என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.
    • அரசின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை மீறி தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

    திருச்சுழி

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகள், கண் மாய்கள், குளம், குட்டை களில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

    திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தற்போது சுமார் 450-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் பயிரிட்டுள்ள விவசா யிகள் உரமிடுவது, களை எடுப்பது போன்ற பணி களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் நாற்று நடும் பணிகளையும் தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் விவசாயி களுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தட்டுபாடின்றி கிடைக்கும் வகையில் கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகள் மூலமாக உரங்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில் அடங்கல் கொடுத்து உரங்களை வாங்க உள்ளதாகவும், அப்படி கொடுத்தும் உரங்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதாகவும் இதனால் உரம் வாங்க தனியார்கடைகளை நாடி செல்லும் நிலை ஏற்பட் டுள்ளதாகவும் விவசாயி கள் கூறுகின்றனர்.

    தனியார் உரக்கடைகள் யூரியா உரங்களை அதிக ளவில் இருப்பு வைத்துக் கொண்டு உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது போன்ற ேதாற்றத்தை ஏற்படுத்தி அதிக விலைக்கு உரங்களை விற்கின்றனர். 45 கிலோ எடை கொண்ட யூரியா உர மூடைகள் ரூ.330 முதல் ரூ.350 வரை யிலும் சுமார் 50 கிலோ எடையுள்ள டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங் கள் ரூ.800 முதல் அதிக பட்சமாக ரூ.1600 வரை யிலும் விற்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும் இணை உரங்க ளையும் அதிக விலைக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாகவும், இதனால் யூரியா உரம் வாங்கும் போது 5 மடங்கு அதிக விலை கொண்ட டி.ஏ.பி போன்ற இணை உரங்களையும் வாங்க வேண்டி உள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    தனியார் உரக்கடைகளில் வாங்கும் உரங்களுக்கு ரசீதுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என வும், கைரேகை மற்றும் ஆதார் பதிவுகளை அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படு வதாகவும் சமூக ஆர்வ லர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

    அரசின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை மீறி தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருவதாகவும், பறக்கும் படையினர் மேற்கொள்ளும் ஆய்வு பெயரளவிலேயே உள்ள தாகவும் அவர்கள் தெரி விக்கின்றனர்.

    இந்த நிலையில் தீவிர மாக ஆய்வுகள் மேற்கொண்டு விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுத்து விவசாயி களுக்கு தடையின்றியும், சரியான விலையிலும் உரங்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • மேலும் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. விருது நகர், சிவகாசி, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக் கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை மாவட்டத்தில் மொத்தமாக 500 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.

    இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகள், நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கண்மாய்களுக் கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இது விவசாயி களுக்கு மகிழ்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது. அவர்கள் விவசாய பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிக ரித்துள்ளது. செண்பக தோப்பு சாலையில் அணைத்தலை, முடங்கி ஆற்றில் நீர் நிரம்பி செல் கிறது. மறுங்கூர் கண்மாய், ஆதியூர் கண்மாய், புதுக் குளம், பிரண்டைகுளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் முள்ளிக் கடவு, மாவரசியம்மன் கோவில், நீராவி பகுதிகளில் கனமழை பெய்ததால் 6-வது மைல் குடிநீர் தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    ராஜபாளையம் பகுதி யில் அய்யனார்கோவில் ஆறு, பேயனாறு, முள்ளி ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு ஆற்று நீரை கோடை கால குடிநீர் ஏரிக்கு திருப்பி விட்டு வீணாகாமல் சேமித்து வருகின்றனர். தேவதானம் சாஸ்தாகோவில் அணை நிரம்பி வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராக்காச்சி அம்மன் பாறை பகுதிகளில் தண்ணீர் கொட்டுவதால் அங்கு பொதுமக்கள், பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் மலை பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகி றது. பிளவக்கல் பெரியார் அணையில் 32 அடிக்கும், கோவிலாறு அணையில் 8 அடிக்கும், வெம்பக் கோட்டையில் 13 அடி அள விற்கும், கோல்வார்பட்டி யில் 11 அடி அளவிற்கும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குல்லூர் சந்தை அணையில் நீர்மட்டம் 8 அடியை கடந்து நிரம்பி வழிகிறது. சாஸ்தா கோவில் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    திருச்சுழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று விடிய, விடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் பரளச்சி அருகே உள்ள செங்குளம் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக அப்பகுதி யில் உள்ள பல்வேறு சிறு ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டடு அதன் காரணமாக செங்குளம் பகுதியிலுள்ள விளை நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

    சுமார் 30 ஏக்கர் பரப்பள விலான மிளகாய், வெங் காயம், சோளம், உளுந்து மற்றும் மல்லி உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின.

