என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வெறும் ஒரு ரன் எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
    • அணியின் 5 முதல் 10-வது வீரர் வரை அனைவரும் டக் அவுட் ஆகினர்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கத்திய ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மானியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மேற்கத்திய ஆஸ்திரேலியா அணி வெறும் ஒரு ரன் எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கத்திய ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன் எடுத்திருந்த நிலையில் 53 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் மேற்கத்திய ஆஸ்திரேலியா எடுத்த 1 ரன்னும் வைடு வடிவில் வந்தது. இந்த அணியின் 5 முதல் 10 வீரர் வரை அனைவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

    டாஸ்மானியா வீரர் பியூ வெப்ஸ்டர் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்தார். மறுப்பக்கம் பில்லி ஸ்டான்லேக் 12 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய டாஸ்மானியா அணி 8.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தத் தொடரின் வரலாற்றில் பதிவான இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோராக இது அமைந்தது. முன்னதாக தெற்கு ஆஸ்திரேலியா அணி 2003 ஆம் ஆண்டு டாஸ்மானியா அணிக்கு எதிராக 51 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியும் மிக மோசமான எட்டு விக்கெட் இழப்புகளில் ஒன்றாக அமைந்தது. 

    • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • வர்ணனையாளர் சைமன் டவுல் காட்டமான கருத்து தெரிவித்தார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது. முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்க, இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒன்பது விக்கெட் கையிருப்பில் ஆட தொடங்கியது. எனினும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களில் ஆட்டமிழந்தது.

    முதல் டெஸ்ட் போட்டியை போன்றே இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய பேட்டர்கள் ரன் குவிக்க தடுமாறினர். இதைத் தொடர்ந்து இந்திய பேட்டர்கள் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் சைமன் டவுல் காட்டமான கருத்து தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "இந்திய பேட்டர்கள் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார்கள் என தவறான புரிதல் இப்போதும் பலரிடம் உள்ளது. சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்றவர்கள் சுழற்பந்துவீச்சை நேர்த்தியாத எதிர்கொண்டு விளையாடக்கூடியவர்கள். அவர்களின் காலம் கடந்து விட்டது."

    "இந்த காலத்து இந்திய பேட்டர்களுக்கும், மற்ற நாட்டு பேட்டர்களுக்கும் வித்தியாசமே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. நல்ல சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்டர்கள் சமீப காலங்களில் தடுமாறி வருகின்றனர்," என்று சைமன் டவுல் கருத்து தெரிவித்துள்ளார்.

    • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது. முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்க, இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒன்பது விக்கெட் கையிருப்பில் ஆட தொடங்கியது. எனினும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களில் ஆட்டமிழந்தது.

    இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆட தொடங்கியது. நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும், அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் நிதானமாக ஆடி 86 ரன்களை சேர்த்தார். இதேபோல் டாம் ப்லன்டெல் 30 ரன்களை சேர்த்துள்ளார்.

    இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்துவீசய இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷ்வின் 1 விக்கெட் கைப்பற்றினார்.

    • தலைமை பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
    • பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தலைமை பதவி வகிப்பதற்கான தடை நீக்கப்பட்டு விட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு பால்-டாம்பரிங் (பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்துவது) குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்து டேவிட் வார்னர் தலைமை பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக மூன்று பேர் அடங்கிய அமர்வு, தடை நீக்கப்படுவதற்கான அனைத்து விதிளையும் டேவிட் வார்னர் பூர்த்தி செய்துள்ளதால் தடை நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், வார்னர் மரியாதை மற்றும் வருத்தம் தெரிவித்ததாக அமர்வு தெரிவித்தது.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் டேவிட் வார்னர் இனி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தலைமை வகிக்க முடியும். இதில் அவர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக செயல்படலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது. முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்க, இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒன்பது விக்கெட் கையிருப்பில் ஆட தொடங்கியது. எனினும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    மேலும், விராட் கோலி அவுட் ஆன விதம் பல்வேறு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களை குழம்ப செய்தது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறும் போது, "விராட் கோலி எப்போதும் இதுமாதிரி விளையாட மாட்டார்," என்று தெரிவித்தார்.

