என் மலர்
விளையாட்டு
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தனது 2-வது ஆட்டத்திலும் தோல்வி அடைந்து வெளியேறியது.
போட்செப்ஸ்ட்ரூம்:
16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்தது. இப்ராஹிம் ஜட்ரன் (87 ரன்), ரமனுல்லா (81 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 32.4 ஓவர்களில் 105 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ஷபியுல்லா கபாரி 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை புரட்டியெடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
‘ஏ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இலங்கை அணி நிர்ணயித்த 243 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்ட போது, நியூசிலாந்து வீரர் கிறிஸ்டியன் கிளார்க் (9 ரன்), 5-வது பந்தை சிக்சருக்கு விரட்டி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவிய இலங்கை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
‘சி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி 2-வது வெற்றியோடு கால்இறுதியை உறுதி செய்தது. இந்த பிரிவில் வங்காளதேமும் (4 புள்ளி) ஏற்கனவே கால்இறுதியை எட்டி விட்டது. 2-வது தோல்வியை சந்தித்த ஜிம்பாப்வே அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது.
இன்றைய லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, நைஜீரியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்தது. இப்ராஹிம் ஜட்ரன் (87 ரன்), ரமனுல்லா (81 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 32.4 ஓவர்களில் 105 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ஷபியுல்லா கபாரி 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை புரட்டியெடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
‘ஏ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இலங்கை அணி நிர்ணயித்த 243 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்ட போது, நியூசிலாந்து வீரர் கிறிஸ்டியன் கிளார்க் (9 ரன்), 5-வது பந்தை சிக்சருக்கு விரட்டி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவிய இலங்கை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
‘சி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி 2-வது வெற்றியோடு கால்இறுதியை உறுதி செய்தது. இந்த பிரிவில் வங்காளதேமும் (4 புள்ளி) ஏற்கனவே கால்இறுதியை எட்டி விட்டது. 2-வது தோல்வியை சந்தித்த ஜிம்பாப்வே அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது.
இன்றைய லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, நைஜீரியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா தோல்வியடைந்தார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை லின் ஹோஜ்மார்க்கை சந்தித்தார். 47 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 13-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். 5-வது முறையாக லின் ஹோஜ்மார்க்குடன் மோதிய சாய்னா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 14-21, 11-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரெனிடம் தோல்வி அடைந்தார். இதே போல் சமீர் வர்மா, பிரனாய் ஆகிய இந்தியர்களும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை லின் ஹோஜ்மார்க்கை சந்தித்தார். 47 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 13-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். 5-வது முறையாக லின் ஹோஜ்மார்க்குடன் மோதிய சாய்னா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 14-21, 11-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரெனிடம் தோல்வி அடைந்தார். இதே போல் சமீர் வர்மா, பிரனாய் ஆகிய இந்தியர்களும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து ஆட திட்டமிட்டு இருந்த நிலையில் சானியா மிர்சா விலகி உள்ளார்.
இந்திய வீராங்கனை 33 வயதான சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து ஆட திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் வலது பின்னங்காலில் பிரச்சினை இருப்பதால் கடைசி நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து சானியா விலகிவிட்டார்.
அதே சமயம் பெண்கள் இரட்டையர் பிரிவில் அவர் உக்ரைனின் நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து களம் இறங்குகிறார். சானியா-கிச்செனோக் ஜோடி தங்களது முதலாவது சுற்றில் இன்று சீனாவின் ஸின்யுன் ஹான்- லின் ஜூ ஜோடியை சந்திக்கிறது.
ஆனால் வலது பின்னங்காலில் பிரச்சினை இருப்பதால் கடைசி நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து சானியா விலகிவிட்டார்.
அதே சமயம் பெண்கள் இரட்டையர் பிரிவில் அவர் உக்ரைனின் நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து களம் இறங்குகிறார். சானியா-கிச்செனோக் ஜோடி தங்களது முதலாவது சுற்றில் இன்று சீனாவின் ஸின்யுன் ஹான்- லின் ஜூ ஜோடியை சந்திக்கிறது.
