என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நியூசிலாந்து 50 ஓவர்களின்முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.
    • 53 ரன்கள் குவித்து நன்றாக விளையாடி வந்த நிதிஷ் குமாரும் அவுட் ஆகினார்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துநிலையில் இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்று சமனில் உள்ளன. இந்நிலையில் இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின்முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

    தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து வருகிறது. 11 ரன்களில் ரோஹித் ஷர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், ஸ்ரேயஸ், கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இந்தியா. மறுபக்கம் கோலி அவுட் ஆகாமல் விளையாடி வரும் நிலையில் அவருக்கு துணையாக நிதிஷ் குமார் களமிறங்கினார். ஆனால் 53 ரன்கள் குவித்து நன்றாக விளையாடி வந்த நிதிஷ் குமாரும் அவுட் ஆகினார். ஆனால் விராட் கோலி அரைசதம் கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது ஜடேஜா களமிறங்கியுள்ளார்.

    இந்த இணையாவது அணியை தொடர்ந்து வெற்றிப் பக்கத்திற்கு கொண்டு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

     

    • நியூசிலாந்து எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
    • சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் சதம் அடித்து அசத்தினார்

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹென்ரி நிக்கோல்ஸ் கோல்டன் டக் அவுட் ஆனார். கான்வே 5 ரன்னில் அவுட்டானார். வில் யங் 30 ரன்னில் அவுட்டாக ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர்.

    சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். 106 ரன்னில் பிலிப்ஸ் அவுட்டாக மிட்செல் 137ரன்னிலும் அவுட்டானார்.

    அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் அடித்தது

    • டை-பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை வீனஸ் வில்லியம்ஸ் கைப்பற்றினார்.
    • ஆனால் 2-வது மற்றும் 3-வது செட்டை இழந்து தோல்வியடைந்தார்.

    2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் இன்று தொடங்கியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வைல்டு கார்டு மூலம் முதன்மை சுற்றில் விளையாடிய அனுமதி பெற்ற அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செர்பியாவின் ஒல்கா டானிலோவிச்சை எதிர்கொண்டார்.

    முதல் செட்டில் இருவரும் மல்லுக்கட்டினர். இதனால் முதல் செட்டை டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் 7(7)-6(5) என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றார். ஆனால், இதே உத்வேகத்துடன் 2-வது மற்றும் 3-வது செட்டில் அவரால் விளையாட முடியவில்லை.

    2-வது செட்டை 3-6 என இழந்த நிலையில், 3-வது செட்டை 4-6 இழந்து தோல்வியடைந்தார். இதனால் முதல் சுற்றோடு ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வெளியேறியுள்ளார்.

    • டேரில் மிட்செல் இந்த தொடரில் 2-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
    • கிளென் பிலிப்ஸ் 83 பந்தில் சதம் விளாசினார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹென்ரி நிக்கோல்ஸ் கோல்டன் டக் அவுட் ஆனார். கான்வே 5 ரன்னில் அவுட்டானார். வில் யங் 30 ரன்னில் அவுட்டாக, 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தது.

    சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய கிளென் பிலிப்ஸ் 83 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் விளாசினார்.

    இருவரின் சதத்தால் நியூசிலாந்து 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய பிலிப்ஸ் 88 பந்தில் 106 ரன்கள் அடித்து அர்ஷ்தீப் சிங் ப்தில் ஆட்டமிழந்தார்.

    • அன் சே-யங் ஏற்கனவே 2023 மற்றும் 2025-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    • தற்போது 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

    இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் வாங் ஜியி- தென்கொரியாவின் அன் சே-யங் உடன் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் தென்கொரிய வீராங்கனையின் ஆட்டத்திற்கு வாங் ஜியி-யால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் அன் சே-யங் 21-13, 21-11 என எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    இவர் ஏற்கனவே 2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். கடந்த ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மொத்தம் 3 முறை டெல்லி ஓபனை வென்றுள்ளார்.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தைவானைச் சேர்ந்த லின் சுன்-யி இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜோனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் லின் 21-10, 21-18 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • நியூசிலாந்து எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
    • சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹென்ரி நிக்கோல்ஸ் கோல்டன் டக் அவுட் ஆனார். கான்வே 5 ரன்னில் அவுட்டானார். வில் யங் 30 ரன்னில் அவுட்டாக ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர்.

    சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார்.

    36 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

    • முதல் போட்டியில் 84 ரன்கள் அடித்திருந்தார்.
    • 2-வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 131 ரன்கள் விளாசியிருந்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில், நிக்கோலஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து கான்வே உடன் வில் யங் ஜோடி சேர்ந்தார். 2-வது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கான்வே ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 4 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு வில் யங் உடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இநத் ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. என்றாலும் ஹர்ஷித் ராணா இந்த ஜோடியை பிரித்தார். வில் யங் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது.

    4-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் உடன் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக டேரில் மிட்செல் அடிக்க வேண்டிய பந்த தவறாமல் அடித்து பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விராட்டினார். அவர் 56 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    டேரில் மிட்செல் முதல் போட்டியில் 71 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் அடித்திருந்தார். 2-வது போட்டியில் 117 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 131 ரன்கள் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தார்.

    தற்போது அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். 3 போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சபலென்கா 6-4, 6-1 என நேர்செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தினார்.
    • ஸ்விடோலினா 6-4, 6-1 என ஸ்பெயின் வீராங்கனையை வீழ்த்தினார்.

