என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 394 ரன்கள் குவித்துள்ளது.
    மவுன்ட்மாங்கானு:

    நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. நிக்கோலஸ் - வாட்லிங் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிக்கோலஸ் 41 ரன்கள் எடுத்திருந்த போது ரூட் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் வெளியேறினார்.  அடுத்து வந்த  கிராண்ட்ஹோம் அவருக்கு சிறப்பான பாட்னர்சிப் கொடுத்தார். அபாரமாக விளையாடிய வாட்லிங் 251 பந்துகளில் 12 பவுண்டரியுடன் அவர் சதம் அடித்தார்.

    64-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 8-வது சதமாகும். அவருக்கு  உறுதுணையாக இருந்து கிராண்ட்ஹோம் 65 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சாட்னர், வாட்லிங் உடன் ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 394 ரன்கள் எடுத்திருந்தனர். சாட்னர் 103 பந்துகளில் 31 ரன்களிலும் வாட்லிங் 298 பந்துகளில் 119 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

    இங்கிலாந்து தரப்பில் சாம் குர்ரான், பென் ஸ்டோர்க்ஸ் தலா 2 விக்கெட்டும் ஜாக் லீச், ஜோ ரூட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    இந்தூரில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் குறைந்த ஓவரில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி புதிய சாதனை படைத்ததுள்ளது.
    கொல்கத்தா:

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    2 டெஸ்ட் போட்டி தொடரில் இந்தூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பகல்-இரவாக (பிங்க் பந்து) இந்த டெஸ்ட் நடத்தப்பட்டது.

    கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆடியது.

    இளம் சிவப்பு நிற பந்தில் (பிங்க்) இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசி சாதித்தனர். முதலில் ஆடிய வங்காளதேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்னில் சுருண்டது.

    இதன்மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்தது. முதல் இன்னிங்சில் குறைந்த ஓவரில் எதிர் அணியை வீழ்த்தி சாதித்தது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு ஹராரேயில் நடந்த டெஸ்ட்டில் ஜிம்பாப்வே அணியை 44.2 ஓவர்களில் சுருட்டி இருந்தது. தனது பழைய நிலையை முறியடித்து புதிய சாதனை படைத்தது.
    பிரிஸ்பேன் டெஸ்டில் டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபஸ் சாக்னே ஆகியோர் சதமடித்து அசத்த, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 580 ரன்கள் எடுத்துள்ளது.
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் பிரிஸ்பேனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 86.2 ஓவரில் 240 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆசாத் ‌ஷபிக் 76 ரன் எடுத்தார்.

    கேப்டன் அசார் அலி 39 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும், ஷான் மசூத் 27 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பாகிஸ்தான் ஆல்-அவுட் ஆனதுடன் முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அவர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினார்கள்.

    ஜோ பேர்ன்ஸ் சதம் அடிப்பார் என்ற நிலையில் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்தது. அடுத்து டேவிட் வார்னருடன் மார்னஸ் லாபஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது.

    நேற்றைய ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் 151 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய வார்னர் 154 ரன்னில் வெளியேறினார். ஆனால் அவரது அதிரடியை லாபஸ்சாக்னே தொடர்ந்தார்.

    அவர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். இரட்டை சதத்தை நெருங்கிய நிலையில், லாபஸ்சாக்னே 185 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மேத்யூ வேட் அரை சதமடித்து 60 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 580 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானை விட 340 ரன்கள் முன்னிலை பெற்றது.

    விக்கெட் வீழ்த்திய மிச்செல் ஸ்டார்க்கை பாராட்டும் சக வீரர்கள்

    பாகிஸ்தான் சார்பில் யாசிஎ ஷா 4 விக்கெட்டும், ஷஹின் அப்ரிதி, ஹரிஸ் சோஹாலி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் அசார் அலி 5 ரன்னிலும், ஹாரிஸ் சோஹாலி 8 ரன்னிலும், அசாத் ஷபிக் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர்.

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 276 ரன்கள் பின்தங்கியுள்ளது பாகிஸ்தான் அணி.

    இரண்டு நாள்கள் மீதமுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்து அசத்தினார்.
    கொல்கத்தா:

    இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் சிக்கி வங்காளதேச வீரர்கள் வெளியேறினர். இதனால் வங்காளதேசம் அணி 30.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், மொகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். அகர்வால் 14 ரன்னிலும், ரோகித் சர்மா 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த புஜாராவும் கேப்டன் விராட் கோலியும் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தனர். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 59 ரன்னும், ரகானே 23 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ரகானேவும் கோலியும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரகானே 51 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் 27வது சதம் இதுவாகும்.

    தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆடி வருகிறது. விராட் கோலி 130 ரன்னுடனும் ரவீந்திர ஜடேஜா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தியா, வங்காளதேசம் இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கொல்கத்தா: 

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.  முதல் முறையாக பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த வரலாற்று மிக்க போட்டியை காண வங்காள தேச பிரதமர் ஹசினா, மேற்கு  வங்காள மாநில முதல்வர் மம்தா உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் வருகை புரிந்தனர். 

    நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய  வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியமால் அந்த அணி முதல் இன்னிங்சில் 106 ரன்களில் சுருண்டது. இதையடுத்து இந்திய அணி  பேட்டிங்கை தொடங்கியது. முதல் நாளில் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள்  ஆட்டம் நடைபெற்று வருகிறது.  

    இந்நிலையில், கொல்கத்தாவின் ஜோரப்கான் பகுதியில் இந்த கிரிக்கெட் ஆட்டத்தின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை   போலீசார் கைது செய்தனர்.  

    சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், 2 கணினிகள், செல்போன்கள் அவர்களிடமிருந்து பறிமுதல்  செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட செல்போன்களுக்கு வந்த அழைப்புகள் மற்றும் பேசிய அழைப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு  வருகிறது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நேற்று மாலை கைது செய்யப்பட்ட இந்த 3 வரும் நீதிமன்றத்தில் இன்று  ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.
    கொல்கத்தா:

    இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் சிக்கி வங்காளதேச வீரர்கள் வெளியேறினர்.

    இதனால் வங்காளதேசம் அணி 30.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லிட்டன் தாஸ் 24 ரன்னில் காயத்தால் வெளியேறினார்.

    இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், மொகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.

    அரை சதமடித்த புஜாரா

    அகர்வால் 14 ரன்னிலும், ரோகித் சர்மா 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய புஜாரா கேப்டன் விராட் கோலிக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.

    இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 94 ரன்கள் சேர்த்த நிலையில், புஜாரா 55 ரன்னில் வெளியேறினார். புஜாராவை தொடர்ந்து ரகானே இறங்கினார். இந்த ஜோடி தொடர்ந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

    இறுதியில், பகல் -இரவு டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 59 ரன்னும், ரகானே 23 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    கேப்டனாக டெஸ்டில் போட்டியில் அதிகவேகமாக ஐந்தாயிரம் ரன்களை தாண்டிய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. வங்காளதேசம் 106 ரன்னில் சுருண்ட பின்னர், இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி 32 ரன்னைத் தொட்டபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக ஐந்தாயிரம் ரன்களை கடந்தார். ஐந்தாயிரம் ரன்களை கடந்த அவருக்கு 86 இன்னிங்சே தேவைப்பட்டது. இதன்மூலம் அதிவேகமாக கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் ரிக்கி பாண்டிங் 97 இன்னிங்சில் ஐந்தாயிரம் ரன்களை கடந்து முதல் இடத்தில் இருந்தார். விராட் கோலி தற்போது அதை முறியடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கிளைவ் லாய்டு 106 இன்னிங்சிலும், தென்ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 110 இன்னிங்சிலும், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டன் 116 இன்னிங்சிலும், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெமிங் 130 இன்னிங்சிலும் ஐந்தாயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயதில் அறிமுகமான நசீம் ஷா, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அறிமுகம் ஆனார்.

    அவருக்கு 16 வயது 279 நாட்களே ஆனது. இதனால் மிக இளம் வயதில் சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன முகமது கைப் இவரது வயது குறித்து டுவிட் செய்துள்ளார். இந்த டுவிட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தானின் பிரபலமான விளையாட்டுத்துறை ஆசிரியர்  (Sports Editor) ‘‘சிறப்பாக பந்து வீசும் 17 வயதான வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா-வை பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான குவேட்டா கிளாடியேட்டர்ஸ் ஒப்பந்தம் செய்தது. அவருக்கு முதுகு வலி காயம் ஏற்பட்டுள்ளது.

    நசீம் ஷா

    அவர் மீண்டும் பயிற்சி மேற்கொண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் 4-வது சீசனில் விளையாட உடற்தகுதி பெறுவதாக நம்புகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த டுவிட்டரை மேற்கோள் காட்டி முகமது கைப் ‘‘இது ஒரு மிகப்பெரிய கணிப்பு. தற்போது 16 வயதாகிறது. வயது பின்னோக்கி செல்லும் என நினைக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

    இதைவைத்து டுவிட்டர்வாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    சையத் முஷ்டாக் அலி டிராபி சூப்பர் லீக்கில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி பெற்றது.
    இந்தியாவில் நடைபெறும் முக்கியமான டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.

    லீக் ஆட்டங்கள் முடிவில் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 10 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின. 10 அணிகளும் ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் அந்த குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இன்று சூரத்தில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் குரூப் ‘பி’-யில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு - மும்பை அணிகள் மோதின. தமிழ்நாடு டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை சித்தார்த், சாய் கிஷோர் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

    தொடக்க பேட்ஸ்மேன் பிரித்வி ஷா 19 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 4-வது வீரராக களம் இறங்கிய முலானி 52 பந்தில் 73 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேற, மும்பை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களே அடித்தது.