மூன்று வடிவிலான போட்டிகளிலும் வியப்பூட்டும் வகையில் விளையாடி வரும் விராட் கோலி பல சாதனைகளை முறியடிப்பார் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலிய முன்னணி கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளிலும் நம்ப முடியாத அளவுக்கு வியப்பூட்டும் வகையில் விளையாடி வருகிறார்.
அவர் ஏற்கனவே பல சாதனைகள் படைத்துள்ளார். இன்னும் பல சாதனைகளை அவர் முறியடிக்கப்போவதை நாம் பார்க்கப்போகிறோம். அவர் ரன் குவிக்கும் வேட்கையுடன் பயணிக்கிறார். அதை தடுப்பது கடினம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போது அவரை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இதே போல் கேப்டன்ஷிப்பிலும் அற்புதமாக செயல்படுகிறார்.’ என்றார்.
ஆஸ்திரேலிய முன்னணி கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளிலும் நம்ப முடியாத அளவுக்கு வியப்பூட்டும் வகையில் விளையாடி வருகிறார்.
அவர் ஏற்கனவே பல சாதனைகள் படைத்துள்ளார். இன்னும் பல சாதனைகளை அவர் முறியடிக்கப்போவதை நாம் பார்க்கப்போகிறோம். அவர் ரன் குவிக்கும் வேட்கையுடன் பயணிக்கிறார். அதை தடுப்பது கடினம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போது அவரை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இதே போல் கேப்டன்ஷிப்பிலும் அற்புதமாக செயல்படுகிறார்.’ என்றார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசா அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடத்தை மீண்டும் பிடித்தது பெங்களூரு அணி.
பெங்களூரு:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
பெங்களூருவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி., ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.
23வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டேஷ்ரோன் பிரவுன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் மற்றொரு வீரர் ராகுல் பேக் மேலும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் பெங்களூரு அணி முதல் பாதி முடிவில் 2-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுனில் சேத்ரி மற்றொரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், பெங்களூரு எப் சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 25 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஒடிசா 21 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளது.
ஹராரேயில் நடைபெற்று வரும் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் மேத்யூஸ் இரட்டை சதம் அடிக்க இலங்கை முதல் இன்னிங்சில் 515 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹராரேயில் 19-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் மூன்று வீரர்களும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். மஸ்வாயுர் 55 ரன்களும், கசுஜா 63 ரன்களும், எர்வின் 85 ரன்களும் சேர்த்தனர். சிகந்தர் ரஜா 41 ரன்களும், டிரிபானோ ஆட்டமிழக்காமல் 44 ரன்களும் அடிக்க ஜிம்பாப்வே 148 ஓவர்கள் விளையாடி 358 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் எம்புல்டேனியா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 92 ரன்களுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அரைசதம் அடித்த தனஞ்ஜெயா 63 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவும் 63 ரன்கள் அடித்தார். மறுமுனையில் மேத்யூஸ் தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 515 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மேத்யூஸ் 200 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
முதல் மூன்று வீரர்களும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். மஸ்வாயுர் 55 ரன்களும், கசுஜா 63 ரன்களும், எர்வின் 85 ரன்களும் சேர்த்தனர். சிகந்தர் ரஜா 41 ரன்களும், டிரிபானோ ஆட்டமிழக்காமல் 44 ரன்களும் அடிக்க ஜிம்பாப்வே 148 ஓவர்கள் விளையாடி 358 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் எம்புல்டேனியா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 92 ரன்களுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அரைசதம் அடித்த தனஞ்ஜெயா 63 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவும் 63 ரன்கள் அடித்தார். மறுமுனையில் மேத்யூஸ் தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 515 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மேத்யூஸ் 200 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
ரஞ்சி டிராபியில் விதர்பா அணியால் நிர்ணயிக்கப்பட்ட 347 ரன்னை நிதிஷ் ராணாவின் அதிரடி சதத்தால் எளிதாக எட்டிப்பிடித்து அசத்தியது டெல்லி.