    • ஜடேஜா 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • வாஷிங்டன் சுந்தர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் கான்வே (76), ரச்சின் ரவீந்திரா (65) சிறப்பாக விளையாடினர். வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட் வீழ்த்த 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் சவுத்தி பந்தில் டக்அவுட் ஆனார். அதோடு இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், சுப்மன் கில் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வால்- சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடியது. அணியில் ஸ்கோர் 21.3 ஓவரில் 50 ரன்னாக இருக்கும்போது சுப்மன் கில் 72 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். இவர் 9 பந்துகளில் 1 ரன் எடுத்து சான்ட்னெர் பந்தில் க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் இந்திய விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தது. ஜெய்ஸ்வால் 60 பந்தில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    ரிஷப் பண்ட் 18 ரன்களும், சர்பராஸ் கான் 11 ரன்களும், அஸ்வின் 4 ரன்களும் எடுத்து வெளியேறினர். சான்ட்னெர் 4 விக்கெட் வீழ்த்தினார். கிளென் பிளிப்ஸ் ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் ஆகியோரை வீழ்த்தினார். இந்தியா 103 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து திணறியது

    இன்றைய 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 11 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 38 ரன்கள் எடுத்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் ஒரு பக்கம் நிற்க மறுபக்கம் ஆகாஷ் தீப் 6 ரன்னிலும், பும்ரா டக்அவுட் ஆக இந்தியா 45.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தநர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நியூசிலாந்து அணி சார்பில் சான்ட்னெர் 7 விக்கெட்டும், பிளிப்ஸ் 2 விக்கெட்டும், சவுத்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    • முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 800 ரன்களுக்கு மேல் குவித்தது.
    • ராவல்பிண்டியிலும் அதுபோன்று இங்கிலாந்து அணி குவிக்குமா? என கேள்வி எழுப்பியபோது குழப்பம்.

    பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. தொடரை தீர்மானிக்கும் 3-வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது.

    நேற்று முன்தினம் கடைசி போட்டி தொடர்பாக இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதில் அளித்தார்.

    அப்போது ஒரு செய்தியாளர் முல்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து இன்னிங்ஸ் மற்றம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அதேபோல் ராவல்பிண்டி டெஸ்டிலும் இங்கிலாந்து அணி 800-க்கும் அதிகமாக ரன்கள் குவிக்குமா? என கேள்வியை கேட்டார். ஆனால் இந்த கேள்வியை அவரால சரளமான ஆங்கிலத்தில் சரியா முறையில் கோர்த்து கேட்க முடியவில்லை.

    இதனால் பென் ஸ்டோக்ஸ்க்கு என்ன கேட்க வருகிறார் என்பது விளங்கவில்லை. மீண்டும் அதே கேள்வியை கேளுங்கள் என்றார். செய்தியளார் அதே கேள்வியை கேட்டார். ஆனால் முந்தைய கேள்வியில் இருந்து வார்த்தைகள் பல மாறியிருந்தன. இப்போதும் செய்தியாளரால் கேள்வியை சரியாக கோர்க்க முடியவில்லை. இடையில் நிறுத்தி நிறுத்தி பேசினார். இந்த முறையில் பென் ஸ்டோக்ஸ்க்கு புரியவில்லை.

    என்னடா சோதனை இது... என நினைத்த பென் ஸ்டோக்ஸ், தாடையில் கை வைத்துக் கொண்டு, மீண்டும் ஒருமுறை உங்கள் கேள்வியை கேட்கவும் என்றார். இந்த முறையில் செய்தியாளர் அந்த கேள்வியை கேட்டார். பென் ஸ்டோக்ஸ் உன்னிப்பாக கவனித்தார்.

