என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் நடந்த டி20 தொடரை இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது
    • ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.

    வெல்லிங்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.

    இதனை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 2-0 என நியூசிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சேல் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் முதல் 4 வீரர்களான ஜேமி ஸ்மித் 5, டக்கெட் 8, ரூட் 2, ஹாரி ப்ரூக் 6 ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 222 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டும் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இருவரும் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. கான்வே 34 ரன்னிலும் ரச்சின் 46 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனை தொடர்ந்து வந்த வில் யங் 1 ரன்னிலும் டாம் லாதம் 10, பிரெஸ்வெல் 13 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து மிட்செல் மற்றும் சாட்னர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சாட்னர் 27 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து நாதன் ஸ்மித் 2 ரன்னிலும் கடைசி வரை போராடிய மிட்செல் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 196 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்ததால் ஆட்டம் பரபரப்பானது.

    இந்நிலையில் ஜகரி ஃபௌல்க்ஸ்- பிளேர் டிக்னர் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் நியூசிலாந்து அணி 44.4 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் 11 ரன் எடுத்தார்.
    • பாபர் அசம் 130 டி20 போட்டியில் 4234 ரன் எடுத்துள்ளார்.

    லாகூர்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 இருபது ஓவர் தொடரில் ராவல்பிண்டியில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.2 ஓவரில் 110 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 13.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் 11 ரன் எடுத்தார். 9-வது ரன்னை எடுத்தபோது அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக ரன் எடுத்த ரோகித் சர்மா சாதனையை முறியடித்தார். பாபர் அசம் 130 ஆட்டத்தில் 4234 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 4231 ரன்னுடன் (159 போட்டி) 2-வது இடத்தில் உள்ளார்.

    ஆண்கள் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:-

    பாபர் அசாம் -130 போட்டிகளில் 4232*

    ரோகித் சர்மா - 159 போட்டிகளில் 4231

    விராட் கோலி - 125 போட்டிகளில் 4188

    ஜோஸ் பட்லர் - 144 போட்டிகளில் 3869

    • போலினா-மரியா ஜோடி விலகியதால் இந்திய ஜோடி அரை இறுதி வாய்ப்பை பெற்றது.
    • இரட்டையிர் பிரிவில் இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா ஜோடி அரை இறுதியில் இந்தோனேசியாவுடன் ஜேனிஸ் டிஜென்-அல்டிலா ஜோடியை சந்திக்கிறது.

    சென்னை:

    2-வது சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் (டபிள்யூ.டி.ஏ.250 ) போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த கால் இறுதி ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென் ( இந்தோனேசியா), 7-ம் நிலை வீராங்கனையான கிம்பெர்லி பிரெல் (ஆஸ்திரேலியா) , ஜோர்னா கார்லேண்ட் ( சீன தைபே), லான்லானா தராருடீ (தாய்லாந்து) ஆகியோர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா போசலே ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. போலினா-மரியா ஜோடி விலகியதால் இந்திய ஜோடி அரை இறுதி வாய்ப்பை பெற்றது.

    மற்றொரு இந்திய ஜோடியான மாயா-வைஷ்ணவி ஜோடி கால் இறுதியில் தோற்றது. முதல் வரிசையில் இருக்கும் ஸ்டார்ம் ஹண்டர் (ஆஸ்திரேலியா)-மோனிகா (ருமேனியா) ஜோடி 6-2, 6-1 என்ற கணக்கில் டாட்டியானா-யஷினா ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    இன்று மாலை நடைபெறும் ஒற்றையர் அரை இறுதி ஆட்டங்களில் லான்லானை தராருட்-ஜேனிஸ் டிஜென், கிம்பெர்லி-ஜோர்னா கார்லேணட் மோதுகிறார்கள்.

    இரட்டையிர் பிரிவில் இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா ஜோடி அரை இறுதியில் இந்தோனேசியாவுடன் ஜேனிஸ் டிஜென்-அல்டிலா ஜோடியை சந்திக்கிறது.

    • பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான ஏசிசி தலைவரிடமிருந்து நாங்கள் கோப்பையை வாங்கமுடியாது.
    • கோப்பை அவரது கைகளிலிருந்து வரக்கூடாது, ஆனால் வர வேண்டும் என கூறினார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது.

    இதையடுத்து, அந்தக் கோப்பையை மோசின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர். இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது.

    அதற்குப் பதிலளித்த நக்வி, கோப்பையை தாம்தான் வழங்குவேன் எனவும் வரும் நவம்பர் 10-ம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்துகொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஆசிய கோப்பையை அவரது கைகளிலிருந்து வாங்க மாட்டோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சில்-ஐ அணுகி 10 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் எந்தவித நல்ல பதிலும் வரவில்லை. நாங்கள் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். அதனால் நவம்பர் மாதம் 4-ந் தேதி நடக்கும் ஐசிசி ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து பிரச்சனைகளை எழுப்ப உள்ளோம்.

    ஆசிய கோப்பை எங்களிடம் வரும். அது நிச்சயம். ஏனென்றால் அதனை இந்தியா வென்றுள்ளது. நாங்கள் அதை அவரிடமிருந்து (மொஹ்சின் நக்வி) வாங்க வேண்டியிருந்தால், இறுதிப் போட்டியின் போதே வாங்கிருப்போம்.

    எங்கள் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது. நாங்கள் அவரிடமிருந்து அதை வாங்க விரும்பவில்லை. எனவே, பிசிசிஐயின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான ஏசிசி தலைவரிடமிருந்து நாங்கள் கோப்பையை வாங்கமுடியாது. எனவே, கோப்பை அவரது கைகளிலிருந்து வரக்கூடாது, ஆனால் வர வேண்டும்.

