என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    ராஜபாளையம்

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் அம் மையப்ப நாடார் ஆரம்பப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற் றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டி யன் குத்து விளக்கேற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காக் கும் திட்டம், கலைஞர் மருத்துவ காப்பீடு திட் டத்தின் மூலம் பொதுமக்கள் உயிரை காக்கும் ஒரே முதல் வர் நமது முதல்வர் தான். இந்தியாவில் மருத்துவத் துறையில் பல்வேறு சாத னைகளை செய்துவரும் தமிழ்நாடு முதல்வருக்கு நாம் எப்போதும் உறுதுணை யாக இருக்க வேண்டும்.

    ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை யை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த அனைத்து பணிகளும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் மருத்து வமனை திறக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் தலை மை மருத்துவர்கள் கருணாகரபிரபு சுரேஷ், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், பொது மக்கள், கிளை செயலாளர் தங்க மணி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

    • ராஜபாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரெங்க பாளையம் சீட்டு அழகுராஜா குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சக்கராஜா கோட்டை முதனூர் தாயாதியார் சாவடியில் ஸ்ரீரெங்கபாளையம் சீட்டு அழகுராஜா நினைவாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, சக்கராஜாகோட்டை சத்திரிய ராஜுக்கள் பொதுமகாசபை, விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுத்துச் சங்கம் நிதி உதவியுடன் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. சக்கராஜாகோட்டை ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட்டராஜா முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அறுவை சிகிச் சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உடனடியாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு விழிலென்ஸ் பொருத்துதல், உணவு, தங்கும் இடம், மருத்துவம் மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தையும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது. மேலும் இலவச பல் சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீரெங்க பாளையம் சீட்டு அழகுராஜா குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சிறப்பாக பணியாற்றிய வருவாய் அலுவலர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆகஸ்டு மாத பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆகஸ்டு மாத பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப் பாக பணியாற்றிய வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வருவாய் வட்டா ட்சியர் வெங்கடேசன் முதல் பரிசும், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரெங்கநாதன் 2-ம் பரிசும், ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் 3-ம் பரிசும், சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர்களில் காரியா பட்டி தனி வட்டாட்சியர் அய்யக்குட்டி முதல் பரிசும், சிவகாசி தனி வட்டாட்சியர் சாந்தி 2-ம் பரிசும், அருப்புக்கோட்டை தனி வட்டாட்சியர் மகேஸ்வரி 3-ம் பரிசும், முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் ராஜமோகன் முதல்பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி மற்றும் வத்திராயிருப்பு மண்டல துணை வட்டாட்சியர் (பொ) ரமேஷ்குமார் ஆகியோருக்கு 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் அழகுப்பிள்ளை 2-ம் பரிசும், உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிக ளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்க ளில் ராஜபாளையம் வட்டத்துணை ஆய்வாளர் ராமச்சந்திரன் முதல் பரிசும், விருதுநகர் வட்டத்துணை ஆய்வாளர் அரவிந்தன் 2-ம் பரிசும், சிவகாசி வட்டத்துணை ஆய்வாளர் சுப்புராஜ் 3-ம் பரிசும், அதிக எண்ணிக்கை யில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்டம் நில அளவர் காஜாமைதீன் முதல் பரிசும், ராஜ பாளையம் வட்டம் குறுவட்ட அளவர் காளிமுத்து 2-ம் பரிசும், ஸ்ரீவில்லிபுத்தூர் சார் ஆய்வாளர் சங்கிலீஸ் வரி 3-ம் பரிசினையும் கலெக்டர் வழங்கினார்.

