என் மலர்
விளையாட்டு
உடற்தகுதியில் அக்கறை காட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மல்யுத்தத்திற்கு தயாராகி வருகிறார்கள் என முன்னாள் வீரர் அமிர் சோஹைல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 எனக் கைப்பற்றியது.
ஆனால் டி20 கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் அணியான பாகிஸ்தானை 3-0 என துவம்சம் செய்தது இலங்கை அணி. சமீப காலமாக உடற்தகுதிக்கு முக்கியத்தும் கொடுக்கும் பாகிஸ்தான் அணியை முன்னாள் தொடக்க வீரர் அமிர் சோஹைல் கடுமையான சாடியுள்ளார்.
இதுகுறித்து அமிர் சோஹைல் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போதைய நாட்களில் உடற்தகுதி மீதுதான் கவனம் செலுத்துகிறது. நாம் கிரிக்கெட்டிற்கு வீரர்களை தயார் படுத்துவகை காட்டிலும், ஒலிம்பிக் அல்லது WWE Wrestling போட்டிக்கு அதிக அளவில் தயாராக்குகிறோம் என்பதை இது காட்டுகிறது’’ என்றார்.
ஆனால் டி20 கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் அணியான பாகிஸ்தானை 3-0 என துவம்சம் செய்தது இலங்கை அணி. சமீப காலமாக உடற்தகுதிக்கு முக்கியத்தும் கொடுக்கும் பாகிஸ்தான் அணியை முன்னாள் தொடக்க வீரர் அமிர் சோஹைல் கடுமையான சாடியுள்ளார்.
இதுகுறித்து அமிர் சோஹைல் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போதைய நாட்களில் உடற்தகுதி மீதுதான் கவனம் செலுத்துகிறது. நாம் கிரிக்கெட்டிற்கு வீரர்களை தயார் படுத்துவகை காட்டிலும், ஒலிம்பிக் அல்லது WWE Wrestling போட்டிக்கு அதிக அளவில் தயாராக்குகிறோம் என்பதை இது காட்டுகிறது’’ என்றார்.
15 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்து சாதனைப் படைத்த கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா, சச்சின் மற்றும் டோனி போல் விளையாட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய பெண்கள் அணியில் இடம் பிடித்து விளையாடி வருபவர் ஷபாலி வர்மா. 15 வயதிலேயே சர்வதேச போட்டியில் அறிமுகமாகி, மிக குறைந்த வயதில் கிரிக்கெட் விளையாடிய 2-வது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20- போட்டியில் 33 பந்தில் 46 ரன்கள் விளாசி அசத்தினார். பேட்டிங்கில் சச்சின் தெண்டுல்கர் போன்றும், விக்கெட் கீப்பிங்கில் எம்எஸ் டோனி போன்றும் புகழ்பெற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷபாலி வர்மா கூறுகையில் ‘‘மிகவும் இளம் வயது வீராங்கனை என்ற சாதனை மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அது பற்றி அதிக அளவில் நினைத்துக் கொண்டு என்னுடைய தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கவில்லை. இது ஒரு தொடக்கம்தான்.
கிரிக்கெட்டின் அனைத்து வகை போட்டியிலும் விளையாட விரும்புகிறேன். டி20 கிரிக்கெட் போட்டி என்னுடைய பிடித்தமான ஆட்டம். தற்போது என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். சாதனைகள் மீது கவனம் செலுத்தவில்லை. நான் சச்சின் தெண்டுல்கர் போன்று பேட்டிங் செய்யவும், எம்எஸ் டோனி போன்று கீப்பிங் பணியை செய்யவும் விரும்புகிறேன்’’ என்றார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20- போட்டியில் 33 பந்தில் 46 ரன்கள் விளாசி அசத்தினார். பேட்டிங்கில் சச்சின் தெண்டுல்கர் போன்றும், விக்கெட் கீப்பிங்கில் எம்எஸ் டோனி போன்றும் புகழ்பெற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷபாலி வர்மா கூறுகையில் ‘‘மிகவும் இளம் வயது வீராங்கனை என்ற சாதனை மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அது பற்றி அதிக அளவில் நினைத்துக் கொண்டு என்னுடைய தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கவில்லை. இது ஒரு தொடக்கம்தான்.
