என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது.
    • ஷமர் ஜோசப் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நேற்று தொடங்கியது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.

    ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன் எடுத்துள்ளது.

    3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் ஏற்கனேவே ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் இரு அணிகளும் முதல் இன்னிங்சில் 387 ரன் குவித்தது. டெஸ்ட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் ஸ்கோர் சமநிலையில் இருப்பது இது 9-வது முறையாகும். இந்தியாவுக்கு 3-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 1958-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுடனும் (222 ரன்), 1986-ம் ஆண்டு இங்கிலாந்து டனும் (390 ரன்) முதல் இன்னிங்சிலும் ஸ்கோர் சமநிலையாக இருந்தது.

    இந்த தொடரில் இந்திய அணி தொடர்ந்து 5-வது இன்னிங்சில் 350 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது. முதல் டெஸ்டில் 471 மற்றும் 364 ரன்னும் 2-வது டெஸ்டில் 587 மற்றும் 427 ரன்னும் குவித்தது. லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 387 ரன் எடுத்தது. இங்கிலாந்தில் இந்தியாவுக்கு 2-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு தொடரில் 5 இன்னிங்சில் தொடர்ந்து 350 ரன்னுக்கு மேல் எடுத்து இருந்தது.

    • நேற்றைய நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிராலி தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்தார்.
    • பும்ரா பந்துவீச்சில் தனது கையில் அடிபட்டதாக கூறி கிராலி பிசியோவை கூப்பிட்டார்.

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது.

    இதனிடையே நேற்றைய நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிராலி தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய கேப்டன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பும்ரா பந்துவீச்சில் தனது கையில் அடிபட்டதாக கூறி கிராலி பிசியோவை கூப்பிட்டார். போட்டியின் கடைசி நிமிடங்களில் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்து 3 ஆம் நாளில் பேட்டிங் செய்யாமல் தவிர்க்க கிராலி வேண்டுமென்றே பிசியோவை கூப்பிடுவதாக சுப்மன் கில் கோபமடைந்தார். ரிட்டையர்ட் அவுட் முறையில் கிராலி வெளியேறுவதாக கில் சைகை செய்து கிண்டல் செய்தார். இதனால் கிராலி - கில் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட பென் டக்கெட் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. 

    • ரிஷப் பண்ட் எடுத்த 74 ரன்னில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.
    • விவியன் ரிச்சர்ட்ஸ் 34 சிக்சர்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

    முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

    ஜெய்ஸ்வால் (13), கருண் நாயர் (40), சுப்மன் கில் (16) அடுத்தடுத்து ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    மூன்றாவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ரன் அவுட்டாகி வெளியேறினார். கே.எல். ராகுல்-ரிஷப் பண்ட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் எடுத்த 74 ரன்னில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

    இந்நிலையில், ரிஷப் பண்ட் அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அவர் அடித்துள்ளார்.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிராக விவியன் ரிச்சர்ட்ஸ் மொத்தம் 34 சிக்சர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு அணிகள் மோதிய ஐந்தாவது டி 20 போட்டி நடைபெற்றது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    லண்டன்:

    இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகளில் இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் ஐந்தாவது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 75 ரன்னில் அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் சார்லி டீன் 3 விக்கெட்டும், சோபி எக்கல்ஸ்டோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.

    முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்த நிலையில், சோபியா டங்க்ளே 46 ரன்னில் அவுட்டானார். டேனில் வியாட் ஹாட்ஜ் அரை சதம் கடந்து 56 ரன்னில் வெளியேறினார். பவுசியர் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். டாமி பியூமாண்ட் 30 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ஆனாலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றி அசத்தியது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் பிரிட்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பிரிட்டனின் ஜூலியன் காஷ்-லாய்ட் கிளாஸ்பூல், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா-நெதர்லாந்தின் டேவிட் பேய் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய பிரிட்டன் ஜோடி 6-2, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ராகுல் சதமடிக்க, ரிஷப் பண்ட், ஜடேஜா அரை சதம் கடந்தனர்.

    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். கார்ஸ் 56 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் தலா 44 ரன்களில் வெளியேறினர்.

    இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருண் நாயர் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னும், ரிஷப் பண்ட் 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பொறுப்புடன் ஆடிய ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார். கே எல் ராகுல் சதம் கடந்து அசத்தினார்.

    4வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஷப் பண்ட் 74 ரன்னில் அவுட்டானார். சதம் கடந்த நிலையில் கே.எல்.ராகுல் அவுட்டானார்.

