என் மலர்
விளையாட்டு
- பாகிஸ்தான் 20 நிமிடத்திற்குள் முதல் விக்கெட்டை இழந்ததால் ரிஸ்வான் களம் இறங்கினார்.
- 10 ஓவரின் கடைசி பந்தில் ரிஸ்வான் அடித்த பந்தை பிலிப்ஸ் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கராச்சியில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து வில் யங் (107), டாம் லாதம் (118) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 320 ரன்கள் குவித்தது.
பின்னர் பாகிஸ்தான் 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஃபஹர் ஜமான் காயம் காரணமாக பீல்டிங் செய்யும்போது முதல் ஓவரிலேயே வெளியேறியதால், 20 நிமிடம் கழித்துதான் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் பாபர் அசாம் உடன் சாத் ஷகீல் தொடக்க வீரரான களம் இறங்கினார். நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹென்றி, ஓ'ரூர்கே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமாக பந்து வீசினர். இதனால் பாகிஸ்தான் ரன்கள் குவிக்க திணறியது.
முதல் 3 ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 4-வது ஓவரை ஓ'ரூர்கே வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஷகீல் 19 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இவர் ஆட்டமிழக்கும்போது 17 நிமிடங்கள்தான் முடிவடைந்திருந்தது. இதனால் ஃபஹர் ஜமான் களம் இறங்க முடியவில்லை. ஆகையால் ரிஸ்வான் களம் இறங்கினார்.
பாபர் அசாம், ரிஸ்வான் ஜோடியாலும் விரைவாக ரன்கள் அடிக்க முடியவில்லை. 10-வது ஓவரை ஓ'ரூர்கே வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ரிஸ்வான் ஆஃப் சைடு கல்லி திசையில அப்பர் கட் செய்தார். இந்த பந்தை கல்லி பகுதியில் நின்றிருந்த கிளென் பிலிப்ஸ் இடது பக்கம் டைவ் அடைத்து இடது கையால் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
இதை அவரால் கூட நம்பவில்லை. நியூசிலாந்து வீரர்கள் அவரை பாராட்ட, பாகிஸ்தான் ரசிகர்கள் எப்படி இந்த கேட்சை பிடித்தார் என வாயடைத்தனர். ரிஸ்வான் 14 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 22 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
- வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சாளர்கள்.
- ஜடேஜா, அக்சார் படேல், வாஷிங்டன் சுந்தர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா வங்கதேசத்தை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி தொடர்பாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்திய அணியில் ஜடேஜா, அக்சார் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி என ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனரே என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ரோகித் சர்மா பதில் அளித்தார். அப்போது கூறியதாவது:-
நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் (வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ்) மற்றும் மூன்று ஆல்-ரவுண்டர் சுழற்பந்து வீச்சாளர்களை (அக்சார் படேல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர்) ஆகியோரை கொண்டுள்ளோம். அக்சார் படேல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மிகப்பெரிய அளவில் பங்களிப்பை கொடுப்பார்கள்.
மற்ற பல அணிகள் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களை கொண்டுள்ளபோது, 6 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்கிறார்கள். அப்போது அதிக வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்கிறார்கள் என யாரும் சொல்வதில்லை. அது அவர்களுடைய பலம். நாங்கள் எங்களுடைய பலத்தின் மீது கவனம் செலுத்துவோம்.
ஒவ்வொரு ஐசிசி தொடரும் முக்கியமானது. டிராபியை வெல்ல நாம் பல்வேறு விசயங்களை செய்ய வேண்டும். சுப்மன் கில் கிளாஸ் பிளேயர். அவருடைய சாதனை மூர்க்கத்தனமானது. அதனால் அவர் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.
- வில் யங் 113 பந்தில் 107 ரன்கள் விளாசினார்.
- டாம் லாதம் ஆட்டமிழக்காமல் 104 பந்தில் 118 ரன்கள் குவித்தார்.
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணி:-
1. வில் யங், 2. கான்வே, 3. கேன் வில்லியம்சன், 4. டேரில் மிட்செல், 5. டாம் லாதம், 6. பிலிப்ஸ், 7. பிரேஸ்வெல், 8. சான்ட்னெர், 9. மேட் ஹென்றி, 10. நாதன் ஸ்மித், 11. வில் ஓ, ரூர்கே.