    என பிசிசிஐ செயலாளர் கூறினார்.

    • ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார்.
    • ஒருநாள் உலக கோப்பை தொடரில் மந்தனா 2 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார்.

    மும்பை,

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    இதற்கிடையே ஸ்மிருதி மந்தனாவும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பலாஷ் முச்சல் இசையமைப்பாளராக உள்ளார். சில ஆல்பங்களையும் இவர் வெளியிட்டிருக்கிறார்.

    இந்நிலையில் ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல் ஜோடிக்கு நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள ஸ்மிருதியின் சொந்த ஊரான சங்லியில் திருமண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் மந்தனா 2 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது.
    • தான், நலமாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் எக்ஸ் தளத்தில் ஷ்ரேயாஸ் தெரிவித்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

    'ஸ்கேன்' பரிசோதனை மேற்கொண்ட போது, மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    சில நாட்களிலேயே அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்கானிப்பில் இருந்து வந்தார். 2 நாட்களுக்கு முன்னர் நலமாக இருப்பதாகவும் தனது நலனுக்காக வேண்டிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் அவர் குணமடைந்ததில் பிசிசிஐ மருத்துவக் குழுவும், சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் இன்று தொடங்கி 8-ந்தேதி வரை நடக்கிறது.
    • இதில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் வீராங்கனைகள் ஸ்டெபிகிராப், செரீனா வில்லியம்ஸ் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    ரியாத்:

    ஆண்டுதோறும் முன்னணி 8 வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் இன்று தொடங்கி 8-ந்தேதி வரை நடக்கிறது.

    இதில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் வீராங்கனைகள் ஸ்டெபிகிராப், செரீனா வில்லியம்ஸ் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். 'ஸ்டெபிகிராப்' பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரம் அரினா சபலென்கா (பெலாரஸ்), நடப்பு சாம்பியன் கோகோ காப், ஜெசிகா பெகுலா (இருவரும் அமெரிக்கா), ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி) ஆகியோரும், 'செரீனா' பிரிவில் விம்பிள்டன் சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து), அமன்டா அனிசிமோவா, மேடிசன் கீஸ் (இருவரும் அமெரிக்கா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

    போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.137 கோடியாகும். போட்டி கட்டணம், லீக் சுற்றுக்குரிய பரிசு என ஒரு வீராங்கனை தோல்வியே சந்திக்காமல் வாகை சூடினால் ரூ.46½ கோடியை பரிசாக அள்ளுவார். முதல் நாளில் ஸ்வியாடெக்- மேடிசன் கீஸ், அனிசிமோவா- ரைபகினா சந்திக்கிறார்கள்.

    • இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டும் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    வெல்லிங்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.

    இதனை தொடர்ந்து நடந்து வரும் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 2-0 என நியூசிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சேல் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் முதல் 4 வீரர்களான ஜேமி ஸ்மித் 5, டக்கெட் 8, ரூட் 2, ஹாரி ப்ரூக் 6 ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்த வந்த ஜேக்கப் பெத்தேல் 11,

    இதனையடுத்து சாம் கரண்- பட்லர் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தது. சாம் கரண் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் பட்லர் 38 ரன்னில் அவுட் ஆனார்.

    கடைசி வரை போராடிய ஜேமி ஓவர்டன் அரை சதம் கடந்து அசத்தினார். அவர் 68 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 222 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    நியூசிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டும் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.
    • ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்த பழைய எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடந்த பரபரப்பான அரைஇறுதியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127 ரன், 14 பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89 ரன்) ஆகியோரது அசாத்தியமான பேட்டிங்கால் இந்திய அணி 48.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இதன் மூலம் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை விரட்டிப்பிடித்த அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்தது.

    கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்கு அழைத்து சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளப்பூரிப்பில் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட நேரம் தேம்பி தேம்பி அழுதார்.

    இதையடுத்து அவர் பேசுகையில், முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லாம் கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது எண்ணமாக இருந்தது. கடந்த ஆண்டு உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன். நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார். தன்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்று கூறி நெகிழ்ந்தார்.

    127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்த பழைய எக்ஸ் தள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

    2018ம் ஆண்டு ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் செய்த வலைப்பயிற்சிக்கு பின், 'ஜெமிமா ரோட்ரிக்ஸ் என்ற பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்று அவள் சில தோல்விகளைச் சந்தித்தார். ஆனால் ஜெமிமா இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுப்பார்' என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் பதிவிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.



    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது.
    • இன்று நடந்த இறுதிச்சுற்றில் புனேரி பல்தான் தோல்வி அடைந்தது.

    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடைபெற்றது. லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்த நிலையில் தபாங் டெல்லி, புனேரி பல்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இன்று நடந்த இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி அணியும், புனேரி பல்தான் அணியும் மோதின.

    ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தன. முதல் பாதி முடிவில் டெல்லி அணி 20-14 என முன்னிலை பெற்றது.

    இறுதியில், தபாங் டெல்லி அணி 31-28 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

    • முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 19.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆப்கானிஸ்தான் 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஹராரே:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே வென்றது.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 19.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் சிக்கந்தர் ரசா 37 ரன்னில் அவுட் ஆனார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், முஜிப் உர் ரகுமான், அஹமத்சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து அணியை வெற்றிபெற வைத்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் டி 20 தொடரை கைப்பற்றியது.

    • ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா காயத்தால் வெளியேறினார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா, கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய எம்போகா 6-1 என முதல் செட்டை வென்றார். அடுத்த செட்டில் 3-1 என முன்னிலை பெற்றிருந்தபோது கலின்ஸ்கயா காயத்தால் விலகினார். இதையடுத்து, எம்போகா அரையிறுது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×