கிரிக்கெட்டின் அனைத்து வகை போட்டியிலும் விளையாட விரும்புகிறேன். டி20 கிரிக்கெட் போட்டி என்னுடைய பிடித்தமான ஆட்டம். தற்போது என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். சாதனைகள் மீது கவனம் செலுத்தவில்லை. நான் சச்சின் தெண்டுல்கர் போன்று பேட்டிங் செய்யவும், எம்எஸ் டோனி போன்று கீப்பிங் பணியை செய்யவும் விரும்புகிறேன்’’ என்றார்.
ஓட்டப் பந்தய வீராங்கனை டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனைப் படைத்துள்ளார்.
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் டூட்டி சந்த் 11.22 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். இதற்கு முன் டூட்டி சந்த் 11.26 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அவரது தேசிய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
இதுகுறித்து டூட்டி சந்த் கூறுகையில் ‘‘தோகாவில் படைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக ஓடவில்லை. ஏனெனில் அங்கு வெப்பம் அதிகமாக இருந்தது. எனது உடல் சோர்வடைந்துவிட்டது. நான் கடினமானதாக உணர்ந்தேன்.
டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதியான 11.15 வினாடிகளில் கடக்க முயற்சி செய்தேன். அரையிறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் இடையில் காலஅவகாசம் குறைவாகவே உள்ளதால், போதுமான நேரம் எடுத்துக் கொள்ள நேரமில்லை’’ என்றார்.
தோகாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 11.48 வினாடிகளில்தான் பந்தய தூரத்தை கடந்தார்.
இதுகுறித்து டூட்டி சந்த் கூறுகையில் ‘‘தோகாவில் படைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக ஓடவில்லை. ஏனெனில் அங்கு வெப்பம் அதிகமாக இருந்தது. எனது உடல் சோர்வடைந்துவிட்டது. நான் கடினமானதாக உணர்ந்தேன்.
டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதியான 11.15 வினாடிகளில் கடக்க முயற்சி செய்தேன். அரையிறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் இடையில் காலஅவகாசம் குறைவாகவே உள்ளதால், போதுமான நேரம் எடுத்துக் கொள்ள நேரமில்லை’’ என்றார்.
தோகாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 11.48 வினாடிகளில்தான் பந்தய தூரத்தை கடந்தார்.
அஸ்வினின் தொடர் முயற்சியால் 3-வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்காவை 275 ரன்னில் ஆல்-அவுட் ஆக்கியது இந்தியா.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 162 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

இதனால் இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவிற்குள் தென்ஆப்பிரிக்கா ஆல்-அவுட் ஆக்குவது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு இயலாத காரியமாகி விடுமோ? என்ற நிலை இருந்தது. அந்தவேளையில்தான் 102-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் மகாராஜ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 271 ரன்கள் எடுத்திருந்தது.
மகாராஜ் - பிலாண்டர் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 42.1 ஓவர்கள் விளையாடி 109 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த ரபாடா 2 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்களும், முகமது ஷமி 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 162 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.
9-வது விக்கெட்டுக்கு பிலாண்டர் உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சாளர்களை மிகப்பெரிய அளவில் சோதித்தது. இருவரும் நிலைத்து நின்று விளையாடினர். மகாராஜ் அரைசதம் அடித்தார். பிலாண்டர் பந்துகளை தடுத்தாடுவதில் முனைப்பு காட்டினார்.

இதனால் இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவிற்குள் தென்ஆப்பிரிக்கா ஆல்-அவுட் ஆக்குவது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு இயலாத காரியமாகி விடுமோ? என்ற நிலை இருந்தது. அந்தவேளையில்தான் 102-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் மகாராஜ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 271 ரன்கள் எடுத்திருந்தது.
