரியாதை உண்டு, உரிமையாளராக நீங்களும் மரியாதைக்குரிய நபர். பலர் உங்களைப் பார்த்து உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். இவையெல்லாம் கேமராக்களுக்கு முன்னால் நடந்தால்... அது வெட்கக்கேடான விஷயம். இதுபோன்ற உரையாடல்களை டிரஸ்ஸிங் ரூம் அல்லது ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் செய்திருந்தால் கூட பரவாயில்லை. களத்தில் கோடிக்கணக்கானோர் முன்னிலையில் அவர் தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது? இப்படி நடந்து கொண்டதன் மூலம் நீங்கள் ஒன்றும் செங்கோட்டையில் கொடி ஏற்றி விடவில்லை என்றார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஊரில் விளையாடினாலும், சென்னை அணியின் ரசிகர்கள் அந்த மைதானத்தில் அதிக அளவில் கூடி விடுவார்கள்.
    • கடைசி ஓவரில் ரஷித் கான் வீசிய முதல் 2 பந்துகளில் தோனி 2 சிக்சர்களை விளாசி தள்ளினார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ்வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்த நேற்றைய போட்டியில் மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் வந்து தோனியின் காலில் விழுந்தது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஊரில் விளையாடினாலும், சென்னை அணியின் ரசிகர்கள் அந்த மைதானத்தில் அதிக அளவில் கூடி விடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் தோனி.


    அதனால் தான் நேற்றைய போட்டியின் போதும் அகமதாபாத் மைதானத்தில் சென்னை ரசிகர்களே அதிகளவு காணப்பட்டனர். எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஜெர்சியுடன் விசில் அடித்து கொண்டு ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கின் போது சிவம் துபே 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, தோனி களம் இறங்கினார்.

    அப்போது தோனிக்காக ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் விண்ணை பிளந்தது. இதன்பின் கடைசி ஓவரில் ரஷித் கான் வீசிய முதல் 2 பந்துகளில் தோனி 2 சிக்சர்களை விளாசி தள்ளினார். 3வது பந்து தோனியின் கால்களில் பட்டு செல்ல, குஜராத் அணி தரப்பில் டிஆர்எஸ் எடுக்கப்பட்டது.

    அதன்பின் டிஆர்எஸ்-ல் தோனி NOT OUT என்று வந்த போது, திடீரென மைதானத்தில் இருந்த தோனி கொஞ்சம் தூரம் ஓட தொடங்கினார். தோனி எதற்காக ஓடுகிறார் என்று புரியாததால் சில நிமிடங்கள் அனைவரும் இருந்தனர். அதன்பின்னர் தான் தெரிந்தது ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி தோனியை நோக்கி ஓடி வந்தது. அப்படி ஓடி வந்த அந்த ரசிகர், தோனியின் காலில் விழுந்தார்.

    அதன்பின் பாதுகாப்பு காவலர்கள் அந்த ரசிகரை வெளியில் அழைத்து சென்றனர். எந்த ரசிகர் தோனியை நோக்கி ஓடி வந்தாலும், அவர்களுடன் ஒரு சிறிய விளையாட்டை தோனி விளையாடுவது வழக்கமாகிவிட்டது. அப்படித்தான் நேற்றைய போட்டியிலும் ரசிகர் ஒருவர் ஓடி வருவதை தெரிந்து கொஞ்சம் தூரம் ஓடி விளையாட்டு காட்டியுள்ளார் தல தோனி.


    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
    • 42 வயதாகும் ஆண்டர்சன் 197 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்விங் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடம் உண்டு என்றால் அது மிகையாகாது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது 700 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளீதரன் (800), வார்னே (708) ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார். இன்னும் 8 விக்கெட் வீழ்த்தினால் வார்னே சாதனையை சமன் செய்வார்.

    அடுத்த மாதத்துடன் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 42 வயது முடிவடைகிறது. ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் ஓய்வு குறித்து கேள்வி கேட்கும்போதெல்லாம் தன்னுடைய பந்து வீச்சு மூலம் தற்போது இல்லை என பதில் அளித்து வந்தார்.

    தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, டெஸ்ட் அணியின் எதிர்கால திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான பிரெண்டம் மெக்கல்லம் நியூசிலாந்தில இருந்து 11 ஆயிரம் மைல்கள் கடந்து இங்கிலாந்து வந்து ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இந்த நிலையில் இந்த வருடம் இறுதியோடு, அதாவது இங்கிலாந்தின் கோடைக்கால (Summer) கிரிக்கெட் சீசனுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடைசி 12 மாதங்களில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

    இதனால் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடரின்போது புது வேகபந்து வீச்சாளருடன் களம் இறங்க மெக்கல்லம் விரும்புவதாக தெரிகிறது.

    ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மிகப்பெரிய வகையில் பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பி வைக்கப்படுவாரா? அல்லது இங்கிலாந்து அணிக்காக கடைசி போட்டியில் விளையாடி விட்டாரா? என்பது தெரியவில்லை.

    இங்கிலாந்து அணி ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும், இலங்கைக்கு எதிராக ஆகஸ்ட்-செப்டம்பரில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

    2003-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×