    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ேமலும் 2 நாட்களுக்கு மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணைகள், நீர்தேக்கங் களில் மேலும் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்றைய மழை நிலவரம் மில்லி மீட்டரில்:

    வெம்பக்கோட்டை 49.5

    கோவிலாங்குளம் 39

    அருப்புக்கோட்டை 12

    பிளவக்கல் 10.2

    ராஜபாளையம் 26

    திருச்சுழி 18.2

    ஸ்ரீவில்லிபுத்தூர் 9

    சிவகாசி 4.8

    விருதுநகர் 3

    சாத்தூர் 3

    • விருதுநகர், சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும், இணையதள வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர், சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை ஆணையாளர் சுந்தரவல்லி தலைமையில் அங்கீக ரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடந்தது.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக 4,5,18,19-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், இரட்டைப் பதிவுகளை நீக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியான எவரும் விடுபட்டு விடக்கூடாது எனவும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரால் எடுத்துரைக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொடிக்கம்ப பிரச்சினையில் பா.ஜ.க. விளம்பர அரசியல் செய்கிறது.
    • மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

    விருதுநகர்

    பிரதமர் மோடியும். அமித்ஷாவும் அதானியின் நலனுக்காகவே செயல்பட்டு வருகிறார்கள் என மாணிக்கம்தா கூர் எம்.பி.குற்றம் சாட்டினார்.

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    பிரதமர்மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் அதானியின் நலனுக்காகவே செயல்பட்டு வருகிறார்கள், யாரெல்லாம் பிரதமர் மோடிக்கும் அதா னிக்குமான தொடர்பு பற்றி பேசுகிறார்களோ அவர்க ளது செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுகிறது. இது தவறான நடைமுறையாகும், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டு முன்பு இருந்த கொடி அகற்றப் பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவ தும் கொடி கம்பம் நடுவதற்கு பா.ஜனதா ஏற்பாடு செய்துள்ளது.

    எனவே போலீசார் கொடிக்கம்பம் நடுவதாக பிரச்சினை ஏற்படுத்தும் பா.ஜனதா வினர் மீது நடவடிக்கை எடுக்க கடும் வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2500 கோடி ஊதிய நிலுவை வர வேண்டிய நிலையில் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பா.ஜனதா மாநில தலைமை கொடிக்கம்பம் நடும் பிரச்சினையை பெரிதாக்குவது விளம்பர அர சியலாகும்.

    தேசிய அளவில் சாதி வேறுபாடு ஒரு பிரச்சினையாகவே உருவாகியுள்ளது. எனவே தமிழகத்தில் பட்டியலின மக்கள் தாக்கப்படுவது குறித்து சமூக நீதிக் காக செயல்படும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சிவகுருநாதன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து ரோசல்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை சந்தித்து அவர்களது குறைகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. கேட்டறிந்தார்.

    இதில் பஞ்சாயத்து தலைவர் சிவஞானபுரம், கிருஷ்ணமூர்த்தி, ரோசல்பட்டி தமிழரசி ஜெயமுருகன் வட்டார வளர்ச்சி அதிகாரி கற்பகவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    3 பேருக்கு மருத்துவ சிகிச்சை நிதி உதவி

    விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் பரிந்துரையின் பேரில் விருதுநகரை சேர்ந்த புஷ்பம் சதாசிவம், மதுரையை சேர்ந்த சஹானா பாஸ்கர், திருமங்கலத்தை சேர்ந்த உமா மகேஸ்வரி ஆகிய 3 பேருக்கும் புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமர்மோடி நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 9 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நிதிஉதவி பெற்ற குடும்பத்தினர் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்தனர்.

