என் மலர்
தேர்தல் செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜனதா நாடு முழுவதும் வெற்றியை கொண்டாடி வருகிறது.
இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவை எப்போது நடத்துவது என்ற ஆலோசனை தொடங்கி உள்ளது. அனேகமாக அடுத்த வாரம் பதவி ஏற்பு விழா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு மோடி பதவி ஏற்ற போது தெற்கு ஆசிய நாட்டு தலைவர்களை அழைத்து இருந்தார். இந்த தடவை அந்த நடைமுறைகளில் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.
தேர்தல் முடிவுகள் இன்று இரவுக்குள் முழுமையாக தெரிந்து விடும். அதன் பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும்.
அந்த சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே வருகிற சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக ஒருமனதுடன் மோடி தேர்வு செய்யப்படுவார். அதற்கான ஆவணத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் கையெழுத்திடுவார்கள்.
அந்த கடிதத்துடன் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதன் அடிப்படையில் ஜனாதிபதி அழைப்பு விடுப்பார். அதன் பிறகு டெல்லியில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும்.
கடந்த முறை மோடி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த மூத்த தலைவர்களில் சிலர் இந்த மந்திரிசபையில் இடம் பெறமாட்டார்கள். அதுபோல சில மத்திய மந்திரிகள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். சில மத்திய மந்திரிகள் மீது மோடி அதிருப்தியில் உள்ளார்.
எனவே கடந்த முறை மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர்களில் பலர் இந்த தடவை இடம் பெற வாய்ப்பு இல்லை. முக்கிய இலாகாக்களுக்கு புதிய முகங்கள் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.
மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜனதா நாடு முழுவதும் வெற்றியை கொண்டாடி வருகிறது.
இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவை எப்போது நடத்துவது என்ற ஆலோசனை தொடங்கி உள்ளது. அனேகமாக அடுத்த வாரம் பதவி ஏற்பு விழா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு மோடி பதவி ஏற்ற போது தெற்கு ஆசிய நாட்டு தலைவர்களை அழைத்து இருந்தார். இந்த தடவை அந்த நடைமுறைகளில் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.
தேர்தல் முடிவுகள் இன்று இரவுக்குள் முழுமையாக தெரிந்து விடும். அதன் பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும்.
அந்த சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே வருகிற சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக ஒருமனதுடன் மோடி தேர்வு செய்யப்படுவார். அதற்கான ஆவணத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் கையெழுத்திடுவார்கள்.
அந்த கடிதத்துடன் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதன் அடிப்படையில் ஜனாதிபதி அழைப்பு விடுப்பார். அதன் பிறகு டெல்லியில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும்.
கடந்த முறை மோடி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த மூத்த தலைவர்களில் சிலர் இந்த மந்திரிசபையில் இடம் பெறமாட்டார்கள். அதுபோல சில மத்திய மந்திரிகள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். சில மத்திய மந்திரிகள் மீது மோடி அதிருப்தியில் உள்ளார்.
எனவே கடந்த முறை மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர்களில் பலர் இந்த தடவை இடம் பெற வாய்ப்பு இல்லை. முக்கிய இலாகாக்களுக்கு புதிய முகங்கள் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவின்படி 1191 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் உள்ளார்.
கரூர் :
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதன், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல் அமீது, நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம், மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில் மோகன் ராஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 63 பேர் போட்டியிட்டனர்.
மொத்தமுள்ள 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 81 ஆயிரத்து 143 பேரும், பெண் வாக்காளர்கள் 91 ஆயிரத்து 972 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 115 பேர் வாக்களித்தனர். இது 84.33 சதவீதம் ஆகும்.

இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
முதல் சுற்று வாக்கு விபரம் வருமாறு:-
செந்தில்பாலாஜி (தி.மு.க.)-5,102
செந்தில்நாதன் (அ.தி.மு.க.)-3,911
சாகுல் அமீது (அ.ம.மு.க.)-347
செல்வம் (நாம் தமிழர்)-91
மோகன்ராஜ் (மக்கள் நீதி மய்யம்)-57
முதல் சுற்று முடிவின் படி 1191 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி முன்னிலையில் இருந்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதன், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல் அமீது, நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம், மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில் மோகன் ராஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 63 பேர் போட்டியிட்டனர்.
மொத்தமுள்ள 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 81 ஆயிரத்து 143 பேரும், பெண் வாக்காளர்கள் 91 ஆயிரத்து 972 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 115 பேர் வாக்களித்தனர். இது 84.33 சதவீதம் ஆகும்.
வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு கரூர் தளவாபாளையம் குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
முதல் சுற்று வாக்கு விபரம் வருமாறு:-
செந்தில்பாலாஜி (தி.மு.க.)-5,102
செந்தில்நாதன் (அ.தி.மு.க.)-3,911
சாகுல் அமீது (அ.ம.மு.க.)-347
செல்வம் (நாம் தமிழர்)-91
மோகன்ராஜ் (மக்கள் நீதி மய்யம்)-57
முதல் சுற்று முடிவின் படி 1191 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி முன்னிலையில் இருந்தார்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக வருவதால் 35 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய திண்டுக்கல்லை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
திண்டுக்கல்:
எம்.ஜி.ஆர். 1971-ம் ஆண்டு முதன் முதலில் கட்சி ஆரம்பித்தவுடன் சந்தித்த தேர்தல் திண்டுக்கல் பகுதி மக்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் தான். அந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் சுமார் 2,60,824 வாக்குகள் பெற்று அமோக வெற்றி அடைந்தார். அந்த இடைத்தேர்தலில் தான் அதிமுக முதல் முதலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி வெற்றிப்பெற்று திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது.
அதன் பிறகு திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க.வுக்கு மிகவும் ராசியான தொகுதியாக கருதப்பட்டது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். அந்த சூழ்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிட்டார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பாக வேலுச்சாமி போட்டியிட்டார். அ.ம.மு.க. சார்பாக ஜோதிமுருகன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் சுதாகர், நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரும் போட்டியிட்டனர்.
இந்த தொகுதி உருவாக்கப்பட்ட 1952-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் இந்த தொகுதியில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி வெற்றி பெற்று வந்தன.
1996-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் இருந்த த.மா.கா. இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2 முறை அ.தி.மு.க.வும், பின்பு 2 முறை காங்கிரசும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் இந்த தொகுதி அ.தி.மு.க. வசமானது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உதயகுமார் வெற்றி பெற்று எம்.பி.யானார். அ.தி.மு.க.வுக்கு ராசியான தொகுதி என்பதால் இங்கு பெரும்பாலும் தி.மு.க. போட்டியிடுவதை தவிர்த்து கூட்டணி கட்சியினருக்கே ஒதுக்கி வந்தது. ஆனால் தற்போது 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க. தனது வேட்பாளரை நிறுத்தியது.
இந்த தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக வருவதால் 35 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய திண்டுக்கல்லை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
எம்.ஜி.ஆர். 1971-ம் ஆண்டு முதன் முதலில் கட்சி ஆரம்பித்தவுடன் சந்தித்த தேர்தல் திண்டுக்கல் பகுதி மக்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் தான். அந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் சுமார் 2,60,824 வாக்குகள் பெற்று அமோக வெற்றி அடைந்தார். அந்த இடைத்தேர்தலில் தான் அதிமுக முதல் முதலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி வெற்றிப்பெற்று திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது.
அதன் பிறகு திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க.வுக்கு மிகவும் ராசியான தொகுதியாக கருதப்பட்டது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். அந்த சூழ்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிட்டார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பாக வேலுச்சாமி போட்டியிட்டார். அ.ம.மு.க. சார்பாக ஜோதிமுருகன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் சுதாகர், நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரும் போட்டியிட்டனர்.
இந்த தொகுதி உருவாக்கப்பட்ட 1952-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் இந்த தொகுதியில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி வெற்றி பெற்று வந்தன.
