என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wimbeldon"

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இறுதிப் போட்டியில் சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்தின் செம் வெர்பீக்-செக் குடியரசின் கேடரினா சினியாகோவா ஜோடி, பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி-பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி ஜோடியுடன் மோதிய து.

    இதில் வெர்பீக்-சினியாகோவா ஜோடி 7-6 (7-3), 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த போட்டி 2 மணி நேரம் 2 நிமிடம் நீடித்தது.

    கிராண்ட்ஸ்லாம் கலப்பு இரட்டையரில் சினியாகோவா கைப்பற்றிய முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காஸ்பர் ரூட் ஆஸ்திரேலியாவின் அலேக்ஸ் போல்ட்-ஐ 7(7)-6(2), 6-4, 6-4 வீழ்த்தினார்.
    • பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் செர்பியாவின் துசன் லாஜோவிக்கை 6-3, 6-4, 7-5 என வீழ்த்தினார்.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் ஆஸ்திரேலியாவின் அலேக்ஸ் போல்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் ரூட் 7(7)-6(2), 6-4, 6-4 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    10-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் செர்பியாவின் துசன் லாஜோவிக்கை எதிர்கொண்டார். இதில் டிமிட்ரோவ் 6-3, 6-4, 7-5 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    5-ம் நிலை வீரரான மெட்வெதேவ் அமெரிக்காவின் கோவாசெவிக்கை எதிர்கொண்டார். இதில் மெட்வெதேவ் 6-3, 6-4, 6-2 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ×