என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டான்ஸ் மாஸ்டருக்கும் தனஸ்ரீக்கும் இடையிலான நெருக்கம் விவாகரத்து காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    • இது தொடர்பாக புகைப்படம், வீடியோ என பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.

    இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதனை உறுதி செய்யும் விதமாக யுவேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்திருக்கிறார்கள். மேலும் இருவர் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன. இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யக்கூடும் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    மும்பையைச் சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் பிரதிக் உடேகர். இவருக்கும் தனஸ்ரீ வர்மாவுக்கும் இடையிலான நெருக்கம் சாஹல் பிரிவிற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக புகைப்படம், வீடியோ என பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.


    இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாகவே எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிக கடினமாக இருக்கிறது. உண்மையாகவே வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், ஆதாரமில்லாத வதந்திகள், உண்மையை சரிபார்க்காமல் சொல்வது, வெறுப்பை பரப்பும் ட்ரோல்களால் என் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதுதான்.

    எனக்கான நல்ல பெயரை கட்டமைக்க நான் பல ஆண்டுகள் கடினமாக உழைத்துள்ளேன். எனது மௌனம் பலவீனத்தின் அடையாளம் அல்ல. வலிமையின் அடையாளம். எனவே, என்னைப் பற்றிய உண்மையின் மீது மட்டுமே கவனம் செலுத்தி முன்னேறி செல்வதை நான் தேர்வு செய்ய விரும்புகிறேன். உண்மை உயர்ந்து நிற்கும்.

    என்று தனஸ்ரீ வர்மா கூறினார்.

    • ரோகித் சர்மா ஜூன் மாதம் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்லமாட்டார்.
    • இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பும்ரா இருக்க முடியுமா என்பது தெரியவில்லை.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான பார்ம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் தானாக முன்வந்து விலகினார். இதனால் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பொறுப்பை கவனித்தார். சிட்னி டெஸ்டில் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய போது, விராட் கோலி பொறுப்பு கேப்டனாக செயல்பட்டார். ரோகித் சர்மா இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது சந்தேகம் தான். அதனால் புதிய டெஸ்ட கேப்டனை நியமிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

    இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்ஷிப் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாவது:-

    ரோகித் சர்மா ஜூன் மாதம் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்லமாட்டார். அவரது இலக்கு அனேகமாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியாக இருக்கும். அது முடிந்ததும் ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்.

    இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பும்ரா இருக்க முடியுமா என்பது தெரியவில்லை. அது அவருக்கு சவாலானதாக இருக்கும். அதனால் அடுத்த கேப்டனாக யார் வருவார்? கோலியை மறுபடியும் கேப்டன்ஷிப்புக்கு கொண்டு வர முயற்சிப்பார்களா? என்னை கேட்டால் கோலி மீண்டும் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    இந்தியாவுக்கு இது சவாலான கால கட்டமாகும். மூத்த வீரர்கள் வெளியேறினால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளது. அதனால் 1 முதல் 11-வது வரை இந்த வரிசைக்கும் புதிய வீரர்களை கொண்டு வர முடியும். அதற்காக சர்வதேச போட்டியில் அது உடனடியாக வெற்றியை தேடி தரும் என்று அர்த்தம் கிடையாது. இந்திய அணிக்கு இது சற்று சவாலான நேரமாக இருக்கப்போகிறது. ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் அந்த நாட்டு பவுலர்கள் முழு உடல்தகுதியுடன் இருந்தால், நிச்சயம் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

    இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.

    • ரிச்சர்ட் கெட்டில்பரோவை தெரியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது.
    • டோனி ரன் அவுட் ஆகும் போது களத்தில் நின்ற ரிச்சர்ட், ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்து பிரபலமானவர்.

    ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித். இவரது பேட்டிங் ஸ்டைலில் சற்று வித்தியாசமானதாக இருக்கும். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் நடனம் ஆடுவார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கால் சுழன்று கொண்டே இருக்கும்.

