search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாயிண்ட் எடுக்க போராடும் வீரர்கள்
    X
    பாயிண்ட் எடுக்க போராடும் வீரர்கள்

    புரோ கபடி லீக்கில் மும்பையுடனான ஆட்டம் சமன் - புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது டெல்லி

    புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பையுடனான போட்டியை சமன் செய்த டெல்லி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் இன்று இரவு நடந்த 131-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் யு மும்பை அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் இறுதியில் 37-37 என சமனில் முடிந்தது.

    இதையடுத்து, புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

    மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்சை 45-33 என்ற கணக்கில் வீழ்த்தி யுபி யோதா அணி வெற்றி பெற்றது. இன்றுடன் புரோ கபடியின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் 14ம் தேதி தொடங்குகின்றன.
    Next Story
    ×