    பின்னர் 122 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு களம் இறங்கியது. ஷாருக்கான் 17 ரன்னில் ஆட்டமிழக்க, ஹரி நிஷாந்த் 44 பந்தில் 73 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பாபா அபரஜித் ரன்ஏதும் எடுக்காமலும், தினேஷ் கார்த்திக் 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, விஜய் சங்கர் 20 பந்தில் 27 ரன்கள் அடித்தார். தமிழ்நாடு 13.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    முகமது ஷமியின் பவுன்சர் பந்தில் வங்காளதேசம் அணியைச் சேர்ந்த இரண்டு பேர் காயம் அடைந்து வெளியேறினர்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டு அணிகளுக்கும் பிங்க்-பால் எப்படி செயலாற்றும் என்பது தெரியாது. இதனால் இரண்டு அணி வீரர்களும் உற்சாகத்துடன் களம் இறங்கினர்.

    பந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் அபாரமாக பந்து வீசினர். முகமது ஷமி பவுன்சர் பந்தால் வங்காளதேச பேட்ஸ்மேன்களை மிரட்டினார்.

    20-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுன்சராக வீசினார். பந்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் லிட்டன் தாஸின் ஹெல்மெட்டை தாக்கியது. இதனால் லிட்டன் தாஸ் நிலைகுலைந்தார்.

    வங்காளதேச அணி மருத்துவர் விரைந்து முதலுதவி அளித்தார். அதனால் தொடர்ந்து பேட்டிங் செய்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மா பந்தை சந்திக்கும்போது, 4-வது பந்திற்குப் பிறகு பேட்டிங் செய்ய இயலவில்லை என்று வெளியேறினாார். இதனால் அவருக்குப் பதிலாக மாற்றும் வீரர் மெஹிதி ஹசன் சேர்க்கப்பட்டார்.

    அதன்பின் 23-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்து அதேபோல் நயீம் ஹசன் ஹெல்மெட்டை தாக்கியது. முதலுவதிக்குப் பிறகு நயீம் ஹசன் தொடர்ந்து பேட்டிங் செய்தார்.

    நயீம் ஹசன்

    வங்காளதேசம் 106 ரன்னில் ஆல்அவுட் ஆன பின், பீல்டிங் செய்ய வந்தது. அப்போது நயீம் ஹசன் பீல்டிங் செய்ய வரவில்லை.

    லிட்டன் தாஸ் மற்றும் நயீம் ஹசன் ஆகியோர் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.  இருவராலும் விளையாட முடியாது என்று டாக்டர்கள் அறிவித்ததால், கன்குசன் சப்ஸ்டிடியூட் (concussion sub) வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். நயீம் ஹசன் பந்து வீச்சாளர் என்பதால் தைஜூல் மாற்று வீரராக களம் இறக்கப்பட்டார்.
    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி வங்காளதேசம் அணி 106 ரன்னில் சுருண்டது.
    கொல்கத்தா:

    இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷத்மாம் இஸ்லாம், இம்ருல் கயேஸ் ஆகியோர் களமிறங்கினர்.

    இஸ்லாம் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவர் 29 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் சிக்கி வங்காளதேச வீரர்கள் வெளியேறினர்.

    இதையடுத்து, வங்காளதேசம் அணி உணவு இடைவேளை வரை 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. உணவு இடைவேளையை தொடர்ந்து, வங்காளதேசம் அணி களமிறங்கியது.

    ஷமியும், இஷாந்த் சர்மாவும் அதிரடியாக பந்து வீச்சை தொடர்ந்தனர். இதனால் வங்காளதேசம் அணி 30.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லிட்டன் தாஸ் 24 ரன்னில் காயத்தால் வெளியேறினார்.

    இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், மொகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் சொந்த மண்ணில் கடந்த 607 நாட்களாக சிங்கிள் விக்கெட் கூட வீழ்த்த முடியாத பரிதாப நிலையில் உள்ளனர்.
    நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் சேர்த்தது. 10 விக்கெட்டுக்களையும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர்.

    சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த இன்னிங்ஸ் உடன் தொடர்ந்து 11 இன்னிங்சில் விக்கெட் வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 11 இன்னிங்சில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் 101 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர். டிரென்ட் போல்ட் 31 விக்கெட்டும், டிம் சவுத்தி 31 விக்கெட்டும், வாக்னர் 27 விக்கெட்டும், கொலின் டி கிராண்ட் ஹோம் 10 விக்கெட்டும், மேட் ஹென்ரி இரண்டு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    607 நாட்களில் 88 ஓவர்கள் வீசியுள்ளனர். அஜாஸ் பட்டேல் 43 ஓவர்களும், டாட் ஆஸ்லே 20 ஓவர்களும், இஷ் சோதி 16 ஓவர்களும், மிட்செல் சான்ட்னெர் 6 ஓவர்களும், கேன் வில்லியம்சன் இரண்டு ஓவர்களும், ஜீத் ராவல் ஒரு ஓவரும் வீசியுள்ளனர்.

    கடந்த ஆண்டு மார்ச் 26-ந்தேதியில் இருந்து தற்போது வரை 88 ஓவர்களில் 264 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
    ×