என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Register on the website"
- திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஈரோடு:
கொடுமுடி வட்டார விவசாயிகள் தங்கள் விபரங்களை கணிணியில் பதிவேற்றம் செய்து வேளாண்-உழவர் நலத்துறை திட்டங்களில் பயன்பெற ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொ.யசோதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இத்திட்டமானது தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட தங்கள் கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகளின் ஆதார் எண், விவசாயியின் புகைப்படம், குடும்ப அட்டை , வங்கி கணக்கு எண் விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சென்று தானியங்கள் (வேளாண் உள்ளீட்டு அமைப்பின் விவசாயி ஆன்லைன் பதிவு) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது நில விவரங்களுடன் இணை க்கப்பட்ட விவசாயியின் விவரம் தானியங்கள் என்ற இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு
வேளாண்மை-உழவர்நலத்துறை பேரிடர் மேலாண்மை துறை, தோட்ட க்கலைதுறை, கூட்டுற வுத்துறை, பட்டுவளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல்த்துறை,
ஊரக வளர்ச்சி த்துறை, கால்நடை பராமரி ப்பு த்துறை, வேளாண் வணிகம் , விதை சான்றளி ப்புத்துறை, வருவாய்த்துறை மற்றும் சர்க்கரை துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் பயனடைய பயன்படுத்தப்படுகிறது.
எனவே கொடுமுடி வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கிராம நிர்வாக அலுவலகம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி தானியங்கள் இணைய தளத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதார் எண், விவசாயியின் புகைப்படம், வங்கி கணக்கு எண் விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
- விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
- பயிர்சாகுபடி குறித்து பதிவு செய்யப்படுகிறது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டி யன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:-
விவசாயிகளின் விவரங்களுக்கு http://www. agrimark.tn.gov.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் கீழ் உள்ள இணையதளத் தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் இந்த இணையதளத்தில், அனைத்து சாகுபடி நிலவிவ ரங்களுடன் இணைக்கப் பட்ட விவசாயிகளின் விவரம், நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல், பயிர்சாகுபடி போன்ற அடிப்படை விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.
இதில் வருவாய்த்துறை, வேளாண்மை, தோட்டக் கலை, பேரிடர்மேலாண்மை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, வேளாண் பொறியியல், உணவு வழங்கல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கால்நடை பராமரிப்பு, ஊரக வளர்ச்சி, விதைச்சான்றளிப்பு மற்றும் சர்க்கரை ஆகிய துறைகள் இணைக்கப்பட உள்ளன.
இத்தளத்தில் பதிவு செய்வ தன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்ட உதவி பயனாளி யின் வங்கி கணக்கிற்கு நேரடி யாக செல்லும்.இத்திட்டம் ஒற்றை சாளர தளமாக செயல்படுகிறது. ஒரே இடத்தில் பதிவு செய்வ தன் மூலம் விவசாயம் குறித்த அனைத்து துறைகளாலும் விவசாயிகளுக்கு தேவைப் படும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். ஒவ்வொரு முறையும் தனி யாக ஆவணங்கள் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
இதுவரை அரசிடம் இருந்து பெற்றபயன்களை இனிமேல் இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ள லாம்.
ஆதார்எண், அலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் விவசாயிகள் இணைக்கவேண்டும். மேலும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் நிலப் பட்டா ஆவண நகலுடன் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக் கலை அலுவலரிடம் ஆவண நகல்களை ஒப்படைத்து இணையதளத்தில் தங்களது விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதை விவசாயிகள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்