என் மலர்tooltip icon

    விளையாட்டு

      ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வில் பொக்கோஸ்கி, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வயதிலேயே தொடர்ந்து சதம் சதமாக அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 36 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2350 ரன்கள் அடித்திருந்தார். இதில் 7 சதம் அடங்கும். அதுமட்டுமல்லாமல் இவருடைய சராசரி 45 என்ற அளவில் இருந்தது.

      தன்னுடைய திறமை காரணமாக 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2020-21-ம் ஆண்டு அறிமுகமானார். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62, இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்கள் அடித்தார்.

      ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து பந்து தலையை தாக்கிக் கொண்டு இருந்தது. இதனால் அவருக்கு பலமுறை காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகி இருக்கிறார்.

      ஒரு முறை இரண்டு முறை அல்ல காயம் அடைந்து மீண்டும் குணம் அடைந்து களத்திற்கு வரும்போது மீண்டும் தலையில் பந்து தாக்கி அவர் ஓய்வு பெற்று விடுவார். இப்படியே தொடர்கதையாக இருந்தது. இவருக்கு தொடர்ந்து எப்படி ஒரே இடத்தில் பந்து படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

      இதில் பந்து தலையை தாக்கி விடுமோ என்ற பயத்தில் அவர் விளையாடுவதால் தான் பேட்டிங் யுத்தியை அவர் மறந்து விடுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கடைசியாக ஒரு முறை கிரிக்கெட்டில் சாதித்து விடலாம் என வில் பொக்கோஸ்கி வந்தபோது கடந்தாண்டு மார்ச் மாதம் மீண்டும் தலையில் பந்து அடிபட்டு அவர் காயமடைந்தார்.

      இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொடர்ந்து பந்து தலையைத் தாக்கியதால் அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் வில் பொக்கோஸ்கி இனி விளையாடவே முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

      இந்நிலையில், தன்னுடைய 27 ஆவது வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வில் பொக்கோஸ்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

      • இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் பட்டோடி கோப்பை என அழைக்கப்படுகிறது.
      • இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

      இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

      இதற்கிடையே பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

      தற்போது ஆஸ்திரேலியா-இந்தியா மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போல இந்தியா-இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த 2 ஜாம்பவான்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.

      இந்த நிலையில் இந்த முடிவுக்கு இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

      பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக வந்துள்ள தகவல்கள் ஏமாற்றம் அளிக்கிறது. இங்கிலாந்தின் இந்த முடிவு பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

      இந்த முடிவு இந்தியா-இங்கிலாந்து ஆகிய 2 கிரிக்கெட்டுக்கும் பட்டோடிகள் ஆற்றிய பங்களிப்பிற்கு முழுமையான பதில் உணர்த்திறன் இல்லாததைக் காட்டுகிறது. சமீபத்திய வீரர்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்குவதற்காக இங்கிலாந்து வாரியம் எந்த இந்திய வீரரையாவது அணுகினால் அவர்கள் அதை மரியாதையுடன் மறுக்க வேண்டும்.

      இது நமது 2 முன்னாள் கேப்டன்களின் மரியாதைக்காக செய்யப்பட வேண்டிய ஒன்று. வேண்டுமானால் அந்தக் கோப்பையின் பெயரில் இங்கிலாந்து தங்கள் நாட்டின் ஒரு வீரர் பெயரை இணைத்துக் கொள்ளலாம். அதை இந்தியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். ஆனால் பட்டோடி வரலாறு மீண்டும் பேசப்பட வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • சூர்யகுமார் யாதவ் தூக்கி அடித்த பந்தை யாஷ் தயாள், ஜிதேஷ் சர்மா ஆகிய இருவரும் பிடிக்க முயன்றனர்.
      • 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் மும்பையை அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியது.

      ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

      அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது.

      இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

      இப்போட்டியின் 12 ஆவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தூக்கி அடித்த பந்தை யாஷ் தயாள் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய இருவரும் பிடிக்க முயன்றனர். அப்போது இருவரும் மோதிக்கொண்டதால் கேட்சை தவறவிட்டனர்.

      இதனால் கடுப்பான விராட் கோலி தொப்பியை கீழே வீசி தனது கோவத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

      • வெற்றி, தோல்வியை மாறி, மாறி சந்தித்து வரும் இவ்விரு அணிகளும் வெற்றி உத்வேகத்தை தொடர தீவிரம் காட்டுகின்றன.
      • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.

      ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்திக்கின்றன. நேற்று முன்தினம் நடக்க இருந்த இந்த ஆட்டத்துக்கு ராமநவமி கொண்டாட்டம் காரணமாக பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கொல்கத்தா போலீசார் கைவிரித்ததால் 2 நாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.

      கொல்கத்தா அணி 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோல்வி அடைந்த கொல்கத்தா அணி 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் பணிந்தது. முந்தைய ஆட்டத்தில் 80 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது.

      கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் மிடில் வரிசையில் கேப்டன் ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டான் டி காக், சுனில் நரின் நல்ல தொடக்கம் கொடுக்காதது தலைவலியாக இருக்கிறது. பந்து வீச்சில் வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரின் மிரட்டக்கூடியவர்கள்.

      லக்னோ அணியும் 2 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அதட்டியது. 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் அடங்கியது. கடந்த ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் மும்பையை பதம் பார்த்தது.

      லக்னோ அணியில் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், மார்க்ரம், ஆயுஷ் பதோனியும், பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், திக்வேஷ் ரதியும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் (0, 15, 2, 2) பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்.

      வெற்றி, தோல்வியை மாறி, மாறி சந்தித்து வரும் இவ்விரு அணிகளும் வெற்றி உத்வேகத்தை தொடர தீவிரம் காட்டுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3-ல் லக்னோவும், 2-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

      • சென்னை அணியில் பேட்டிங் கவலைக்குரியதாக இருக்கிறது.
      • வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

      ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

      ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி முதலாவது ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும், 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவையும் தோற்கடித்தது. கடந்த ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 155 ரன்னில் அடங்கியது.

      உள்ளூரில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா சூப்பர் பார்மில் உள்ளனர். பிரப்சிம்ரன் சிங், மேக்ஸ்வெல், ஷசாங் சிங் நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், லோக்கி பெர்குசன், மார்கோ யான்சென் வலுசேர்க்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மூன்று ஆட்டங்களில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.

      நடப்பு சீசனில் சென்னை அணி மோசமான தொடக்கம் கண்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்ற சென்னை அதன் பிறகு நடந்த ஆட்டங்களில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும், 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடமும், 25 ரன் வித்தியாசத்தில் டெல்லியிடமும் அடுத்தடுத்து தோற்றது. கடந்த 3 ஆட்டங்களிலும் 180-க்கு மேலான ரன்னை விரட்டிப்பிடிக்க முடியாமல் முடங்கியது.

      சென்னை அணியில் பேட்டிங் கவலைக்குரியதாக இருக்கிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா தவிர மற்றவர்களின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. மிடில் வரிசையில் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபேவும் சொதப்புகிறார். விக்கெட் கீப்பரும், போட்டியை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவருமான 43 வயது டோனியின் பேட்டிங் இந்த முறை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. வயது அதிகரிப்பால் அவரது பேட்டிங் வேகம் குறைந்து விட்டது. இதனால் அவர் கடைசி கட்டத்தில் களத்தில் நின்றாலே வெற்றி என்ற தனது தனித்துவமான அடையாளத்தை இழந்து வருகிறார்.

      கடந்த இரு ஆட்டங்களில் அவர் களத்தில் இருந்தும் அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முடியாததால் டோனி ஓய்வு பெறுவதே மேலானது என்று ரசிகர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். டோனியின் ஆக்ரோஷமற்ற ஆட்டம் சென்னை அணியின் பேட்டிங் கலவையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

      சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு எழுச்சி பெற பேட்ஸ்மேன்கள் ஒருசேர கைகோர்த்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா பலம் சேர்க்கிறார்கள். ஆனால் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் போதிய தாக்கம் தென்படவில்லை.

      வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இருப்பினும் உள்ளூர் சூழலில் பஞ்சாப் அணியின் கையே ஓங்க அதிக வாய்ப்புள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.

      போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

      பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஷசாங் சிங், ஹர்பிரீத் பிரார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் சிங், லோக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல்.

      சென்னை: ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டோனி, ஆர்.அஸ்வின், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, பதிரானா, கலீல் அகமது,

      • கடைசியாக 2015 ஆம் ஆண்டில் தான் வான்கடே மைதானத்தில் மும்பையை ஆர்சிபி அணி வீழ்த்தியிருந்தது.
      • 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியது

      ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

      அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது.

      இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

      இதன்மூலம் ஆர்சிபி அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தியுள்ளது. கடைசியாக 2015 ஆம் ஆண்டில் தான் வான்கடே மைதானத்தில் மும்பை அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியிருந்தது.