    பந்து கீப்பரிடம் சென்ற பிறகு பேட்டை வைத்து ஸ்டைலாக போஸ் கொடுப்பார். மேலும் தடுப்பாட்டம் ஆடிய பிறகு எதிர் முனையில் இருக்கும் பேட்டரிடம் பேட்டை வைத்தே நில் என சைகை காட்டுவார். அவரது பேட்டிங் ஸ்டைலுக்கு பல ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

    இந்நிலையில் அவரது பேட்டிங் ஸ்டைலை போல இந்தியாவில் ஒரு சிறுவன் அவரை போலவே பேட்டிங் ஆடியுள்ளார். இந்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் நடுவரான ரிச்சர்ட் கெட்டில்பரோ சமூக வலைதளங்களில் பதிவிட்டு இந்தியாவின் ஸ்டீவ் ஸ்மித் என தலைப்பிட்டுள்ளார்.

    ரிச்சர்ட் கெட்டில்பரோவை தெரியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டோனி ரன் அவுட் ஆகும் போது களத்தில் நின்ற ரிச்சர்ட் ஷாக் ரியாக்ஷன் கொடுப்பார். அந்த ரன் அவுட் மூலம் மிகவும் பிரபலமானவர் இவர். இவர் களநடுவராக இருந்தால் இந்தியா தோல்வியடையும் என்ற நிலை இருந்து வந்தது. அந்த நிலையை கடந்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வந்தது.

    நியூசிலாந்து - இந்தியா மோதிய போட்டியில் மீண்டும் இவரே கள நடுவராக பணியாற்றினார். இதனால் இந்த போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவும் என ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அதை முறியடிக்கும் விதமாக இந்தியா அந்த போட்டியில் வெற்றி பெறும்.

    இப்படி இந்திய ரசிகர்களால் அதிக கவனம் ஈர்த்த இவர் அடிக்கடி இந்திய கிரிக்கெட் சம்மந்தமாக பல வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்காமக கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த வீடியோ பதிவிட்ட நிலையில் இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
    • இந்த தொடர் வருகிற 29-ந் தேதி இலங்கையில் தொடங்குகிறது.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் இலங்கையில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும் துணை கேப்டனாக டிராவிஸ் ஹெட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். கேப்டனாக பேட் கம்மின்ஸ்-க்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய ஹசில்வுட், குணமடையாததால் இந்த தொடரில் இடம் பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க்-க்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கவில்லை.

    இலங்கை எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள்:-

    ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், நாதன் மெக்ஸ்வீனி, பியூ வெப்ஸ்டர், நாதன் லியோன், மிட்செல் ஸ்டார்க், கூப்பர் கோனோலி, டாட் மர்பி, மாட் குஹ்னேமன், சீன் அபோட், ஸ்காட் போலண்ட்.

    • விராட் கோலி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அதிகமாக முயற்சிக்கிறார்.
    • உண்மையில் அதுவே அவருடைய பேட்டிங்கை கடினமாக்குகிறது.

    புதுடெல்லி:

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி மோசமான பேட்டிங்கால் நெருக்கடியில் இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது பேட்டிங் மோசமாக இருந்தது. 3 டெஸ்டில் 93 ரன்களே எடுத்தார். சராசரி 15.50 ஆகும்.

    அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரிலும் அவது மோசமான பேட்டிங் நீடித்தது. பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் சதம் அடித்த அவரால் அதன்பிறகு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. 5 டெஸ்டில் 9 இன்னிங்சில் மொத்தம் 190 ரன்களே எடுத்தார். சராசரி 23.75 ஆகும். இதனால் விமர்சனத்துக்கு ஆளான அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.

    இந்த நிலையில் விராட் கோலிக்கு சிறிது ஓய்வு தேவை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட் கோலி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அதிகமாக முயற்சிக்கிறார். உண்மையில் அதுவே அவருடைய பேட்டிங்கை கடினமாக்குகிறது. சில நேரங்களில் கடினமாக முயற்சிக்கும் போது குறைவான வெற்றிகள் மட்டுமே கிடைக்கும். எனவே ஒரு இடைவெளி மட்டுமே உதவி செய்யும்.

    கடந்த காலங்களில் மனதளவில் தடுமாறிய போது அவர் கொஞ்சம் இடைவெளி எடுத்து ஒதுங்கி இருந்தார். பின்னர் கிரிக்கெட்டின் மீது அன்புடன் மீண்டும் சிறப்பான ஆட் டத்தை வெளிப்படுத்தினார்.

