என் மலர்
விளையாட்டு
- டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில் தினமும் 3 போட்டிகள் நடைபெற உள்ளன.
- இதேபோல், சூப்பர் 8 சுற்றில் தினமும் 2 போட்டிகள் நடக்கவுள்ளன.
மும்பை:
10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது. இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, இலங்கையில் கொழும்பு, பல்லேகலே ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடக்கின்றன.
வரும் 20-ம் தேதி வரை லீக் சுற்று போட்டிகள் நடக்கின்றன. சூப்பர் 8 சுற்று பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 4-ம்தேதி முதல் அரையிறுதி, 5-ம் தேதி 2வது அரையிறுதி போட்டி நடக்கிறது.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் முதல் அரையிறுதி கொழும்பில் நடக்கும். இல்லையென்றால் இந்தியாவில் நடத்தப்படும். 2வது அரையிறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் நடக்கும். இல்லையெனில் அகமதாபாத்தில் மார்ச் 8-ம் தேதி நடத்தப்படும்.
லீக் சுற்றில் தினமும் 3 போட்டிகளும், சூப்பர் 8 சுற்றில் தினமும் 2 போட்டிகளும் நடக்கிறது.
முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. கொழும்பில் காலை 11 மணிக்கு முதல் போட்டியில் ஏ பிரிவில் பாகிஸ்தான்-நெதர்லாந்தும், மாலை 3 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் வெஸ்ட்இண்டீஸ்-ஸ்காட்லாந்தும், இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகளும் மோதுகின்றன.
- டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 411 ரன்கள் குவித்தது.
- சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்தார்.
புதுடெல்லி:
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். அவர் 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
இந்நிலையில், U19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், U 19 உலகக் கோப்பையை மீண்டும் தாயகத்திற்கு கொண்டு வந்துவிட்டனர். இந்தத் தொடர் முழுவதும் நமது வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்த வெற்றி எதிர்காலத்தில் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும். தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடி, திறமையை வெளிப்படுத்திய வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
- ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
- கூகுள் தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது.
புதுடெல்லி:
10-வது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது.
இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, இலங்கையில் கொழும்பு, பல்லேகலே ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடக்கின்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- U19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்டது.
- சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஹராரே:
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். அவர் 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் மாத்ரே 53 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென் டாக்கின்ஸ் 66 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், U19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்டது.
சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்னாள், இந்நாள் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.
- இந்தியா மற்றும் இலங்கையில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.
மும்பை:
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளன.
இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்காக தயார் நிலையில் உள்ளது. முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி அதை 4-1 என கைப்பற்றியது. உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 30 ரன்னில் வீழ்த்தியது.
இதற்கிடையே, இந்திய அணியில்இடம் பிடித்திருந்த ஹர்ஷித் ராணா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காயம் காரணமாக விலகிய ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக முகமது சிராஜ் அணியின் இடம்பிடித்துள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
- இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
ஆம்ஸ்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், தரவரிசையில் நம்பர் 3 இடத்தில் உள்ளவரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
- இந்தியா முதலில் பேட்டிங் செய்த இந்தியா 411 ரன்கள் குவித்தது.
- இங்கிலாந்து அணியால் 311 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய இந்தியா 411 ரன்கள் குவித்தது. பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. அந்த அணியால் 311 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விராட் கோலி இளையோர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு வாழ்த்துகள். இளையோர் கிரிக்கெட்டிலும் அதற்கு அப்பாற்பட்ட தளங்களிலும் நமது ஆதிக்கம் தொடர்கிறது. முழு அணிக்கும் மற்றும் ஸ்டாஃப்களுக்கும் எனது பாராட்டுகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- 40.2 ஓவர்கள் மட்டுமே இங்கிலாந்தால் தாக்குப்பிடித்தது.
