என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 337 ரன்கள் குவித்தது.
- டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
இந்தூர்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனி ஆளாகப் போராடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். அவர் நியூசிலாந்துக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், வீரேந்திர சேவாக் ஆகியோர் 6 சதங்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்து சச்சின், சனத் ஜெயசூர்யா ஆகியோர் 5 சதங்கள் அடித்துள்ளனர்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- இதில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு முதல் சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இங்கிலாந்து வீராங்கனையான எம்மா ராடுகானு, தாய்லாந்தின் மனன்சயா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எம்மா ராடுகானு 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய விதர்பா அணி 50 ஓவரில் 317 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய சவுராஷ்டிர அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பெங்களூரு:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தது.
லீக் சுற்று, காலிறுதி சுற்று மற்றும் அரையிறுதி சுற்றுகள் முடிவில் சவுராஷ்டிரா, விதர்பா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சவுராஷ்டிர அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய விதர்பா அணி 50 ஓவரில் 317 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் அதர்வா டைட் சதமடித்து 128 ரன்கள் குவித்தார். யாஷ் ரதோட் 54 ரன்னும், அமன் மோகடே 33 ரன்னும் எடுத்தனர்.
சவுராஷ்டிரா அணிச் ஆர்பில் அன்குர் பன்வார் 4 விக்கெட்டும், சிராக் ஜானி, சேடன் சகாரியா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சவுராஷ்டிரா அணி களமிறங்கியது. அந்த அணியின் மன்காட் 88 ரன்னும், சிராக் ஜானி 64 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், சவுராஷ்டிரா அணி 48.5 ஓவரில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற விதர்பா அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
விதர்பா சார்பில் யாஷ் தாக்குர் 4 விக்கெட்டும், நசிகேத் 3 விக்கெட்டும், தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது அதர்வா டைடுக்கும், தொடர் நாயகன் விருது அமன் மோகடேவுக்கும் அளிக்கப்பட்டது.
- 124 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
- முதல்முறையாக இந்தியாவில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துநிலையில் இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்று சமனில் இருந்தன. இந்நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் 11 ரன்களில் ரோகித் சர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், 3 ரன்னில் ஷ்ரேயஸ் அய்யர், 1 ரன்னில் கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று விளையாடினார். 5-வது விக்கெட்டுக்கு அவருடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடிக்க, நிதிஷ் ரெட்டி 52 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து நிதிஷும் அவுட்டாக, அடுத்து வந்த ஜடேஜாவும் அவுட்டானார். இதனால் இந்திய அணி எளிதில் தோல்வியை தழுவும் என அனைவரும் நினைத்தநிலையில், ஹர்ஷித் ராணா ஆட்டத்தை மாற்றினார்.
சரிவைசென்ற அணியை கோலி-ராணா இணை மீட்டது. கோலி சதம் விளாசினார். ஹர்ஷித் ராணா அரைசதம் கடந்தார். ஆனால் ஃபுல் டாசில் 52 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து குல்தீப் யாதவ் களமிறங்கினார். மறுபக்கம் 124 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். அடுத்து அர்ஷ்தீப் சிங் களமிறங்க, மறுபக்கம் ரன் அவுட் ஆனார் குல்தீப். இதனால் இந்தியா 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிப் பெற்றது. நியூசிலாந்து தரப்பில் ஜகரி ஃபோக்ஸ், கிறிஸ் கிளார்க் தலா 3 விக்கெட்டுகளையும், ஜேடன் லெனாக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் முதல்முறையாக இந்தியாவில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
- 7 விக்கெட்டுக்கு களம் இறங்கி விராட் கோலியுடன் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
- 4 பவுண்டரி, 4 சிக்சர் அடித்து அசத்தினார்.
இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் 11 ரன்களில் ரோகித் சர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், 3 ரன்னில் ஷ்ரேயஸ் அய்யர், 1 ரன்னில் கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று விளையாடினார். 5-வது விக்கெட்டுக்கு அவருடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடிக்க, நிதிஷ் ரெட்டி 52 பந்தில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய நிதிஷ் ரெட்டி 53 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 27.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஜடேஜா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனால் விராட் கோலிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவின் வெற்றியும் கடினமானது. அடுத்து ஹர்ஷித் ராணா களம் இறங்கினார். ஹர்ஷித் ராணாவை வைத்து விராட் கோலி சதத்தை நோக்கி சென்றார். 40-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுது்து 91 பந்தில் சதம் அடித்தார் விராட் கோலி.
இது விராட் கோலியின் 85-வது சர்வதேச சதமாகும். ஒருநாள் போட்டியின் 54-வது சதமாகும். இந்தியா 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 10 ஓவரில் 138 ரன்கள் தேவை.
மறுமுனையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹர்ஷித் ராணா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜேமிசன், கிளார்க் என யார் என்று பார்க்காமல் நியூசிலாந்து வேகபந்து வீச்சாளர்களின் பந்தை சிக்சருக்கு விரட்டினார். இதனால் இந்தியா இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. 44-வது ஓவரை பால்க்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 41 பந்தில் அரைசதம் அடித்தார். இது அவரின் முதல் அரைசதம் ஆகும். இதில் தலா 4 பவுண்டரி, 4 சிக்ஸ் அடங்கும். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழக்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 37 பந்தில் 61 ரன்கள் தேவைப்பட்டது.
- விராட் கோலியின் 54-வது ஒருநாள் சதம் இதுவாகும்.
- சர்வதேச கிரிக்கெட்டில் 85 சதங்களை பதிவு செய்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துநிலையில் இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்று சமனில் உள்ளன. இந்நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் 11 ரன்களில் ரோகித் சர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், 3 ரன்னில் ஷ்ரேயஸ் அய்யர், 1 ரன்னில் கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று விளையாடினார். 5-வது விக்கெட்டுக்கு அவருடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடிக்க, நிதிஷ் ரெட்டி 52 பந்தில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய நிதிஷ் ரெட்டி 53 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 27.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஜடேஜா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனால் விராட் கோலிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவின் வெற்றியும் கடினமானது. அடுத்து ஹர்ஷித் ராணா களம் இறங்கினார். ஹர்ஷித் ராணாவை வைத்து விராட் கோலி சதத்தை நோக்கி சென்றார். 40-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுது்து 91 பந்தில் சதம் அடித்தார் விராட் கோலி.
இது விராட் கோலியின் 85-வது சர்வதேச சதமாகும். ஒருநாள் போட்டியின் 54-வது சதமாகும். இந்தியா 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 10 ஓவரில் 138 ரன்கள் தேவை.
- அல்காரஸ் 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- ஸ்வெரேவ் 3-1 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளில் நம்பர் ஒன் வீரர் அல்காரஸ், 3-ம் நிலை வீரரான ஸ்வெரேவ் உள்ளிட்ட வீரர்கள் முதல் சுற்றில் விளையாடினர்.
ஸ்பெயின் வீரரான கார்லஸ் அல்காரஸ் ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-3 என அல்காரஸ் எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் அல்காரஸ்க்கு வால்டன் ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் டை-பிரேக்கர் வரை சென்றது. என்றாலும் அல்காரஸ் 7(7)- 6(2) எனக் கைப்பற்றினார். 3-வது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த அலேக்சாண்டர் ஸ்வெரேவ், கேப்ரியல் டியாலோவை எதிர்கொண்டார். 3-ம் நிலை வீரரான ஸ்வெரேவ்-க்கு டியாலோ முதல் செட்டில் அதிர்ச்சி அளித்தார். டை-பிரேக்கர் வரை சென்ற நிலையில் ஸ்வெரேவ் 6(1)-7(7) என முதல் செட்டை இழந்தார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட ஸ்வெரேவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது செட்டை 6-1 எனவும், 3-வது செட்டை 6-4 எனவும், 4-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி 3-1 என ஸ்வெரேவ் வெற்றி பெற்றார்.
