search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு மருத்துவ முகாம்
    X

    சிறப்பு மருத்துவ முகாம்

    • சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    ராஜபாளையம்

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் அம் மையப்ப நாடார் ஆரம்பப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற் றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டி யன் குத்து விளக்கேற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காக் கும் திட்டம், கலைஞர் மருத்துவ காப்பீடு திட் டத்தின் மூலம் பொதுமக்கள் உயிரை காக்கும் ஒரே முதல் வர் நமது முதல்வர் தான். இந்தியாவில் மருத்துவத் துறையில் பல்வேறு சாத னைகளை செய்துவரும் தமிழ்நாடு முதல்வருக்கு நாம் எப்போதும் உறுதுணை யாக இருக்க வேண்டும்.

    ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை யை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த அனைத்து பணிகளும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் மருத்து வமனை திறக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் தலை மை மருத்துவர்கள் கருணாகரபிரபு சுரேஷ், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், பொது மக்கள், கிளை செயலாளர் தங்க மணி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×