ரஞ்சி டிராபியில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி - விதர்பா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த விதர்பா 179 ரன்னில் சுருண்டது. டெல்லி அணியும் முதல் இன்னிங்சில் திணறி 163 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா கணேஷ் சதிஷ் (100) சதத்தால் 330 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனால் டெல்லி அணியின் வெற்றிக்கு 347 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது விதர்பா. 347 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்திருந்தது. சண்டேலா 2 ரன்னுடனும், டலால் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சண்டேலா, டலால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சண்டேலா 75 ரன்களும், டலால் 82 ரன்களும் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் வந்த நிதிஷ் ராணா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவருக்கு துணையாக துருவ் ஷோரே 48 பந்தில் 44 ரன்கள் அடித்தார். ராணா 68 பந்தில் 105 ரன்கள் விளாச டெல்லி 73 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா கணேஷ் சதிஷ் (100) சதத்தால் 330 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனால் டெல்லி அணியின் வெற்றிக்கு 347 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது விதர்பா. 347 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்திருந்தது. சண்டேலா 2 ரன்னுடனும், டலால் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சண்டேலா, டலால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சண்டேலா 75 ரன்களும், டலால் 82 ரன்களும் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் வந்த நிதிஷ் ராணா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவருக்கு துணையாக துருவ் ஷோரே 48 பந்தில் 44 ரன்கள் அடித்தார். ராணா 68 பந்தில் 105 ரன்கள் விளாச டெல்லி 73 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆண்கள் கிரிக்கெட்டில் இருந்துதான் அதிகமான வருமானம் கிடைப்பதால், அவர்களுக்கு இணையாக தொகை கேட்பது நியாயம் அல்ல என ஸ்மிரிதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய வீரர்களில் ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்தவர்களுக்கு 7 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அதேவேளையில் வீராங்கனைகளுக்கான உயர் பிரிவுக்கு 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஏற்றத்தாழ்வு சில வீராங்கனைகளுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கலாம். ஆனால் முன்னணி வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா, ஆண்கள் கிரிக்கெட் அதிக அளவில் வருமானம் ஈட்டுகிறது. ஆகவே, அவர்களுக்கு இணையாக பணம் கேட்பது நியாயம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்மிரிதி மந்தனா கூறுகையில் ‘‘வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் இடையிலான இடைவெளி குறித்து சக வீராங்கனைகள் வருத்தப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் இந்திய அணிக்காக வெற்றிகளை தேடிக்கொடுக்க வேண்டும். நன்றாக வளர்ந்து அதன்மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறோம்.
நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். எங்களுக்கு இணையான தொகை தேவை என்பது நியாயம் ஆகாது.’’ என்றார்.
இந்த ஏற்றத்தாழ்வு சில வீராங்கனைகளுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கலாம். ஆனால் முன்னணி வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா, ஆண்கள் கிரிக்கெட் அதிக அளவில் வருமானம் ஈட்டுகிறது. ஆகவே, அவர்களுக்கு இணையாக பணம் கேட்பது நியாயம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்மிரிதி மந்தனா கூறுகையில் ‘‘வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் இடையிலான இடைவெளி குறித்து சக வீராங்கனைகள் வருத்தப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் இந்திய அணிக்காக வெற்றிகளை தேடிக்கொடுக்க வேண்டும். நன்றாக வளர்ந்து அதன்மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறோம்.
நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். எங்களுக்கு இணையான தொகை தேவை என்பது நியாயம் ஆகாது.’’ என்றார்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் இளம் வீரரான சர்பராஸ் கான் முச்சதம் அடிக்க, உத்தர பிரதேசம் அணிக்கெதிராக மும்பை முன்னிலை பெற்று போட்டியை டிரா செய்தது.
ரஞ்சி டிராபியில் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - உத்தர பிரதேசம் அணிகள் மோதின. கடந்த 19-ந்தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உத்தர பிரதேசம் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் அக்ஷ்தீப் நாத் சதமும், விக்கெட் கீப்பர் உபேந்த்ர யாதவ் ஆட்டமிழக்காமல் 203 ரன்கள் விளாச உத்தர பிரதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 625 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியது மும்பை. 128 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு சித்தேஷ் லாட் உடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சித்தேஷ் லாட் 98 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
அடுத்து கேப்டனும் சர்பராஸ் கான் உடன் கேப்டன் ஆதித்யா டரே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. டரே 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் சர்பராஸ் கான் நிலைத்து நின்று முச்சதம் அடித்தார்.