மகாராஜ் - பிலாண்டர் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 42.1 ஓவர்கள் விளையாடி 109 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த ரபாடா 2 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்களும், முகமது ஷமி 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
உலன் உடே:
11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்ரு வருகின்றன.
இன்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனை சுதாமத் ரக்சத்துடன் மோதினார்.
இதில் மஞ்சு ராணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
ஆலூரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கேரளா - கோவா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கேரளா பேட்டிங் தேர்வு செய்தது. உத்தப்பா (10), விஷ்ணு வினோத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
உத்தப்பா 10 ரன்னிலும், விஷ்ணு வினோத் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் - சச்சின் பேபி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி கோவா பந்து வீச்சை துவம்சம் செய்தது. குறிப்பாக சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 125 பந்தில் இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 129 பந்தில் 21 பவுண்டரி, 10 சிக்சர்கள் விளாசி 212 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சச்சின் பேபி 135 பந்தில் 127 ரன்கள் சேர்த்தார்.
இருவரின் சதத்தால் கேரளா அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. இந்த இரட்டை சதம் மூலம் லிஸ்ட் ஏ போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அத்துடன் விஜய் ஹசாரே டிராபியில் அதிகபட்ச ஸ்கோர், 3-வது இடத்தில் களம் இறங்கி இரட்டை சதம், முதல் சதத்திலேயே அதிக ரன் என்ற சாதனைகளையும் படைத்துள்ளார்.
ஆலூரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கேரளா - கோவா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கேரளா பேட்டிங் தேர்வு செய்தது. உத்தப்பா (10), விஷ்ணு வினோத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
உத்தப்பா 10 ரன்னிலும், விஷ்ணு வினோத் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் - சச்சின் பேபி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி கோவா பந்து வீச்சை துவம்சம் செய்தது. குறிப்பாக சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 125 பந்தில் இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 129 பந்தில் 21 பவுண்டரி, 10 சிக்சர்கள் விளாசி 212 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சச்சின் பேபி 135 பந்தில் 127 ரன்கள் சேர்த்தார்.
இருவரின் சதத்தால் கேரளா அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. இந்த இரட்டை சதம் மூலம் லிஸ்ட் ஏ போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அத்துடன் விஜய் ஹசாரே டிராபியில் அதிகபட்ச ஸ்கோர், 3-வது இடத்தில் களம் இறங்கி இரட்டை சதம், முதல் சதத்திலேயே அதிக ரன் என்ற சாதனைகளையும் படைத்துள்ளார்.
புரோ கபடி லீக்கில் எலிமினேட்டர் சுற்றில் மும்பை - அரியானா, உ.பி. யோதா - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. அதன்படி ஒவ்வொரு அணியும் 22 ஆட்டங்களில் விளையாடின. மொத்தம் 132 ‘லீக்’ ஆட்டங்கள் நடைபெற்றன.
இதன் முடிவில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ், உ.பி. யோதா, யு.மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூர் புல்ஸ் ஆகிய அணிகள் முதல் 6 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், குஜராத் பார்ச்சூன், புனேரி பல்தான், தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் முறையே 7 முதல் 12-வது இடங்களை பிடித்து வெளியேறின.
முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி, பெங்கால் அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும். மற்ற 4 அணிகளும் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடும்.
இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் அகமதாபாத்தில் தொடங்குகிறது. அன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ‘எலிமினேட்டர் 1’ ஆட்டத்தில் 3-வது இடத்தை பிடித்த உ.பி.யோதாவும்- 6-வது இடத்தை பிடித்த பெங்களூர் அணியும் மோதுகின்றன.
இதில் வெற்றிபெறும் அணி அரை இறுதியில் டெல்லியை சந்திக்கும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ‘எலிமினேட்டர் 2’ ஆட்டத்தில் 4-வது இடத்தை பிடித்த மும்பையும்- 5-வது இடத்தை பிடித்த அரியானா அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதியில் பெங்கால் வாரியர்சுடன் விளையாடும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.