- பால்கனர் சதம் அடித்தாலும் 311 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்றது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தால் இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது. சூர்யவன்ஷி 80 பந்தில் 15 பவுண்டரி, 15 சிக்சருடன் இந்த ரன்களை குவித்தார். ஆயுஷ் மாத்ரே 51 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வேதாந்த் திரிவேதி 36 பந்தில் 32 ரன்களும், விஹான் மல்கோத்ரா 36 பந்தில் 30 ரன்களும், அபிக்யான் கந்து 31 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர். கனிஷ்க் சவுகான் ஆட்டமிழக்கால் 20 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் பென் டாவ்கின்ஸ் 56 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். பென் மேய்ஸ் 28 பந்தில் 45 ரன்கள் விளாசினார். அதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்தாலும் கலெப் பால்கனர் அபாரமாக விளையாடி 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து 40.2 ஓவரிலேயே 311 ரன்கள் எடுத்து அல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அம்ப்ரிஸ் 3 விக்கெட்டும் தேவேந்திரன், கனிஷ்க் சவுகான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6-வது முறையாக இளையோர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- ஜார்க்கண்ட் 235 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
- ஜம்மு-காஷ்மீர் 194 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. முதல் காலிறுதி ஆட்டத்தில் ஜார்க்கண்ட்- உத்தரகாண்ட் அணிகள் மோதின.
ஜார்க்கண்ட்- உத்தரகாண்ட்
டாஸ் வென்ற உத்தரகாண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜார்க்கண்ட் அணி முதலில் களம் இறங்கியது. முதல் நான்கு வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் விராட் சிங் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆதித்யா சிங் 83 ரன்கள் எடுக்க ஜார்க்கண்ட் முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல்அவுட் ஆனது. உத்தராண்ட் பந்து வீச்சாளர் ஜென்மெஜாய் ஜோஷி 4 விக்கெட் வீழ்த்தினார். ஆதித்யா ராவத், மயங்க் மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் உத்தரகாண்ட் முதல் இன்னிங்சை தொடங்கியது, இன்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர்- மத்திய பிரதேசம்
2-வது காலிறுதியில் ஜம்மு-காஷ்மீர்- மத்திய பிரதேசம் அணிகள் விளையாடுகின்றன. மத்திய பிரதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 194 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் கஜூரியா 60 ரன்கள் சேர்த்தார். 10-து வீரராக களம் இறங்கிய யுத்வீர் சிங் 41 ரன்கள் சேர்த்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மத்திய பிரதேச அணி பந்து வீச்சாளர் குல்தீப் சென் 5 விக்கெட்டும், குமார் கார்த்திகேயா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சை தோடங்கியது. இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.
ஆந்திரா- பெங்கால்
3-வது காலிறுதியில் ஆந்திரா- பெங்கால் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பெங்கால் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆந்திரா முதலில் களம் இறங்கியது. ஆந்திரா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் ரிக்கி புய் 83 ரன்களும், ரஷீத் 46 ரன்களும், ஸ்ரீகர் பாரத் 47 ரன்களும் சேர்த்தனர்.
மும்பை கர்நாடகா
4-வது காலிறுதியில் மும்பை 120 ரன்னில் சுருண்ட நிலையில், கர்நாடகா முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 54 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
- சூர்யவன்ஷி ஸ்கோரில் தலா 15 பவுண்டரி, சிக்சர்கள் அடங்கும்.
- அவருக்கு அடுத்தப்படியாக ஆயுஷ் மாத்ரே 53 ரன்கள் சேர்த்தார்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஆரோன் ஜார்ஜ், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். ஜார்ஜ் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.
அடுத்து வைபவ் சூர்யவன்ஷி உடன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சூர்யவன்ஷி 32 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஆயுஷ் மாத்ரே 50 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சூர்யவன்ஷியுடன் வேதாந்த் திரிவேதி ஜோடி சேர்ந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 55 பந்தில் தலா 8 பவுண்டரி மற்றும் சிக்சர்களுடன் சதம் அடித்தார். சதம் அடித்த அவர் தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்த்தினார். 71 பந்தில் 150 ரன்னைக் கடந்தார். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 15 பவுண்டரிகள், 15 சிக்சர்கள் அடங்கும். சூர்வன்ஷி ஆட்டமிழக்கும்போது இந்தியா 25.2 ஓவரில் 251 ரன்கள் குவித்திருந்தது.
