search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இணையதளத்தில் பதிவு செய்ய கொடுமுடி வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    இணையதளத்தில் பதிவு செய்ய கொடுமுடி வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு

    • திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஈரோடு:

    கொடுமுடி வட்டார விவசாயிகள் தங்கள் விபரங்களை கணிணியில் பதிவேற்றம் செய்து வேளாண்-உழவர் நலத்துறை திட்டங்களில் பயன்பெற ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொ.யசோதா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இத்திட்டமானது தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட தங்கள் கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகளின் ஆதார் எண், விவசாயியின் புகைப்படம், குடும்ப அட்டை , வங்கி கணக்கு எண் விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சென்று தானியங்கள் (வேளாண் உள்ளீட்டு அமைப்பின் விவசாயி ஆன்லைன் பதிவு) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது நில விவரங்களுடன் இணை க்கப்பட்ட விவசாயியின் விவரம் தானியங்கள் என்ற இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு

    வேளாண்மை-உழவர்நலத்துறை பேரிடர் மேலாண்மை துறை, தோட்ட க்கலைதுறை, கூட்டுற வுத்துறை, பட்டுவளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல்த்துறை,

    ஊரக வளர்ச்சி த்துறை, கால்நடை பராமரி ப்பு த்துறை, வேளாண் வணிகம் , விதை சான்றளி ப்புத்துறை, வருவாய்த்துறை மற்றும் சர்க்கரை துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் பயனடைய பயன்படுத்தப்படுகிறது.

    எனவே கொடுமுடி வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கிராம நிர்வாக அலுவலகம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி தானியங்கள் இணைய தளத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதார் எண், விவசாயியின் புகைப்படம், வங்கி கணக்கு எண் விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

    Next Story
    ×