என் மலர்
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் சினியாகோவா ஜோடி சாம்பியன்
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- இறுதிப் போட்டியில் சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்தின் செம் வெர்பீக்-செக் குடியரசின் கேடரினா சினியாகோவா ஜோடி, பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி-பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி ஜோடியுடன் மோதிய து.
இதில் வெர்பீக்-சினியாகோவா ஜோடி 7-6 (7-3), 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த போட்டி 2 மணி நேரம் 2 நிமிடம் நீடித்தது.
கிராண்ட்ஸ்லாம் கலப்பு இரட்டையரில் சினியாகோவா கைப்பற்றிய முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






