search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்த தற்காலிக சாலை
    X

    ஜே.சி.பி. எந்திரம் மூலம் வெள்ளத்தில் சிக்கிய டிராக்டரை மீட்கும் காட்சி.

    காட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்த தற்காலிக சாலை

    • காட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்த தற்காலிக சாலையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • 10 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மேலையூர் பகுதியில் இருந்து வடக்கு நத்தம் வழியாக புதூர் செல்லும் சாலையில் பெரிய ஓடை யொன்று உள்ளது. இந்த ஓடையை கடப்பதற்கு சுமார் 17 கண்கள் கொண்ட தரைப்பாலம் இருந்தது.

    பந்தல்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கன மழை பெய்து வரும் காலங்களில் அவ்வழியாக வரும் மழை நீரானது மறவர் பெருங்குடி வழியாக வந்து கஞ்சம்பட்டி கண்மாய் நிரம்பி உபரி நீராகவும், சுத்தமடம், தொப்ப லாக்கரை பகுதியில் காட்டு பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் பெரிய ஓடை யில் நீர்வரத்து அதிகமாகி உப்போடையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    இதனால் பொதுமக்கள் மேலையூர் வழியாக சாயல் குடி, அருப்புக்கோட்டை, செல்ல முடியாமல் புதூர் வழியாக சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது.இந்த நிலையில் பொது மக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் கடந்த 4 மாதங்க ளுக்கு முன்பு கிராமப்புற சாலை கள் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2 கோடியே 42 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

    போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க பாலம் கட்டி வரும் பகுதியில் மாற்றுச்சாலை அமைக்கப் பட்டது. மேலும் இந்த சாலையில் ஏற்கனவே 17 கண்கள் கொண்ட பாலம் இருந்து வந்த நிலையில் தற்போது அமைத்த தற்கா லிக மாற்றுச்சாலையில் வெறும் 3 கண்களுடைய பாலம் மட்டுமே அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படு கிறது.

    கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல் வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கஞ்சம் பட்டி கண்மாய் நிரம்பி அதன் வழியாக உபரி நீரானது அதிகளவில் வெளியேறி வருவதால் புதூர் செல்லும் சாலையில் உள்ள பெரிய ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இதனால் மாற்று சாலையில் போடப்பட் டுள்ள தற்காலிக பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்ட தன் காரணமாக சாலையானது துண்டிக்கப் பட்டது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வடக்கு நத்தம் மற்றும் தெற்கு நத்தம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பாதிக்கப் பட்டுள்ளது.

    இதற்கிடையில் தூத்துக்கு டியை சேர்ந்த விவசாயி அந்த பகுதியை டிராக்டரில் கடக்க முயன்றார். அப்போது வெள்ளப் பெருக்கு அதிகரித்தது. இத னால் டிராக்டர் இழுத்து செல்லப் பட்டது. அதிர்ச்சியடைந்த விவசாயி டிராக்டரில் இருந்து குதித்து உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிராக்டரை மீட்டனர்.

    மேலும் இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச் சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் கூறுகையில், தற்காலி கமாக போடப் பட்ட மாற்றுச் சாலையை தரமாக அமைக்க வேண்டு மென கோரிக்கையும் விடுக்கப்பட் டது. ஆனால் 3 கண்பாலம் மட்டுமே அமைத்து மாற்று சாலை போடப்பட்டதால் அதிக நீர்வரத்தை தாங்க முடியாமல் தற்காலிக சாலையில் அரிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் துண்டிக் கப்பட்ட நிலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள் ளது.

    இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள் வெளி யூர்களுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் மாற்றுச்சாலை சீரமைக்க உடனடியாக நடவ டிக்கை எடுக்க அப்பகுதி சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×