    • விருதுநகர் அருகே கல்லூரி மாணவர், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவரது மகன் அகத்தியன் (17). பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தேர்வில் 3 பாடங்களில் அரியர் வைத்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து பெற்றோர்கள், நண்பர்களிடம் கூறி வருத்தப் பட்டார். இந்த நிலையில் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் தற்கொலைக் கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக் கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் இந்திராநகர் காலனியை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன். இவரது மகள் விஷ்ணுபிரியா (17). இவரை பெரம்பலூரில் உள்ள அரசு மகளிர் கல்லூரி யில் பெற்றோர் சேர்த்தனர். ஆனால் அங்கு தங்கும் விடுதி வசதி இல்லாததால் மீண்டும் ஊருக்கு அழைத்து வந்தனர். மாணவி பெற்றோரிடம் வேறு கல்லூரியில் சேர்க்குமாறு கூறியுள்ளார். அப்போது விடுதி வசதியுள்ள கல்லூரியை விசாரித்து சேர்த்து விடுவதாக பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் விஷ்ணுபிரியா மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹனி பீஸ் என்ற பட்டாசு கொளுத்தியவுடன், பச்சை, சிவப்பு நிறங்களில் ஒளிர்ந்து, தேனீக்கள் பறந்து மேலே செல்வது போல் தெரியும்.
    • டிவின் லைட்டிங் பால் என்ற பட்டாசை திரியில் பற்ற வைத்தவுடன் நீர்வீழ்ச்சியை போல ஒளி மிளிர்ந்து பிளாஸ்டிக் கலர்களில் சிறு பந்துகள் வெளிவரும்.

    சிவகாசி:

    "குட்டி ஜப்பான்" என்று அழைக்கப்படும் சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகள் இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கு கம்பி மத்தாப்பு துவங்கி வானில் வெடித்து சிதறி கண்களுக்கு விருந்தளித்து வர்ண ஜாலங்களை நிகழ்த்தும் பேன்சி ரகம் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வகையிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும் ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் புதிய யுக்தியை கையாண்டு வாடிக்கையாளர்களையும், அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமிகளையும், இளைஞர்களையும் கவரும் விதத்தில் புதுப்புது பட்டாசு வகைகளை வித்தியாசமான முறைகளில் தயாரித்து அறிமுகப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

    அதேபோன்று இந்த வருடமும் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பல்வேறு தொழில்நுட்பங்களில், உற்பத்தியான புதிய ரக பட்டாசுகள் குழந்தைகளையும், இளைஞர்களையும் பரவசப்படுத்தும் விதமாக வந்துள்ளது. தீபாவளி பண்டிகை விற்பனைக்காக பட்டாசு கடைகளில் குவிந்து, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வரிசையாக அணிவகுத்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கிரிக்கெட் கோப்பை கிரிக்கெட் போட்டியை பெருமைப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேட்-பால் என்ற பட்டாசு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    திரியில் தீயை பற்ற வைத்தவுடன், கிரிக்கெட் மட்டையிலிருந்து கம்பி மத்தாப்பு போல எரிந்து, பந்திலிருந்து வண்ண நிறங்களில் புகை வெளிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதே போல் இளைஞர்களையும், இளம்பெண்களை கவரும் வகையில் காதலை வெளிப்படுத்தும் ஆர்டின் வடிவ கம்பி மத்தாப்பு, மல்லிகை பூ போல் வெடித்து சிதறும் மதுரை மல்லி புஸ்வானம் பட்டாசுகள் இந்த ஆண்டு புதிய வரவாக அமைந்துள்ளது.

    கிக்கபிள்ஸ் என்ற பட்டாசு மேல் கவர் சாக்லேட் கவர் போலிருந்து, அதன் திரியில் தீயை பற்ற வைத்தவுடன் சக்கரம் சுழல்வது போல சுழன்று, அதிலிருந்து 2 பம்பரங்கள் தனியாக வெளியேறி கலர் வெளிச்சத்துடன் சுழல்கிறது. சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ள கிண்டர்ஜாய் சாக்லேட் வடிவ பட்டாசில் தீயை பற்ற வைத்தவுடன் சக்கரம் போல சுற்றி, அதிலிருந்து 2 வண்ணத்து பூச்சிகள் பிரிந்து மேலே எழும்பி சென்று சடசடவென வெடித்து சிதறும்.

