என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்தியாவுக்காக 2 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் விளையாடி வெங்கடேஷ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
    • ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை நிகழ்த்துவதற்கு தேவையான திறன் என்னிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை கொல்கத்தாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக ரகானேவும் துணை கேப்டனாக வெங்கடேஷ் அய்யரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகளில் என்னால் பங்காற்ற முடியும் என வெங்கடேஷ் அய்யர் தெரிவித்துள்ளார்.

    2022-ம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் ஒரு கட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 2 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் விளையாடி வெங்கடேஷ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

    அதன் காரணமாக வெங்கடேஷ் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை நிகழ்த்துவதற்கு தேவையான திறன் என்னிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஒருவேளை அதை செய்ய முடியாமல் போனால் எனது கேரியர் முடியும் போது அதற்காக வருத்தப்படுவேன். தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகளில் என்னால் பங்காற்ற முடியும் என்பதும் எனக்கு தெரியும்.

    என்னால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட முடியும். அதை என்னால் செய்ய முடியுமேயானால் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய அனைத்தையும் நான் கொடுக்க விரும்புகிறேன்.

    என்று வெங்கடேஷ் கூறினார்.

    இருப்பினும் ரஞ்சிக் கோப்பையில் வெங்கடேஷ் ஐயர் பெரியளவில் அசத்தியதாக தெரியவில்லை. இதற்கிடையே நித்திஷ் ரெட்டி சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக சமீபத்தில் அசத்தினார். எனவே வெங்கடேஷ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.

    • காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிற்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது.
    • இக்கடிதத்தை இந்திய காமன்வெல்த் விளையாட்டு சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா சமர்ப்பித்துள்ளார்.

    புதுடெல்லி:

    24-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2030-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இப்போட்டியை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்தது.

    இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிற்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது.

    இக்கடிதத்தை இந்திய காமன்வெல்த் விளையாட்டு சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா சமர்ப்பித்துள்ளார். இந்த போட்டியை குஜராத்தின் அகமதாபாத்தில் நடத்த முன்மொழியப்பட்டுள்ளது.

    போட்டியை நடத்துவதற்கான ஏலத்துக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31-ந்தேதி ஆகும். அதற்கு முன்பாக பி.டி. உஷாவிடமிருந்து கடிதம் பெறப்பட்டதாக காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்புத் தலைவர் கிறிஸ் ஜென்கின்ஸ்,தலைமை நிர்வாக அதிகாரி கேட்டி சாட்லீர் ஆகியோர் குஜராத்திற்கு வந்திருந்தனர். அப்போது அவர்களிடம் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் அகமதாபாத்தின் பங்களிப்பை பி.டி.உஷா விளக்கி இருந்தார்.

    2026-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடக்க இருந்தது. ஆனால் அதிலிருந்து ஆஸ்திரேலியா விலகியது. இதையடுத்து இப்போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. இதில் ஹாக்கி, பேட்மிண்டன், மல்யுத்தம், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட 10 போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்தும் முயற்சி தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தி காட்ட இந்தியா விருப்பமாக உள்ளது.

    • பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
    • இம்பேக்ட் வீரர் விதிமுறை இன்னும் 2 ஆண்டுகள் (2027-ம் ஆண்டு வரை) தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இதன் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

    இதனையொட்டி 10 அணிகளின் கேப்டன்களுடன் பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அத்துடன் இம்பேக்ட் வீரர் விதிமுறை இன்னும் 2 ஆண்டுகள் (2027-ம் ஆண்டு வரை) தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் நடப்பு சீசனில் புதிய விதி ஒன்றும் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இரவு நேர ஆட்டங்களில் 2-வது இன்னிங்சின்போது பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து ஈரமாகி விடுகிறது. ஈரமான பந்தை பவுலர்களால் சரியாக பிடித்து துல்லியமாக வீச முடிவதில்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன்குவித்து விடுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு இந்த ஐ.பி.எல்.-ல் இரண்டு பந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதாவது 2-வது இன்னிங்சில் 10-வது ஓவருக்கு பிறகு பந்து வீசும் அணியின் கேப்டன் பந்து அதிகம் ஈரமாகி விட்டதாக நினைத்தால் நடுவரிடம் புதிய பந்து கேட்கலாம். பனியின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நடுவர் ஆராய்ந்து, அதற்கு ஏற்ப பந்தை மாற்றுவது குறித்து முடிவு செய்வார். இந்த புதிய விதி நடப்பு சீசனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    • புதிய மற்றும் பழைய பந்துகளில் எப்படி பந்து வீசுவது என்பதில் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன்.
    • இந்த ஐபிஎல்லில் விஷயங்கள் எனக்கு எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம்.

    ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் யாரும் எதிர்பாராத வகையில் முகமது சிராஜுக்கு இடம் கிடைக்கவில்லை.

    சிராஜின் நீக்கம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம். அதேசமயம் சிராஜ் புதிய பந்தில் மட்டும் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளார். இதனால் முகமது சிராஜின் திறன் சற்று குறைவதாக நாங்கள் உணர்கிறோம். அவர் தனது வாய்ப்பை தவறவிட்டது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய முகமது சிராஜ், "அணியின் தேர்வு என் கையில் இல்லை. என் கைகளில் ஒரு கிரிக்கெட் பந்து மட்டுமே இருக்கிறது, அதை வைத்து என்னால் முடிந்ததைச் செய்ய விரும்பினேன். நான் என் செயல்திறனில் கவனம் செலுத்த விரும்புவதால், தேர்வு பற்றி யோசித்து என் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. நான் சில வருடங்களாக விளையாடி வருகிறேன். பொதுவாக, எங்களுக்கு அவ்வளவு ஓய்வு கிடைப்பதில்லை.

    ஆனால் இப்போது எனக்கு சிறிது ஓய்வு கிடைத்ததால், எனது உடற்தகுதி மற்றும் பந்துவீச்சுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டேன். புதிய மற்றும் பழைய பந்துகளில் எப்படி பந்து வீசுவது என்பதில் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். மேலும் எனது மெதுவான பந்துகள் மற்றும் யார்க்கர்களில் வேலை செய்ய விரும்பினேன். இந்த முறை நான் அந்த பகுதிகளில் அதிகம் வேலை செய்துள்ளேன். இந்த ஐபிஎல்லில் விஷயங்கள் எனக்கு எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம்.

    என்று தெரிவித்துள்ளார்.

    எதிர்வரும் ஐபிஎல் தொடரில் குஜராஜ் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட முகமது சிராஜ் ரூ.12.25 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஒசாகா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    • மசுரோவா 6-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மியாமி:

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் ஜப்பானின் நவாமி ஒசாகா, ரஷ்யாவின் லியுட்மிலா டிமிட்ரிவ்னா சாம்சோனோவா உடன் மோதினார்.

    இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஒசாகா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் சுவிஸ் வீராங்கனை ரெபேக்கா மசரோவா குரோஷிய வீராங்கனை டோனா வெக்கிச் உடன் மோதினர். இதில் மசுரோவா 6-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • கொல்கத்தாவில் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கும் லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
    • கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என்று பெங்கால் கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை இரவு தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. முன்னதாக மாலை 6 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்க விழாவும் இடம் பெறுகிறது. ஆனால் அன்றைய தினம் கொல்கத்தாவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடக்க ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி மாலை 3.30 மணிக்கு இதே கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அன்று ராம நவமி கொண்டாட்டம் பல இடங்களில் நடப்பதால் கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என்று பெங்கால் கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த ஆட்டத்தை கொல்கத்தாவில் வேறு தேதியில் நடத்த வழியில்லாததால், அதே தேதியில் கவுகாத்திக்கு மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    • 131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற புதிய சரித்திரத்தை கவன்ட்ரி படைத்துள்ளார்.
    • இதற்கு முன்பு 9 ஆண்கள் மட்டுமே தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர்.

    ஏதென்ஸ்:

    சர்வதேச விளையாட்டு அமைப்பில் மிகவும் அதிகாரமிக்க, வலிமைமிக்க பதவியான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக தாமஸ் பேச் (ஜெர்மனி) கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தார். பதவிகாலம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கூறி ஒதுங்கினார்.

    இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஐ.ஓ.சி.யின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கிரீஸ் நாட்டின் கோஸ்டா நவரினோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. நிதி நிலை, எதிர்கால போட்டிக்குரிய சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து நேற்று ஐ.ஓ.சி.யின் புதிய தலைவரை தேர்வு செய்ய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

    தலைவர் பதவிக்கு முன்னாள் நீச்சல் வீராங்கனையும், ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை மந்திரியுமான கிறிஸ்டி கவன்ட்ரி, உலக தடகள சம்மேளன தலைவர் செபாஸ்டியன் கோ (இங்கிலாந்து), ஐ.ஓ.சி. நிர்வாக குழுவின் துணைத்தலைவர் ஜூவான் ஆன்டோனியா சமராஞ்ச் (ஸ்பெயின்) சர்வதேச சைக்கிளிங் சங்க தலைவர் டேவிட் லாப்பரடின்ட் (பிரான்ஸ்), ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தலைவர் மோரினாரி வதானாப் (ஜப்பான்), சர்வதேச ஸ்கை மற்றும் ஸ்னோபோர்டு தலைவர் ஜோஹன் எலியாஸ் (இங்கிலாந்து), ஜோர்டான் நாட்டு இளவரசர் பைசல் பின் ஹூசைன் ஆகிய 7 பேர் போட்டியிட்டனர்.

    மொத்தம் ஐ.ஓ.சி.யின் 99 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் அதிகபட்சமாக 49 வாக்குகள் பெற்ற கிறிஸ்டி கவன்ட்ரி வெற்றி பெற்று புதிய தலைவர் ஆனார். 2-வது இடத்தை பிடித்த ஜூவான் ஆன்டோனியா சமராஞ்சுக்கு 28 வாக்குகள் கிடைத்தது. எதிர்பார்க்கப்பட்ட செபாஸ்டியன் கோ 8 ஓட்டுகளே பெற்றார்.

    இதன் மூலம் 131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற புதிய சரித்திரத்தை கவன்ட்ரி படைத்துள்ளார். இதற்கு முன்பு 9 ஆண்கள் மட்டுமே தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர். அத்துடன் ஆப்பிரிக்காவில் இருந்து இந்த உயரிய பொறுப்புக்கு வந்த முதல் நபர் மற்றும் இளம் வயதானவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

    41 வயதான கிறிஸ்டி கவன்ட்ரி முன்னாள் நீச்சல் வீராங்கனை ஆவார். 2004, 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று இருக்கிறார். உலக நீச்சல் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டியிலும் நிறைய பதக்கங்களை குவித்து இருக்கிறார்.

    ஒலிம்பிக் தினமான ஜூன் 23-ந் தேதி அன்று ஐ.ஓ.சி.யின் 10-வது தலைவராக அவர் முறைப்படி பொறுப்பேற்பார். இந்த பதவியில் அவர் 8 ஆண்டுகள் நீடிப்பார். இந்த காலக்கட்டத்தில் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக், 2032-ம் ஆண்டு பிரிஸ்பேன் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு காத்திருக்கிறது.

    2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்துவதற்கான உரிமத்தை பெற இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்த ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பதை இவரது தலைமையிலான கமிட்டியே முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு இளம் வீராங்கனையாக நீச்சல் பயணத்தை தொடங்கிய போது இது போன்ற ஒரு தருணத்தை அடைவேன், இப்படியொரு இடத்தில் நிற்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஐ.ஓ.சி.யின் முதல் பெண் தலைவராக இருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. நான் பெற்ற ஓட்டுகள் நிறைய பேருக்கு உத்வேகம் அளிக்கும் என கூறினர்.

    • மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ்குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.
    • பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ்குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிதிஷ்குமார் ரெட்டி படைத்தார்.

    இந்நிலையில், அண்மையில் நிதிஷ்குமார் கொடுத்த பாட்காஸ்டில் மெல்போர்ன் டெஸ்ட் சதம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    பாட்காஸ்டில் பேசிய நிதிஷ்குமார், "ஒருமுறை விராட் கோலி சர்ஃபராஸ் கானிடம் 'உன் ஷூ சைஸ் என்ன?' என கேட்டார். அதற்கு அவர் 9 என்றார். பின் திரும்பி என்னை பார்த்து என்னுடைய அளவை கேட்டார். அவருக்கும் எனக்கும் ஒரே அளவு இல்லை என்றாலும், எனக்கு அவரின் ஷூ வேண்டும் என்ற ஆசையில் எப்படியோ யோசித்து 10 எனக் கூறினேன். அவர் ஷூவை கொடுத்தார். அதை அணிந்து மெல்போர்ன் டெஸ்டில் விளையாடி போட்டியில் சதமடித்தேன்" என்று தெரிவித்தார்.

    • கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி கேகேஆர்-லக்னோ போட்டி நடைபெற இருக்கிறது.
    • ஏப்ரல் 6ஆம் தேதி ராம நவமி கொண்டாடப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க சிரமம் ஏற்படுவதால் வேண்டுகோள்.

    ஐபிஎல் 2025 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா நாளைமறுதினம் கொல்கத்தாவில் தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஏப்ரல் 6ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறும். மதியம் 3.30 போட்டி இங்கு நடைபெறுகிறது.

    அன்றைய தினம் ராம நவமியாகும். ராம நவமி தினத்தில் கொல்கத்தாவில் பாஜக பேரணி நடத்த இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதனால் கொல்கத்தா முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    அதே தினத்தில் போட்டி நடைபெற இருப்பதால் பாதுகாப்பிற்கு போலீஸ் குவிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியை மற்றொரு தேதிக்கு மாற்றி வைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பலமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
    • பேட்டிங்களில் சுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

    அறிமுக சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் சாம்பியன் பட்டம், 2-வது வருடம் இரண்டாவது இடம் பிடித்தது. கடந்த வருடம் சுப்மன் கில் தலைமையில் பிளேஆஃப் சுற்றை கூட எட்ட முடியாத நிலையில், இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் மீண்டெழும் முனைப்பில் உள்ளது.

    பேட்ஸ்மேன்கள்

    சுப்மன் கில், ஜோஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், ஷெர்பேன் ரூதர்போர்டு, கிளென் பிலிப்ஸ்

    ஆல்-ரவுண்டர்கள்

    நிஷாந்த் சிந்து, மஹிபால் லாம்ரோர், வாஷிங்டன் சுந்தர், முகமது அர்ஷத் கான், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், கரிம் ஜனத், சாய் சுதர்சன், ஷாருக் கான்.

    பந்து வீச்சாளர்கள்

    ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மனவ் சுதர், ஜெரால்டு கோயட்சீ, குர்னூர் சிங் பிரார், இஷாந்த் சர்மா, குல்வந்த் கெஜ்ரோலியா, ராகுல் டெவாட்டியா, ரஷித் கான்

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வந்தனர். தற்போது ஜாஸ் பட்லர் அணியில் இணைந்துள்ளார். இதனால் தொடக்க பேட்ஸ்மேன்கள் என்பதில் அணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணிக்காக சமீப காலமாக சிறப்பாக விளையாடவில்லை. ஐபிஎல் போட்டியில் பேட்டிங் கிளிக் ஆகிவிட்டால் பட்டைய கிளப்ப வாய்ப்புள்ளது.

    மிடில் ஆர்டர்

    மிடில் ஆர்டர்தான் சற்று பலவீனமாக உள்ளதாக தோன்றுகிறது. சுப்மன் கில், பட்லர் தொடக்க வீரராக களம் இறங்கினால் சாய் சுதர்சன் 3-வது வரிசையில் களம் இறங்குவார். அதன்பின் கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான், லாம்ரோர் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் முகமது அர்ஷத் கான், நிஷாந்த் சிந்து ஆகியோர் தங்களது பங்களிப்பை கொடுக்க முடியும்.

    வேகப்பந்து வீச்சாளர்கள்

    ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த சர்மா முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களுடன் கோயட்சீ, குர்னூர் சிங் பிரார், கெஜ்ரோலியா உள்ளனர். ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆடும் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

    சுழற்பந்து வீச்சில்

    ரஷித் கான், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், வாஷிங்டன் சுந்தர், டெவாட்டியா என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களுடன் மானவ் சுதர் உள்ளார். பிலிப்ஸ், ஷாருக் கானும் சுழற்பந்து வீசக் கூடியவர்கள். இதில் ரஷித் கான், சாய் கிஷோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள்.

    வெளிநாட்டு வீரர்கள்

    பட்லர், ருதர்போர்டு, கிளென் பிலிப்ஸ், கரிம் ஜனத், ரபாடா, கோயட்சீ, ரஷித் கான் ஆகியோர் உள்ளனர். இதில் பட்லர், பிலிப்ஸ், ரஷித் கான், ரபாடா ஆகியோர் ஆடும் லெவனில் களம் இறங்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் ரபாடாவிற்குப் பதிலாக பட்லர் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கலாம். பேட்டிங், பவுலிங்கை சமநிலைப் படுத்தும் வகையில் தேர்வு இருக்கும்.

    • சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்குவார்கள்.
    • ஜாஃப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, பாசல்ஹக் பரூக்கி, மபாகா, ஆகாஷ் மத்வால், அசோக் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    பேட்ஸ்மேன்கள்

    சுஞ்சு சாம்சன், ஷுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, குணால் ரத்தோர், ஷிம்ரன் ஹெட்மையர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், த்ருவ் ஜுரேல், ரியான் பராக்

    ஆல்-ரவுண்டர்கள்

    நிதிஷ் ராணா, யுத்வீர் சிங்

    பந்து வீச்சாளர்கள்

    ஜாஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், துஷார் தேஷ்பாண்டே, பாசல்ஹக் பரூக்கி, க்வேனா மபாகா, அஷோக் சர்மா, சந்தீப் சர்மா,

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    சஞ்சு சாம்சன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். ஆனால் முதல் 3 போட்டிகளில் சஞ்சு சாம்சன் (கைவிரலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை) பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெய்ஸ்வால் உடன் தொடக்க வீரராக களம் இறங்குவது யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    மிடில் ஆர்டர் வரிசை

    நிதிஷ் ராணா, ஹெட்மையர், ரியான் பராக், த்ருவ் ஜுரேல் ஆகியோர் உள்ளனர். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி அணியில் உள்ளார். இவர் களம் இறக்கப்படுவாரா? என்பது பின்னர்தான் தெரியவரும். இவர்களுடன் ஷுபம் துபே, குணால் ரத்தோர் உள்ளனர்.

    தொடக்க ஜோடி சரியாக விளையாடவில்லை என்றால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியை எப்படி அழைத்துச் செல்வது என்பதை பார்க்க சுவாரஷ்யமாக இருக்கும்.

    வேகப்பந்து வீச்சு

    ஜாஃப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, பாசல்ஹக் பரூக்கி, மபாகா, ஆகாஷ் மத்வால், அசோக் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    இதில் சந்தீப் சர்மா, தேஷ்பாண்டே, ஜாஃப்ரா ஆர்ச்சர், பரூக்கி, மபாபா, மத்வால் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இதனால் வேகப்பந்து வீச்சில் பலமாகவே உள்ளது.

    சுழற்பந்து வீச்சு

    மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் மட்டுமே முதன்மை சுழற்பந்து வீச்சாளர்கள். இவர்களுடன் குமார் கார்த்திக்கேய சிங் உள்ளார். ரியான் பராக் பகுதி நேரமாக சுழற்பந்து வீசக்கூடியவர். மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா ஆடும் லெவனில் இடம் பிடித்தால் சுழற்பந்து வீச்சு வலுவானதாகவே கருதப்படும்.

    வெளிநாட்டு வீரர்கள்

    ஹெட்மையர், ஆர்ச்சர், தீக்ஷனா, ஹசரங்கா, பரூக்கி, மபாகா. இந்த 6 பேரில் ஹெட்மையர், ஆர்ச்சர் மற்றும் இரண்டு ஸ்பின்னர்கள் தீக்ஷனா, ஹசரங்கா ஆகியோருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஹெட்மையருக்குப் பதிலாக இம்பேக்ட் பிளேயராக ஒருவரை களம் இறக்கலாம்.

    ராஜஸ்தான் எப்போதுமே தொடரின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடும். 2-வது பாதியில் மோசமாக விளையாடி பிளேஆஃப் சுற்றை எட்ட முடியாத நிலை ஏற்படும். இல்லையெனில் புள்ளிகளில் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியாத ஏற்படும். இந்த முறை இதை மாற்றிக்காட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • ஐபிஎல் அணிகளின் 10 கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டது.
    • 10 அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பைக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதியுடன் தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன.

    இன்று மும்பையில் ஐபிஎல் அணிகளின் 10 கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டது.

    இந்நிலையில், 10 அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பைக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். ஐபிஎல்-ன் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. .

    ஐபிஎல் 17-வது சீசனின் தொடக்க விழா முன்னெப்போதும் இல்லாத வகையில் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் நிகழ்ச்சியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    ×