என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- ஐ.பி.எல். திருவிழா 2024
செய்திகள்
X
நிதிஷ் ராணாவின் அதிரடி சதத்தால் விதர்பாவிற்கு எதிராக 347 ரன் இலக்கை எட்டுப்பிடித்தது டெல்லி
Byமாலை மலர்22 Jan 2020 2:35 PM GMT (Updated: 22 Jan 2020 2:35 PM GMT)
ரஞ்சி டிராபியில் விதர்பா அணியால் நிர்ணயிக்கப்பட்ட 347 ரன்னை நிதிஷ் ராணாவின் அதிரடி சதத்தால் எளிதாக எட்டிப்பிடித்து அசத்தியது டெல்லி.
ரஞ்சி டிராபியில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி - விதர்பா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த விதர்பா 179 ரன்னில் சுருண்டது. டெல்லி அணியும் முதல் இன்னிங்சில் திணறி 163 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா கணேஷ் சதிஷ் (100) சதத்தால் 330 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனால் டெல்லி அணியின் வெற்றிக்கு 347 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது விதர்பா. 347 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்திருந்தது. சண்டேலா 2 ரன்னுடனும், டலால் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சண்டேலா, டலால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சண்டேலா 75 ரன்களும், டலால் 82 ரன்களும் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் வந்த நிதிஷ் ராணா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவருக்கு துணையாக துருவ் ஷோரே 48 பந்தில் 44 ரன்கள் அடித்தார். ராணா 68 பந்தில் 105 ரன்கள் விளாச டெல்லி 73 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா கணேஷ் சதிஷ் (100) சதத்தால் 330 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனால் டெல்லி அணியின் வெற்றிக்கு 347 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது விதர்பா. 347 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்திருந்தது. சண்டேலா 2 ரன்னுடனும், டலால் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சண்டேலா, டலால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சண்டேலா 75 ரன்களும், டலால் 82 ரன்களும் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் வந்த நிதிஷ் ராணா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவருக்கு துணையாக துருவ் ஷோரே 48 பந்தில் 44 ரன்கள் அடித்தார். ராணா 68 பந்தில் 105 ரன்கள் விளாச டெல்லி 73 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- ஐ.பி.எல். திருவிழா 2024
X