search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நரிக்குடி ஒன்றிய சேர்மனாக தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு
    X

    போட்டியின்றி சேர்மனாக தேர்வு செய்யப்பட்ட காளீஸ்வரி சமயவேலுவுக்கு தேர்தல் அதிகாரி சான்றிதழ் வழங்கினார்.

    நரிக்குடி ஒன்றிய சேர்மனாக தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு

    • நரிக்குடி ஒன்றிய சேர்மனாக தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் மொத்தம் 14 கவுன்சிலர்கள் உள்ளனர்.இதில் 6 அ.தி. மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ள னர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார் தலைமை யில் நடைபெற்ற கவுன்சிலர் கள் கூட்டத்தில் நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்ச வர்ணம் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    மொத்தமுள்ள 14 கவுன்சிலர்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சி லர்கள் உள்பட 12 கவுன்சி லர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத் திட்டனர். இதுகுறித்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணத்தை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு தமிழக அரசி தழிலும் வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பதவி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக நலன் கருதி நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனாக இருந்த அம்மன் பட்டி ரவிச்சந்திரனை நரிக்குடி ஒன்றிய சேர்மனாக (பொறுப்பு) செயல்பட மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் உத்தரவு பிறப்பித்தார்.

    இன்று (23-ந் தேதி) நரிக்குடி ஒன்றிய சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி இன்று தேர்தலுக்கான ஏற்பாடுகள் நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு தி.மு.க.வை சேர்ந்த 6 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலர்களும் வந்தனர். அதனை தொடர்ந்து தேர்தல் நடந்தது.

    அப்போது நரிக்குடி ஒன்றிய 3-வது வார்டு கவுன்சிலர் காளீஸ்வரி சமயவேலு போட்டி யிடுவதாக அறிவித்தார். இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 11 கவுன்சி லர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து காளீஸ்வரி சமயவேலு நரிக்குடி ஒன்றிய சேர்மனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×