என் மலர்
செய்திகள்

விபத்து
வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மதுக்கடை ஊழியர் பலி
வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மதுக்கடை ஊழியர், சாலையின் குறுக்கே சென்ற பன்றி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உறுவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 48). புதுவையில் உள்ள தனியார் மதுபான கடையில் ஊழியராக வேலை செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ராஜரத்தினம் வீட்டுக்கு புறப்பட்டார்.
வில்லியனூர் செல்வா நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே சென்ற பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறிய ராஜரத்தினம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அவர் புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி ராஜரத்தினம் பரிதாபமாக இறந்துபோனார்.
இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story






