search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puthadai"

    • தீபாவளியை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • வருகிற பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க.வின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உறுதுணையாக இருந்து வெற்றியை பெற்று தர வேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளை சார்ந்த தூய்மைப் பணியாளர்க ளுக்கு புத்தாடை, இனிப்பு களை தனுஷ்குமார்

    எம்.பி., தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

    பின்னர் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கொரோனா காலத்தில் ராஜபாளையம் தொகுதி யில் தொற்று பரவாத வண்ணம் தங்கள் உயிர் களையும் பொருட்படுத்தா மல் அர்ப்பணிப்பு டனும் சிறப்பாக பணி யாற்றிய முன்கள பணி யாளர்களான தூய்மை பணியா ளர்கள் அனை வருக்கும் நன்றியை தெரி வித்து கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கட்டணமில்லா பஸ் வசதி திட்டம் போன்ற சிறந்த திட்டங்களை செயல் படுத்தக்கூடிய முதல்-அமைச்சர் நமக்கு கிடைத் துள்ளார்.

    மேலும் நமது முதல்-அமைச்சரின் சிறப்பான ஆட்சியில் ஏழை, எளிய பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தி வருகிறார். வருகிற பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க.வின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உறுதுணையாக இருந்து வெற்றியை பெற்று தர வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம், தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பேரூர் சேர்மன் பாலசுப்பிர மணியன், பேரூர் செய லாளர் சிங்கப்புலி அண் ணாவி, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், மாவட்ட கவுன்சிலர் முத்துச் செல்வி, மாவட்ட மாண வரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×