பாகிஸ்தான் அணி:-
1. ஃபஹர் சமான், 2. பாபர் அசாம், 3. சாத் ஷாகீல், 4. முகமது ரிஸ்வான், 5. சல்மான் ஆகா, 6. தையப் தாஹிர், 7. குஷ்தில் ஷா, 8. ஷாஹீன் ஷா அப்ரிடி, 9. நசீம் ஷா, 10. ஹாரிஷ் ராஃப், 11. அப்ரார் அகமது.
அதன்படி நியூசிலாந்து அணியின் வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கான்வே 17 பந்தில் 10 ரன் எடுத்த நிலையில் அப்ரார் அகமது பந்தில் க்ளீன் போல்டானார்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 2 பந்துகளை சந்தித்த நிலையில் 1 ரன் எடுத்து நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து 40 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டேரில் மிட்செலும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இவரும் 10 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வில் யங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே நியூசிலாந்து 10 ஓவரில 48 ரன்கள் சேர்த்தது. 11 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது, வில் யங் 56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் விளாசினார். 22.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
4-வது விக்கெடடுக்கு வில் யங் உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். டாம் லாதம் 59 பந்தில் அரைசதம் அடிக்க வில் யங் சிறப்பான விளையாடி அரைசதத்தை சதமாக மாற்றினார்.
56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த வில் யங், 107 பந்தில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். சதம் விளாசிய வில் யங் 113 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
வில் யங் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 37.2 ஓவரில் 191 ரன்கள் எடுத்திருந்தது. வில் யங்- டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 5-வது விக்கெட்டுக்கு டாம் லாதம் உடன் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.
இதனால் நியூசிலாந்து ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. டாம் லாதம் 47-வது ஓவரின் 3-வது பந்தில் ஒரு ரன் எடுது்து 95 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடி பிலிப்ஸ் 49-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து அரைசதம் அடித்தார்.
நியூசிலாந்து அணி 45-வது ஓவரில் 16 ரன்களும், 46-வது ஓவரில் 9 ரன்களும், 47-வது ஓவரில் 18 ரன்களும், 48-வது ஓவரில் 11 ரன்களும், 49-வது ஓவரில் 12 ரன்களும் விளாசின. இதனால் 44.5 ஓவரில் 250 ரன்னைக் கடந்த நிலையில் 48.3 ஓவரில் 300 ரன்னைத்தொட்டது. கடைசி ஓவரின் 4-வது பந்தில் பிலிப்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்கருடன் 61 ரன்கள் குவித்தார். அடுத்து பிரேஸ்வெல் களம் இறங்கினார்.
கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்துள்ளது. டாம் லாதம் 104 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து கடைசி 10 ஓவரில்
பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 10 ஓவரில் 68 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஹாரிஸ் ராஃப் 10 ஓவரில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அப்ரார் அகமது 10 ஓவரில் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். நசீம் ஷா 10 ஓவரில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
- 59 பந்தில் அரைசதம் அடித்த நிலையில், 113 பந்தில் சதம் விளாசினார்.
- 107 ரன்னில் ஆட்டமிழந்தார். யங்- டாம் லாதம் ஜோடி 118 ரன்கள் குவித்தது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது. நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடக்க வீரர் வில் யங் சிறப்பான வகையில் ஆட்டத்தை தொடங்கினார். கான்வே (10), கேன் வில்லியம்சன் (1), டேரில் மிட்செல் (10) சொதப்பினாலும் மறுமுனையில் யங் நம்பிக்கையுடன் விளைாடினார்.
56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த வில் யங் 107 பந்தில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் டாம் லாதம் 59 பந்தில் அரைசதம் அடித்தார். சதம் விளாசிய வில் யங் 113 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
வில் யங் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 37.2 ஓவரில் 191 ரன்கள் எடுத்திருந்தது. வில் யங்- டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது.