இவரது முச்சதத்தால் மும்பை அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று 7 விக்கடெ் இழப்பிற்கு 688 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சர்பராஸ் கான் 301 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இன்றைய கடைசி நாள் ஆட்டம் முடிவதற்கு சில ஓவர்களே இருந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால் மும்பை அணிக்கு 3 புள்ளிகளும், உத்தர பிரதேசம் அணிக்கு 1 புள்ளிகளும் வழங்கபட்டன.
அந்த அணியின் அக்ஷ்தீப் நாத் சதமும், விக்கெட் கீப்பர் உபேந்த்ர யாதவ் ஆட்டமிழக்காமல் 203 ரன்கள் விளாச உத்தர பிரதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 625 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியது மும்பை. 128 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு சித்தேஷ் லாட் உடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சித்தேஷ் லாட் 98 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
அடுத்து கேப்டனும் சர்பராஸ் கான் உடன் கேப்டன் ஆதித்யா டரே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. டரே 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் சர்பராஸ் கான் நிலைத்து நின்று முச்சதம் அடித்தார்.
இவரது முச்சதத்தால் மும்பை அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று 7 விக்கடெ் இழப்பிற்கு 688 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சர்பராஸ் கான் 301 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இன்றைய கடைசி நாள் ஆட்டம் முடிவதற்கு சில ஓவர்களே இருந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால் மும்பை அணிக்கு 3 புள்ளிகளும், உத்தர பிரதேசம் அணிக்கு 1 புள்ளிகளும் வழங்கபட்டன.
எங்கள் மனதில் இருப்பது எல்லாம் உலக கோப்பைதான், அதை அடைவதே எங்களது லட்சியமாக இருக்கும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றிய நிலையில் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்கான நியூசிலாந்து சென்றுள்ளது.
இந்திய அணி டி20 உலக கோப்பை வர இருக்கும் நிலையில் இன்னும் ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிகள் உலக கோப்பைக்கான அணியை தயார் படுத்துதலுக்கு உதவியாக இருக்கும் என இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘நாங்கள் சீதோஷ்ண நிலை, எதிரணி யார்? என்று பார்ப்பதில்லை. உலகின் எந்த நாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இதுதான் எங்களுடைய இலக்கு. அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். உலக கோப்பை எப்போதுமே எங்கள் மனதில் இருக்கும் ஒன்று. அதை வெல்வதுதான் லட்சியம். அதற்கான அனைத்தையும் செய்வோம்.
இந்திய அணி அகராதியில் நான் என்ற வார்த்தையே கிடையாது. நாங்கள் என்ற வார்த்தைதான் உண்டு. இதுதான் அணியின் நிலை. ஒருவருடைய சாதனையை மற்றவர் கொண்டாடுவார்கள். ஏனென்றால், அது ஒரு அணியால் கிடைத்த வெற்றியாகும்.
ஒருநாள் தொடரை வென்ற இந்தியா டி20 தொடரையும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆஸ்திரேலியா தொடரை மனநிலை அளவில் வலிமை பெற்றுள்ளோம் என்பதையும், நெருக்கடியில் எப்படி விளையாட வேண்டும் என்பதையும் நிரூபித்துள்ளது. வான்கடேயில் படுதோல்வி அடைந்த பிறகு, அதில் இருந்து மீண்ட விதம் பாராட்டுக்குரியது.
இந்த அணி தற்போதுள்ள சூழ்நிலையில் இருந்து வருகிறது. முன்னதாக எது இடந்தாலும் அது வரலாறு. முன்னதாக சிறப்பாக என்ன செய்தோமோ, அதை எதிர்காலத்தில் செய்ய விரும்புகிறோம்.
கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்வதை நாங்கள் விரும்புகிறோம். ஷிகர் தவான் காயம் அடைந்தது கவலை அளிக்கிறது. மிகப்பெரிய கவலை. ஏனென்றால் தவான் சீனியர் வீரர். அவர் ஒரு மேட்ச் வின்னர் வீரர். இதுபோன்று வீரர் ஒருவர் காயம் அடையும்போது அணியின் ஒவ்வொருவரும் வருத்தம் அடைவார்கள்’’ என்றார்.