    இந்த நேரத்தில் அவரிடம் கிரிக்கெட்டின் மீது உண்மையான அன்பு இருப்பது போல் தெரியவில்லை. ஏனெனில் அவர் மகிழ்ச்சியுடன் இருக்க அதிகமாக முயற்சிக்கிறார். எனவே டெஸ்டில் தொடர்ந்து விளையாட விரும்பினால் விராட் கோலி கொஞ்சம் இடைவெளி எடுத்து மீண்டும் முழுமையான அன்புடன் வருவதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.

    இந்த சிறிய ஓய்வு மூலம் அவரால் இழந்த ஆட்டத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியும். மனதை அமைதிபடுத்தி ரன்களை குவிக்க இது உதவியாக இருக்கும்.

    இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.

    36 வயதான விராட்கோலி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். அனைத்து வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து அவர் 27,324 ரன்களை (543 மேட்ச்) எடுத்து 4-வது இடத்தில் உள்ளார். 81 சதமும், 146 அரை சதமும் இதில் அடங்கும்.

    டெஸ்டில் 9,230 ரன்னும், ஒருநாள் போட்டியில் 13,906 ரன்னும் எடுத்துள்ளார். 20 ஓவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    • முதலில் முல்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

    போட்டியை நடத்தும் மைதானங்கள் ஐ.சி.சி. நிர்ணயித்துள்ள விதிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடர் பற்றிய தகவல்களில் உண்மையில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    சாம்பியன்ஸ் கோப்பை தொடர் துவங்கும் முன்பு தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான போட்டிகள் முதலில் முல்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், கடைசி நேரத்தில் இந்தப் போட்டிகள் கராச்சி மற்றும் லாகூரில் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருக்கிறது.

    மேலும், அடுத்த மாதம் துவங்க இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு அந்த இடங்களில் புதுப்பித்தல் பணிகள் தாமதமாகி நடைபெற்று வருவதாக வெளியான தகவல்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.

    லாகூரில் உள்ள கடாபி மைதானம், கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் மைதானத்தில் புதுப்பித்தல் பணிகள் காலக்கெடுவிற்குள் அல்லது அதற்கு முன்பாகவோ முடிந்துவிடும் நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில், "இது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயம். மூன்று மைதானங்களும் இன்னும் தயாராகவில்லை. இங்கு நடப்பது புதுப்பித்தல் பணிகள் இல்லை. சீரான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இருக்கைகள், ஃப்ளட்-லைட்கள், வெளிப்புற மைதானம் மற்றும் விளையாட்டு மேற்பரப்புகள் உட்பட நிறைய வேலைகள் முடிக்கப்பட வேண்டிய நிலையில் தான் உள்ளன," என்று கூறப்பட்டது.

    பொதுவாக, எந்தவொரு சர்வதேச போட்டியையும் நடத்தும் நாடுகள், தரச் சரிபார்ப்பை மேற்கொள்வதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் மைதானங்களை சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ICC) முன்கூட்டியே ஒப்படைக்க வேண்டியது வழக்கம்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காலக்கெடுவைத் தவறவிட்டால் மற்றும் மைதானங்கள் ஐ.சி.சி. சரிபார்ப்பு பட்டியலை பூர்த்தி செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பது கேள்விக்குரிய விஷயம் தான். முழுமையாக தயாராகாத இடங்களில் போட்டியை நடத்த முடியாது. அடுத்த வாரம் இதுகுறித்து முழு விவரங்கள் தெரியவரும்.

    • ஜிப் ஜான்சன் ஹாட்ரிக் கோல் அடித்து முத்திரை பதித்தார்.
    • தமிழக வீரர் கார்த்தி அடித்த கோல் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    ரூர்கேலா:

    8 அணிகள் பங்கேற்கும் ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்று வருகிறது.

    சென்னையை மையமாகக் கொண்ட தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் சூர்மா கிளப்பிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் (1-4) தோற்றது.

    2-வது ஆட்டத்தில் கலிங்கா லான்செஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் (6-5) வென்றது. 3-வது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் உ.பி. ருத்ராவை வீழ்த்தியது.

    தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 4-வது ஆட்டத்தில் விசாகப்பட்டினத்தை மையமாகக் கொண்ட கோனாசிகா அணியை நேற்று எதிர் கொண்டது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் 6-5 என்ற கோல் கணக்கில் கோனாசிகா அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.

    தமிழ்நாடு டிராகன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்தை சேர்ந்த ஜிப் ஜான்சன் ஹாட்ரிக் கோல் அடித்து முத்திரை பதித்தார். அவர் 19, 33 மற்றும் 50-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    இந்த போட்டி தொடரில் முதல் ஹாட்ரிக் இதுவாகும். அப்ஹரன் கதேவ் (15-வது நிமிடம்), நாதன் எபிரம்ஸ் (55), கார்த்தி செல்வம் (59) ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். தமிழக வீரர் கார்த்தி அடித்த கோல் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    இந்த வெற்றி மூலம் தமிழ்நாடு டிராகன்ஸ் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியது. டிராகன்ஸ் 9 புள்ளியுடன் இருக்கிறது. பெங்கால் டைகர்ஸ் அணியும் 9 புள்ளி பெற்றுள்ளது. கோல்கள் அடிப்படையில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது. சூர்மா (7 புள்ளி), உ.பி. ருத்ராஸ் (6 புள்ளி) அணிகள் முறையே 3-வது, 4-வது இடங்களில் உள்ளன.

    தமிழ்நாடு டிராகன்ஸ் 5-வது போட்டியில் பெங்கால் டைகர்சை நாளை (10-ந்தேதி) எதிர்கொள்கிறது. 

    • இந்திய அணி செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
    • ஓய்வு பெற்று விடுவார் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், இந்திய அணி டெஸ்ட் தொடரையும் இழந்தது. இதையடுத்து, ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணி செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    பலரும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்று விடுவார் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுகிறார் என்று அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ரோகித் சர்மா ஓய்வு குறித்து ஐ.பி.எல். தொடரில் டெக்கன் சார்ஜர்ஸ் அணியில் ரோகித் சர்மாவுக்கு கேப்டனாக இருந்த ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி பேசிய அவர், "ரோகித் இங்கிலாந்து செல்வார் என்று நான் நினைக்கவில்லை. வீடு திரும்பியதும் அதுபற்றி முடிவு செய்வேன் என்று அவர் சொல்வதாக எனக்கு தோன்றியது. அவர் வீடு திரும்பியதும் இரண்டு மாத குழந்தையை தான் அவர் எதிர்கொள்வார். குழந்தைக்கு அவர் டயப்பர்களை மாற்ற வேண்டும். அது அவரை இங்கிலாந்து செல்ல ஊக்குவிக்கலாம். ஆனால் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவருக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்படும் என்று நான் நினைக்கிறேன், அதுவே அவரை வெளியேற்றக்கூடும்."

    "ஜஸ்பிரித் பும்ரா முழுநேர கேப்டனாக இருக்க வேண்டுமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அது அவருக்கு கொஞ்சம் சவாலாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். எனவே, அடுத்த கேப்டன் யாராக இருக்கும் என்பதே பலரின் யூகமாக இருக்கும். உண்மையில் அவர்கள் விராட் கோலியிடம் திரும்பி செல்வார்களா? அவர்கள் அதை செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்," என்று கூறினார்.

    • கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய பெண்கள் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி,

    தாய்லாந்தின் சுவாசாய்-ஜாங்சதாபாம்பான் ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-10, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    அடுத்த சுற்றில் இந்திய ஜோடி சீன ஜோடியுடன் மோதுகிறது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது.
    • ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.

    ஹேமில்டன்:

    நியூசிலாந்து, இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நேற்று நடந்தது. மழை காரணமாக 37 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் தீக்ஷனா 4 விக்கெட்டும், ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இலங்கை 30.2 ஓவரில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரச்சின் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 7-வது இலங்கை பவுலராக சாதனை படைத்தார்.

    மேலும் சமிந்தா வாஸ் (2003), லசித் மலிங்கா (2007), துஷ்மந்தா மதுசங்கா (2018) ஆகியோருக்கு பின் வெளிநாட்டு மண்ணில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 4-வது இலங்கை பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    • கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வென்றது.

