search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபாங் டெல்லி"

    • ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது.
    • குஜராத் 50 புள்ளியுடன் 6-வது இடத்தில் உள்ளன.

    12 அணிகள் பங்கேற்று உள்ள 10-வது புரோ கபடி 'லீக்' போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

    அதை தொடர்ந்து பெங்களூர், புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடந்தது. 10-வது கட்ட போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    புரோ கபடி 'லீக்' போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்'சுற்றுக்கு தகுதி பெறும்.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது. அந்த அணி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன் 71 புள்ளிகள் பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 17 ஆட்டத்தில் 15 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியாஸ் 45-38 என்ற கணக்கில் டெல்லி அணியையும், அரியானா ஸ்டீலர்ஸ் 34-30 என்ற கணக்கில் குஜராத்தையும் தோற்கடித்தது.

    10-வது லீக் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் உ.பி. யோதா-மும்பை அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி 6 வெற்றி, 8 தோல்வி, 2 டையுடன் 40 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 7-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. உ.பி. யோதா 3 வெற்றி, 12 தோல்வி, 1 டையுடன் 23 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் உள்ளது. மும்பையை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி தெலுங்கு டைட்டன்ஸ்சை வீழ்த்தி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி 10 வெற்றி, 5 தோல்வி, 2 டையுடன் 60 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    புனே அணி 68 புள்ளியு டன் 2-வது இடத்திலும், அரியானா 55 புள்ளியுடன் 4-வது இடத்திலும், பாட்னா 53 புள்ளியுடன் 5-வது இடத்திலும், குஜராத் 50 புள்ளியுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

    ×