என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நாங்கள் எங்களுக்கு தந்த பந்தை வைத்து விளையாடினோம்.
    • அதை எங்களால் மாற்ற முடியாது. அதற்காக சண்டையிடவும் முடியாது.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

    3ஆவது போட்டி நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த மைதானத்தில் பந்து வீசும்போது இந்திய அணி வீரர்கள் பந்து அடிக்கடி தனது வடிவத்தை (Shape) இழந்து விடுகிறது, பந்தை மாற்றித் தரும்படி நடுவரிடம் அடிக்கடி முறையிட்டனர்.

    ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளின்போதும் இதே பிரச்சனை இருந்தது. ரிஷப் பண்ட் கோபமாக நடுவர் முன்னே பந்தை கோபத்தில் வீசினார்.

    இந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ராவிடம் செய்தியாளர்கள் Dukes பந்து அடிக்கடி மாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பும்ரா பதில் அளித்ததாவது:-

    பந்தின் வடிவம் மாறியது. உண்மையிலேயே என்னால் பந்தை கட்டுக்கோப்புடன் வீசமுடியவில்லை. நான் பணத்தை இழக்க விரும்பவில்லை. ஏனென்றால், நான் கடினமாக பயிற்சி மேற்கொண்டு, அதிக ஓவர்கள் விளையாடினே். ஆகவே, எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கி, போட்டிக்கான கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவதை விரும்பவில்லை.

    இருந்த போதிலும், நாங்கள் எங்களுக்கு தந்த பந்தை வைத்து விளையாடினோம். அதை எங்களால் மாற்ற முடியாது. அதற்காக சண்டையிடவும் முடியாது. சில நேரங்களில் அது நம் வழியில் செல்லும். சில நேரங்களில் மோசமான பந்தை பெறுவோம். அப்படித்தான் நடக்கும்.

    இவ்வாறு பும்ரா தெரிவித்துள்ளார்.

    • இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை நடக்கிறது
    • டி20 உலககோப்பைக்கு கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது.

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

    மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். அதன்படி கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது. தற்போது இத்தாலி, நெதர்லாந்து அணிகள் 20 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இத்தாலி முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. இன்னும் 5 நாடுகள் தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இறுதிப் போட்டியில் சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்தின் செம் வெர்பீக்-செக் குடியரசின் கேடரினா சினியாகோவா ஜோடி, பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி-பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி ஜோடியுடன் மோதிய து.

    இதில் வெர்பீக்-சினியாகோவா ஜோடி 7-6 (7-3), 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த போட்டி 2 மணி நேரம் 2 நிமிடம் நீடித்தது.

    கிராண்ட்ஸ்லாம் கலப்பு இரட்டையரில் சினியாகோவா கைப்பற்றிய முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கபில்தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது.
    • தற்போது கபில்தேவின் வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 3-வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவரில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்தார். ஜேமி ஸ்மித், கார்ஸ் அரை சதம் கடந்தனர்.

    இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 5 விக்கெட்டையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா இதுவரை வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 13 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

    முன்னதாக கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது கபில் தேவின் அந்த வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

    ஜஸ்பிரித் பும்ரா - 13 முறை 5 விக்கெட், கபில் தேவ் - 12 முறை விக்கெட், அனில் கும்ப்ளே - 10 முறை 5 விக்கெட் எடுத்துள்ளனர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 6 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னர், அல்காரசை சந்திக்கிறார்.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நிதானமாக ஆடியது.

    ஒல்லி போப் 44 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜாக் கிராலே 18 ரன்னில் வெளியேறினார். ஹாரி புரூக் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.

    முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பென் ஸ்டோக்ஸ் 44 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். கிறிஸ் வோக்ஸ் டக் அவுட்டானார். 271 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது.

    ஜேமி ஸ்மித்துடன் பிரைடன் கார்ஸ் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். 8வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேமி ஸ்மித் அரை சதம் கடந்தௌ 51 ரன்களில் அவுட்டானார். கார்ஸ் 56 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 13 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து கே.எல்.ராகுலுடன் கருண் நாயர் இணைந்தார். 2வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் கருண் நாயர் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் சுப்மன் கில் 16 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 53 ரன்னும், ரிஷப் பண்ட் 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் பிரிட்ஸ் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில், உலகின் நம்பர் 5 வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-4 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2வது செட்டை 7-5 என பிரிட்ஸ் கைப்பற்றினார்.

    இதில் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-3, 7-6 (8-6) என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    • ராகுல் டிராவிட் 210 கேட்ச்கள் பிடித்திருந்தார். இதுதான் சாதனையாக இருந்தது.
    • ஜெயவர்த்தனே 3ஆவது இடத்தில் உள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல். ராகுல் உடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. கே.எல். ராகுல் நிதானமாக விளையாட, கருண் நாயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    21ஆவது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்து கருண் நாயரின் பேட்டில் உரசி கீப்பருக்கும், முதல் ஸ்லிப்பிற்கு இடையில் சென்றது. இதை முதல் ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட் இடது கையால் அபாரமாக கேட்ச் பிடித்தார்.

    இந்த கேட்ச் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 211ஆவது கேட்ச் ஆகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த பீல்டர் (கீப்பர் அல்லாத வீரர்) என்ற சாதனையை படைத்துள்ளார்.

    ராகுல் டிராவிட் 210 கேட்ச்கள் பிடித்துள்ளார். ஜெயவர்த்தனே 205 கேட்ச்களும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கல்லீஸ் தலா 200 கேட்ச்களும், பாண்டிங் 196 கேட்ச்களும் பிடித்துள்ளனர்.