    ஹனி பீஸ் என்ற பட்டாசு கொளுத்தியவுடன், பச்சை, சிவப்பு நிறங்களில் ஒளிர்ந்து, தேனீக்கள் பறந்து மேலே செல்வது போல் தெரியும். பைவ்ஜி பட்டாசை பற்ற வைத்தவுடன், 5 வண்ண கலர்களில் பைப்பிலிருந்து ஒளிர்ந்து வெளிவரும். டிவின் லைட்டிங் பால் என்ற பட்டாசை திரியில் பற்ற வைத்தவுடன் நீர்வீழ்ச்சியை போல ஒளி மிளிர்ந்து பிளாஸ்டிக் கலர்களில் சிறு பந்துகள் வெளிவரும்.

    பாம்பு சக்கரம் என்ற பட்டாசை பற்ற வைத்தவுடன் சக்கரங்கள் சுழன்று, அதிலிருந்து கரும் நிறத்தில் பாம்புகள் படையெடுத்து வெளிவரும். அதேபோன்று மீன், முதலை, துப்பாக்கி போன்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ள பட்டாசுகளில் தீயை பற்ற வைத்த உடனே தீப்பிழம்பு சீறிப்பாய்ந்து முடிவில் வண்ண வண்ண நிறத்தில் புகை அதிலிருந்து வெளிவரும்.

    இதுபோன்ற 15-க்கும் மேற்பட்ட பார்பி பொம்மை வடிவ பட்டாசு, ஹேப்பிஜி ராபி, மீமோ, கடல்குதிரை, மோட்டுபட்லு, ஹார்க், கிட்ஸ்ஜோன், கோல்டன் லைன், ட்ரோன், ஸ்கை கிங் படாபீகாக், பப்ஜி உள்ளிட்ட சிறுவர்களுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் கார்ட்டூன்களில் வடிமைத்த பட்டாசுகள் அனைத்து தரப்பினர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    தீபாவளிக்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில், இப்பொழுதே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசு ரகங்களை சிறுவர், சிறுமிகள் ஆராய தொடங்கி, புதிய வகை பட்டாசுகளை வாங்கி சந்தோஷத்துடன் வெடித்து மகிழ தீபாவளி கொண்டாட்டத்திற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

    ஆண்டுதோறும் புது வகையான பட்டாசுகளை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதால் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை அமோகமாக இருக்கும் எனவும், குழந்தைகளையும், இளைஞர்களையும் குறி வைத்தே ஒவ்வொரு வருடமும் புது பட்டாசுகள் உற்பத்தியாகி விற்பனைக்கு வருவதால், தீபாவளி பட்டாசு விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சரவெடிகள் விற்பனைக்கு அனுமதிக்கப்படாததால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் குறைவு தான். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இச்சமயத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக பட்டாசு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகரில் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் தொடர் செயல்பாடுகளே வெற்றியை தரும்.
    • பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வத்திராயிருப்பு நாடார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவி களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரை யாடினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    நமக்கான அன்றாட வாழ்க்கையில் விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு பல்வேறு தரவுகள் நமக்கு தேவைப்படுகிறது. அதோடு அதனை அடைவதற்கான நமது முயற்சியும் தேவைப் படுகிறது. அதுபோல உயர்கல்வியில் நமக்கு விருப்பமான துறையை படிப்பதற்கு அதற்கான புரிதலும், அதற்கான கல்லூரிகள், மதிப்பெண்கள் ஆகிய தரவுகளை அறிந்து கொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஒரு காலத்தில் மாண வர்களுக்கான வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் தற்போது அதற் கான தகவல்கள் அனைத்தும் இணையதளம் மூலம் கைப்பேசியில் பெற முடிகிறது.

    மாணவர்கள் தங்க ளுக்கான இலக்கை நிர்ண யித்துக் கொண்டு, அதற் கான முயற்சிகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும். தற்போது மேற்கொள்ளப் பட்டு வரும் முயற்சிகளை விட சிறிதளவு அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளும் போது நமக்கான கனவினை அடை யலாம்.