- கான்வே 10 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
- வில் யங் 56 பந்தில் அரைசதம் கடந்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் தொடங்கியது. நடைபெற்று வரும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கான்வே 17 பந்தில் 10 ரன் எடுத்த நிலையில் அப்ரார் அகமது பந்தில் க்ளீன் போல்டானார்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 2 பந்துகளை சந்தித்த நிலையில் 1 ரன் எடுத்து நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து 40 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டேரில் மிட்செலும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இவரும் 10 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். டேரில் மிட்செல் 10 ரன்னில் ஹாரிஸ் ராஃப் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வில் யங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே நியூசிலாந்து 10 ஓவரில 48 ரன்கள் சேர்த்தது. 11 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது, வில் யங் 56 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் விளாசினார். 22.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
நியூசிலாந்து 28.4 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுது்து விளையாடி வருகிறது. டாம் லாதம் 25 ரன்களுடனும், வில் யங் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- பார்முலா 1 கார் பந்தயம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
- 2025 ஆம் ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தய துவக்க நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.
கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார்முலா 1 கார் பந்தயம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தய துவக்க நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.
இதில் பல்வேறு இசை கலைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்த நிகழ்வில் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ள 10 அணிகளை சேர்ந்த 20 ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
7 முறை உலக சாம்பியனான ஹாமில்டனுக்கு இந்த நிகழ்ச்சியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தாண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் மார்ச் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது குறிப்பிடத்தக்கது.
- சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
- பாபர் அசாம் 776 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின்னடைந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ICC) வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரவரிசையின்போது சுப்மன் கில் 2-வது இடம் பிடித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் சதம் விளாசியதன் மூலம் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் பாபர் அசாம் சிறப்பான விளையாடவில்லை. இதனால் 776 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா கடந்த வாரம் 3-வது இடத்தில் இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் 761 புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கிறார்.

தென்ஆப்பிரிக்க வீரர் கிளாசன் 756 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 2 இடங்களில் முன்னேறி 740 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி 727 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கிறார்.
ஷ்ரேயாஸ் அய்யர் 679 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். அயர்லாந்து வீரர் டெக்கர் 7-வது இடத்தையும், இலங்கை வீரர் அசலங்கா 8-வது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது
- 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் இன்று மதியம் தொடங்கியது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
நியூசிலாந்து அணி:-
1. வில் யங், 2. கான்வே, 3. கேன் வில்லியம்சன், 4. டேரில் மிட்செல், 5. டாம் லாதம், 6. பிலிப்ஸ், 7. பிரேஸ்வெல், 8. சான்ட்னெர், 9. மேட் ஹென்றி, 10. நாதன் ஸ்மித், 11. வில் ஓ, ரூர்கே.
பாகிஸ்தான் அணி:-
1. ஃபஹர் ஜமான், 2. பாபர் அசாம், 3. சாத் ஷாகீல், 4. முகமது ரிஸ்வான், 5. சல்மான் ஆகா, 6. தையப் தாஹிர், 7. குஷ்தில் ஷா, 8. ஷாஹீன் ஷா அப்ரிடி, 9. நசீம் ஷா, 10. ஹாரிஷ் ராஃப், 11. அப்ரார் அகமது.
இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய 4 அணிகள் ஏ பிரிவிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும பி பிரிவிலும் இடம் பிடித்துள்ளனர்.
ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகள் அதேபிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் சாம்பியன்ஸ் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும்.
- புதிய பந்தில் ராணா எவ்வாறு பந்து வீசினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஹர்ஷித் ராணா
- ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் வலது கை பேட்ஸ்மேன்கள், இடதுகை வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு ஏற்படுத்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மேலும் பும்ராவுக்கு பதில் இடது கை வேகப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்வேன் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டி 20 கிரிக்கெட்டில் அவர் எவ்வளவு அபாரமாக பந்து வீசினார் என்று அனைவருக்கும் தெரியும். அர்ஸ்தீப் சிங்கிடம் நல்ல திறமை இருக்கிறது. பும்ரா போல் அவரால் பந்து வீச முடியும். புதிய பந்தையும், பழைய பந்தையும் பயன்படுத்தி அர்ஸ்தீப் சிங் சிறப்பாக செயல்படுவார். இதனால் பும்ராவுக்கு பதில் அர்ஸ்தீப் சிங்கை தான் பயன்படுத்த வேண்டும்.