    • ராஜபாளையத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
    • எஸ்.சி துறை தலைவர் கோவிந்தன், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் அய்யனார் தலைமையில் பொதுசெயலாளர் செல்வராஜ், ராஜபாளையம் நகர் காங்கிரஸ் துணைதலைவர் தனசேகரன் முன்னிலையில் ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் பொதுகுழு உறுப்பினர் குமாரசாமிராஜா, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், அண்ணாதுரை, ஜ.என்.டி.யு.சி தலைவர் தங்கவேல், விவசாய பிரிவு மாநிலசெயலாளர் மணிகண்டன், செட்டியார் பட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராமர், நாக செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் கோவிந்தன், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீரனின் தியாகத்தை போற்றும் கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கல்லிற்கு சேதம் விளைவிப்பருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் கட்டனூர் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வா ளர்களான செல்ல பாண்டி யன், ஆய்வாளர்.ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் போன்றோர் ஆய்வு மேற்கொண்ட போது பழமையான நடுகல்லை தெப்பக்குளத்திற்குள் கண்டறிந்தனர். இந்த நடுகல் பற்றி அவர்கள் கூறிய தாவது:-

    பொதுவாக நடுகல் எடுக்கும் மரபு நமது முன்னோர்கள் பன்னெடுங்காலமாகவே பின்பற்றிவருகின்றனர். போர்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைபவர்களுக்கும், பொதுகாரியம் கருதி உயிர் துறப்பவர்களுக்கும் அவரின் தியாகத்தை போற்றி நடுகல் எடுத்து வழிபடுவர். அந்த வகையில் தற்போது நாங்கள் கண்டறிந்த நடுகல்லானது நான்கடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கி உள்ளனர். அதில் வீரன் ஒருவன் தலைப்பகுதி இடது புறம் சரிந்த கொண்டையுடனும், நீண்ட காதுகளும், மார்பில் ஆபரணங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இடையில் இடைக்கச்சையும் அதில் குறுவாள் சொருகியபடியும் நின்ற கோளத்தில் வணங்கியபடி சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது.

    சிற்பத்தின் மேலே கிடைமட்டமாக 14 வரிகளும், மேலிருந்து கீழாக இரண்டு வரிகளும் என 16 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள எழுத்துக்கள் முற்றிலும் சேதமாகியுள்ளதால் பொருள் அறிவதில் சிரமம் உள்ளது. ஆயினும் சில வரிகள் வாசிக்கும்படி உள்ளது. அவற்றில் வெகு தானிய (பகுதானிய) வருடம் என்று தமிழ் வருடங்கள் அறுபதில் 12 வது வருடமாக வரும் வருடம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆனி மாதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்லிற்கு சேதம் விளைவிப்பருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது இவ்வீரன் ஊரின் நன்மை பயக்கும் செயலில் ஈடுபட்டு இறந்திருக்க வேண்டும். அவரின் தியாகத்தை போற்றும் விதமாக இந்த நடுகல்லை நிறுவி இருக்க வேண்டும். இந்நடுகல்லை தற்போது சீர்காழியை சேர்ந்தவர்களும்,இவ்வூர் பொதுமக்களும் வழிபட்டு வருகின்றனர் என்றும் இந்நடுகல்லின் இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது25). இவர் திருச்சு ழியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை அருண்ராஜ் காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் கடந்த சில நாட்களாக அருண்ராஜ் விரக்தியுடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது குடும்பத்தினர் வெளியே சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அருண்ராஜ் காதல் தோல்வியில் ஏற்பட்ட விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அருப்புக் கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவரது பாட்டி முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்று சென்ற பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
    • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள புல்லகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். அதிமுக கிளை செயலாளரான இவரது ஏற்பாட்டில் நேற்று மதுரையில் நடந்த மாநாட்டிற்கு வேனில் கட்சியினர் சென்றனர். இரவு மாநாடு முடித்து விட்டு அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

    விருதுநகர் அருகே சூலக்கரை சாத்தூர் ரோட்டில் மருளுத்து பகுதியில் சென்ற போது அங்குள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் ஒரு கார் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது. இதை கவனிக்காத வேன் டிரைவர் கார் மீது பயங்கரமாக மோதினார்.

    இதில் வேனில் இருந்த புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த துளசியம்மாள் (75), ராஜம்மாள்(75), சுப்புலட்சுமி (57), சாரதா(37), கவிதா (37), ஜெயமணி (67), சீனிவாசன் (60), தாயம்மாள் (72), துரைராஜ் (72), சிபியோன் ராஜ் (18) ஆகிய 10 பேர் படுகாயமடைந்தனர்.

    இவர்கள் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கி டையில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான காரில் இருந்த 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்து விசாரித்த போது பணி ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி காய மடைந்திருப்பது தெரிய வந்தது.

    இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த கணவர்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • இதுகுறித்து கண்ணன் ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    விருதுநகர்

    வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரபாண்டிய புரத்தை சேர்ந்தவர் கண்ணன் (37). இவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தும்பக்குளத்தை சேர்ந்த அழகர்சாமி கூறியுள்ளார். இதனை நம்பி வினோத் குமார் என்பவரின் வங்கி கணக்கில் கண்ணன் பணம் செலுத்தினார். அதன்பின் கண்ணன் கம்போடியா நாட்டிற்கு வேலைக்கு சென்றார். ஆனால் அங்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிய கண்ணன் பணத்தை திருப்பி தருமாறு அழகர்சாமியிடம் கேட்டார். ஆனால் அவர் பணத்தை தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மனைவி அருணா, வினோத்குமார், சாந்தி ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இதுகுறித்து கண்ணன் ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி அழகர்சாமி, அவரது மனைவி உள்பட 4 பேர் மீது கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • சுமார் 823 நெசவாளர்கள் வரை பயனடைந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கைத்தறி துறையின் கீழ் 52 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது. இச்சங்கங்கள் மூலமாக 6000 நெசவாளர்களுக்கு தொடர்ந்து தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இச்சங்கங்களில் பருத்தி ரக சேலைகள், செயற்கைப் பட்டு சேலைகள், லுங்கிகள், வேட்டிகள், அரசின் விலையில்லா சேலை, விலையில்லா காடா துணி இரகங்கள் நெசவு செய்யப்பட்டு வருகிறது.

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சுந்தர பாண்டி யத்தில் உள்ள சாலியர் சமுதாய திருமண மண்ட பத்தில் நெசவாளர் களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதனை கைத்தறி துறை உதவி இயக்குநர் வெங்கடேசலு, சுந்தர பாண்டியம் பேரூராட்சி சேர்மன் ராஜம்மாள், வத்திராயிருப்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜெய ராமன், ஊர் தலைவர் சடையாண்டி, சுந்தர பாண்டியம் தி.மு.க. நகர செயலளர் காளிமுத்து, சுந்தர பாண்டியம் அ.தி.மு.க. நகர செயலாளர் மாரிமுத்து ஆகியோர்கள் தொடங்கி வைத்தனர்.

    இம்மருத்துவ முகாமில் விருதுநகர் மாவட்ட மருத்துவத் துறை அலு வலர்கள். செவிலியர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை பணியாளர்கள் மூலமாக பொது மருத்துவம், பல் மருத்துவம், இருதயநோய் மருத்துவம், கண் மருத்துவம், ஆண்கள் மருத்துவம், பெண்கள் மருத்துவம், சித்த மருத்துவம், தோல் மருத்துவம், இ.சி.ஜி. எக்ஸ்ரே, ரத்தஅழுத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சுமார் 823 நெசவாளர்கள் வரை பயனடைந்தனர்.

    மேலும் இம்முகாமில் கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம். முத்ரா கடன் மேளா, கல்வி வழிகாட்டு விழிப்புணர்வு கூட்டம், தொழில்முனைவோர் வழிகாட்டு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியனவும் நடைபெற்றது.

    • ஓடும் பஸ்களில் பர்தா அணிந்து நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • ஓடும் பேருந்துகளில் பலரிடம் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்காபுரம் கிரா மத்தை சேர்ந்தவர் சரோஜா (வயது 75). இவர் பேருந்தில் பயணம் செய்தார். அப் போது அவருக்கு அருகில் பர்தா அணிந்து வந்தி ருந்த 2 பெண்கள் பயணம் செய்த–னர்.

    மேலும் அந்த 2 பேரும், சரோஜாவுக்கு உதவி செய் வது போல் தங்களை காட் டிக்கொண்டனர். அதனை நம்பிய சரோஜாவும் அதனை ஏற்றுக்கொண்டார். இதையடுத்த சிறிது நேரத்தில் அவர்கள் கீேழ இறங்கி சென்றனர்.

