என் மலர்
விளையாட்டு


மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டின் முகத்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மாற்றி இருக்கிறார்கள்.
இந்திய அணியில் இதுபோன்ற வேகப்பந்து தாக்குதல் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இப்படி வேகப்பந்து தாக்குதல் சிறப்பாக இருக்கும் என்றும் நினைத்ததில்லை.
தற்போது உலகிலேயே இந்திய வேகப்பந்து வீச்சு தான் சிறப்பாக இருக்கிறது. மற்ற அணிகளை விட திறமை அதிகம் உள்ளது. முகமதுஷமி, தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இல்லாமல் இருப்பது பெரிய விஷயமல்ல. அவர் அணியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பது தான் மிகவும் முக்கியமானது.
அவர் சிறப்பாக பந்துவீசுவதை பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. திறமை வாய்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை எண்ணி பெருமை அடைகிறேன். இன்னும் நிறைய பேர் வருவார்கள்.
பல இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது திறமையை நிரூபிக்க ஐ.பி.எல். நல்ல களமாக இருக்கிறது.
வேகப்பந்து வீச்சை பலப்படுத்த நிறைய காலம் பிடிக்கும். ஆனால் தற்போது நிறைய போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை பார்ப்பது நல்ல உணர்வை அளிக்கிறது. இதற்கு காரணம் ஐ.பி.எல். போட்டிகள் தான். இதில் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ரெயில்வே வீராங்கனை அன்னு ராணி 58.60 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
முழங்கையில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த போட்டியில் களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கடைசி நேரத்தில் விலகினார். நல்ல உடல் நிலைக்கு திரும்பிய பிறகு போட்டியில் பங்கேற்கலாம் என்று தனது பயிற்சியாளர் அறிவுறுத்தியதால் போட்டியில் இருந்து விலகியதாக நீரஜ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.
டெஸ்டில் அதிக ரன்கள் குவிக்கும் பழக்கம், முதல்தர கிரிக்கெட் போட்டி அனுபவம் மூலமே கிடைக்கிறது. அதனால் அவரிடம் அது பற்றி அதிகமாக பேசவில்லை. பார்ட்னர்ஷிப்பின்போது ஆட்ட திட்டமிடல் குறித்து மட்டுமே ஆலோசித்தேன்’ என்றார்.