இதற்காக ஹர்ஷித் ராணாவை நான் குறை சொல்லவில்லை. அவரிடமும் நிறைய திறமை இருக்கின்றது. புதிய பந்தில் அவர் எவ்வாறு பந்து வீசினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆட்டத்தின் டெத் ஓவரில் பந்து வீச முடியாது என்பது உண்மையே. ஏனென்றால் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் முறை என்பது முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும். அவர்களால் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்த முடியும்.
அது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் வலது கை பேட்ஸ்மேன்கள், இடதுகை வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள். எனவே நான் கேப்டன் ஆக இருந்தால், அர்ஸ்தீப் சிங்கை தான் பயன்படுத்துவேன்.
என்று பாண்டிங் கூறியுள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் முதலிடம் வகிக்கிறார்.
- 3-வது இடத்தில் இந்தியாவின் ஷிகர் தவான் உள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெஸ்ட்இண்டீசின் கிறிஸ் கெய்ல் முதலிடம் (17 ஆட்டத்தில் 3 சதம் உள்பட 791 ரன்) வகிக்கிறார்.
2-வது இடத்தில் இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனேவும் (742 ரன்), 3-வது இடத்தில் இந்தியாவின் ஷிகர் தவானும் (10 ஆட்டத்தில் 3 சதம் உள்பட 701 ரன்) உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர்.
கெய்லின் சாதனையை முறியடிக்க இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. கோலி இதுவரை 13 ஆட்டத்தில் ஆடி 5 அரைசதம் உள்பட 529 ரன் எடுத்துள்ளார். இன்னும் 263 ரன்கள் எடுத்தால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைக்க முடியும்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 481 ரன்கள் (10 ஆட்டம்) எடுத்துள்ளார். அனேகமாக ரோகித் சர்மாவின் கடைசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாக இது இருக்கும் என்பதால் அவரும் முத்திரை பதிக்க முயற்சிப்பார்.
அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் டாப்-3 இடங்களில் நியூசிலாந்தின் கைல் மில்ஸ் (28 விக்கெட்), இலங்கையின் மலிங்கா (25 விக்கெட்), முரளிதரன் (24 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகாஷ் 106 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- விதர்பா அணி தரப்பில் பார்த் ரேகாடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நாக்பூர்:
ரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மும்பை- விதர்பா அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் நாக்பூரில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. யாஷ் ரதோட் 54 ரன்களிலும், அக்ஷய் வாத்கர் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மும்பை தரப்பில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஆகாஷ் ஆனந்த் நிலைத்து விளையாட மறுமுனையில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் இழந்த வண்ணம் இருந்தது.
முன்னணி வீரர்களான ரகானே 18 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே இருவரும் டக் அவுட் ஆனதும் மும்பை அணிக்கு பின்னடைவை கொடுத்தது. 2-வது நாள் ஆட்ட முடிவில் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுடன் தடுமாறியது. ஆகாஷ் ஆனந்த் 67 ரன்களுடனும், தனுஷ் கோட்டியான் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து இன்று 3-நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகாஷ் ஆனந்த் சதம் விளாசி அசத்தினார். அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 92 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 113 ரன்கள் விதர்பா அணி முன்னிலையி உள்ளது.
- போட்டியில் விளையாடும் 8 நாடுகளின் தேசிய கொடிகள் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட வேண்டும்.
- பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடி மட்டும் ஏற்றப்படவில்லை.
கராச்சி:
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல் பிண்டி ஆகிய 3 நகரங்களில் போட்டி நடக்கிறது. போட்டியில் விளையாடும் 8 நாடுகளின் தேசிய கொடிகள் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட வேண்டும். ஆனால் பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடி மட்டும் ஏற்றப்படவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியானது. அதில் லாகூர் ஸ்டேடியத்தில் இந்திய கொடி மட்டும் இல்லை. மற்ற நாட்டு கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தது. இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வேண்டுமென்றே இந்தியாவின் கொடியை ஏற்றவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த புறக்கணிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சர்ச்சையை தொடர்ந்து இந்தியாவின் கொடி பாகிஸ்தான் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடங்க உள்ள நிலையில் கராச்சி ஸ்டேடியத்தில் இந்திய கொடி காணப்பட்டது.