    ரவீந்திர ஜடேஜாவுடன் நிதிஷ்குமார் ஜோடி சேர்ந்தார். ஜடேஜா அரை சதம் கடந்து 72 ரன்னில் வெளியேறினார். நிதிஷ்குமார் 30 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இறுதிச்சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அனிசிமோவா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இது இவரது 6வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேவாக் 90 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
    • ரோகித் சர்மா 88 சிக்சர்கள் அடித்துள்ளார். அதை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    ஜெய்ஸ்வால் (13), கருண் நாயர் (40), சுப்மன் கில் (16) அடுத்தடுத்து ஆட்டமிழக்க கே.எல். ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இன்றைய 3ஆவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல்- ரிஷப் பண்ட் ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது.

    ரிஷப் பண்ட் ஸ்கோரி 8 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும். 2 சிக்சர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார். சேவாக் 90 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். எம்.எஸ். டோனி 78 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    இன்னும் 3 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய பேட்டர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைப்பார்.

    • 176 பந்தில் சதம் அடித்தார்.
    • சதம் அடித்த அடுத்த பந்தில் அவுட் ஆனார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 3ஆவது நாளான இன்றைய ஆட்டத்தில் கே.எல். ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மதிய உணவு இடைவேளையின்போது 98 ரன்கள் எடுத்திருந்தார்.

    மதிய உணவு இடைவேளை முடிவடைந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியதும், ஆர்ச்சர் வீசிய 67ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து சதம் அடித்தார். 176 பந்தில் 13 பவுண்டரியுடன் சதம் விளாசினர். அடுத்த ஓவரை பஷீர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் 100 ரன்னோடு வெளியேறினார்.

    இவர் ஏற்கனவே லார்ட்ஸ் மைதானத்தில் சதம் விளாசியுள்ளார். இந்த சதத்துடன் புகழ்வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

    • ரிஷப் பண்ட் 74 ரன்கள் விளாசினார்.
    • கே.எல். ராகுல் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதலில் மந்தமான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். நேரம் செல்ல செல்ல ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். ரிஷப் பண்ட் 86 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்த ஜோடியை இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. பென் ஸ்டோக்ஸ் பல்வேறு யுக்திகளை மேற்கொண்டும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. கே.எல். ராகுல் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.

    உணவு இடைவேளை வரை விக்கெட்டை இருவரும் காப்பாற்றிக் கொள்வார்கள் என நினைத்த நிலையில் பஷீர் விசிய ஓவரில் கஷ்டப்பட்டு ஒரு ரன் எடுக்க முயற்சி செய்ய ரிஷப் பண்ட் ரன்அவுட் ஆனார். அவர் 112 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 74 ரன்கள் சேர்த்தார். அத்துடன் 3ஆவது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. கே.எல். ராகுல் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கே.எல். ராகுல் சதம் அடித்து நீண்ட நேரம் விளையாடி ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஒத்துழைப்பு கொடுத்தால் முதல் இன்னிங்சில் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    • லீட்ஸ், எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இரு அணிகளும் அதிக ரன்கள் குவித்தன.
    • ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டதாக விமர்சனம்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முறையே ஹெட்டிங்லே (லீட்ஸ்), பர்மிங்காம் (எட்ஜ்பாஸ்டன்) ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த இரண்டு மைதானங்களில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பொதுவாக இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், ஆசிய கண்டத்தில் உள்ள ஆடுகளம் போன்று இருப்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான ஆடுகளங்கள் முற்றிலும் நெடுஞ்சாலை போன்று இருந்தது. இதில் சுப்மன் கில்லிற்கு பந்து வீசமாட்டேன் என ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:-

    இங்கிலாந்தில் நான் சுப்மன் கில்லுக்கு பந்து வீச மாட்டேன். இது உறுதி. இந்தியா- இங்கிலாந்து போட்டியை அதிக அளவில் பார்க்கவில்லை. ஸ்கோர் போர்டு பார்த்தேன். லபுசேன், அலேக்ஸ் கேரி, ஸ்மித் போன்றோர் காலையில் எழுந்து (வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடியது), காஃபி மெஷின் அருகே அமர்ந்து போட்டியை பார்த்தனர். நான் ஸ்கோர் மட்டும் பார்த்தேன். இங்கிலாந்தில் இதுபோன்ற ஆடுகளத்தில் யார் பந்து வீச விரும்புவார்கள்?

    இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் தெரிவித்தார்.

    சுப்மன் கில் இரண்டு போட்டிகளிலும் 585 ரன்கள் குவித்தார். இதில் ஒரு இரட்டை சதம், இரண்டு சதங்கள் அடங்கும்.

    ×