    இந்த முறை ஓரளவிற்கு கேள்வியை புரிந்து கொண்ட பென் ஸ்டோக்ஸ் "அப்படி நடந்தால் சிறப்பாக இருக்கும்" என பதில் அளித்தார்.

    இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • ரிஷப் பண்ட் 18 ரன்னிலும், சர்பராஸ் கான் 11 ரன்னிலும் அவுட்.
    • சுப்மன் கில், ஜெய்ஸ்வால் தலா 30 ரன்கள் சேர்த்தனர்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் கான்வே (76), ரச்சின் ரவீந்திரா (65) சிறப்பாக விளையாடினர். வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட் வீழ்த்த 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் சவுத்தி பந்தில் டக்அவுட் ஆனார். அதோடு இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், சுப்மன் கில் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வால்- சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடியது. அணியில் ஸ்கோர் 21.3 ஓவரில் 50 ரன்னாக இருக்கும்போது சுப்மன் கில் 72 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். இவர் 9 பந்துகளில் 1 ரன் எடுத்து சான்ட்னெர் பந்தில் க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் இந்திய விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தது. ஜெய்ஸ்வால் 60 பந்தில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    ரிஷப் பண்ட் 18 ரன்களும், சர்பராஸ் கான் 11 ரன்களும், அஸ்வின் 4 ரன்களும் எடுத்து வெளியேறினர். சான்ட்னெர் 4 விக்கெட் வீழ்த்தினார். கிளென் பிளிப்ஸ் ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் ஆகியோரை வீழ்த்தினார்.

    இந்தியா 103 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாடி வருகின்றனர். மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 11 ரன்களுடனும், சுந்தர் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • 2021-ல் இருந்து ஆசிய மண்ணில் சுழற்பந்து வீச்சில் 26 இன்னிங்சில் 21 முறை அவுட்.
    • இடது கை சுழற்பந்து வீச்சாளர்களிடம் 10 முறை வீழ்ந்துள்ளார்.

    இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் புனே நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 259 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், சுப்மன் கில் 30 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்மிழந்தனர். இதனைத் தொடர்ந்து விராட் கோலி களம் இறங்கினார். இவர் 9 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.

    விராட் கோலி சமீப காலமாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிரமப்படுகிறார். அதுவும் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் அதிக முறை சிக்கியுள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து விராட் கோலி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஆசிய கண்டத்தில் 26 இன்னிங்சில் 21 முறை சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார். எடுத்த ரன்கள் 606 ஆகும். சராசரி 28.85 ஆகும். குறிப்பாக இடது கை ஆர்தேடெக்ஸ் ஸ்பின்னுக்கு எதிராக 27.10 சதவீதம்தான் சராசரி ஆகும்.

    • தெலுங்கு டைட்டன்ஸ் அணியையும் 2-வது ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியையும் வீழ்த்தியது.
    • பெங்களூரு புல்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத்:

    16-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியையும் 2-வது ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியையும் வீழ்த்தியது.

    அந்த அணி 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் நரேந்தர், சச்சின் தன்வார், சாஹில் குலியா, நிதிஷ்குமார், அபிஷேக், மனோகரன் ஹொசைன் பஸ்தாமி, சாகர் ராரே மாசானமுத்து ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    தமிழ் தலைவாஸ் தனது 2 போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். பாட்னா பைரட்ஸ் அணி ஒரு ஆட்டத்தில் விளையாடி அதில் தோல்வியை சந்தித்தது. அந்த அணி முதல் வெற்றியை எதிர் நோக்கி இருக்கிறது.

    இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

    புனேரி பால்டன் 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று உள்ளது. பெங்களூர் அணி 3 ஆட்டத்தில் விளையாடி அனைத்திலும் தோற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குல்தீப் யாதவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்.
    • முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று புனேயில் தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. கே.எல். ராகுல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு சுப்மன் கில், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

    மூன்று மாற்றங்கள், குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டதை சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருந்தார்.