    யார் தொடர்ச்சியாக ஒரு செயலை செய்கிறார் களோ அவர்கள் மிகப் பெரிய வெற்றியாளர்களாக ஆகிறார்கள். வெற்றி பெறு வதற்கும், சாதிப்பதற்கும் அறிவும், திறமையும் தேவை யில்லை. தொடர்ச்சியான செயல்பாடு தான் தேவை என்பதுதான் இத்தனை ஆண்டுகால மனித குல வரலாறு நமக்கு தரும் செய்தி. எனவே, மாணவ, மாணவிகள் தங்களது தொடர்ச்சியான செயல் பாடுகள் மூலம் பெறும் நல்ல மதிப்பெண்கள் மூலம், வாய்ப்புகளை பெறும் போது, நிச்சயமாக வெற்றி யடையலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • திருச்சுழி நூலகத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது.
    • சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் சம்பத்குமார் வரவேற்று பேசினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 'கலைத் திருவிழா' நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக 'தமிழ்க்கூடல்' என்னும் நிகழ்ச்சி திருச்சுழி நூலகத்தில் நடைபெற்றது. சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் சம்பத்குமார் வரவேற்று பேசினார்.அறந்தாங்கி அரசினர் தொழில் நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் சிவக்குமார் சிங்காரவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'தமிழரின் வரலாறும் பண்பாடும்' பற்றி சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியின் பொறுப்பாளர் செல்வலட்சுமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சேதுபதி அரசுப்பள்ளி மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பள்ளியின் பட்டதாரி ஆசிரியை தேவி நன்றி கூறினார். சிறப்பு விருந்தினர் மற்றும் ஆசிரியர் களுக்கு நூலகர் பாஸ்கரன் பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார். வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர், அழகேசன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் நூலக பணியாளர் பாண்டிதேவி, வாசகர் வட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ், வீரராஜன், விக்னேஷ் மற்றும் மாணவ,மாணவிகள் ஆசிரியைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அரசு ஆஸ்பத்திரிகளில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • வைரஸ் காய்ச்சலா என்பதை நன்கு ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை யை முறையாக வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

    ராஜபாளையம்

    மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் ராஜ பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் குழந்தை கள், முதியவர்கள் என பொதுமக்கள் என பலரும் காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை ராஜ பாளை யம்- தென்காசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் எம்.எல்.ஏ தங்க பாண்டியன் ஆய்வு மேற் கொண்டு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை களை முடுக்கி விட்டார்.

    ஆய்வின்போது தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    ராஜபாளையம் தொகுதி யில் அதிகளவில் காய்ச்ச லால் குழந்தைகளும் பொது மக்களுக்கும் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவ மனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலி யர்கள் பணியில் இருக்க வேண்டுமென கூறப்பட்டு உள்ளது. நோயாளிகளிடமும் கனிவுடன் பேசி அவர் களிடம் அவர்களுக்கு சாதா ரண காய்ச்சலா அல்லது வைரஸ் காய்ச்சலா என்பதை நன்கு ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை யை முறையாக வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

    தினசரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் 150 முதல் 200 புறநோயாளி களுக்கும் அரசு மருத்துவ மனையில் 800 முதல் 1000 வரையிலான புறநோயாளி களுக்கும் மருத்துவம் பார்க்கப்படுகிறது. குழந்தை களுக்கு காய்ச்சல் என்றால் வீட்டில் வைத்து மருந்து கொடுப்பதை தவிர்த்து விட்டு உடனடியாக குழந்தை களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிசிச்சை பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவ மனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்து அதற்கான பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது, அந்த பணிகளை தங்கப் பாண்டி யன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.

    தலைமை மருத்துவர் (பொறுப்பு) மாரியப்பன் அவர்கள் மருத்துவர் சுரேஷ் அவர்கள், பொதுப் பணித்துறை உதவிப் பொறி யாளர் பாலசுப்பிரமணியன் கவுன்சிலர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப் பாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா பள்ளியில் அறிவியல் மாநாடு நடந்தது.
    • நடுவர்கள் தேர்வு செய்த ஆய்வறிக்கைகள் 25 மட்டும் மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவி யல் மாநாட்டின் 2-வது பகுதி நடைபெற்றது, பள்ளி தாளாளர் குமரேசன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் செந்தில் குமார், பள்ளி ஆலோசகர் பாரதி பள்ளி நிர்வாக அலுவலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக வைமா வித்யாலயா பள்ளி தாளாளர் திருப்பதி செல்வம் மற்றும் மகாத்மா வித்யாலயா பள்ளி தாளாளர் முருகேசன் மற்றும் பலர் விழாவை கலந்து கொண்டனர்.

