search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் கிரிக்கெட்"

    • ஆசிய கோப்பை போட்டியின்போது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்தனர்
    • இரண்டு பேர் காயம் குணமடைந்து பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளனர்

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் பெரும்பாலான நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.

    உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கேப்டனாக பாபர் ஆசம் நீடிக்கிறார்.

    சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா குணமடையாததால் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் உஸ்மா மிர் இடம் பெற்றுள்ளார்.

    பாபா ஆசம் (கேப்டன்), பகர் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், முகமது நவாஸ், ஷதாப் கான், உஸ்மா மிர், ஷகீன்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், முகமது வாசிம், ஹசன் அலி.

    • பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச வீரர்கள் சோயீப் மசூர், அர்ஷத் இக்பால் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி உள்ளனர்.
    • விளக்கம் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    அமெரிக்காவில் நடந்த மைனர் 'லீக்' கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச வீரர்கள் சோயீப் மசூர், அர்ஷத் இக்பால் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் எதுவும் பெறாமல் அவர்கள் அமெரிக்க போட்டியில் விளையாடி உள்ளனர்.

    இதையொட்டி அவர்களிடம் விளக்கம் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
    • பாபர் ஆசமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.

    இஸ்லாமாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடி அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.

    சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

    அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கேப்டன்ஷிப் தனது பேட்டிங்கை பாதிக்கவில்லை என்று பாபர் ஆசம் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசமை நீக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடனேயே பாபர் ஆசம் மற்றும் பயிற்சியாளர் சக்லைன் லாகூருக்கு சென்றனர்.

    அங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்வு குழு தலைவர் முகமது வாசிமும் பங்கேற்றார். 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கேப்டன் பதவி, பயிற்சியாளர் பங்கு, அணியின் ஒவ்வொரு அம்சமும் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் அணி தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    பாபர் ஆசம் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பதே சிறந்தது என்றும், டெஸ்ட் கேப்டன் பதவியை ஷான் மசூத் அல்லது முகமது ரிஸ்வானுக்கு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கருதுவதாகவும், டெஸ்ட் கேப்டனாக பாபர் ஆசமின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டது என்றும் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அதே வேளையில் பாபர் ஆசம் வருகிற ஜூலை மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து, ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு, அடுத்த 4 மாதங்களுக்கு விளையாட்டை வழிநடத்த நஜாம் சேத்தி தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.

    • இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
    • கடைசி நான்கு ஆட்டங்களில் நாங்கள் எப்படி வந்தோம் என்பது நம்பமுடியாதது என பாபர் ஆசம் பேட்டி

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது:

    இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள், அவர்கள் சாம்பியனாவதற்கு தகுதியானவர்கள் மற்றும் நன்றாக போராடினார்கள். எங்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் பெரும் ஆதரவு கிடைத்தது. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. நாங்கள் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்றோம். ஆனால் கடைசி நான்கு ஆட்டங்களில் நாங்கள் எப்படி வந்தோம் என்பது நம்பமுடியாதது.

    எங்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடும்படி வீரர்களிடம் தெரிவித்தேன். ஆனால் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். வீரர்கள் பந்துவீச்சில் நன்றாகப் போராடினார்கள். எங்கள் பந்துவீச்சு உலகின் சிறந்த தாக்குதல்களில் ஒன்றாகும். ஆனால் ஆட்டத்தின்போது துரதிர்ஷ்டவசமாக, ஷாகீன் அப்ரிடி காயமடைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடியதால் மனைவி மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    உத்தர பிரதேச மாநிலம் ராம்நகரை சேர்ந்தவர் இஷான்மியா. இவரது மனைவி ரபியா ‌ஷம்சி. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இடையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரபியா ‌ஷம்சி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மேலும் கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கும் தொடர்ந்து இருந்தார்.

    கடந்த மாதம் 24-ந்தேதி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் இந்தியா தோல்வி அடைந்தது.

    அப்போது ரபியா ‌ஷம்சியும் மற்றும் அவரது தாய் வீட்டு குடும்பத்தினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இந்தியாவை அவமதிக்கும் வகையில் கோ‌ஷங்களையும் எழுப்பினார்கள்.

    இந்த காட்சிகளை படம் பிடித்து வாட்ஸ்-அப், ஸ்டேட்டசிலும் ரபியா ‌ஷம்சி வெளியிட்டார். இது கணவர் இஷான் மியா கவனத்துக்கு வந்தது. அவர் இது சம்பந்தமாக போலீசில் புகார் அளித்தார்.

    அதையடுத்து ரபியா ‌ஷம்சி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் தகவல் தொடர்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது சம்பந்தமாக போலீஸ் சூப்பிரண்டு அங்கித் மிட்டல் கூறும்போது, ‘‘அவர்கள் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதோடு, இந்தியாவை அவமதிக்கும் வகையில் கோ‌ஷங்களை எழுப்பி தவறாக செயல்பட்டதால், அதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது’’ என்று கூறினார்.
    இந்திய கிரிக்கெட் வாரியம் இளையோர் அணிக்கு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்ததுபோல், பாகிஸ்தானும் முன்னாள் வீரர்களை நியமிக்க ஆலோசித்து வருகிறது.
    இந்திய கிரிக்கெட் வாரியம் இளையோர் கிரிக்கெட் அணிக்கு முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்தது. ராகுல் டிராவிட் தலைமையில் இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். நியூசிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றது.

    ஏராளமான வீரர்கள் இந்திய அணிக்கு விளையாட முன்னேற்றம் அடைந்துள்ளனர். ரஞ்சி டிராபியில் அசத்துகிறார்கள். டி20 கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் அசத்தி வருகிறார்கள். இதற்கு ராகுல் டிராவிட்டுதான் முக்கிய காரணம் என்று கூறி வருகிறார்கள்.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டர், ரோட்னி மார்ஷ் போன்றோரை பயிற்சியாளராக நியமித்து இருந்தது.

    பாகிஸ்தானின் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் யூனிஸ் கான் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறும்போது, ‘‘இளம் வீரர்களுக்கான அணிக்கு பயிற்சியாளராக தயாராக இருக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் இளையோர் அணிக்கு முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க யோசித்து வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் ஒருநாள் போட்டியில் விளையாடும் என பிசிபி நிர்வாக இயக்குனர் வாசிம் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #PCB
    இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். 6 வீரர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அதன்பின் எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. ஆஸ்திரேலியா 1998-ம் ஆண்டில் இருந்தே பாகிஸ்தான் சென்று  விளையாடவில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இதில் ஒரு பகுதி ஆட்டமாவது பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் வாசிம் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாசிம் கான் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் வந்து விளையாடுவதற்கு நாங்கள் அதிக பாதுகாப்பு வழங்க உறுதி செய்வோம். அவர்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பாகிஸ்தானில் தொடர்ந்து சர்வதேச போட்டிகள் நடைபெறுவதற்காக மற்ற கிரிக்கெட் போர்டுகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடக்க வடிவத்திலேயே இருக்கிறது.

    நான் மற்ற போர்டுகளின் தலைவர்களிடம் உட்கார்ந்து, எங்களுடைய திட்டத்தில் எங்கே இடைவெளி உள்ளது? உங்களுக்கு தர்மசங்கடமாக உள்ள விஷயம் என்ன? நீங்கள் பாகிஸ்தான் வந்து விளையாட நாங்கள் என்ன உறுதியளிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் குறித்து பேச வேண்டியது அவசியமானது’’ என்றார்.

    இலங்கை அணி 2017-ல் பாகிஸ்தான் சென்று ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×