    வாஷிங்டன் சுந்தர் தேர்வு இந்திய அணியின் கடைநிலை பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்த சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை காட்டுகிறது. குல்தீப் யாதவை நீக்கியிருக்கக் கூடாது. நான் அவரை அணியில் வைத்திருப்பேன் என கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

    ஆனால் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்து வீசி ஏழு விக்கெட்டுகள் சாய்த்தார். இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் "என்ன ஒரு ஈர்க்கக்கூடிய வகையிலான ஆடும் லெவன் தேர்வு. வாஷிங்டன் சுந்தரால் கொஞ்சம் கூடுதலாக பேட்டிங் செய்யவும் முடியும். பந்து வீசவும் முடியும்" என்றார்.

    ரஞ்சி டிராபி போட்டியில் டெல்லி அணிக்கெதிராக வாஷிங்டன் சுந்தர் தமிழ்நாடு அணிக்காக சதம் விளாசியிருந்தார். இதனால் உடனடியாக 2-வது போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

    • வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • அஜாஸ் பட்டேலுக்கு எதிராக ரிஷப் பண்ட் வழங்கிய ஆலோசனை வீடியோ மைக்கில் பதிவானது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து முதல் நாள் ஆட்டத்தின்போது 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகள் சாய்த்தார். இதில் ஐந்து பேரை க்ளீன் போல்டாக்கினார்.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், ஸ்டம்பிற்கு பின்னால் நின்று பேசிக் கொண்டே இருப்பார். எதிரணி பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர். அதோடு இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி ஆலோசனை வழங்குவார்.

    பேட்ஸ்மேன்களை நன்றாக கணித்து பந்தை அப்படி வீசு... இப்படி வீசு... என ஆலோசனை வழங்குவார்.

    நேற்று வாஷிங்டன் சுந்தர் பந்து வீசும்போதும் அப்படி சொல்லிக் கொண்டிருந்தார். வாஷிங்டன் சுந்தர் ஐந்து விக்கெட் வீழ்த்திய நிலையில், அஜாஸ் பட்டேல் பேட்டிங் செய்ய வந்தார்.

    அப்போது வாஷிங்டன் சுந்தரிடம் ரிஷப் பண்ட் ஆலோசனை வழங்கினார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே கொஞ்சம் புல்லராக (Little Fuller) பந்து வீசுங்கள் எனத் தெரிவித்தார். வாஷிங்டன் சுந்தருக்கு இந்தி தெரியும். ஆங்கிலத்தில் பேசினால் அஜாஸ் பட்டேல் புரிந்து கொள்வார் என்பதால் ரிஷப் பண்ட் இந்தியில் பேசினார்.

    வாஷிங்டன் சுந்தரும் அப்படியே வீசுவார். அந்த பந்தை சற்றும் யோசிக்காமல் அஜாஸ் பட்டேல் லாங்ஆன் திசையில் தூக்கி அடித்து பவுண்டரி அடிப்பார்.

    உடனே, அஜாஸ் பட்டேலுக்கு இந்தி தெரியும் என்பது எனக்கு எப்படிப்பா தெரியும் என்பார் ரிஷப் பண்ட். இது மைக் ஸ்டம்பில் பதிவாகியுள்ளது. ஆலோசனைக் கூறிய நிலையில் அது பின்விளைவை ஏற்படுத்தியுள்ளது.

    அஜாஸ் பட்டேல் மும்பையில் பிறந்தவர். 8 வயது வரை இங்கேதான வாழ்ந்தார். அதன்பின்னர்தான் நியூசிலாந்து சென்ற குடியேறினார். இதனால் இந்தி அவருக்கு தெரிந்திருப்பது ஆச்சர்யம் அளிக்கும் விசயம் இல்லை.

    இருந்தபோதிலும் அதன்பின் வாஷிங்டன் சுந்தர் அவரை க்ளீன் போல்டாக்கினார்.

    ×