    ராஜ பாளையம், வத்ராப், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 230 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டது. கல்லூரி பேரா சிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். வழிகாட்டி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மாநில செயலாளர் பால கிருஷ்ணன் வழிகாட்டி ஆசிரியர்களிடம் உரை யாற்றினார். நடுவர்கள் தேர்வு செய்த ஆய்வ றிக்கைகள் 25 மட்டும் மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது.

    • விருதுநகரில் சட்டபேரவை உறுதிமொழிக்குழு ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • ஆதிதிராவிட மாணவர் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக்குழு சார்பில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.க்கள் ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் அருள், ஜெயக்குமார், ரூபி.ஆர்.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்து, சட்டப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அமைச்சர்கள் மானிய கோரிக்கையில் அறிவித்த உறுதி மொழிகளின் தற்போதைய நிலை குறித்தும், துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள், நடைபெற்ற திட்டங்கள் மற்றும் திட்டத்தின் கால வரையறை, தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் தாமதமாகும் திட்டப்பணிகள் குறித்தும், அதனை செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திலீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, இணைச் செயலாளர் கருணாநிதி, துணைச் செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள், ஆர்.ஆர்.நகர் சிமெண்ட் தொழிற்சாலை, சிவகாசி தீயணைப்பு நிலையம், ஆமத்தூர் ஆதிதிராவிட மாணவர் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

    • தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    சிவகாசி

    தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சிவகாசி நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தீபாவளி வரை போக்குவரத்து மாற்றம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சிவகாசி நகருக்குள் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். பிற்பகலில் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே நகர் பகுதிக்குள் கனரக வாக னங்கள் அனுமதிக்கப்படும்.

    அனுமதிக்கப்பட்ட நேரங் கள் தவிர மற்ற நேரங்களில் வெளியூரில் இருந்து லோடு ஏற்றவோ, இறக்கவோ, வரும் கனரக வாகனங்கள், உள்ளூரில் இருந்து வெளியே செல்லும் கனரக வாகனங்கள் திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

    கனரக வாகனங்கள் பிள்ளைக்குழி நிறுத்தத்தில் இருந்து இடது புறமாக திரும்பி தெய்வானை நகர், மணிகண்டன் மருத்துவ மனை, மணி நகர் பஸ் நிறுத்தம் வழியாக சிவகாசி பழைய மீன் மார்க்கெட் பகுதியில் சென்று நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் கனரக வாக னங்கள் சாட்சியாபுரம் சாமி யார் மடத்திலிருந்து கங்கா புரம், செங்கமல நாச்சியார் புரம், திருத்தங்கல் தேவர் சிலை, திருத்தங்கல் மாரி யம்மன் கோவில், திருத்தங் கல் செக்போஸ்ட் வழியாக சென்று திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்த வேண்டும்.

    அனுமதிக்கப்பட்ட நேரங்கள் மட்டுமே வெம்பக்கோட்டை ஜங்ஷன் வழியாக பன்னீர் தெப்பம், மணிநகர், பஸ் நிலையம், அம்பலார் மடம் மற்றும் பழனியாண்டவர் தியேட்டர், காரனேஷன் ஜங்ஷன் வரையிலான சாலையில் கனரக வாகனங்களை நிறுத்தி லோடு ஏற்றவோ, இறக்கவோ செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்க கூடாது.

    அனைத்து வாகனங்களை யும் மதியம் 3 மணிக்கு காரனே ஷனுக்கு எதிரே இந்து நாடார் பெண்கள் மேல்நி லைப்ப ள்ளிக்கு சொந்தமான மைதானத்திற் குள் சென்று நிறுத்த வேண்டும். பயணிகளை அங்கிருந்து மட்டுமே ஏற்ற வேண்டும். திருத்தங்கல் வழியாக வெளியே செல்ல வேண்டும். சிவகாசி நகருக்குள் வேறு எங்கும் நிறுத்தி பயணிகளை ஏற்ற, இறக்க கூடாது. திருத் தங்கல் சாலையிலும் எங்கும் கனரக வாகனங்களை யோ, ஆம்னி பஸ்களையோ நிறுத்தக் கூடாது. திருத் தங்கல் புதிய பஸ் நிலையத்தில் மட்டுமே பயணிகள் மற்றும் பொருட் களை ஏற்ற, இறக்க வேண்டும்.

    ×