    2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் இன்று தொடங்கியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையா பெலாரசின் சபலென்கா, தரநிலை பெறாத பிரான்சின் ரஜோனாவை எதிர்கொண்டார். இதில் சபலென்கா 6-4, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் 12-ம் நிலை வீராங்கனையான உக்ரைனைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினா, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா புக்சாவை எதிர்கொண்டார். இதில் ஸ்விடோலினா 6-4, 6-1 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    11-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா, தரநிலை பெறாத துருக்கியின் ஜென்னெப் சான்மெஸை எதிர்கொண்டார். இதில் சான்மெஸ் 7-5, 4-6, 6-4 என அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தினார்.

    பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய உக்ரைன் வீராங்கனை கோஸ்ட்யுக் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    • முதல் கட்ட ஆட்டங்கள் சென்னையிலும்,2-வது கட்ட போட்டிகள் ராஞ்சியிலும் நடைபெற்றது.
    • 'லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

    8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது ஆக்கி இந்தியா லீக்கின் 3-வது மற்றும் இறுதிகட்ட போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று தொடங்கியது.

    முதல் கட்ட ஆட்டங்கள் சென்னையிலும்,2-வது கட்ட போட்டிகள் ராஞ்சியிலும் நடைபெற்றது.

    சென்னையை மையமாக கொண்ட அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ் 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வி யுடன் 7 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    முதல் போட்டியில் ஐதராபாத் டூபான்சையும், 2-வது ஆட்டத்தில் சூர்மா ஆக்கி கிளப்பையும், 3-வது போட்டியில் எஸ்.ஜி. பைபர்சையும் வீழ்த்தி இருந்தது. ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு எச்.ஐ.எல்.ஜி.சி, பெங்கால் டைகர்ஸ் அணிகளிடம் தொடர்ச்சியாக வீழ்ந்தது.

    அமித் ரோகித் தாஸ் தலைமையிலான தமிழ்நாடு டிராகன்ஸ் 6-வது ஆட்டத்தில் கலிங்கா லான்சர்சை இன்று இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது.

    தமிழ்நாடு டிராகன்ஸ் அணி கலிங்கா லான்சர்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

    இதனால் தமிழ்நாடு டிராகன்ஸ் வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும். டிராகன்ஸ் வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் லான்செர்ஸ் அணியை வீழ்த்துவது சவாலானது.

    அந்த அணி 5 வெற்றியுடன் 14 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. லான்செர்ஸ் இதுவரை தோல்வியை தழுவவில்லை.

    முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்கால் டைகர்ஸ்-எஸ்.ஜி.பைபர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்கால் அணி 6 புள்ளியுடன் 6-வது இடத்திலும், பைபர்ஸ் 4 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

    'லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

    • முதல் இரண்டு போட்டிகளிலும் க்ளீன் போல்டானார்.
    • இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில், நிக்கோலஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து கான்வே உடன் வில் யங் ஜோடி சேர்ந்தார். 2-வது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கான்வே ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 4 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 3 போட்டிகளிலும் கான்வேயை ஹர்ஷித் ராணா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    முதல் போட்டியில் 56 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்ஷித் ராணா பந்தில் க்ளீன் போல்டானார். 2-வது போட்டியில் 16 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.

    • உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் உள்ளார்
    • அர்ஜென்டினாவை சேர்ந்த 18-வது நிலை வீரர் பிரான்சிஸ்கோ வெற்றி பெற்றார்.

    ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.

    உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் தொடக்க சுற்றில் கனடாவை சேர்ந்த கேப்ரியல் டியாலோவை எதிர் கொண்டார். இதில் சுவரேவ் 6-7 (1-7), 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 43 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த 18-வது நிலை வீரர் பிரான்சிஸ்கோ வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள ஜாஸ்மின் பாலினி 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தகுதி சுற்று வீராங்கனையான சான் நோவிச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு எளிதில் முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் மரியா சகாரி (கிரீஸ்) வெற்றி பெற்றார்.

    • வீரர்களின் பாதுகாப்பு காரணத்தால் இந்தியா வர வங்கதேசம் அச்சம் தெரிவித்துள்ளது.
    • ஐசிசி குழு வங்கதேச கிரிக்கெட் போர்டு உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் கொழும்பில் நடைபெற இருக்கிறது. "சி" பிரிவில் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, இங்கிலாந்து, நேபாளம் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த பிரிவில் உள்ள அணிகள் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாடுகின்றன.

    குரூப் "பி"-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஓமன், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த அணிகள் மோதும் போட்டிகள் கொழும்பு மற்றும் பல்லேகலேயில் நடைபெற இருக்கின்றன.

    வங்கதேசத்தில் மைனாரிட்டி இந்துக்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த காரணத்தை முன்னிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த முஸ்தபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    இதனால் பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து வங்கதேச அணி இந்தியா வந்து விளையாட ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் வந்துதான் விளையாட வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி வருகிறது.

    இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐசிசி குழு வங்கதேசம் சென்றுள்ளது. அப்போது, ஐசிசி குழுவிடம் எங்களை சி பிரிவில் இருந்து பி பிரிவுக்கு மாற்றி விடுங்கள். "பி" பிரிவில் விளையாடும் போட்டிகள் அனைத்தும் கொழும்பு மற்றம் பல்லேகலேயில் நடைபெற இருக்கிறது. இதனால் நாங்கள் இந்தியாவில் விளையாட வேண்டியிருக்காது என வங்கேச கிரிக்கெட் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் அயர்லாந்து அணி குரூப் மாற்றி, இந்தியா சென்று விளையாடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படிதான் விளையாடுவோம் எனத் தெரிவித்துள்ளது. இதனால் வங்கதேச அணி இந்தியாவில் வந்து விளையாட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    ×