என் மலர்
விளையாட்டு
- ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பண்ட் டக்அவுட்.
- ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்று வருகிது. சுழற்பந்து வீச்சுக்கு சாதனமாக ஆடுகளத்தில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களும், 2-வது இன்னிங்சில் 255 ரன்களும் சேர்த்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 156 ரன்னில் சுருண்டதால், 359 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய இலக்கை எதிர்கொள்வது மிகக்கடினம்.
இருந்தாலும் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் நம்பிக்கையுடன் களம் இறங்கினர். ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜெய்ஸ்வால் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் விக்கெட்டும் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.
இதனால் ரன்கள் வந்துகொண்டே இருந்தனர். மதிய உணவு இடைவேளை வரை 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் அடித்தது. ஜெய்ஸ்வால் 46 ரன்களுடனும், சுப்மன் கில் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வால் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அவர் 41 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் சுப்மன் கில் 23 ரன் எடுத்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையாக விளையாடிக் கொண்டிருந்தது. ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்திருக்கும்போது சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும்.
அடுத்து 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி அடித்த பந்தில் ஒரு ரன் எடுக்க முயன்றபோது ரிஷப் பண்ட் ரன்அவுட் ஆனார். அவர் ரன்ஏதும் எடுக்காமல் 3 பந்துகளை சந்தித்த நிலையில் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
அடுத்து 5-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்துள்ளார். தற்போது இந்தியா 25 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 218 ரன்கள் தேவை. இன்று முழுவதும் விளையாடினால் இந்தியா வெற்றியை எதிர்பார்க்கலாம். ஆனால் இன்று முதல் நிலைத்து நிற்குமா? என்பது சந்தேகம்தான்.
- பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சுருண்டனர்.
- முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்த நிலையில், 2-வது இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது.
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டதால் இங்கிலாந்து அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் 267 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜேமி ஸ்மித் அதிகபட்சமாக 89 ரன்களும், டக்கெட் 52 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நோமன் அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 177 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. சாத் ஷகீல் அபாரமாக விளையாடி 134 ரன்கள் விளாசினார். அவருக்கு துணையாக 9-வது வீரராக களம் இறங்கிய நோமன் அலி 45 ரன்களும், 10-வது வீரராக களம் இறங்கிய சஜித் கான் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் சேர்க்க பாகிஸ்தான 344 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ரேஹன் அகமது 4 விக்கெட்டும், சோயிப் பஷீர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 77 ரன்கள் பின்னதங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியால் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் 112 ரன்னில் சுருண்டது. ஜோ ரூட் அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் அணி சார்பில் நோமன் அலி 6 விக்கெட்டும், சஜித் கான் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மொத்தமாக 35 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து முன்னிலைப் பெற்றிருந்தது. 36 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் 37 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது. 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
- ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான விதி முறைகள் அறிவிக்கப்பட்டது.
- ஐ.பி.எல். தொடரில் டோனி விளையாடுவாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
புதுடெல்லி:
ஐ.பி.எல். மெகா ஏலத்துக்காக ஒரு அணி ரூ.120 கோடி செலவு செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான விதி முறைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐ.பி.எல்.மெகா ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.டோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க் வாட், ஜடேஜா, ரவீந்திரா, பதிரானா ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இது தொடர்பாக கூறியதாவது:-
ஐ.பி.எல். தொடரில் டோனி விளையாடுவாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் விளையாடும் பட்சத்தில், அவரை முதல் வீரராக சி.எஸ்.கே. தக்கவைக்கும். அவருக்கு அடுத்தபடியாக ஜடேஜா மற்றும் ரவீந்திரா தக்க வைக்கப்படுவார்கள்.

கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தக்க வைக்கப்படுவார். பதிரானா மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவரும் சி.எஸ்.கே. அணி நிர்வாகத்தால் அணியில் தக்கவைக்கப்படுவார்.
அதனால் எனது பார்வையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.டோனி, ஜடேஜா, ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் பதிரானா ஆகிய 5 பேரும் தக்க வைக்கப்படுவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.
- இரு அணிகளும் 2-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.
- மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 28-36 என்ற கணக்கில் டெல்லியிடம் தோற்றது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 2 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் 40-42 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னாவிடம் தோற்றது.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 2-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன. மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 28-36 என்ற கணக்கில் டெல்லியிடம் தோற்றது. 2-வது போட்டியில 33-27 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. பெங்கால் அணி முதல் ஆட்டத்தில் 34-39 என்ற கணக்கில் ஜெய்ப்பூரிடம் தோற்றது. 2-வது போட்டியில் 32-29 என்ற கணக்கில் உ.பி. யோத்தாசை தோற்கடித்தது.
இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ-டெல்லி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளன. தெலுங்கு டைட்டன்ஸ் அணி பெங்களுரூவை வீழ்த்தி இருந்தது. தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூரிடம் தோற்றது. டெல்லி அணி மும்பையை வென்றது. உ.பி.யிடம் தோற்றது.
- 2-வது இன்னிங்சில் டாம் லாதம் 86 ரன்களும், பிளிப்ஸ் 48 ரன்களும் சேர்த்தனர்.
- வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இருந்தே பந்து அதிக அளவில் டர்ன் ஆனது. இதனால் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள திணறினர்.
என்றபோதிலும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்சில் 259 ரன்கள் குவித்தது. கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 156 ரன்னில் சுருண்டது. ஜெய்ஸ்வால், சுப்மன் கில் தலா 30 ரன்கள் சேர்த்தனர். சான்ட்னெர் 7 விக்கெட் சாய்த்தார்.
பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினாலும் டாம் லாதம் 86 ரன்கள் விளாசினார். இது நியூசிலாந்து 300 ரன்களுக்கு மேல் முன்னிலை வகிக்க உதவியாக இருந்தது.