அரைஇறுதி ஆட்டங்கள் 16-ந் தேதியும், இறுதி போட்டி 19-ந் தேதியும் நடைபெறும்.
இதன் முடிவில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ், உ.பி. யோதா, யு.மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூர் புல்ஸ் ஆகிய அணிகள் முதல் 6 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், குஜராத் பார்ச்சூன், புனேரி பல்தான், தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் முறையே 7 முதல் 12-வது இடங்களை பிடித்து வெளியேறின.
முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி, பெங்கால் அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும். மற்ற 4 அணிகளும் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடும்.
இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் அகமதாபாத்தில் தொடங்குகிறது. அன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ‘எலிமினேட்டர் 1’ ஆட்டத்தில் 3-வது இடத்தை பிடித்த உ.பி.யோதாவும்- 6-வது இடத்தை பிடித்த பெங்களூர் அணியும் மோதுகின்றன.
இதில் வெற்றிபெறும் அணி அரை இறுதியில் டெல்லியை சந்திக்கும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ‘எலிமினேட்டர் 2’ ஆட்டத்தில் 4-வது இடத்தை பிடித்த மும்பையும்- 5-வது இடத்தை பிடித்த அரியானா அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதியில் பெங்கால் வாரியர்சுடன் விளையாடும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.
அரைஇறுதி ஆட்டங்கள் 16-ந் தேதியும், இறுதி போட்டி 19-ந் தேதியும் நடைபெறும்.
புனேயில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் பாலோ-ஆன் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. ‘டாஸ்’ வென்று முதலில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். அவர் 336 பந்துகளில் 33 பவுண்டரி, 2 சிக்சருடன் 254 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அகர்வால் 195 பந்தில் 108 ரன்னும் (16 பவுண்டரி, 2 சிக்சர்) ரஹானே 59 ரன்னும், ஜடேஜா 104 பந்தில் 91 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
ரபாடா 3 விக்கெட்டும். கேசவ் மகாராஜ், முத்துசாமி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்து இருந்தது.
தொடக்க வீரர்கள் மார்கிராம் ரன் எதுவும் எடுக்காமலும், எல்கர் 6 ரன்னிலும் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தனர். பவுமா 8 ரன்னில் முகமது ஷமி பந்தில் ‘அவுட்’ ஆனார். ப்ரூயின் 20 ரன்னும், நார்ஜே 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. 565 ரன்கள் பின் தங்கிய நிலையும் கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து ஆடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு மேலும் 2 விக்கெட்டுகள் சரிந்தன. நார்ஜே 3 ரன்னில் முகமது ஷமி பந்திலும் ப்ரூயின் 30 ரன்னில் உமேஷ் யாதவ் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணி 21 ஓவர்களில் 53 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் டு பிளிசிஸ் - டி காக் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது.

டு பிளிசிஸ் ஆட்டமிழக்கும்போது தென்ஆப்பிரிக்கா 58.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 200 ரன்னுக்குள் சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலாண்டர் - மகாராஜ் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஜோடி விக்கெட்டை இழக்காவண்ணம் விளையாடியது. இவர்களை பிரிக்க இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். இந்த ஜோடியின் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 84 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்துள்ளது. பாலோ-ஆன் தவிர்க்க இன்னும் 180 ரன்கள் தேவை என்பதால், அதை தவிர்க்க தென்ஆப்பிரிக்கா போராடி வருகிறது.
கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். அவர் 336 பந்துகளில் 33 பவுண்டரி, 2 சிக்சருடன் 254 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அகர்வால் 195 பந்தில் 108 ரன்னும் (16 பவுண்டரி, 2 சிக்சர்) ரஹானே 59 ரன்னும், ஜடேஜா 104 பந்தில் 91 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
ரபாடா 3 விக்கெட்டும். கேசவ் மகாராஜ், முத்துசாமி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்து இருந்தது.