      இதேபோல் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

      • டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
      • மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

      ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

      அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - பில் சால்ட் களமிறங்கினர். இதில் சால்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் மற்றும் படிக்கல் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

      தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் அரை சதம் அடித்து அசத்தினார். 37 ரன்னில் படிக்கல் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விராட் 67 ரன்னில் பாண்ட்யா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

       இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் எடுத்தது.

      இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் ரோகித் சர்மா 17 ரன்களும், ரியான் ரிக்கல்டன் 17 ரன்களும், வில் ஜாக்ஸ் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் 28 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த வர்மா, ஹர்திக் சிறப்பாக ஆடினர்.

      வர்மா 29 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 56 ரன்களும், ஹர்திக் 15 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 42 ரன்களும், மிட்செல் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

      இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. இதன்படி பெங்களூரு அணி ஐ.பி.எல். 2025 தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

      • முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 221 ரன்கள் குவித்தது.
      • விராட் கோலி 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

      ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

      அதன்படி முதலில் விளையாடிய ஆர்சிபி அணி, விராட் கோலி (67), படித்தார் (64) , ஜித்தேஷ் சர்மா (40) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.

      முன்னதாக இந்த போட்டியில் தனது 2-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது படித்தார் மற்றும் விராட் கோலி களத்தில் இருந்தனர். அந்த ஓவரில் படித்தார் தடுத்து ஆடுவார். அப்போது பும்ரா அந்த பந்தை எடுத்து மறுமுனையில் இருந்த விராட் கோலி பக்கம் அடிக்க முயற்சிப்பார். சுதாரித்து கொண்ட விராட் கோலி கீரிஸ் உள்ளே சென்று விடுவார்.

      சிரித்தப்படி நடந்து வந்த பும்ராவிடம் விராட் கோலி என்னை அவுட் செய்ய பார்க்கிறாயா என்பது போல சிரித்தபடி பேசி செல்வார். இது தொடர்பான வீடியோ கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

      • விராட் கோலி, படித்தார் அரை சதம் விளாசினர்.
      • மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

      ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

      அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - பில் சால்ட் களமிறங்கினர். இதில் சால்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் மற்றும் படிக்கல் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

      தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் அரை சதம் அடித்து அசத்தினார். 37 ரன்னில் படிக்கல் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விராட் 67 ரன்னில் பாண்ட்யா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

      இதனையடுத்து கேப்டன் படித்தார் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். 25 பந்தில் படித்தார் அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜித்தேஷ் 40 ரன்களுடன் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

      இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

      • விராட் கோலி, லிவிங்ஸ்டனை ஒரே ஓவரில் வீழ்த்தினார்.
      • 4 ஓவர்கள் வீசி 45 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

      ஐபிஎல் 2025 சீசனின் 20ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

      இந்த போட்டியில் 15ஆவது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். 3-ஆவது பந்தில் லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த இரண்டு விக்கெட்டுகள் மூலம் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

      இன்றைய போடடியில் 4 ஓவர்கள் வீசி 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

      • கிறிஸ் கெய்ல் 381 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்களை கடந்தார்.
      • விராட் கோலி 386 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

      ஐபிஎல் 2025 சீசனின் 20ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

      இந்த போட்டியின் 3-ஆவது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டியபோது 18 ரன்னைத் தொட்டார். இதன்மூலம் ஒட்டுமொத்த டி20 போட்டியிலும் 13 ஆயிரம் ரன்களை கடந்தார்.

      இதன்மூலம் டி20 போட்டியில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரரும், ஒட்டுமொத்தமாக 5ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

      கிறிஸ் கெய்ல் (381 இன்னிங்ஸ்), அலேக்ஸ் ஹேல்ஸ் (474), சோயிப் மாலிக் (487), பொல்லார்டு (594) ஆகியோர் 13 அயிரம் ரன்களை கடந்துள்ளனர். விராட் கோலி 386 இன்னிங்கில் கடந்துள்ளார்.

      • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
      • இதில் 19-ல் மும்பையும், 14-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன.

      18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

      பெங்களூரு அணி மும்பையை அதன் சொந்த ஊரில் வீழ்த்தி 10 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த மைதானத்தில் மும்பைக்கு எதிராக 11 ஆட்டங்களில் ஆடியிருக்கும் பெங்களூரு அணி அதில் 3-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. அதனால் அந்த நீண்ட கால சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வரிந்து கட்டி நிற்பார்கள்.

      மொத்தத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19-ல் மும்பையும், 14-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன.

      ×