என் மலர்
விருதுநகர்
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இந்த கோவிலுக்கு சித்திரை மாத பவுர்ணமி மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று (14-ந் தேதி) முதல் வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்து.
இந்த நிலையில் வத்திராயிருப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் யாரும் அனுமதி ரத்து செய்யப்பட்ட நாட்களில் அடிவாரப் பகுதியான தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்க முன்பு வரவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி காட்சி அளித்தார்.