- நியூசிலாந்து 50 ஓவர்களின்முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.
- 53 ரன்கள் குவித்து நன்றாக விளையாடி வந்த நிதிஷ் குமாரும் அவுட் ஆகினார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துநிலையில் இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்று சமனில் உள்ளன. இந்நிலையில் இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின்முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து வருகிறது. 11 ரன்களில் ரோஹித் ஷர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், ஸ்ரேயஸ், கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இந்தியா. மறுபக்கம் கோலி அவுட் ஆகாமல் விளையாடி வரும் நிலையில் அவருக்கு துணையாக நிதிஷ் குமார் களமிறங்கினார். ஆனால் 53 ரன்கள் குவித்து நன்றாக விளையாடி வந்த நிதிஷ் குமாரும் அவுட் ஆகினார். ஆனால் விராட் கோலி அரைசதம் கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது ஜடேஜா களமிறங்கியுள்ளார்.
இந்த இணையாவது அணியை தொடர்ந்து வெற்றிப் பக்கத்திற்கு கொண்டு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- நியூசிலாந்து எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
- சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் சதம் அடித்து அசத்தினார்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹென்ரி நிக்கோல்ஸ் கோல்டன் டக் அவுட் ஆனார். கான்வே 5 ரன்னில் அவுட்டானார். வில் யங் 30 ரன்னில் அவுட்டாக ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர்.
சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். 106 ரன்னில் பிலிப்ஸ் அவுட்டாக மிட்செல் 137ரன்னிலும் அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் அடித்தது
- டை-பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை வீனஸ் வில்லியம்ஸ் கைப்பற்றினார்.
- ஆனால் 2-வது மற்றும் 3-வது செட்டை இழந்து தோல்வியடைந்தார்.
2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் இன்று தொடங்கியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வைல்டு கார்டு மூலம் முதன்மை சுற்றில் விளையாடிய அனுமதி பெற்ற அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செர்பியாவின் ஒல்கா டானிலோவிச்சை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் இருவரும் மல்லுக்கட்டினர். இதனால் முதல் செட்டை டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் 7(7)-6(5) என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றார். ஆனால், இதே உத்வேகத்துடன் 2-வது மற்றும் 3-வது செட்டில் அவரால் விளையாட முடியவில்லை.
2-வது செட்டை 3-6 என இழந்த நிலையில், 3-வது செட்டை 4-6 இழந்து தோல்வியடைந்தார். இதனால் முதல் சுற்றோடு ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வெளியேறியுள்ளார்.
- டேரில் மிட்செல் இந்த தொடரில் 2-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
- கிளென் பிலிப்ஸ் 83 பந்தில் சதம் விளாசினார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹென்ரி நிக்கோல்ஸ் கோல்டன் டக் அவுட் ஆனார். கான்வே 5 ரன்னில் அவுட்டானார். வில் யங் 30 ரன்னில் அவுட்டாக, 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தது.
சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய கிளென் பிலிப்ஸ் 83 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் விளாசினார்.
இருவரின் சதத்தால் நியூசிலாந்து 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய பிலிப்ஸ் 88 பந்தில் 106 ரன்கள் அடித்து அர்ஷ்தீப் சிங் ப்தில் ஆட்டமிழந்தார்.
- அன் சே-யங் ஏற்கனவே 2023 மற்றும் 2025-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- தற்போது 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் வாங் ஜியி- தென்கொரியாவின் அன் சே-யங் உடன் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் தென்கொரிய வீராங்கனையின் ஆட்டத்திற்கு வாங் ஜியி-யால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் அன் சே-யங் 21-13, 21-11 என எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இவர் ஏற்கனவே 2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். கடந்த ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மொத்தம் 3 முறை டெல்லி ஓபனை வென்றுள்ளார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தைவானைச் சேர்ந்த லின் சுன்-யி இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜோனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் லின் 21-10, 21-18 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.