1996-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் இருந்த த.மா.கா. இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2 முறை அ.தி.மு.க.வும், பின்பு 2 முறை காங்கிரசும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் இந்த தொகுதி அ.தி.மு.க. வசமானது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உதயகுமார் வெற்றி பெற்று எம்.பி.யானார். அ.தி.மு.க.வுக்கு ராசியான தொகுதி என்பதால் இங்கு பெரும்பாலும் தி.மு.க. போட்டியிடுவதை தவிர்த்து கூட்டணி கட்சியினருக்கே ஒதுக்கி வந்தது. ஆனால் தற்போது 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க. தனது வேட்பாளரை நிறுத்தியது.
இந்த தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக வருவதால் 35 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய திண்டுக்கல்லை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
கரூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முதல் சுற்று முடிவின்படி 19,663 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.
கரூர்:
கரூர் பாராளுமன்ற தொகுதியில் 6,78,373 ஆண்கள், 7,08,196 பெண்கள் மற்றும் 67 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13,86,636 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதியில் கரூர், கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், விராலிமலை, மணப்பாறை, அரவக்குறிச்சி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் தம்பிதுரை, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அ.ம.மு.க. வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேல், மக்கள் நீதி மய்யம் கட்சியில் டாக்டர் ஹரிகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா உள்பட மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 10,97,024 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். ஆண்கள் 5,32,760 பேரும், பெண்கள் 5,64,233 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 31 பேரும் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். இது 79.11 சதவீதமாகும்.
வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் மற்றும் உதவியாளர் மற்றும் பணியாளர்கள் பணியில் இருந்தனர்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-
ஜோதிமணி (காங்கிரஸ்)-35,110
தம்பிதுரை (அ.தி.மு.க.)-15,447
முதல் சுற்று முடிவின்படி 19,663 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி முன்னிலையில் இருந்தார்.
கரூர் பாராளுமன்ற தொகுதியில் 6,78,373 ஆண்கள், 7,08,196 பெண்கள் மற்றும் 67 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 13,86,636 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதியில் கரூர், கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், விராலிமலை, மணப்பாறை, அரவக்குறிச்சி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் தம்பிதுரை, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அ.ம.மு.க. வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேல், மக்கள் நீதி மய்யம் கட்சியில் டாக்டர் ஹரிகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா உள்பட மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 10,97,024 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். ஆண்கள் 5,32,760 பேரும், பெண்கள் 5,64,233 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 31 பேரும் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். இது 79.11 சதவீதமாகும்.
வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் மற்றும் உதவியாளர் மற்றும் பணியாளர்கள் பணியில் இருந்தனர்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-
ஜோதிமணி (காங்கிரஸ்)-35,110
தம்பிதுரை (அ.தி.மு.க.)-15,447
முதல் சுற்று முடிவின்படி 19,663 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி முன்னிலையில் இருந்தார்.
தென்சென்னையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 3 மணி நேரமாகியும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
சென்னை:

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் முன்னிலை நிலவரம் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 36 பாராளுமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. இந்த மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மூன்று மணி நேரம் ஆகியும், வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் முன்னிலை நிலவரம் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 36 பாராளுமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. இந்த மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மூன்று மணி நேரம் ஆகியும், வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் கமல் கட்சிக்கு சென்னையின் 3 தொகுதிகள் மற்றும் கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் 3 வது இடம் கிடைத்து வருகிறது.
