என் மலர்
புதுச்சேரி
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
இதற்கிடையில் தன்னிச்சையாக கிராம சபை கூட்டம் யாரும் நடத்த கூடாது அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆனாலும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டத்தை இன்று காலை நடத்த தி.மு.க.வினர் முடிவு செய்தனர்.
இதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கார் மூலம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்துக்கு காலை 10 மணிக்கு வந்தார்.
முன்னதாக அவருக்கு மாவட்ட எல்லையில் தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்த கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் அவர் கிராம மக்களிடையே பேசினார்.
அப்போது இந்த பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் செய்து கொடுக்கப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. இணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பொன்முடி, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01,46,846 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 23,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 336 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,47,092 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,17,834 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 24,661 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,914ஆக உயர்ந்துள்ளது.
காரைக்கால்:
புதுவை மாநில் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் வருகிற 27- ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சிவிழா நடைபெறவுள்ளது. அப்போது சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.
மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் தலைமையில், விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கு 48 மணி நேரம் முன்பும், 48 மணி நேரம் பின்பும், கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் கோவிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்கத் தலைவர் வக்கீல் நாதன் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணையின் முடிவில், கொரோனா விதிகளுக்குட்பட்டு சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்திருந்தார்.
மேலும் கவர்னர், மாவட்ட கலெக்டர், கோவில் நிர்வாக அதிகாரி, இந்து சமய அறநிலையத்துறை செயலர், வழக்கு தொடர்ந்தவர் ஆகிய 5 பேர் கொண்ட குழு, விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி பக்தர்களுக்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவுபடி, புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, மாவட்ட துணை கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்ஷ், புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை செயலர் சுந்தரேசன், வழக்கு தொடுத்த. வக்கீல் நாதன் ஆகிய 5 பேர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், காரைக்கால் அருகே தரங்கம்பாடியில் நடந்தது.
கூட்டம் முடிந்த பின்னர் கவர்னர் கிரண் பேடி திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று, சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறுகையில் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சனி பெயர்ச்சிவிழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்தும், பக்தர்கள் எவ்வாறு பாதுகாப்பாக தரிசனத்துக்கு அனுமதிப்பது, பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சனிப்பெயர்ச்சி விழாவை, குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்புடன் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
கருணையின் வடிவான ஏசுநாதர், மரியன்னையின் மகனாக இப்பூவுலகில் அவதரித்த அற்புத திருநாள் இந்த கிறிஸ்துமஸ் தினமாகும். அன்பின் மகத்துவத்தினை அகில உலகிற்கும் எடுத்துரைத்த ஏசுநாதர் மன்னிக்கும் குணத்தின் மகத்துவத்தையும் அறிய வைத்தார். எத்தனை இடர்கள் எதிர்ப்படினும் கொண்ட கொள்கையில் மாறாதிருக்கவேண்டும் என்பது ஏசுபிரானின் வாழ்க்கை நமக்களிக்கும் படமாகும். புதுவை மக்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறுசனிபகவான் கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அப்போது, சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால், பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம், ஆன்லைன் முன் பதிவை கட்டாயமாக்கியுள்ளது.
விழாவிற்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், கோவில் உள்ளே, வெளியே பக்தர்களின் நலன் கருதி, சாலை, சாக்கடை, மின்விளக்குகள் சீரமைப்பு, கைகழுவும் சானிடைசர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அன்னதானம் வழங்கல், நிழல் பந்தல், நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறை வசதிகள், கோவிலைச்சுற்றி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி. டி.வி. கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், வரும் 26, 27-ந் தேதி மற்றும் அடுத்த (ஜனவரி) மாதம் இறுதிவரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமையும், சனிபகவான் தரிசனத்திற்கு, தேவஸ்தானம் மூலம் ஏற்பாடு செய்துள்ள ஆன்லைன் முன்பதிவு அவசியம். (ஆன்லைன் முகவரி- www.thirunallarutemple.org) முன் பதிவு செய்யாத யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல், முககவசம், சமூக இடைவெளி மிக அவசியம்.
சனிப்பெயர்ச்சி நாள் மட்டுமல்லாது அன்றைய தேதியிலிருந்து, ஒரு மண்டலத்துக்கு (அடுத்த 48 நாட்கள்) இக்கோவிலில் சனி பகவானை தரிசனம் செய்யலாம். அந்த தரிசனம் சனிப்பெயர்ச்சி அன்று கிடைக்கும் பலனை பெற்றுத்தரும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, தேவஸ்தான ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல், திருநள்ளாறுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, கோவிலைச் சுற்றி, திருநள்ளாறு ரிங் ரோடு ஹெலிபேட் தளம், திருநள்ளாறு கான்பெட் பெட்ரோல் நிலையம், ரிஜிஸ்டர் அலுவலகம் மற்றும் செருமாவிளங்கை பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி, கோட்டுசேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, திருமலைராயன்பட்டினம் மின்திறல் குழுமம், அம்பகரத்தூர் அரசு திருவள்ளுவர் பள்ளி அருகில் என 7 இடங்களில் ஆன்லைன் முன்பதிவு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு முன்பதிவு செய்ய ஆதார்கார்டு அவசியம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முக்கியமாக, சனிப்பெயர்ச்சி அன்றும் அதற்கு அடுத்து வரும் 48 நாட்களும், சனி பகவானின் நளன் குளத்தில் புனித நீராடவோ, மத சடங்குகள் செய்யவோ அனுமதி இல்லை. அதனால், நளன்குளம் பக்கம் பக்தர்கள் செல்ல வேண்டாம். சனிப்பெயர்ச்சி அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது.
விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் தலைமையில், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.