    • ஜோ ரூட் சதம் அடிக்க ஸ்மித் மற்றும் கார்ஸ் அரைசதம் அடித்தனர்.
    • பும்ரா 5 விக்கெட் வீ்ழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சரும், இந்திய அணியில் பும்ராவும் இடம் பிடித்தனர்.

    இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு இங்கிலாந்து வீரர்கள் அதிவிரைவாக ரன்கள் குவிக்க திணறினர். ஜோ ரூட் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களும், ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடித்தார். இது அவரின் 37ஆவது டெஸ்ட் சதமாகும். மறுமுனையில் விளையாடிய ஸ்டோக்ஸ் 44 பந்தில் பும்ரா பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து ஸ்மித் களம் இறங்கினார். இவர் 5 ரன்கள் எடுத்திருக்கும்போது முகமது சிராஜ் பந்தில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்தார். ஆனால் கே.எல். ராகுல் எளிதான கேட்சை பிடிக்க தவறினார். இந்த கேட்ச் மிஸ் இந்தியாவுக்கு பின்னர் தலைவலியாக அமைந்தது.

    மறுமுனையில் ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். பும்ரா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இதனால் இங்கிலாந்து 271 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் கார்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ஸ்மித் உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரில் அரைசதம் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் இங்கிலாந்தின் ஸ்கோர் 350 ரன்னைக் கடந்தது.

    2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஸ்மித் 51 ரன்களுடனும், கார்ஸ் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் 51 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்மித்-கார்ஸ் ஜோடி 84 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த ஆர்ச்சரை பும்ரா வீழ்த்தினார். இதன்மூலம் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    கடைசி விக்கெட்டுக்கு பஷீர் களம் இறங்கினார். கார்ஸ் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதனால் அரைசதம் கடந்தார். இறுதியாக 56 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    இந்திய அணியில் சிராஜ், நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினார்.

    • நேற்று ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
    • இன்றைய 2ஆவது நாளில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. பும்ரா 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

    இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பும்ரா அபாரமாக பந்து வீசினார். பென் ஸ்டோக்ஸை 44 ரன்னிலும், ஜோ ரூட்டை 44 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸை டக்அவுட்டிலும் வெளியேற்றினார்.

    ஜாஃப்ரா ஆர்ச்சரை (4) க்ளீன் போல்டானார். இதன்மூலம் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    • ஜோ ரூட் தனது 37ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
    • ஸ்மித் 5 ரன்னில் இருக்கும்போது கே.எல். ராகுல் கேட்சை தவறவிட்டார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சரும், இந்திய அணியில் பும்ராவுடம் இடம் பிடித்தனர்.

    இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு இங்கிலாந்து வீரர்கள் அதிவிரைவாக ரன்கள் குவிக்க திணறினர். ஜோ ரூட் மட்டும நிலைத்து நின்று விளையாடினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களும், ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடித்தார். இது அவரின் 37ஆவது டெஸ்ட் சதமாகும். மறுமுனையில் விளையாடிய ஸ்டோக்ஸ் 44 பந்தில் பும்ரா பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து ஸ்மித் களம் இறங்கினார். இவர் 5 ரன்கள் எடுத்திருக்கும் போது முகமது சிராஜ் பந்தில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்தார். ஆனால் கே.எல். ராகுல் எளிதான கேட்சை பிடிக்க தவறினார். இந்த கேட்ச் மிஸ் இந்தியாவுக்கு பின்னர் தலைவலியாக அமைந்தது.

    மறுமுனையில் ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். பும்ரா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இதனால் இங்கிலாந்து 271 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் கார்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ஸ்மித் உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரில் அரைசதம் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் இங்கிலாந்தின் ஸ்கோர் 350 ரன்னைக் கடந்தது.

    2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவித்துள்ளது. இந்த ஜோடி 17.4 ஓவரில் 82 ரன்கள் சேர்த்துள்ளது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியதும் இந்த ஜோடியை பிரித்தால் மட்டுமே இந்தியாவுக்கு சாதகமான நிலை உருவாகும்.

    • நிதிஷ் குமார் ரெட்டி லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசியதை பார்த்து ஆச்சர்யப் பட்டேன்.
    • சரியான பகுதியில் தொடர்ந்து பந்தை பிட்ச் செய்தார்.

    ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டியை, இந்தியா தொடர்ந்து அணியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:-

    நிதிஷ் குமார் ரெட்டி லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசியதை பார்த்து ஆச்சர்யப் பட்டேன். சரியான பகுதியில் தொடர்ந்து பந்தை பிட்ச் செய்தார். லெக் சைடு ஷார்ட் பால் மூலம் விக்கெட் கிடைத்தது கிஃப்ட். மாற்றாக அவர் ஒழுக்கமாக பந்து வீசினார்.

    ஆஸ்திரேலியாவில் விக்கெட் அதிக அளவில் வீழ்த்தவில்லை என்றாலும், நன்றாக பேட்டிங் செய்தார். சதமும் அடித்தார். இதுபோன்ற வீரர் பார்ட்னர்ஷிப்பை உடைக்க அணிக்கு தேவை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்து, அதே நேரத்தில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த இதுபோன்ற வீரர் அவசியம்.

    ஒரே ஸ்பெல்லில் ஏறக்குறைய 14 ஓவர்கள் வீசினார். இது அவருடைய உடற்தகுதி மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்துகிறது. சிறந்த பீல்டர், இளமையானவர். சதம் அடிக்கக் கூடியவர். அடிக்கடி நீக்குவது மற்றும் மாற்றுவது ஆகியவற்றை விட்டுவிட்டு, அவரை தொடர்ந்து அணியில் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

    லார்ட்ஸ் போட்டியில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை நிதிஷ் குமார் அவுட்டாக்கி, அணிக்கு உத்வேகம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×