சென்னை:
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கமல் கட்சிக்கு சென்னையின் 3 தொகுதிகள் மற்றும் கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் 3 வது இடம் கிடைத்து வருகிறது. முக்கியமாக பிரபலங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் மூன்றாமிடமும் மற்ற தொகுதிகளில் நான்காவது, ஐந்தாம் இடங்களும் கிடைத்து வருகின்றன.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 3 முதல் 4 சதவீத வாக்குகள் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்று இருக்கிறது. சட்டமன்ற இடைத்தேர்தலில் அந்த கட்சிக்கு 4 மற்றும் 5 ஆம் இடங்களே கிடைத்துள்ளன. சில தொகுதிகளில் வாக்குகளே பதிவாகாத நிலையும் இருந்து வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கமல் கட்சிக்கு சென்னையின் 3 தொகுதிகள் மற்றும் கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் 3 வது இடம் கிடைத்து வருகிறது. முக்கியமாக பிரபலங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் மூன்றாமிடமும் மற்ற தொகுதிகளில் நான்காவது, ஐந்தாம் இடங்களும் கிடைத்து வருகின்றன.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 3 முதல் 4 சதவீத வாக்குகள் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்று இருக்கிறது. சட்டமன்ற இடைத்தேர்தலில் அந்த கட்சிக்கு 4 மற்றும் 5 ஆம் இடங்களே கிடைத்துள்ளன. சில தொகுதிகளில் வாக்குகளே பதிவாகாத நிலையும் இருந்து வருகிறது.
கேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே 20 தொகுதியிலும் முன்னிலையில் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.
திருவனந்தபுரம் :
கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் கட்டமாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது.
மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கூட்டணிகளே அதிக வாக்குகள் பெற்றன. பாரதீய ஜனதாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி முதல் முறையாக கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதனால் கேரளாவில் காங்கிரஸ் செல்வாக்கு அதிகரித்தது. காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் வெளியானது.
இதனை உண்மையாக்கும் வகையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். இத்தொகுதியில் பாரதீய ஜனதா 3-வது இடத்தில் இருந்தது.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது கண்ணூர், காசர்கோடு, சாலக்குடி தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. அதன் பிறகு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தபோது நிலைமை தலைகீழானது. அனைத்து தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டனர். 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை வகித்தது.
கேரளாவில் பாரதீய ஜனதா கட்சியின் மேல்சபை எம்.பி.யாக இருந்த நடிகர் சுரேஷ்கோபி திருச்சூர் தொகுதி பாரதீயஜனதா வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இதனால் அத்தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது இத்தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதாபன் 2,500-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இவருக்கு அடுத்தப்படியாக கம்யூனிஸ்டு வேட்பாளர் மேத்யூ தாமசும், 3-வது இடத்தில் சுரேஷ்கோபியும் இருந்தனர்.
சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம் திட்டா தொகுதியிலும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கும் பாரதீய ஜனதா வேட்பாளர் சுரேந்திரன் 3-வது இடத்தில் இருந்தார்.
திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டபோது பாரதீய ஜனதா வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் அதிக வாக்குகள் பெற்றார். சில மணி நேரத்தில் அவரை காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் பின்னுக்கு தள்ளினார். முதல் சுற்று முடிவில் சசிதரூர் 4,695 ஓட்டுக்கள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.
கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் கட்டமாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது.
மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கூட்டணிகளே அதிக வாக்குகள் பெற்றன. பாரதீய ஜனதாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி முதல் முறையாக கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதனால் கேரளாவில் காங்கிரஸ் செல்வாக்கு அதிகரித்தது. காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் வெளியானது.
இதனை உண்மையாக்கும் வகையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். இத்தொகுதியில் பாரதீய ஜனதா 3-வது இடத்தில் இருந்தது.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது கண்ணூர், காசர்கோடு, சாலக்குடி தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. அதன் பிறகு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தபோது நிலைமை தலைகீழானது. அனைத்து தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டனர். 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை வகித்தது.
கேரளாவில் பாரதீய ஜனதா கட்சியின் மேல்சபை எம்.பி.யாக இருந்த நடிகர் சுரேஷ்கோபி திருச்சூர் தொகுதி பாரதீயஜனதா வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இதனால் அத்தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது இத்தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதாபன் 2,500-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இவருக்கு அடுத்தப்படியாக கம்யூனிஸ்டு வேட்பாளர் மேத்யூ தாமசும், 3-வது இடத்தில் சுரேஷ்கோபியும் இருந்தனர்.
சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம் திட்டா தொகுதியிலும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கும் பாரதீய ஜனதா வேட்பாளர் சுரேந்திரன் 3-வது இடத்தில் இருந்தார்.
திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டபோது பாரதீய ஜனதா வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் அதிக வாக்குகள் பெற்றார். சில மணி நேரத்தில் அவரை காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் பின்னுக்கு தள்ளினார். முதல் சுற்று முடிவில் சசிதரூர் 4,695 ஓட்டுக்கள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.
பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.
சென்னை:
சென்னையில் தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரும் முன்னிலையில் உள்ளனர்.
வடசென்னையில் டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் உள்ளார். பா.ம.க. வேட்பாளர் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தார்.
மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் சாம்பால் குறைந்த ஓட்டுகள் வாங்கி பின் தங்கினார்.
தென்சென்னை தொகுதியில் ஆரம்பத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் முன்னிலை வகித்தார். பின்னர் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவரை முந்தினார்.
தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.
சென்னையில் தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரும் முன்னிலையில் உள்ளனர்.
வடசென்னையில் டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் உள்ளார். பா.ம.க. வேட்பாளர் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தார்.
மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் சாம்பால் குறைந்த ஓட்டுகள் வாங்கி பின் தங்கினார்.
தென்சென்னை தொகுதியில் ஆரம்பத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் முன்னிலை வகித்தார். பின்னர் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவரை முந்தினார்.
தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றிருந்ததையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் திரண்ட திமுக தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் முன்னணி நிலவரங்கள் காலை 9 மணி அளவில் வெளிவர தொடங்கின. இதில் தி.மு.க. பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திரண்ட திமுக தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். கருணாநிதி வாழ்க, மு.க.ஸ்டாலின் வாழ்க என்று முழக்கமிட்டனர்.
உற்சாக குரல் எழுப்பி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேரம் ஆக ஆக தொண்டர்கள் கூட்டம் அதிகமானது. திமுக வெற்றியை அனைவரும் கொண்டாடினார்கள்.
வெற்றி செய்தி காரணமாக அறிவாலயத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அங்கு உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அறிவாலயம் களை கட்டியது. தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் துள்ளிக்குதித்தனர்.
இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திரண்ட திமுக தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். கருணாநிதி வாழ்க, மு.க.ஸ்டாலின் வாழ்க என்று முழக்கமிட்டனர்.
உற்சாக குரல் எழுப்பி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேரம் ஆக ஆக தொண்டர்கள் கூட்டம் அதிகமானது. திமுக வெற்றியை அனைவரும் கொண்டாடினார்கள்.
வெற்றி செய்தி காரணமாக அறிவாலயத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அங்கு உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அறிவாலயம் களை கட்டியது. தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் துள்ளிக்குதித்தனர்.
டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது.
ஏற்கனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்ததால் வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் செய்து வந்தனர்.
டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திலும், மாநிலங்களில் உள்ள பா.ஜனதா அலுவலகங்களிலும் வெற்றி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இனிப்பு வகைகள், பட்டாசுகள் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
இன்று காலை முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியதில் இருந்து பா.ஜனதா தொண்டர்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. வட மாநிலங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் பா.ஜனதா தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றி விழாவை கொண்டாடினார்கள்.
டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வர வர பா.ஜனதா அலுவலகத்துக்கு தொண்டர்கள் வருகை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தலைவர்களும், பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வர தொடங்கினார்கள்.
இன்று மாலை பா.ஜனதா அலுவலகத்துக்கு மோடி, அமித்ஷா மற்றும் தலைவர்கள் வர உள்ளனர். அவர்கள் தொண்டர்கள் மத்தியில் பேசுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது.
ஏற்கனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்ததால் வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் செய்து வந்தனர்.
டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திலும், மாநிலங்களில் உள்ள பா.ஜனதா அலுவலகங்களிலும் வெற்றி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இனிப்பு வகைகள், பட்டாசுகள் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
இன்று காலை முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியதில் இருந்து பா.ஜனதா தொண்டர்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. வட மாநிலங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் பா.ஜனதா தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றி விழாவை கொண்டாடினார்கள்.
டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பா.ஜனதா நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வர வர பா.ஜனதா அலுவலகத்துக்கு தொண்டர்கள் வருகை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தலைவர்களும், பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வர தொடங்கினார்கள்.
இன்று மாலை பா.ஜனதா அலுவலகத்துக்கு மோடி, அமித்ஷா மற்றும் தலைவர்கள் வர உள்ளனர். அவர்கள் தொண்டர்கள் மத்தியில் பேசுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் முதல் சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார்.
தேனி :
தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராதா கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது உள்ளிட்ட 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இநத தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 54 ஆயிரத்து 51 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 565 வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் உள்ளார்.
ம.நீ.ம - 29
நாம் தமிழர் - 198
தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராதா கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது உள்ளிட்ட 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இநத தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 54 ஆயிரத்து 51 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 565 வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் உள்ளார்.
ம.நீ.ம - 29
நாம் தமிழர் - 198
சிக்கிம் மாநிலத்தில் மாநில கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியும், அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும் ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
புதுடெல்லி:
சிக்கிம் மாநிலத்தில் 32 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 11-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கும், சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சாவுக்கும் கடும் போட்டி நிலவியது. இரு மாநில கட்சிகளும் தனித்து களம் இறங்கின. காங்கிரஸ், பா.ஜனதாவும் களத்தில் நின்றன.
இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்த போது ஆளுங்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. 5 தொகுதிகள் முன்னிலை அறிவித்தபோது அதில் அனைத்திலும் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் கையே ஓங்கி இருந்தது.
1994-ம் ஆண்டு முதல் பவன்குமார் சாம்லிங் முதல்-அமைச்சராக இருந்து வருகிறார். 1999, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றிபெற்றார்.
அருணாசல பிரதேச மாநில சட்டசபையில் 60 தொகுதிகள் உள்ளன. அங்கு பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்- அமைச்சராக பெமா கண்டு உள்ளார்.
அருணாசல பிரதேச சட்டசபைக்கு ஏப்ரல் 11-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அங்கு ஆட்சியை பிடிக்க பா.ஜனதா, காங்கிரஸ் மல்லுகட்டின. அருணாசலபிரதேச மக்கள் கட்சியும் போட்டியிட்டது. ஓட்டு எண்ணிக்கையின் போது பா.ஜனதா பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. இதன்மூலம் பா.ஜனதா மீண்டும் அருணாசல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கிறது.
சிக்கிம் மாநிலத்தில் 32 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 11-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கும், சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சாவுக்கும் கடும் போட்டி நிலவியது. இரு மாநில கட்சிகளும் தனித்து களம் இறங்கின. காங்கிரஸ், பா.ஜனதாவும் களத்தில் நின்றன.
இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்த போது ஆளுங்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. 5 தொகுதிகள் முன்னிலை அறிவித்தபோது அதில் அனைத்திலும் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் கையே ஓங்கி இருந்தது.
1994-ம் ஆண்டு முதல் பவன்குமார் சாம்லிங் முதல்-அமைச்சராக இருந்து வருகிறார். 1999, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றிபெற்றார்.
அருணாசல பிரதேச மாநில சட்டசபையில் 60 தொகுதிகள் உள்ளன. அங்கு பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்- அமைச்சராக பெமா கண்டு உள்ளார்.
அருணாசல பிரதேச சட்டசபைக்கு ஏப்ரல் 11-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அங்கு ஆட்சியை பிடிக்க பா.ஜனதா, காங்கிரஸ் மல்லுகட்டின. அருணாசலபிரதேச மக்கள் கட்சியும் போட்டியிட்டது. ஓட்டு எண்ணிக்கையின் போது பா.ஜனதா பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. இதன்மூலம் பா.ஜனதா மீண்டும் அருணாசல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கிறது.






