என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி
- அரசு பள்ளி ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
- தாய்-மகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய தெருவை சேர்ந்தவர் பாரதி தாசன் (வயது 55). கீழ்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்க்கிறார். இவர் பாஸ்கரன் என்பவர் வீட்டில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஒத்திக்கு குடி யிருந்து வருகிறார்.
இந்த நிலையில் பாரதிதா சனிடம் அந்த வீட்டை வாங்கி கொள்ளுமாறு பாஸ்கரன் கூறி உள்ளார். இதையடுத்து ரூ.21 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வீட்டை வாங்கி கொள்வது என முடிவு செய்யப்பட்டது. கடந்த 18.9.2021ம் ஆண்டு பாரதிதாசன் ரூ.10 லட்சத்தை பாஸ்கரனிடம் கொடுத்து உள்ளார். பின்னர் மூல பத்திர நகலை கேட்டு வாங்கினார்.
அதில் அந்த வீடு மதுரையை சேர்ந்த சிவபிரியா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரனிடம் கொடுத்த பணத்தை பாரதிதாசன் திரும்ப கேட்டார். அதற்கு சிவபிரியாவிடம் பேசி வீட்டை வாங்கி தருவதாக அவர் கூறி உள்ளார்.
ஆனால் சிவபிரியாவிடம் நேரடியாக பேசி வீட்டை ரூ.22 லட்சத்துக்கு வாங்கி கொண்டார். ஆனால் பாஸ்கரன் ஒத்திப்பணம் உள்பட ரூ.12 லட்சத்து 60 ஆயிரத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து அருப்புக் கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பாரதிதாசன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி அருப்புக்கோட்டை டவுன் போலீசார் பாஸ்கரன், அவரது தாயார் நாகலட்சுமி (72) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