இந்திய அணி டி20 உலக கோப்பை வர இருக்கும் நிலையில் இன்னும் ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிகள் உலக கோப்பைக்கான அணியை தயார் படுத்துதலுக்கு உதவியாக இருக்கும் என இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘நாங்கள் சீதோஷ்ண நிலை, எதிரணி யார்? என்று பார்ப்பதில்லை. உலகின் எந்த நாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இதுதான் எங்களுடைய இலக்கு. அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். உலக கோப்பை எப்போதுமே எங்கள் மனதில் இருக்கும் ஒன்று. அதை வெல்வதுதான் லட்சியம். அதற்கான அனைத்தையும் செய்வோம்.
இந்திய அணி அகராதியில் நான் என்ற வார்த்தையே கிடையாது. நாங்கள் என்ற வார்த்தைதான் உண்டு. இதுதான் அணியின் நிலை. ஒருவருடைய சாதனையை மற்றவர் கொண்டாடுவார்கள். ஏனென்றால், அது ஒரு அணியால் கிடைத்த வெற்றியாகும்.
ஒருநாள் தொடரை வென்ற இந்தியா டி20 தொடரையும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆஸ்திரேலியா தொடரை மனநிலை அளவில் வலிமை பெற்றுள்ளோம் என்பதையும், நெருக்கடியில் எப்படி விளையாட வேண்டும் என்பதையும் நிரூபித்துள்ளது. வான்கடேயில் படுதோல்வி அடைந்த பிறகு, அதில் இருந்து மீண்ட விதம் பாராட்டுக்குரியது.
இந்த அணி தற்போதுள்ள சூழ்நிலையில் இருந்து வருகிறது. முன்னதாக எது இடந்தாலும் அது வரலாறு. முன்னதாக சிறப்பாக என்ன செய்தோமோ, அதை எதிர்காலத்தில் செய்ய விரும்புகிறோம்.
கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்வதை நாங்கள் விரும்புகிறோம். ஷிகர் தவான் காயம் அடைந்தது கவலை அளிக்கிறது. மிகப்பெரிய கவலை. ஏனென்றால் தவான் சீனியர் வீரர். அவர் ஒரு மேட்ச் வின்னர் வீரர். இதுபோன்று வீரர் ஒருவர் காயம் அடையும்போது அணியின் ஒவ்வொருவரும் வருத்தம் அடைவார்கள்’’ என்றார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற எங்களுக்கு, அடுத்த இலக்கு நம்பர் ஒன் இடம்தான் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியை சந்தித்தது. 2-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் 2-1 என முன்னிலையில் உள்ளது. கடந்த 8 வருடத்திற்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து பெற்ற முதல் இன்னிங்ஸ் வெற்றி இதுவாகும். இந்த வெற்றி அந்த அணிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்த உத்வேகத்துடன் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு என கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியை சந்தித்தது. 2-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் 2-1 என முன்னிலையில் உள்ளது. கடந்த 8 வருடத்திற்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து பெற்ற முதல் இன்னிங்ஸ் வெற்றி இதுவாகும். இந்த வெற்றி அந்த அணிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்த உத்வேகத்துடன் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு என கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஒருநாள் தொடரில் டிரென்ட் போல்ட் - ரோகித் சர்மா இடையிலான மோதல் ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும் என நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் தொடங்குகிறது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் புது பந்து (NEW BALL) சிறிய அளவில் ஸ்விங் ஆகும். மேலும் நியூசிலாந்து சீதோஷ்ண நிலையில் கூடுதலாக ஸ்விங் ஆகும். புது பந்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அபாரமாக பந்து வீசக்கூடியவர். இவர் புது பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர்.
அதேவேளையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மா ஸ்விங் பந்தை சிறப்பாக எதிர்கொண்டது கிடையாது.
இதனால் ரோகித் சர்மா VS டிரென்ட் போல்ட் மோதல் ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும் என நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் புது பந்து (NEW BALL) சிறிய அளவில் ஸ்விங் ஆகும். மேலும் நியூசிலாந்து சீதோஷ்ண நிலையில் கூடுதலாக ஸ்விங் ஆகும். புது பந்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அபாரமாக பந்து வீசக்கூடியவர். இவர் புது பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர்.
அதேவேளையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மா ஸ்விங் பந்தை சிறப்பாக எதிர்கொண்டது கிடையாது.
இதனால் ரோகித் சர்மா VS டிரென்ட் போல்ட் மோதல் ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும் என நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.






