என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டு பிளிசிஸ்"
- தினேஷ் கார்த்திக் கடைசி 5 ஓவர்களில் மிகச் சிறப்பான பினிஷிங்கை தொடர்ச்சியாக எங்களுக்கு கொடுத்து வருகிறார்.
- இந்த போட்டியில் அது அவரால் முடியாமல் போனது.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில்:-
இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே நான் டைவ் அடித்ததன் காரணமாகவே பேட்டிங் செய்யும்போது என்னுடைய இடுப்பு பகுதியில் அசவுகரியத்தை உணர்ந்தேன். அதன் காரணமாகவே வயிற்றில் டேப் அணிந்து விளையாடினேன்.
இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாகவே விளையாடினோம். கடைசி ஐந்து ஓவர்களில் போட்டியை வெற்றிகரமாக முடிப்போம் என்று நினைத்தோம். ஏனெனில் தினேஷ் கார்த்திக் கடைசி 5 ஓவர்களில் மிகச் சிறப்பான பினிஷிங்கை தொடர்ச்சியாக எங்களுக்கு கொடுத்து வருகிறார். அதேபோன்று போட்டியை முடித்துக் கொடுப்பது அவருக்கு எப்பொழுதும் வழக்கமான ஒன்று.
இந்த போட்டியில் அது அவரால் முடியாமல் போனது. 200 ரன்கள் வரை இந்த மைதானத்தில் எளிதாக அடிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் 200 ரன்களுக்கு மேல் வழங்கிய ரன்களே இந்த போட்டியில் எங்களுக்கு பாதகமாக அமைந்தது. கடைசி நான்கு ஓவர்கள் இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி முடித்திருக்க வேண்டிய தருணம். ஆனால் அந்த சமயத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அதுவே சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
பந்துவீச்சை பொருத்தவரை எங்களது அணியில் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோன்று அவருடன் இணைந்து மற்ற பந்து வீச்சாளர்களும் இறுதி நேரத்தில் சிறப்பாக பந்துவீச வேண்டும்.
என அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்