தொடக்க வீரர்கள் மார்கிராம் ரன் எதுவும் எடுக்காமலும், எல்கர் 6 ரன்னிலும் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தனர். பவுமா 8 ரன்னில் முகமது ஷமி பந்தில் ‘அவுட்’ ஆனார். ப்ரூயின் 20 ரன்னும், நார்ஜே 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. 565 ரன்கள் பின் தங்கிய நிலையும் கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து ஆடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு மேலும் 2 விக்கெட்டுகள் சரிந்தன. நார்ஜே 3 ரன்னில் முகமது ஷமி பந்திலும் ப்ரூயின் 30 ரன்னில் உமேஷ் யாதவ் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணி 21 ஓவர்களில் 53 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் டு பிளிசிஸ் - டி காக் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது.
அணியின் ஸ்கோர் 128 ரன்னாக இருக்கும்போது டி காக் 31 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முத்துசாமி 7 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய டு பிளிசிஸ் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 64 ரன்கள் சேர்த்தார்.

டு பிளிசிஸ் ஆட்டமிழக்கும்போது தென்ஆப்பிரிக்கா 58.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 200 ரன்னுக்குள் சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலாண்டர் - மகாராஜ் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஜோடி விக்கெட்டை இழக்காவண்ணம் விளையாடியது. இவர்களை பிரிக்க இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். இந்த ஜோடியின் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 84 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்துள்ளது. பாலோ-ஆன் தவிர்க்க இன்னும் 180 ரன்கள் தேவை என்பதால், அதை தவிர்க்க தென்ஆப்பிரிக்கா போராடி வருகிறது.
11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார்.
உலன் உடே:
11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவு போட்டிகளில் 6 முறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரி கோம், தாய்லாந்து மற்றும் கொலம்பிய வீராங்கனைகளை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை புசெனாஸை எதிர்கொண்டார் மேரி கோம். பரபரப்பான ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில், மேரி கோம் போராடி தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் மேரி கோம் இதுவரை 6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என எட்டு பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
அரையிறுதியில் வெற்றி பெற்ற துருக்கி வீராங்கனை புசெனாஸ், நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரஷ்யா வீராங்கனை லிலியாவை எதிர்கொள்கிறார்.
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ரெயில்வே வீராங்கனை கனிமொழி தங்கப்பதக்கம் வென்றார்.
ராஞ்சி:
59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ரெயில்வே வீராங்கனை சி.கனிமொழி 14.05 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
தமிழக வீராங்கனை ஆர்.நித்யா 14.15 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு ரெயில்வே வீராங்கனை எலிசபெத் அன்டோ 14.24 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர். தங்கப்பதக்கம் வென்ற கனிமொழி சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.
புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பையுடனான போட்டியை சமன் செய்த டெல்லி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் இன்று இரவு நடந்த 131-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் யு மும்பை அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் இறுதியில் 37-37 என சமனில் முடிந்தது.
இதையடுத்து, புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்சை 45-33 என்ற கணக்கில் வீழ்த்தி யுபி யோதா அணி வெற்றி பெற்றது. இன்றுடன் புரோ கபடியின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் 14ம் தேதி தொடங்குகின்றன.
சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ரோஜர் பெடரரை வீழ்த்திய அலெக்சாண்ட்ர் சிவ்ரெவ் அரையிறுதியில் நுழைந்தார்.
பெய்ஜிங்:
சீனாவில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் சிவ்ரெவும் மோதினர்.
இதில் முதல் செட்டை சிவ்ரெவ் 6-3 என கைப்பற்றினார். இதனால் ஆக்ரோஷத்துடன் விளையாடிய பெடரர் இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் 6-3 என கைப்பற்றி அசத்தினார் சிவ்ரெவ். இந்த வெற்றி மூலம் ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தார் சிவ்ரெவ்.