    பின்னர் சரோஜா பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை மாய மாகி இருந்தது. அப்போது தான் அருகில் நின்ற பெண் கள் திருடிது தெரிந்தது. இதுகுறித்து சரோஜா, விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதேபோல், அருப்புக் கோட்டை தனியார கல்லூரி–யில் படித்த வருமை் மாணவி நந்தினி என்பவர் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு அரு கில் உரசியபடி நின்ற வாறு பர்தா அணிந்து கொண்டு பயணம் செய்த 2 பெண்கள் பாலவநத்தம் பஸ் நிறுத்தத் தில் இறங்கி சென்றனர்.

    அதன்பின்னரே நந்தினி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் செயின் திருடப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவர் கொடுத்த புகாரின்பேரில் அருப்புக் கோட்டை தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் விருதுந கர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சீனிவாசபெரு மாள் உத்தரவின்பேரில் விருதுந கர் துணை போலீஸ் சூப்பி ரண்டு பவித்ரா தலைமை யில் தனிப்படை அமைத்து தீவிரமாக காண்காணித்து வந்தனர். அப்போது விருது நகர் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பர்தா அணிந்து நின்ற 2 ெபண்களை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மதுரை வண்டியூரை சேர்ந்த ரேகா (38), அமலா (37) என்பதும், ஓடும் பேருந்துகளில் பலரி டம் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிட் இருந்து திருடிய நகைகள் பறிமுதல் செய்யப் பட்டன. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • ஓட்டுக்கு பணம் வாங்கினால் கோடீஸ்வரர்கள் மட்டும் எம்.பி., எம்.எல்.ஏ.வாக முடியும்.
    • லலிதா மஹால் திறப்பு விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி நாரணாபுரத்தில் லலிதா திருமண மகால் திறப்பு விழா நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவரது மனைவி கலந்து கொண்டு திருமண மகாலை திறந்து வைத்தனர். விழாவில் வைகோ பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளேன். பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு ஆபத்து வந்த போது அதனை தடுத்து நிறுத்தினேன். இன்றைய காலகட்டத்தில் அரசியல் கெட்டு விட்டது. ஒரு எம்.பி. தேர்தலுக்கு வேட்பாளர் ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை செலவு செய்கிறார்கள்.

    அரசியலை பணம் தான் தீர்மானிக்கிறது என்ற நிலை வந்து விட்டது. பொதுமக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினால் கோடீஸ்வரர்கள் தான் எம்.பி., எம்.எல்.ஏ.வாக முடியும். அவர்களிடம் இருந்து மக்கள் சேவையை எதிர்ப்பார்க்க முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுப்பது கேரளாவில் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட்ட போது என்னை தோற்கடிக்க பலர் தீவிரமாக இருந்தனர். அதைபற்றி கவலைப்பட வில்லை.

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். அவரது முயற்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். எனது தாயார் உள்பட எங்கள் குடும்பத்தினர் மதுவை ஒழிக்க போராடினார்கள். நாட்டிற்காக எனது குடும்பம் பாடுபட்டிருக்கிறது. மதுரையில் நடைபெறும் ம.தி.மு.க. மாநாட்டில் நீங்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் வெங்கட்ராஜ், நாரணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ், சிவகாசி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ராஜேஷ், திமுக, ம.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் செல்போன் விற்பனை கடையில் ரூ.6½ லட்சம் கையாடல் நடந்துள்ளது.
    • இந்த புகாரின் அடிப்படையில் பெண் ஊழியரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அல்லம்பட்டியில் உள்ள மாத்திநாயக்கன்பட்டி ரோட்டை சேர்ந்தவர் கணேசன்(43). இவர் மதுரை ரோட்டில் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இவரது கடையில் பாண்டியன்நகரை சேர்ந்த ஆர்த்திலட்சுமி(22) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று கடையில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கணேசன் ஆய்வு செய்தார். அப்போது ஆர்த்தி லட்சுமி கடையில் இருந்து பணம் எடுத்த காட்சிகள் பதிவாகியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடையின் வரவு-செலவு கணக்கை சரிபார்த்தார். விற்பனை பணம் ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் கையாடல் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கணேசன் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதில் கடை பெண் ஊழியர் ஆர்த்திலட்சுமி பணத்தை கையாடல் செய்ததோடு ஒரு பவுன் தங்க மோதிரத்தை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஆர்த்திலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×