அதன்பின் வந்த வேதாந்த் திரிவேதி 36 பந்தில் 32 ரன்களும், விஹான் மல்கோத்ரா 36 பந்தில் 30 ரன்களும், அபிக்யான் கந்து 31 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர்.
கனிஷ்க் சவுகான் ஆட்டமிழக்கால் 20 பந்தில் 37 ரன்கள் சேர்க்க இந்தியா 50 ஓவரில 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது.
பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
- வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகிய இரண்டு தலைசிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர்.
- இருவரும் ஆடும் லெவனில் இடம் பெறுவார்களா? என்பது சந்தேகம்தான்.
டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நாளை முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையை வெல்ல இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாக இந்திய அணி தங்களை தயார்படுத்தியது.
பேட்டிங், வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்குகிறது. நாளை டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கும் நிலையில், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-
சிறந்த பந்து வீச்சாளர்களை பெற்றிருப்பது கூடுதல் நன்மை. அதேவேளையில், எந்தவொரு எதிரணியை எதிர்த்து நாம் விளையாட இருக்கிறோம். அதற்கான காம்பினேசனை பார்க்க வேண்டும்.
நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அல்லது இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களுடன் விளையாடுவது அவசியம் என்றால், அவர்கள் இருவரும் அணியில் விளையாடுவார்கள்.
ஆனால், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் போன்ற உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இருவரைக் கொண்டிருப்பது எப்போதுமே நல்லது. ஆனால் யாரை தேர்வு செய்வது என்பதில் தலைவலி ஏற்படும்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதில அக்சர் படேல் ஆல்-ரவுண்டர் ஆவார். இதனால் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோரில் ஒருவர்தான் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
- நாங்கள் விளையாட்டு மைதானத்திற்கு வெளியில் இருந்து வரும் கருத்துகளை புறந்தள்ளி விடுவோம்.
- இது தொடர்பாக நாங்கள் உண்மையிலேயே பேசுவது இல்லை.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு ஏதிரான குரூப் லீக் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அணி தெரிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்கும் நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, இந்திய போட்டியை புறக்கணித்தது தொடர்பாக பாகிஸ்தான் அணியை நோக்கி விமர்சனம் வருவதை எப்படி சமாளிப்பீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு சல்மான ஆகா அளித்த பதில் பின் வருமாறு:-
நாங்கள் விளையாட்டு மைதானத்திற்கு வெளியில் இருந்து வரும் கருத்துகளை புறந்தள்ளி விடுவோம். இது தொடர்பாக நாங்கள் உண்மையிலேயே பேசுவது இல்லை. எங்கள் அணிக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை உண்மையிலேயே நாங்கள் பார்க்க விரும்பவில்லை. எங்களால செய்யக்கூடிய சிறந்த விசயம் இதுதான் என நினைக்கிறேன்.
ஆசிய கோப்பை தொடரின்போது இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்ததால் நாங்கள் உண்மையிலேயே வருத்தம் அல்லது அதுபோன்ற ஒன்றை உணர்ந்தது இல்லை. எனினும், விளையாட்டிற்கு இது நல்லது அல்ல. இதுபோன்ற விசயங்கள் நடைபெறக்கூடாது.
சிறுவயதில் வளர்ந்து வரும்போது, ஆட்டத்தை மேம்படுத்துவதற்குத் தேவையானதை மக்கள் செய்வதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன். ஓரளவிற்கு, நாங்கள் முன்மாதிரிகளாக இருக்கிறோம். நீங்கள் அப்படிச் செய்தால், குழந்தைகளும் இதைக் கற்றுக்கொள்வார்கள், நாளை அவர்களும் அதே காரியங்களைச் செய்வார்கள்.
ஆகவே, இதுபோன்ற விஷயங்கள் நடக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், நீங்கள் முன்மாதிரிகளைப் பற்றி யோசித்தால், முன்மாதிரிகள் இதுபோன்ற செயல்களைச் செய்வதில்லை என்று நான் கருதுகிறேன்.
இவ்வாறு சல்மான் ஆகா தெரிவித்தார்.






