என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழமையான பொந்தன்புளியமரம்
    X
    பழமையான பொந்தன்புளியமரம்

    புளியமரத்தை தெய்வமாக வழிபடும் பக்தர்கள்

    விருதுநகர் மாவட்டத்தில் புளியமரத்தை பக்தர்கள் தெய்வமாக வழிபட்டுச் செல்கின்றனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் மண்டபசாலை என்ற ஊரில் பிரமாண்டமான  மரம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராமநாத புரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி வரலாற் றுத்துறை உதவி பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். 

    இதுகுறித்து ராஜகுரு கூறியதாவது:&

    விருதுநகர் மாவட்டம் மண்டபசாலை கருப்பசாமி கோயில் அருகில் கமுதி செல்லும் சாலையின் கிழக்கு பகுதியில் 7 மீட்டர் உயரமும், அடிப்பகுதி 11 மீட்டர் சுற்றளவும் கொண்ட பிரமாண்டமான மரம் வளர்ந்து வருகிறது. 

    இது ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா போன்ற நாடுகளில் அதிகமாக வளர்ந்து வரும் பொந்தன்புளியமரம் ஆகும்.  5விரல் அமைப்புடைய இலைகள், இயற்கையாக உருவாகக்கூடிய பெரிய அளவிலான பொந்துகள், யானை போன்ற மிகப் பிரமாண்டமான அடிமரம் ஆகியவை  இந்த மரத்தின் சிறப்புகள். 

    ஓராண்டில் 6மாதங்கள் வரை இதில் இலைகள் உதிர்ந்து காணப்படும். இந்த மரங்கள் சாதாரணமாக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை. இதன் தண்டுகளில் தண் ணீரை சேமித்து வைக்கிறது.

    மண்டபசாலையில் உயரமாக வளர்ந்து வந்த இம்மரத்தின் 3 கிளைகளும் சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து விழுந்துள்ளது. விழுந்த அதன் கிளைகளும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்தமரத்து தண்டின் நடுவில் 10பேர் அமரும் வகையில் பெரிய பொந்து உருவாகியுள்ளது. இதன் உள்ளே செல்லவும் வழியுள்ளது. இம்மரம் யானை போன்ற அமைப்பில் உள்ளது. இந்த மரத்தை பக்தர்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

    இதன் பிரமாண்டம், பொந்து போன்ற அமைப்பு, இலைகளின் புளிப்பு சுவை ஆகியவற்றால் இந்த மரத்தை பொந்தன்புளி, யானைமரம், ஆனைப்புளி, பெருக்கமரம், பப்பாரப்புளி எனபல பெயர்களில் அழைக்கிறார் கள். இதை ஆங்கிலத்தில் போபாப் என்கிறார்கள். மண்டபசாலை அருகில் பெருநிரவியார் எனும் வணிகக்குழுவின் பெயரால் அமைந்த நீராவி எனும் ஊர் உள்ளது. 

    கேரளாவில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை வழியாக அழகன்குளம் செல்லும் வணிகப்பெரு வழியில் இந்த ஊரிலும் தேரிருவேலி, அழகன் குளத்திலும் இந்த மரம் வளர்ந்து வருகிறது. மரத்தின் வயது ஆயிரம் ஆண்டுகளை கடந்தபின்பே அதில் பொந்து உண்டாகிறது. எனவே பொந்து உள்ள இந்தமரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என கருதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×