    கோலாலம்பூர்:

    மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானின் லு மிங் சே-டாங்க் கை வே ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 21-10 என இந்திய ஜோடி வென்றது. இரண்டாவது செட்டை தைவான் ஜோடி 21-16 என கைப்பற்றியது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இந்திய ஜோடி 21-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • ஆர்சிபி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    • சொந்த அணியின் ரசிகர்களால் ஹர்திக் பாண்ட்யா கேலிக்கு உள்ளானார்.

    ஐபிஎல் தொடர் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் பிரபலமான கிரிக்கெட் விளையாட்டாக பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் எப்போது பல சுவாரஸ்யமான மற்றும் மிரட்டலான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் 2024-ம் ஆண்டிலும் சில சம்பவங்கள் நடந்துள்ளது. அதில் சிறப்பான சம்பவங்கள் இந்த செய்தியின் மூலம் காணலாம்.

    ஐ.பி.எலில் ரசிகர்கள் அதிகம் கொண்ட சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகிய கேப்டன்களின் மாற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

    ஐபிஎல் தொடரில் மிரட்டல் அணியாக பார்க்கபடும் அணி மும்பை இந்தியன்ஸ். அந்த 2024-ம் ஆண்டில் கேப்டனான ரோகித் சர்மாவை அந்த அணியின் நிர்வாகம் நீக்கி ஹர்திக் பாண்ட்யாவை நியமித்தனர். இது பெரிய அளவில் வெடித்தது. இதனால் சொந்த அணியின் ரசிகர்களால் ஹர்திக் பாண்ட்யா கேலிக்கு உள்ளானார். இதனையடுத்து டி20 உலககோப்பை இறுதிபோட்டியில் சிறப்பாக விளையாடியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு கேலி செய்தவர்களை தனக்கு புகழ் பாட வைத்தார்.

    2024-க்கு முன்பு ஐ.பி.எல். வரலாற்றில் ஆர்.சி.பி. அணி அடித்திருந்த அதிகபட்ச ரன்களான 263 ரன்களை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆர்.சி.பி. அணிக்கு எதிராக 287 ரன்கள் குவித்து ஆர்.சி.பி. அணியின் சாதனையை முறியடித்தது.

    ஐபிஎல் 2024-ன் 57-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. எல்எஸ்ஜி பிளேஆஃப்களை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பினால், அவர்கள் சன்ரைசர்ஸ்-க்கு எதிராக ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.

    ஆனால் போட்டியின் முடிவு முற்றிலும் எதிர்மாறாக இருந்தது, ஏனெனில் ஐதராபாத் 62 பந்துகள் மீதமுள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு, எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் கே. எல் ராகுல் மீது கோபமடைந்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடமும் பேசிய வீடியோ வைரலானது. இதனால், கிரிக்கெட் வல்லுநர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தங்கள் வரம்பிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

    ஒரே பெயர் குழப்பத்தால் தவறுதலாக ரூ.20 லட்சத்துக்கு ஷஷாங் சிங் என்ற வீரரை ஏலத்தில் எடுத்ததாக பஞ்சாப் அணி நிர்வாகம் அறிவித்தது.

    இதற்கு பதில் தரும் விதமாக குஜராத் அணிக்கு எதிராக எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் அவுட் ஆன நேரத்தில் பஞ்சாப் அணிக்காக நிதானத்துடன் ஆடிய ஷஷாங் சிங், 61 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக்கான், உள்ளிட்ட 3400 போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷா ஐசிசிக்கு தலைவர் ஆனது சமூகவலைத்தளங்களில் விவாத பொருளானது குறிப்பிடத்தக்கது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ஐபிஎல் 2024 பிளேஆஃப்களை அதிசயமாக அடைந்தது. ஆர்சிபி தனது முதல் எட்டு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று முதல் அணியாக மாறியது. அதனை தொடர்ந்து ஆறு வெற்றிகளைப் பெற்றது. இது ஐபிஎல் தொடரில் ஆர்சிபியின் இரண்டாவது நீண்ட தொடர் வெற்றியாகும்.

    ×