search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம்
    X

    கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம்

    • கம்யூனிஸ்டு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் மொத்தம் 94 மனுக்கள் கொடுக்கப்பட்டது.

    திருச்சுழி

    திருச்சுழி ஒன்றியம் நரிக்குடியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. நரிக்குடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் பேராணியாக சென்றனர்.

    வீடற்றவர்களுக்கு வீடு கேட்டும், குடியிருப்பு மக்களுக்கு பட்டா கேட்டும், 100 நாள் வேலையை முறைப்படுத்தி வழங்கவும், கிராமப்புற மக்களுக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் வளர்ச்சி அலுவ லரிடம் மனு கொடுக்கப் பட்டது.

    இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 94 மனுக்கள் கொடுக்கப்பட்டது.

    இந்த ஆர்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பாலு, தாலுகா குழு செய லாளர் பெரியசாமி, விவசாய சங்க தாலுகா தலைவர் அயூப்கான், சி.ஐ.டி.யூ. உதவி தலைவர் சுரேஷ், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டத்தலைவர் பூங்கோதை, மாற்றுத்திற னாளி சங்க நிர்வாகி ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×