நேற்றை 2-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் சேர்த்திருந்தது. பிளண்டெல் 30 ரன்களுடனும், பிளிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை 9.30 மணிக்கு 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிளண்டெல் 41 ரன்கள எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் சான்ட்னெர் 4 ரன்னிலும், சவுத்தி ரன்ஏதும் எடுக்காமலும், அஜாஸ் பட்டுல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கிளென் பிளிப்ஸ் தாக்குப்பிடித்து விளையாடினார். கடைசி விக்கெட்டாக வில்லியம் ஓ'ரூர்கே ரன்ஏதும் அடிக்காமல் ரன்அவுட் ஆக, நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 255 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், அஸ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர்.
நியூசிலாந்து ஒட்டுமொத்தமாக 358 ரன்கள் முன்னிலைப் பெற்று, இந்தியாவுக்கு 359 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. பிளிப்ஸ் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- திலக் வர்மா 16 ரன்னிலும், அபிஷேக் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- ராமன்தீப் சிங் 34 பந்தில் 64 ரன்கள் அடித்து கடைசி வரை போராடினார்.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் உள்ள அல் அமராத் நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று இந்தியா- ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.
ஜுபைத் அப்காரி 41 பந்தில் 64 ரன்கள் விளாசினார். செதிகுல்லா அடல் 52 பந்தில் 83 ரன்கள் குவித்தார். கரீம் ஜனத் 20 பந்தில் 41 ரன்கள் விளாசினார்.
இந்திய அணி சார்பில் ரசிக் சலாம் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினாலும் அன்ஷுல் கம்போஜ் 3 ஓவரில் 40 ரன்களும், அக்யூப் கான் 4 ஓவரில் 38 ரன்களும், ராகுல் சாஹர் 3 ஓவரில் 48 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா ஏ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 19 ரன்னிலும், அபிஷேக் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

கேப்டன் திலக் வர்மா 16 ரன்னில் வெளியேறினார். ராமன்தீப் சிங் அதிரடியாக விளையாடி 34 பந்தில் 64 ரன்கள் அடித்தாலும் அணியை வெற்றி நோக்கி அழைத்து செல்ல முடியவில்லை. இறுதியாக இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது.
இதனால் ஆப்கானிஸ்தான் ஏ அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா ஏ அணிக்கு அதிர்ச்சி அளித்தது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை ஆப்கானிஸ்தான் ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ- ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட் கைப்பற்றினார்.
மும்பை:
இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்து வருகி து. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கான்வே 76 ரன்கள் அடித்தார்.
இந்தியா சார்பில் சுழற்பந்து வீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட் வீழ்த்தினார்.
103 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. பிளென்டெல் 30 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தற்போது, நியூசிலாந்து 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 30 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் இந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 1006 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 23 வயதாகும் முன்னரே ஒரு வருடத்தில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
மேலும் சர்வதேச அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய 5-வது வீரர் என்ற மாபெரும் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் கார்பீல்ட் சோபர்ஸ், கிரேம் சுமித், டி வில்லியர்ஸ் மற்றும் அலெஸ்டர் குக் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நவம்பர் 8-ம் தேதி தொடங்குகிறது.
- காயத்தால் மயங்க் யாதவ், ஷிவம் துபே, ரியான் பராக் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.
புதுடெல்லி:
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நவம்பர் 8-ம் தேதி டர்பனில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக மயங்க் யாதவ், ஷிவம் துபே மற்றும் ரியான் பராக் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் விபரம்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரமன் தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைசாக், ஆவேஷ் கான், யாஷ் தயாள்.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-2 என வென்ற ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் கரன் கச்சனாவ், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் இத்தாலியின் முசெட்டி, பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதுகிறார்.
- முதலில் பேட் செய்த இங்கிலாந்து 267 ரன்களில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 344 ரன்கள் எடுத்தது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜேமி சுமித் 89 ரன்னும், பென் டக்கெட் 52 ரன்னும், கஸ் அட்கின்சன் 39 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நோமன் அலி 3 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பாகிஸ்தானின் ஷான் மசூத் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். சாத் ஷகீல் சிறப்பாக விளையாடி சதமடித்து 134 ரன்களில்ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் நோமன் அலி 45 ரன்களும், சஜித் கான் 48 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 344 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் ரெஹான் அகமது 4 விக்கெட்டும், சோயப் பஷீர் 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
77 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், ரஷியாவின் டேரியா கசட்கினா உடன் மோதினார்.
இதில் சோபியா கெனின் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இவர் அரையிறுதியில் பிரிட்டிஷ் வீராங்கனை கேடி போல்டர் உடன் மோதுகிறார்.
மற்றொரு காலிறுதியில் சீனாவின் குயின்வென் ஜெங், கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டசை 6-0, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் தமிழ் தலைவாஸ் அணி முதல் தோல்வி அடைந்தது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடின.
இறுதியில் இந்தப் போட்டியில் 42-40 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. பாட்னா அணியின் தேவங்க் சிறப்பாக ஆடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
மற்றொரு போட்டியில் புனேரி பால்டன் 36-22 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.






